Friday, February 28, 2014

Thursday, February 27, 2014

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 20) - ஹலாலை ஹராமாக்கக் கூடாது

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 20) - ஹலாலை ஹராமாக்கக் கூடாது


இந்த உரையின் முழுமையாக கேட்க இங்கே செல்லவும்.

Wednesday, February 26, 2014

அதிரை நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் நடைபெற்ற பெண்கள் பயான்

இன்று புதன் கிழமை நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் நபிமார்களின் வரலாறு என்ற தலைப்பில் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். இதில் சென்ற வாரத்தில் வந்தவர்களை விட அதிகமான பெண்கள் கலந்துகொண்டார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்.


Monday, February 24, 2014

துபாய் அதிரை TNTJ கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம்

துபாய்  அதிரை TNTJ கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம். 

துபாய்  அதிரை TNTJ கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம் 28.02.2014 வெள்ளிக் கிழமையன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு  6.45 மணியளவில் துபாய் TNTJ மர்கஸில்(போரி பள்ளி பின்புறம் ) நடைபெறும். இன்ஷாஅல்லாஹ் 

  நமதூர் கொள்கை சகோதரர்கள் கலந்துகொள்ளும்படி கேட்டு கொள்ளபடுகிறீர்கள் 

தொடர்புக்கு 

ஷாகுல் ஹமீது  0505063755
நெய்னா மக்தூம் 
 0507397093

பண்படுத்தும் இஸ்லாமிய கல்வி (வீடியோ)

பண்படுத்தும் இஸ்லாமிய கல்வி (வீடியோ)

தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை செல்லும் போராட்டம் - விடையில்லா கேள்விகளும் தொடரும் உளரல்களும்!

தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை செல்லும் போராட்டம் - விடையில்லா கேள்விகளும் தொடரும் உளரல்களும்!


தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத்தில் 7 சதவீத இட ஒதுக்கீடும் மத்தியில் 10 சதவீத இட ஒதுக்கீடும் வழங்க கோரி, கடந்த ஜனவரி 28 2014 அன்று நடத்திய சிறை செல்லும் போராட்டம் பற்றி ஒரு தளம் அங்கும் இங்கும் ஆட்டை போட்டும், பல தவறான தகவல்களை முன்வைத்தும் எழுதப்பட்ட கட்டுரை குறித்து நமது பதிலை வெளியிட்டு இருந்தோம்.

எமது பதில் கட்டுரையில் பல கேள்விகளையும் சவால்களையும் முன்வைத்திருந்தோம். அவற்றில் சில:

1. தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை செல்லும் போராட்டம் குறித்து வஞ்ச புகழ்ச்சியோடு கட்டுரை எழுதிய நீங்கள், மற்ற இயக்கங்கள் போராட்டம் நடத்திய முன்போ அல்லது பின்போ இவ்வாறு ஏன் விமர்சன கட்டுரை போடவில்லை?

2. தவ்ஹீத் ஜமாஅத் அல்லாத மற்ற இயக்கங்கள் பெண்களை அழைத்து சென்று போராட்டம் நடத்துவதை நீங்கள் ஏன் விமர்சனம் செய்யவில்லை (இவர்கள் பின்னால் இருக்கும் தமுமுகவினரும் பெண்களை அழைத்துச் சென்று போராட்டம் நடத்துகிறார்கள். அவற்றில் சில புகைப்படங்கள் 1 2).

3. இட ஒதுக்கீட்டிக்காக சிறை செல்லும் போராட்டம் தேவையா? என்று வாதப்பிரதிவாதங்கள் ஊடங்களை குலுக்கி எடுத்தது என்றீர்களே, எந்த ஊடகங்களை குலுக்கி எடுத்தது? 

4. இட ஒதுக்கீட்டிற்காக படிக்கும் இளைஞர்களை சிறைக்கு அனுப்ப வேண்டுமா? என்று கேள்வி கேட்ட நீங்கள், உங்கள் பினாமி இயக்கம் இட ஒதுக்கீடு கேட்டு ரயில் மறியல் போராட்டம் எல்லாம் நடத்தினார்களே, அப்போது படிக்கும் இளைஞர்களை ரயிலை மறிக்கிறோம் என்று சாக அடிக்க பார்க்கிறீர்களா? என்று ஏன் கேள்வி எழுப்பவில்லை?

5. ஏழு வருடங்களுக்கு (2007) முன் கிடைத்த ஒதுக்கீட்டை கூட 2008 ஆம் இட ஒதுக்கீடு கிடைத்தது என்று ஈ அடிச்சான் காப்பி அடிக்கும் நீங்கள் இட ஒதுக்கீடு பற்றி பேச என்ன அருகதையுள்ளது?

6. இட ஒதுக்கீடு கிடைத்தும் சமுதாயத்திற்கு பலன் ஒன்றும் கிடைக்கவில்லை என்றீர்களே, அதற்கான ஆதாரம் என்ன?

7. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளில் இட ஒதுக்கீட்டினால் எந்த பலனும் கிட்டவில்லை என்றீர்களே, அதற்கு ஆதாரம் என்ன? எந்த அடிப்டையில் இவ்வாறு சொன்னீர்கள்?

8. கேட்டதை எல்லாம் பரப்புபவன் பொய்யன் என்று ஹதீஸ் உள்ளதே, யார் என்றே தெரியாத ஒருவன் (காரைக்கால் கயவன்), பரப்புவதை அதன் உண்மை தன்மை தெரியாமல் பரப்பும் நீங்கள் பொய்யர்கள் இல்லையா? 

9. தமிழகத்தில் கலைஞர் 3.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கும் போது, அதை ஜெயலலிதா எதிர்த்தார் என்று புழுகிய நீங்கள், சட்டமன்றத்தில் முஸ்லிம் லீக் கட்சியின் அப்துல் லத்தீப் அவர்கள் முஸ்லிம்களுக்கு இட ஒதக்கீடு தாருங்கள் என்று கேட்ட போது, 'நாட்டில் கலவரம் ஏற்படுத்த முயற்சி செய்கிறீரா?' என்று கலைஞர் கேட்டதை நீங்கள் ஏன் மறைத்தீர்கள்? 

10. ஜெயலலிதா கலைஞர் தந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்தார் என்று விமர்சிக்கும் நீங்கள், கடந்த சட்டமன்ற தேர்தலில் உங்கள் தமுமுக பினாமிகள் ஜெயலலிதாவை ஆதரித்தார்களே, இட ஒதுக்கீட்டை உயர்த்தி தருவார் என்றார்களே, அப்போது உங்களுக்கு கறந்த பால் மடி புகாது என்பதும் கருவாடு மீன் ஆகாது என்பதும் தெரியாமல் போனது ஏன் ?

11. இட ஒதுக்கீட்டினால் சமுதாயத்திற்கு எந்த பலனும் ஏற்படவில்லை என்கிறீர்களே, இதை புள்ளி விபரங்களுடன் முன்வைத்து தவ்ஹீத் ஜமாஅத்துடன் நேருக்கு நேராக வந்து நிரூபிக்க தயாரா? 

12. எல்லா இயக்கங்களும் ஒன்றுப்பட்டால் தான் இட ஒதுக்கீடு கிடைக்கும் என்கிறீர்களே, இது உண்மையென்றால் 3.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்து எப்படி? 

13. தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்கும் இயக்கங்கள் ஏன் முதலில் ஒன்றுபட கூடாது.

14. சமுதாய அமைப்புகள் மக்களுக்கு கல்வியில் எதையும் செய்யவில்லை என்று சொல்லும் நீங்கள் கல்விப்பணியில் எதை கிழித்தீர்கள்? 

இது அல்லாமல், மற்றும்  பல கேள்விகளையும் சவால்களையும் நமது கட்டுரையில் முன்வைத்து இருந்தோம். இதற்கு பதில் சொல்ல முடியாமல் திக்குமுக்காடிய வரலாற்று ஆசிரியர்கள், வலுவாக மாட்டிக்கொண்டு விட்டோமே என்ன செய்வது என்று யோசித்து பதில் என்ற பெயரில், நாம் கேட்ட மூன்றே கேள்விகளுக்கு மட்டும் பதில் என்ற பெயரில் தங்களின் உண்மை முகத்தை காட்டியுள்ளார்கள். இவர்களின் பதில் இவர்களின் உண்மை முகத்தை இன்னும் வலுவாக தோலுரித்து காட்டியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

வழக்கம்போல, இவர்களின் காப்பி கட்டுரையை பாராட்டி உலகெங்கிலும் இருந்து பலர் தொலைபேசி வாயிலாகவும், இமெயில் வாயிலாகவும், இணையதளத்திலும் பாராட்டினார்கள் என்ற பிம்பத்துடன் ஆரம்பமாகிறது பதில் கட்டுரை. நான் கட்டுரை எழுதியுள்ளேன் படித்தீர்களா? என்று விளம்பரம் செய்து கொண்டு இருப்பது யார்? என்று நாங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

அடுத்து, பெரும்பான்மை மக்களின் எண்ணத்தைதான் இவர்கள் கட்டுரையாக வடித்தார்களாம். நீங்கள் என்ன கட்டுரை வடித்தீர்கள்? யார் என்றே அறியப்படாத காரைக்கால் கயவனின் உளறல்கள் பாதி, தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்தின் மூலமாக வந்த நிகழ்ச்சியில் வந்த வரலாறு பாதி, நிரூபிக்க திராணியற்ற சொத்தை வாதங்கள் இதுவெல்லாம் பெரும்பான்மை மக்களின் எண்ண ஓட்டமாம்.

அடுத்து, பொது வாழ்வில் உள்ளவர்கள் மீது விமர்சனம் வருவது இயல்பு என்கிறார்கள், உண்மைதான். நாமும் அதை ஏற்றுக்கொள்கிறோம். பொது வாழ்வில் உள்ளவர்களை விமர்சனம் செய்ய கூடாது என்று நாம் சொல்லவில்லை, சொல்லவும் மாட்டோம். நாம் நமது பதிலில் முன்வைத்த கருத்தும் அதுவல்ல. உங்களுக்கு பிடிக்காத இயக்கம் என்பதால், எவனோ உளறுவதை ஏன் முக்கியத்துவம் கொடுத்து உங்களின் வெறுப்பை வெளிப்படுத்துகிறீர்கள்? கிறுக்கன் வைத்த வாதங்கள் உப்பு சப்பில்லாதவை, அவற்றை உங்களால் நிரூபிக்க முடியுமா?

 இட ஒதுக்கீடு எப்போது கிடைத்தது என்ற வரலாறு கூட தெரியாமல், இட ஒதுக்கீட்டினால் பலன் ஒன்றும் இல்லை, இட ஒதுக்கீட்டிற்கு பாடுபடுவதற்கு முன் வெளிநாட்டு மோகத்தை ஒழிக்க வேண்டும் என்றெல்லாம் விபரம் தெரியாமல், ஆதாரம் இல்லாமல் ஏன் இப்படி எழுதி சமுதாய துரோகம் செய்கிறீர்கள் என்று அடுக்கி இருந்தோம்.

நாங்கள் நடுநிலைவாதிகள் சம்சுதீன் விஷமியை கூட கண்டித்துள்ளோம் என்று நடிக்கிறார்கள். சமுதாய பெண்களை மாவட்ட தலைவர்கள் செயலாளர்கள் தள்ளிக்கொண்டு போய்விடுகிறார்கள் என்று ஜூம்ஆவில் பேசிய சம்சுதீன் விஷமியை, இவர்கள் இவர் ஜும்ஆவில் இவ்வாறு பேசியிருக்கக்கூடாது, வேறு இடத்தில் பேசியிருந்தால் சரி என்று ஓரினச்சேர்க்கைப் புகழ்  சம்சுதீன் காஸிமிக்கு கூஜா தூக்கியுள்ளார்கள். உங்களின் தமுமுக பெண்களை போராட்டத்திற்கு அழைத்து செல்லுகிறார்களே, அதை பற்றி நீங்கள் ஏன் வாய்திறக்கவில்லை? உங்களின் நடுநிலை நாற்றம் உங்களின் மூக்கையே துளைக்கிறது!

மேலும், நாம் எமது பதிலில் இவர்களை கேலி செய்துள்ளோமாம். கேலி செய்தது உண்மைதான். கேலி செய்யும் அளவுக்கு உங்களின் வாதங்கள் இருந்தால் கேலி செய்யாமல் என்ன செய்ய வேண்டும்? உங்களின் கருத்துகள் கேலி செய்யும் வகையில் இருந்து, உங்களிடம் நியாய உணர்வாவது இருந்தால், கேலி செய்து இருக்க மாட்டோம். அதாவது, எல்லா இயக்கங்களும் இட ஒதுக்கீடு குறித்து போராட்டம் நடத்துகின்றன, இது போன்ற போராட்டங்களை மற்ற இயக்கங்கள் நடத்தும் போது, நீங்கள் இவ்வாறு விமர்சனம் செய்து எழுதி, தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்தையும் பற்றி எழுதியிருந்தால், நீங்கள் நியாயமானவர்கள். என்ன கேள்வி கேட்டாலும் நளினமாக பதில் சொல்ல நாங்கள் முன்வந்து இருப்போம். தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்தை பற்றி காரைக்கால் கயவன் ஒருவன் உளரியதை முக்கியத்துவம் கொடுத்து, காரைக்காலில் அவன் நடத்திய கூட்டத்தில் ஐம்பது நபர்கள் கூட இவனின் விமர்சனத்தை கேட்க முன்வராத ஒருவனை முன்னிலைப்படுத்தி, உங்களின் குரோதத்தை வெளிப்படுத்தும் போது அதை தக்க முறையில் தான் எதிர்கொள்வோம்.

விமர்சனம் எவ்வாறு உள்ளதோ அவ்வாறு தான் நமது பதிலும் இருக்கும். நமது தளத்திலேயே வந்த ஆக்கங்களில் கண்ணியமான முறையில் பதில் தந்துள்ளோம் என்பதை உங்களால் மறுக்க முடியுமா?

கட்டுரை எழுதியவர்களுக்கு வரலாற்று ஞானம் கிடையாது, இட ஒதுக்கீடு எப்போது கிடைத்தது என்று கூட தெரியாது, இப்படிப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டினால் எந்த பயனும் இல்லை என்று புளுகுகிறார்கள் என்று நாம் விமர்சனம் செய்து இருந்தோம். இதற்கு பதில் செல்ல புகுந்தவர்கள், இவர்கள் தங்களின் தவறுகளை மறைக்க எந்த காரியத்தையும் செய்ய தயங்க மாட்டார்கள் என்று காட்டியுள்ளார்கள். இதை விளக்குவதற்கு முன், இவ்வாறு ஈ அடிச்சான் காப்பி அடிப்பது தவறா என்று சில உதாரணத்துடன் கேட்டுள்ளார்கள். அதாவது, வரலாற்று சம்பவங்களும் புள்ளிவிபரங்களும் எவ்வாறு வரலாற்றில் உள்ளதோ அவ்வாறு தான் பயன்படுத்த முடியுமாம். அப்படியென்றால், இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் தியாகம் மறைக்கப்பட்டுள்ள வரலாற்றையே நாமும் எடுக்கலாமா? என்ற கேள்வி வருகிறது.

ஓர் உதாரணத்தையும் குறிப்பிட்டுள்ளார்கள், அதாவது, திப்பு சுல்தானின் தந்தையின் பெயர் ஹைதர் அலி என்று வரலாற்றில் சொல்லப்பட்டால் அவ்வாறு தான் சொல்ல முடியுமாம்.இப்படி சொன்னால் தவறு இல்லைதான் ஆனால் திப்பு சுல்தானின் தந்தை ஹுமாயுன் என்று இருந்தால் இது தவறு என்று சொல்லி ஹைதர் அலி என்பதுதான் சரி என்று சொல்லி இருந்தால் நீங்கள் வரலாறு தெரிந்த ஆசிரியர். அதை செய்யாமல் ஒரு தளத்தில் வந்த தவறான வரலாறை அப்படியே போட்டுவிட்டு இதுதான் வரலாறு என்று சொல்லி சாதிக்க பார்கின்றீர்கள்

கேப்டன் டிவியில் தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை செல்லும் போராட்டம் குறித்து வெளியான வீடியோ நிகழ்ச்சியில் வந்த தகவல்களை தான் கட்டுரையாளர் ஈ அடிச்சான் காப்பி அடித்துள்ளார் என்று நாம் சொன்னோம். இதற்கு ஓர் அற்புதமான  கேள்வியை முன்வைத்துள்ளார், அதாவது, எழுத்து வடிவில் உள்ளதைதான் காப்பி பேஸ்ட் செய்ய முடியுமாம், வீடியோவை எப்படி காப்பி பேஸ்ட் செய்ய முடியும் என்று கேட்டுள்ளார்கள். கேப்டன் டிவி நிகழ்ச்சியில் இருந்து தகவல்களை ஆட்டை போட்டுள்ளார்கள் என்றுதான் நாம் சொன்னோமே தவிர, இவர்களின் கணிணி மூலம் டிவி நிகழ்ச்சி வீடியோவை காப்பி செய்து அதை உரைநடையாக பயன்படுத்தினார்கள் என்று நாம் சொல்லவே இல்லை.

கேப்டன் டிவி நிகழ்ச்சியில் இருந்துதான் நீங்கள் காப்பி அடித்தீர்கள் என்ற நமது கூற்றுக்கு நாங்கள் அங்கிருந்து காப்பி அடிக்கவில்லை. வேறு ஒரு தளத்தில் இருந்துதான் காப்பி அடித்தோம் என்றும், நாங்கள் காப்பி அடித்த இடத்தில் 3.5 சதவீத இட ஒதுக்கீடு 2008 ஆம் ஆண்டுதான் கிடைத்தது என்று உள்ளது (நாங்கள் என்ன செய்ய) என்றுள்ளார்கள். ஏதோ, தெரியாமல் இவ்வாறு தவறான தகவலை சொல்லிவிட்டோம், தவறுதான் என்று சொல்லியிருந்தால் அதை நாம் கண்டு கொள்ளாமல் விட்டிருப்போம். இவர்கள் காப்பி அடித்த இடத்தில் இருந்துதான், கேப்டன் டிவியே காப்பி அடித்தாக ஒரு மிகப்பெரிய பொய்யை இட்டுக்கட்டியுள்ளார்கள். அதாவது, இவர்கள் குறிப்பிட்ட அந்த இட ஒதுக்கீடு வரலாறு பல்வேறு ஊர் தளங்களில் வெளிவந்ததாம். அந்த தகவல்களை அதே வார்த்தை வைத்து கேப்டன் டிவி அந்த ஊர் தளங்களிலிருந்து எடுத்து நிகழ்ச்சி தயாரித்துள்ளதாம்.

புளுகுபவர்கள் எப்போதும் தங்கள் புளுகல்களை தாங்களே நிரூபிக்கும் வண்ணம் ஏதாவது ஒரு வலுவான ஆதாரத்தை நமக்கு விட்டு செல்வார்கள்

அதாவது, தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை செல்லும் போராட்டம் நடந்தது கடந்த ஜனவரி 28, 2014 அன்று. கேப்டன் டிவியில் சிறை செல்லும் போராட்டம் குறித்து வெளியான நிகழ்ச்சி நாள் ஜனவரி 28 அல்லது ஜனவரி 29. கட்டுரையாளர் தான் எங்கே இருந்து இந்த தகவல்களை எடுத்தார் என்று குறிப்பிடும் இணையதளத்தில், இட ஒதுக்கீடு குறித்து வெளியான கட்டுரை பிப்ரவரி 1 ஆம் தேதி. ஜனவரி 28 அல்லது ஜனவரி 29 ஆம் தேதி வெளியான கேப்டன் டிவி நிகழ்ச்சியில் பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியான தகவல்களை எப்படி காப்பி அடித்தார்கள்? என்ன சொல்ல வருகிறீர்கள்? கட்டுரையாளர் குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியான கட்டுரையில் எப்போது இட ஒதுக்கீடு கிடைத்தது என்பதை பற்றி குறிப்பிடும் போது இந்த தகவலை இரண்டு இடத்தில் பதிவு செய்துள்ளார்கள், ஒரு இடத்தில் எந்த ஆண்டில் இட ஒதுக்கீடு கிடைத்தது என்பதை 2008 ஆம் என்று கேப்டன் டிவியில் வந்த தகவலை கவனமற்று பதிந்துள்ளார்கள், மற்றொரு இடத்தில் 15.09.2009 அன்று தான் இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது என்று சரியாக சொல்லியுள்ளார்கள் . ஒன்று தெளிவாகிறது, கேப்டன் டிவி கட்டுரையாளர் குறிப்பிடும் இணையதளத்தில் இருந்து காப்பி அடிக்கவில்லை. அவ்வாறு செய்து இருந்தால் ஒரு இடத்தில் சொல்லப்பட்ட சரியான (15.09.2007 என்ற) தகவல் அடிப்படையில், 2007 என்று சொல்லியிருக்கும், குறைந்தபட்சம் எது சரியான தகவல் என்றாவது பார்த்து இருக்கும். ஜனவரி 28 அல்லது ஜனவரி 29 ஆம் தேதி வெளியான நிகழ்ச்சி பிப்ரவரி 1 ஆம் தேதி வெளிவந்த கட்டுரையை காப்பி அடிக்கும் கால எந்திரம் கண்டுபிடிக்கபடாததால் இது சாத்தியம் அற்றது.
பிப்ரவரி 1 ஆம் தேதி வெளிவந்த ஆக்கம்  - கேப்டன் டிவி நிகழ்ச்சி வெளிவந்த தேதி ஜனவர் 28 அல்லது 29
இப்போது உண்மை புலப்பட்டுவிட்டது, அதாவது கட்டுரையாளர்கள் குறிப்பிடும் இணையதளமும் தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்ட வீரியத்தால், வெளி வந்த கேப்டன் டிவி நிகழ்ச்சியில் இருந்து தான் இட ஒதுக்கீடு பறிக்கப்பட்ட மற்றும் 3.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்த தகவல்களை எடுத்துள்ளார்கள் என்பது புலப்படுகிறது. கட்டுரையாளர்கள் குறிப்பிடும் இணையதளமும் கேப்டன் டிவி நிகழ்ச்சியில் இருந்து தான் இட ஒதுக்கீடு பற்றி தகவல்களை எடுத்துள்ளது என்று சொன்னால், தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அது வலுசேர்க்கும் என்பதால், கதையை தலைகீழாக மாற்றியுள்ளார் என்ற சந்தேகம் எழுகிறது. இந்த உண்மை எல்லாம் தெரிந்துவிடும் என்பதால் தான், எந்த இணையதளத்தில் அந்த கட்டுரை வந்தது என்பதையும், அந்த கட்டுரையின் தலைப்பையும் குறிப்பிடும் கட்டுரையாளர்கள், அந்த கட்டுரைக்கான லிங்கை அவர்கள் பதிலில் தரவில்லை.

இட ஒதுக்கீட்டினால் சமுதாயத்திற்கு எந்த பலனும் இல்லை என்று நா கூசாமல் புளுகுகிறீர்களே, இடஒதுக்கீடு எப்போது கிடைத்தது என்று கூட தெரியாத நீங்கள், எப்படி இட ஒதுக்கீட்டினால் பலன் இல்லை என்று எவ்வாறு முடிவு செய்தீர்கள், இதை உங்களால் நிரூபிக்க முடியுமா என்ற நமது கேள்விக்கு மவுனமே பதில்.

ஊடக தர்மத்தை பற்றி எல்லாம் பேசும் அண்ணண்மார்கள், வேறு ஒரு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்களையும் போட்டு பத்திரிக்கை தர்மத்தை நிலைநாட்டி இருக்க வேண்டும் அல்லவா?

கட்டுரையாளர் குறிப்பிடும் இணையதளத்தில் வந்த கட்டுரை இங்கே.

கேப்டன் டிவி நிகழ்ச்சி சொல்லப்பட்ட தகவல்களை அப்படியே சொல்லி 2008 ஆம் ஆண்டு தான் இட ஒதுக்கீடு கிடைத்தது என்பதை சொல்லும் கட்டுரையாளர்கள் குறிப்பிட்ட இணையதளத்தில் உள்ள வாசகம்
அதே ஆக்கத்தில் கட்டுரையாளர்கள் இடஒதுக்கீடு என்று கிடைத்து என்ற தேதியுடன் சொல்லும் வாசகம்
கட்டுரையாளர்கள் காட்டும் இணையதளம், இடஒதுக்கீடு குறித்த தகவல்களை முன்வைத்து, அது பற்றி ஒரு நடுநிலை பார்வையை முன்வைக்கிறது. 3.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க பிஜே அவர்களின் முயற்சியையும் தவ்ஹீத் ஜமாஅத்தின் இடைவிடாத போராடத்தையும் கட்டுரையாளர்கள் குறிப்பிட்ட இணையதளத்தில் வந்த கட்டுரை தெளிவாக முன்வைக்கிறது. 

தற்போது உள்ள தமுமுக, ஜால்ராக்களாக மாறிவிட்டபோதும், தமுமுக இட ஒதுக்கீட்டிற்காக வீரியத்துடன் இருந்த காலத்தில் செய்த போராட்டங்களை நினைவு கூறுகிறது அந்த கட்டுரை. இதுவல்லவா நடுநிலை?. கட்டுரையாளர்கள் எவ்வளவு கயமைத்தனம் செய்துள்ளார்கள் என்பதற்கு, இவர்கள் ஆதாரம் காட்டும் கட்டுரையில் உள்ள நேர்மையான பார்வையும் ஒரு சான்று. கட்டுரையாளர்கள் சுட்டிக்காட்டிய அந்த இணையதளத்தில் வந்த கட்டுரையில் காரைக்கால் கயவனின் உளறல்கள் இல்லை என்பதும் மறைக்கப்பட்ட ஒரு செய்தி.

அடுத்து, புத்தகம் போட்டு வியாபாரம் செய்கிறார்கள் என்று விமர்சனம் செய்துவிட்டோமாம். கொதிக்கிறார்கள். தவ்ஹீத் ஜமாஅத் குறித்து யார் என்றே தெரியாதவன் செய்த விமர்சனத்தை அதன் உண்மை தன்மை அறியாமல் பரப்புகிறீர்களே, அது போல நாங்களும் பரப்பலாமா? புத்தகம் போட்டு காசு பார்க்கதான் இந்த வேலையை இவர் செய்கிறார் என்று நாங்களும் பரப்பிவிடலாமா? என்று ஒரு கேள்வியை முன்வைத்தோம். இதற்கு நான் புத்தகம் போட்டு வியாபாரம் செய்கிறேன் என்று சொல்ல வேண்டும் அல்லது செய்யவில்லை என்று சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்லாமல், இதை அல்லாஹ் அறிவான் என்கிறார். இதை அவர்கள் இணையதளத்திலேயே படித்துக்கொண்டு வலது புறம் பார்த்தால், புத்தகம் ரூபாய் 75 என்று மினுக்கும் படம் ஒன்று ஜொலிக்கிறது.

பொதுவாக, ஆய்வு செய்தோ அல்லது தகவல்களை திரட்டியோ புத்தகம் எழுதி, அதையே புத்தகமாக வெளியிடுவது நமது பார்வையில் தவறல்ல, தவறு என்று சொல்லவும் இல்லை. நாம் சொன்னது , யாரோ எழுதிய தகவல்களை எடுத்து, பக்கத்தை நிரப்பி, மற்றவர்களின் ஆக்கத்தை தனது ஆக்கம் போல காட்டி, அதை புத்தகமாக போட்டு விற்பனை செய்வது தடுக்கப்பட்டது, நியாத்திற்கு புறம்பானது.

நாம் இவ்வாறு வைத்த விமர்சனத்திற்கு, சரியான பதில் சொல்ல முடியாத கட்டுரையாளர், ஒரு அற்புதமான வாதத்தை முன்வைக்கிறார், அதாவது புத்தகம் எழுதியவர் அதை வெளியிடாவிட்டால், உலகில் ஒரு புத்தகம் கூட வந்து இருக்காதாம். என்ன ஒரு கண்டுபிடிப்பு.(?) புத்தகம் எழுதியவர் அதை வெளியிடுவது கூடாது என்று எங்கே நாம் கூறிப்பிட்டுள்ளோம்?

அடுத்து, நாங்கள் நடுநிலையானவர்கள் என்று நடிக்கும் இவர்களிடம் இருக்கும் விஷம் கேள்வியாக வெளிப்படுகிறது. அதாவது, தவ்ஹீத் ஜமாஅத் 'முதுகு அறித்தால் சொறிவது மார்க்கத்தில் கூடுமா?', 'தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்க்கலாமா? விளக்கெண்ணெய் தேய்க்கலாமா – ஆராய்ச்சி' போன்ற ஒன்றும் இல்லாத தலைப்புகளிலும் எல்லாம் புத்தகம் சீடி போட்டு விற்பனை செய்கிறதாம். ஈ அடிச்சான் காப்பி மன்னர்களுக்கு சூடு, சுரனை இருந்தால் இதை வந்து நிரூபிக்க தயாரா? இவ்வாறு உப்பு சப்பில்லாத தலைப்புகளில் வெளிவந்த புத்தகங்களை பட்டியல் போட முடியுமா? இவ்வாறு எல்லாம் தரம் தாழ்ந்து எழுதும் காப்பி பேஸ்ட் மன்னர்களை, கருத்து போடும் சிங்ஜாங் குஞ்சுகள் கண்டு கொள்வது இல்லை. ஏன் இவ்வாறு பொய்யாக எழுதுகிறீர்கள் என்று யாரும் கேட்பது இல்லை.

மேலும், 'தேவை இருக்கிறதோ இல்லையோ பெயர் போட்டால் விற்பனையாகும் என்பதால் ஒன்றுக்கும் உதவாத தலைப்புகளில் எல்லாம் நூல் வெளியிட்டு பணக்காரர்களின் பட்டியிலில் இடம் பிடித்திருப்பவர்கள் யார் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லையாம்'. அதாவது, தவ்ஹீத் ஜமாஅத்தினர், என்ன புத்தகம் போட்டாலும், வாங்க ஆள் உள்ளது என்பதால், கண்ட தலைப்புகளிலும் புத்தகம் போட்டு, பணக்காரர்களின் பட்டியிலில் இடம் பிடித்து இருக்கிறார்களாம். இந்த காப்பி புகழ் மன்னர்கள், பிஜேவை தான் புத்தகம் போட்டு பணக்காரர்களின் பட்டியிலில் இடம்பெற்றுள்ளதாக அவதூறு செய்கிறார்கள். அவர் தான் தன சொத்துக்கணக்கை வெளியிட்டு மேற்கொண்டு இருந்தால் எடுத்துகொள்ளுங்கள் என்று சொல்கிறாரே? இதை நிரூபிக்கும் துணிச்சல் உங்களுக்கு இருந்தால் அந்த சொத்துக்களை வந்து மீட்டு செல்லுங்களேன்! இப்படி அவதூறு சொல்லுகிறீர்களே, இது தவறாயிற்றே என்று நடுநிலை நாடகம் போடும் கோமாளிகள் கேட்பது இல்லை. இவர்களின் உண்மை தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பது தான், நடுநிலை வேடம் போட்டு, தங்களின் குணத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது அண்ணண்மார்களுக்கு எந்த குரோதமும் இல்லையாம். நடுநிலைவாதிகளாம். அப்படி என்றால் மற்ற இயக்கங்கள் போராட்டம் நடத்தும் போது உங்களின் கேள்விகள், எந்த சந்துக்குள் ஒளிந்து இருந்தது.

நாமும் ஒன்றை சொல்ல விரும்புகிறோம். எங்களுக்கு எதிரிகள் கிடையாது. எதிரிகளாக இருப்பவர்கள் தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் தூண்களாக மாறிவருகிறார்கள். எதிரிகள் நியாயப்படி கேள்வி கேட்டாலும், அதற்கு நளினமான முறையில் பதில் அளிப்பது எங்களின் கடமை. நளினமாக பேசுபவர்களிடம் அதே பாணியில் பதில் தருவோம், வரம்பு மீறுபவர்களிடம் அதே அளவு வரம்பு மீறுவோம்.

தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவை ஆதரித்தபோதுதான் கலைஞர் இட ஒதுக்கீடு தந்தார் அப்போது தமுமுக திமுக கூட்டணியில் இருந்தது. கலைஞர் இட ஒதுக்கீடு கொடுத்தவுடன் கலைஞரை தேடிச் சென்று தனது ஆதரவை தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்தது. தமுமுக அந்த கூட்டணியில் உள்ளார்களே என்று தவ்ஹீத் ஜமாஅத் பார்க்கவில்லை. இட ஒதுக்கீட்டை தந்துள்ளார்களே, அதற்கு நமது நன்றியை வாக்குகளாக தருவோம் என்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்லி, அதை செயல்படுத்தியும் காட்டியது. இட ஒதுக்கீடு தந்த நேரத்தில் தமுமுக அதிமுக கூட்டணியில் இருந்தது என்ற ஒரு பொய்யையும் காப்பி பேஸ்ட் மன்னர்கள் அவிழ்த்து விட்டுள்ளார்கள், இட ஒதுக்கிடு தந்தவுடன் கலைஞருக்கு தமுமுக நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தியது தெரியுமா?தெரியாதா ? இட ஒதுக்கீடு கிடைத்தபோது, தமுமுக அதிமுக கூட்டணியில் இருந்தது என்று காப்பி பேஸ்டர்கள் நிரூபிக்க தயாரா?

இவர்களின் ஒரே நோக்கம், தவ்ஹீத் ஜமாஅத்தை கறைப்படுத்த வேண்டும், சில வருடங்களுக்கு முன்னர் நடந்த விஷயங்களை மாற்றி சொன்னால் யாராலும் கண்டு பிடிக்க முடியாது என்ற அசட்டு தைரியம். இப்போது, அவர்களின் பினாமிகளான தமுமுக, திமுக கூட்டணியில் உள்ளதாம், எனவே, தவ்ஹீத் ஜமாஅத் திமுகவை ஆதரிக்காதாம். இப்படியும் வதந்திகளை கிளப்பி விடுகிறார்கள் காப்பி பேஸ்டர்கள். இதையும் நிரூபிக்க தயாரா? நீங்களா யோக்கியர்கள்? இட ஒதுக்கீடு பெரும்பாலும் உயர்த்தி தரப்படும், தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவை தான் ஆதரிக்கும் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், திடீர் என்று திமுகவின் பக்கம் நிபந்தனை இல்லாமல் தாவிய தமுமுகவையல்லவா நீங்கள் விமரசனம் செய்ய வேண்டும்.

தவ்ஹீத் ஜமாஅத்தினர், ஊட்டியில் ஒரு தர்பியா நிகழ்ச்சிக்காக சென்று இருந்தபோது, தேர்தலில் ஜெயித்துவிட்டோம், நம்மை எவனும் எதுவும் பண்ண முடியாது என்று உணர்வு அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, இது மனித நேய (?) மக்கள் கட்சி அலுவலகம் என்று போட்டு அராஜகம் செய்தவர்களை நடுநிலைவியாதிகளான நீங்கள் கண்டித்தது உண்டா?

தமுமுகவின் ஜால்ராவை பார்த்து, இனி இவர்களால் சமுதாயத்திற்கு எந்த பலனும் இல்லை என்று சமுதாயம் தெளிவாக உணர்ந்துள்ளது. தமுமுகவினர் இட ஒதுக்கீட்டிக்காக மாநில அளவில் சென்னையில் நடத்திய போராட்டத்தில் முவாயிரம் மக்கள்கூட  கூடவில்லை, இது அவர்களுக்கு உள்ள மக்களின் ஆதரவு. இவர்களின் பினாமிகளான தமுமுகவை நாம் ஆதரிக்காதது தலைகணமாம்! அநியாக்காரர்களை ஜால்ராகளை சமுதாய காவலர்கள் என்று மக்களை ஏமாற்ற வேண்டுமா? உங்கள் பினாமிகள் முஸ்லிம் லீக் மற்றும் மற்ற முஸ்லிம் வேட்பாளர்களை ஏன் ஆதரிக்க சொல்லவில்லை,?அதை வலியுறுத்தி அண்ணண்மார்கள் ஏன் காப்பி பேஸ்ட் கட்டுரை போடவில்லை?

அடுத்து, இவர்கள் தமுமுக என்ற ஜால்ராக்களின் எடுபிடிகள் தான் என்பதை மறைமுகமாக நிரூபிக்கிறார்கள். அதாவது, சேப்பாக்கத்தில் தமுமுகவின் போர்படை தளபதி மண்ணை கவ்வியதற்கு யார் காரணம் என்கிறார்கள். அங்கே, அவர் மண்ணை கவ்வியதற்கு, காரணம், உங்கள் தமுமுகவினர் செய்த அட்டுழியம். முஸ்லிம்கள் நிறைந்துள்ள சேப்பாக்கத்தில், அந்த தோப்புதுறை தம்பி மண்னை கவ்வியது, முஸ்லிம் சமுதாயம், தமுமுகவை ஆதரிக்க தயார் இல்லை என்பதை காட்டவில்லையா? மற்ற இரண்டு தொகுதிகளிலும், தமுமுகவினர் ஜெயித்தார்கள் என்றால், அதற்கும் முஸ்லிம்களின் ஓட்டு காரணம் அல்ல. திமுகவிற்கு எதிரான எதிர்ப்பலையால் தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள். தமுமுகவை ஏன் முஸ்லிம்கள் ஆதரிக்க கூடாது, என அடுக்கடுக்கான காரணங்கள் முன்வைத்து தேர்தல் நேரத்தில், சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டது, அப்போது அண்ணண்மார்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. தமுமுகவின் சமுதாய துரோகத்தையும் கிழித்து தொங்க போட்டுள்ளோம். இட ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு முட்டு கொடுத்து, கேவலப்பட்டவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஏன் ஆதரவு கொடுக்க வேண்டும்? சட்டமன்றத்தில் இதுவரை ஜவாஹிருல்லாஹ்வை மிஞ்சும் அளவுக்கு ஓ பன்னீர்செல்வம் கூட ஜால்ரா தட்டியது இல்லை என்று சொல்லும் அளவுக்கு அம்மா புராணம் பாடும்போது நிரூபர்கள் எங்கே சென்று இருந்தார்கள்.

அடுத்து, சமுதாய இயக்கங்கள் சமுதாய மாணவர்களை இயக்க அரசியலில் ஈடுபடுத்தி அவர்களின் படிப்பை கெடுக்கிறார்களாம். மற்ற இயக்கங்கள் என்ன செய்கிறார்கள் என்று நாம் சொல்லவரவில்லை. இதை தவ்ஹீத் ஜமாஅத் செய்கிறதா? இதை புளுகு மன்னர்களால் நிரூபிக்க முடியுமா? தவ்ஹீத் ஜமாஅத்தின் இயக்க பணிகளில் பங்கெடுத்து தங்களின் கல்வியை பாழாக்கிய ஒரு பத்து மாணவர்களின் பெயரை குறிப்பிட முடியுமா? சமுதாயத்தை கல்வியில் முன்னேற்ற வருடத்திற்கு ஒரு கோடிக்கு மேல் நன்கொடை பெற்று, அதை சமுதாய மக்களுக்கு அள்ளிக்கொடுக்கிறது, இது பொய் என்று அண்ணண்மார்கள் நிரூபிக்க தயாரா? சமுதாயத்தை கல்வியில் முன்னேற்ற வேண்டும் என்பதற்காக ஊர்கள் தோறும் கல்வி விழிப்பிணர்வு முகாம்களை தவ்ஹீத் ஜமாஅத்தின் மாணவர் அணி நடத்துகிறது. இந்த நிகழ்ச்சி மட்டுமே வருடத்தில் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் நடக்கிறது. இது பற்றிய விபரம் அறிய இங்கே செல்லவும். இதை எல்லாம் அண்ணண்மார்கள் மறைத்துள்ளார்கள்.

இந்த நிருபர்களின் பினாமிகளாக தமுமுக ம.ம. கட்சியினர் திமுக கூட்டணியில் உள்ள காரணத்தினால், தவ்ஹீத் ஜமாஅத்தினர் அதிமுகவை ஆதரிக்க தயாராகி வருகிறார்கள் என்று அரசியல் நோக்கர் கணித்து நமது அண்ணண்மார்களிடம் சொன்னார்களாம். ஏன் பொய்யையே பிழைப்பாக வைத்து அழைகிறீர்கள்? இட ஒதுக்கீட்டை உயர்த்தி தந்தால், அதிமுகவிற்கு ஓட்டு, இல்லையென்றால் அதிமுகவிற்கு வோட்டு என்று தவ்ஹீத் ஜமாஅத் பகிரங்கமாக அறிவித்து வரும் நிலையில், மனித நேய மக்கள் கட்சி எந்த கூட்டணியில் உள்ளதே அதற்கு எதிரான கூட்டணியில் தான் தவ்ஹீத் ஜமாஅத் இருக்கும் என்ற ஒரு அவதூறை யார் மீதே பழிபோட்டு சொல்லுகிறார்கள். தவ்ஹீத் ஜமாஅத்தை பொறுத்தவரை, சமுதாயத்திற்கு பலன் தரும் கோரிக்கையை முன்வைத்து, அதை நிறைவேற்ற முன்வருபவர்களை ஆதரிக்கும், யார் எங்கு உள்ளார்கள் என்று பார்க்காது. 3.5 சதவீத இட ஒதுகீட்டை கலைஞர் வழங்கிய போது, தமுமுக திமுக கூட்டணியில் இருந்தது, தமுமுக திமுக கூட்டணியில் இருந்த போதும், தவ்ஹீத் ஜமாஅத் திழுகவை இட ஒதுக்கீட்டிக்காக ஆதரித்தது. தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவை ஆதரிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் சொல்லி வரும் போது, அம்மா அம்மா என்று கூவிய மனித நேய மக்கள் கட்சினர், திமுகவிடம் சரண் அடைந்தது ஏன்? என்று என்றாவது அண்ணண்மார்கள் கேட்பார்களா? இது தான் உங்கள் நடுநிலையா? நீங்கள் தான் சமுதாயத்தின் மீது பற்றுள்ளவர்களா? நீங்கள் உண்மையாளர்களா? கொஞ்சமாவது அல்லாஹ்விற்கு அஞ்சமாட்டீர்களா?

அடுத்து, கலைஞர் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்த போது, அதை ஜெயலலிதா எதர்த்தார் என்ற ஒரு பொய்யான கருத்தை வேண்டுமென்றே முன்வைத்து இருந்தார்கள்.

இது குறித்து அவர்கள் எழுதிய வாசகம்:

"தொடக்கமாக தமிழக முதல்வர் இட ஒதுக்கீட்டைத் தந்துவிடுவார் என்று நினைத்து இந்த போராட்டத்தை தன்னந்தனியே ஏற்பாடு செய்த தவ்ஹீது ஜமாத்தின் துணிவைப் பாராட்டலாம். ஆனால் செயல் முறைகளைப் பாராட்ட இயலாது. காரணம் கலைஞர் கொடுத்த இட ஒதுக்கீடையும் ஆந்திர அரசு கொடுத்த இட ஒதுக்கீடையும் கடுமையாக எதிர்த்த ஜெயலலிதா போன்ற ஒருவரிடம் தமிழ் முஸ்லிம்களின் நம்பிக்கையை அடமானம் வைத்து ஏழு சதவீதம் இட ஒதுக்கீடை எதிர்பார்ப்பது கறந்த பால் மடி புகும் - கருவாடு மீன் ஆகும்" என்ற கதைதான்."

கலைஞர் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்த போது அதை ஜெயலலிதா எதிர்த்தார் என்றீர்களே, அதற்கு ஆதாரம் என்ன என்று கேட்டோம். இதற்கு இல்லை இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை, நாங்கள் தவறாக அல்லது கவனக்குறைவாக எழுதிவிட்டோம் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஒரு பொய்யை சொல்லிவிட்டு, அந்த பொய்யை மறைக்க அதை விட பெரிய பொய்யை சொல்லி தங்களின் தவறை மறைக்க பார்க்கிறார்கள். இவ்வாறு உளறிவிட்டோமே, என்ன செய்வது என்று யோசித்து, சரி, எங்கையாவது ஆதாரம் தேடுவோம் என்று எண்ணி, தீன்குலப் பெண்மணி இதழில், கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தி தருவேன் என்று ஜெயலலிதா சொன்னார், அதை இத்தனை மாதம் கடந்து அதை நிறைவேற்றவில்லை என்று 2012 ஆம் ஆண்டு எழுதப்பட்ட விஷயத்தை எடுத்து காட்டி, பாருங்கள் ஜெயலலிதா கலைஞர் கொடுத்த இட ஒதுக்கீட்டை எதிர்த்துள்ளார் என்று சற்றும் சம்பந்தம் இல்லாத ஒரு செய்தியை ஆதாரம் என்று காட்டியுள்ளார்கள். இவர்கள் எவ்வளவு பெரிய யோக்கியவர்கள் என்பதற்கு இவர்களின் ஆதாரம் சான்று. அவர்கள் எடுத்து வைத்த, ஆதாரம் கீழே (அடிக்ககோடு இட்டு காட்டப்பட்டுள்ளது).

கலைஞர் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஜெயலலிதா எதிர்த்தார் என்று புழுகும் அண்ணண்மார்களின் வைர வரிகள்!
இவர்கள் முன்வைக்கும் ஆதாரத்தில் கலைஞர் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஜெயலலிதா எதிர்த்தார் என்று ஒரு வாசகமோ அல்லது அந்த கருத்து மறைமுகவாகாவது சொல்லப்பட்டுள்ளதா? எப்படிப்பட்ட அயோக்கியனம் இது. நீங்கள் எதை எழுதினாலும், அருமை அருமை என்று கருத்து போட நாலு பேர்கள் உள்ளார்கள் என்ற வரட்டு தைரியமா? இப்போது கேவலப்பட்டு நிற்கிறீர்களே!

“முஸ்லிம்களுக்கு கருணாநிதி ஆட்சியில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. அதை கூடுதலாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை வைத்தது. யார் இடஒதுக்கீட்டை உயர்த்தி தருவார்களோ அவர்களுக்குத்தான் முஸ்லிம்களின் ஓட்டு. அவர்களின் வெற்றிக்கு நாங்கள் பாடுபடுவோம் என்று கூறியபோது ஜெயலலிதா எழுத்துப் பூர்வமாகவோ அல்லது தேர்தல் அறிக்கையிலோ கூறாத காரணத்தாலும், திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய காரணத்தாலும் திமுகவை கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரித்தது. ஆனால் (இறைவனின் நாட்டம்) திமுக தோல்வி அடைந்தது அதிமுக வெற்றியடைந்தது. தேர்தல் அறிக்கையில் சொல்ல மறுத்த ஜெயலலிதா முஸ்லிம்களின் ஓட்டு கிடைக்காமல் போய்விடும் என்பதை காலம் கடந்து உணர்ந்தவர், திருச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக இருந்த மர்யம் பிச்சையை ஆதரித்து திருச்சியில் நடந்த பிரச்சாரகூட்டத்தில் தி.மு.க., அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியிருந்தாலும் அது முறையாக செயல்படுத்தப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், அது முறையாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இவ்வாறு தெரிவித்து ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டது ஆனால் இதுவரை முஸ்லிம்களின் இடஒதுக்கீடு தொடர்பாக வாய் திறக்கவில்லை. - ஆதாரம் : “onlinepj –January 2012 தீன்குலப் பெண்மணி – தலையங்கம்.

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது எப்படி என்று இவர்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

நாம அடுக்கிய கேள்விகள் மற்றும் சவால்களில், இவர்கள் பதில் தந்தது இரு விஷயங்களுக்கு மட்டும் தான். ஒன்று, கேப்டன் டிவியில் அடித்த காப்பி, இரண்டு, கலைஞர் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஜெயலலிதா எதிர்த்தார் என்பதற்கு அவர்கள் தரப்பில் வைக்கப்பட்ட ஆதாரம். இவர்கள் பதில் என்ற பெயரில் சொல்லியுள்ள தவறான வாதங்களையும் தங்களின் தவறுகளை மறைக்க இவர்கள் பட்ட பாட்டையும் தோலூரித்துள்ளோம். இவர்களால் இது பற்றி இனி வாய்திறக்க முடியாது. மீண்டும் திசை திருப்பினால், உளறல்களை தோலுரிக்கும் இன்னும் பல விஷயங்கள் வெளியே வரும்.

அடுத்து, காரைக்கால் கயவனின் வாந்தி என்று சொல்லக்கூடாதாம். அந்த கயவனின் கேள்விகளுக்கு பதில் தர வேண்டுமாம். யார் என்றே தெரியாத கிருக்கனின் பொய்யான வாதங்களுக்கு பதில் தர வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பதை நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். காரைக்கால் கயவன் காரைக்களில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தி, அதில் எடுத்து வைத்த வாதங்களை தான் அண்ணண்மார்கள் எடுத்துகாட்டியுள்ளார்கள். அந்த கயவன் நடத்திய பொதுக்கூட்டத்தில் 50 நபர்கள் கூட, வரவில்லை. இவனின் வாதங்கள் காரைக்களில் கூட எடுபடவில்லை என்பதற்கு காரைக்களில் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய சிறை செல்லும் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள வெல்லம் சாட்சி. யார் வேண்டுமானலும் விமர்சனம் செய்யலாம், பொய்யான உப்பு சப்பில்லாத, பார்த்தவுடன் இவர் என்ன சொல்ல வருகிறார் என்று கேள்வி கேட்கும் அளவுக்கு உளறல்களை கொண்டிருந்தால், இது மக்கள் மத்தியில் எடுபடாது, இவன் சொல்லுவதை மக்கள் யாரும், நம்ப தயாராக இல்லை என்று சொல்லும் அளவுக்கு உள்ள விமர்சனங்களை நாம் அலட்சியப்படுத்திவிடுவோம். காரைக்கால் கயவனின் வாந்தியில் குளித்த அண்ணண்மார்களிடம், அந்த கயவன் செய்த இரண்டு விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பி இருந்தோம், ஒன்று குளர் காலத்தில், முதியவர்களை போராட்டத்திற்கு அழைத்து செல்லுகிறார்கள் என்ற விமர்சனத்திற்கு, நாங்கள் அவர்களை நிர்பந்தப்படுத்தியா அழைத்து சென்றோம், சமுதாயத்தின் அவல நிலையை உணர்ந்து வரும் வயதானார்களுக்கு உள்ள உணர்வு கூட உங்களுக்கு இல்லையே என்றும், பொதுவாக அழைக்கப்பட்ட அழைப்பை ஏற்று அவர்கள் வந்தால் உங்களுக்கென்ன? என்றும் வினவியிருந்தோம். மற்ற இயக்கத்தவர்கள் வயதானவர்களை குளிரிலும் வெயிலிலும் அழைத்து செல்லும் போது உங்களின் நாறும் நடுநிலை எங்கே சென்றது என்றோம். வாய் முடிவிட்டார்கள் அண்ணண்மார்கள். மேலும், காரைக்கால் கயவனின் வாந்தியில் அண்ணண்மார்களுக்கு மனத்த மற்றோரு வாதம், தவ்ஹீத் ஜமாஅத் சிறை செல்லும் போராட்டத்திற்காக எல்லா இயக்கங்களுக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் என்று கடிதம் அனுப்பியதாக சொல்லப்பட்ட கதை. இதற்கு ஆதாரம் இருக்கின்றதா பொய்யர்களே என்றோம், பதில் இல்லை. காரைக்கால் கயவனின் இரண்டு வாதங்கள் சாம்பிலுக்கு எடுத்துக்காட்டி, நமது முந்தைய ஆக்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அண்ணண்மார்களால் பதில் சொல்ல முடியவில்லை, கேவலப்பட்டுவிட்டார்கள். மற்ற கேள்விகளையும் போட்டு ஏன் எங்களை இன்னும் கேவலப்படுத்தவில்லை என்று கேட்டுள்ளார்கள், அவர்களின் அந்த கோரிக்கையும் ஏற்கப்படுகிறது.

கிறுக்குத்தனமாக காரைக்கால் கயவன் உளறிய வாதத்தை எடுத்து போட்டு, அந்த கயவனை பெரிய அறிஞர் ரேஞ்சுக்கு காட்டிய இவர்கள் அவனின் அனைத்து வாதத்தையும் சரிகாண்டால், அது பற்றி ஒரு பகிரங்க எழுத்து விவாத்திற்கு தயாரா? மேலும், காரைக்கால் கயவனின் வாந்தி இவர்களுக்கு மனக்கிறது என்று காட்ட, ஒரு வாதத்தை முன்வைக்கிறார்கள். அதாவது, குற்றம்சாட்டுபவர்கள், தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து பிரிந்தவர்கள் தானாம், எனவே, அவர்களின் வாதம் உண்மையாம். ,தவ்ஹீத்ஜமாத்தில் இருக்கும் ஒருவன் இந்த இயக்கத்தின் நிலைப்பாடு சரி இல்லை என்று சொல்லி விலகி இருந்தால் அவர்களை நீங்கள் உதாரணம் காட்டலாம் நீங்கள் உதாரணம் காட்டியவர்கள் அவர்களாக பிரிந்து சென்றவர்களா ?, தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ளவன் நேர்மை, நாணயம் மற்றும் மார்க்கத்தை சரியான முறையில் பேணுபவனாக இருக்க வேண்டும், இவ்வாறு இல்லாதவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து விரட்டப்படுவார்கள், அவ்வாறு விரட்டப்பட்டவர்களின் ஒருவன் தான் அந்த காரைக்கால் கயவன். எங்களுடன் இருந்து, விரட்டி அடிக்கப்பட்டவன் சொன்னால், அது உண்மையாகிவிடுமா? என்ன ஒரு தத்துவம்?

ஓர் உதாரணத்தின் மூலம் விளக்கினால் இது நன்றாக புரியும். கட்டுரைக்கு பதில் எழுதிய அண்ணண்மார்களில் ஒருவர், தனது வேலைக்காக ஒரு வேலைக்காரனை வேலைக்கு அமர்த்தியுள்ளார் என்று வைத்துக்கோள்வோம், அவ்வாறு வேலைக்கு அமர்த்தப்பட்டவன், திருடி விடுகிறான், அப்போது வேலைக்கு அமர்த்திய அண்ணண், அந்த வேலைக்காரனை திருடிவிட்டான் என்று பகிரங்கப்படுத்தி, அந்த அண்ணண் வேலையை விட்டு அவனை நீக்கிவிடுகிறார். திருடி பிடிப்பட்டு, வேலையில் இருந்து நீக்கப்பட்ட அவன், என்னை வேலையில் இருந்து நீக்கியவர் எப்படிபட்டவர் தெரியுமா? என்று குற்றச்சாட்டுகளை அடுக்குகிறான். உடனே, அண்ணண்கூட இருந்தவர் தானே அப்படி கூறுகிறார், எனவே அது உண்மை தான் என்று முடிவு செய்வோமா? அல்லது இவ்வளவு நாள் அவர் கூட இருந்த இவன், இவனை நீக்கிய பிறகு இவ்வாறு குற்றம்சாட்டுகிறான், இவனின் குற்றச்சாட்டுகளில் உள்நோக்கம் இருக்க வாய்ப்புள்ளது, எனவே, அவன் வைக்கும் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்ய வேண்டும், ஆதாரம் கேட்க வேண்டும் என்றல்லவா சொல்லுவோம். இந்த அடிப்படை கூட இல்லாமல், உங்கள் கூட இருந்தவன் தானே சொல்லுகிறான் என்று கயவர்களை உத்தமர்களாக மாற்றப்பார்க்கிறார்கள். எங்கள் கூட இருக்கும் போது, நாங்கள் நல்லவர்கள் என்றான், விரட்டப்பட்ட பிறகு நாங்கள் கெட்டவர்கள் என்கிறான், இதில் எது உண்மை? எது பொய்?

நான்கு திருமணங்கள் செய்தோடு மட்டுமல்லாமல், அதில் இருவரை விவாகரத்து செய்த கோவை அய்யுப் என்ற பெண் பித்தனுக்கு, தற்போது முன்று மனைவிகள் உள்ளனர். இது போதாது என்று, கணவனை இழந்த ஒரு பெண்ணிடம் போனில் கடலை போட்டு, அந்த பெண்ணை மடக்கி மீண்டும் ஒரு திருமணம் செய்ய முற்பட்ட போது, பதறிய உறவினர்கள் ஜாக் என்ற கேடு கெட்ட இயக்கத்திடம் முறையிட்டுள்ளார்கள். வழக்கம் போல பதில் இல்லை. எனவே, கோவை ஜாக் மர்கஸில் வந்து நியாயம் கேட்டுள்ளார்கள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த, பள்ளிக்கு வந்த ஜாக் ஆதரவாளர்களும் சேர்ந்து பள்ளியை முற்றுகையிட்டார்கள். இந்த சம்பவம் நடந்து ஃபேஸ்புக்கில் தீ போல பரவியது, இதை கேள்விப்பட்ட நிரூபரின் முக்கிய புள்ளி, அவரை வைத்து ஒரு தர்பியா (நல்லெழுக்க பயிற்சி) நடத்தினர். இவ்வாறு செய்யும் உங்களுக்கு மானம் உண்டா? என்று கேட்டிருந்தோம். இவ்வாறு செய்வது தனி மனித சாடலாம். போகும் இடத்தில் எல்லாம் பெண்களை தனது வலையில் சிக்கவைத்து, அவர்களை திருமணம் செய்து, கொஞ்சம் காலத்தில் அவர்களுக்கு தலாக் கொடுத்துவிட்டு, மீண்டும் மற்ற பெண்களை வலையில் சிக்க வைத்து, திருமணம் செய்வது என தொடர்ந்து சல்லாப செயல்களில் ஈடுபட்டு வருபவன் தான் கோவை அய்யுப் என்ற கேடி. பெண்களை தனது வலையில் சிக்க வைத்து, சிரழிக்கும் மார்க்க அறிஞர் என்ற போர்வையில் உள்ள கேடியை அம்பலப்படுத்தினால் தான், அவன் வலையில் விழும் அப்பாவி பெண்களை காப்பாற்ற முடியும் என்பதால் அது தனி மனித தாக்குதல் அல்ல. திருமணத்திற்காக ஒரு ஆணை பற்றி மற்றவர்கள் கேட்டால், நாம் என்ன சொல்லுவோம், அவன் குடிகாரனாக இருந்தால், அவன் குடிகாரன், பெண்ணின் வாழ்க்கை சிரழிந்து விடும் என்போம். இங்கு தனி மனிதனின் குறை என்ற போதிலும், அந்த குறை மற்றவர்களை பாதிக்கும் என்று வரும் போது, அது பற்றி எச்சரிக்கிறோம். இதை எல்லாரும் செய்கிறார்கள். இது தவறும் அல்ல. இவ்வாறு செய்வதற்கு நபிமொழிகளில் சான்றும் உள்ளது.

கோவைகாரனின் செயலும் அடுத்தவர்களை (அப்பாவி பெண்களை) பாதிக்கும் செயல் என்பதால், அவனின் உண்மை முகத்தை மக்களுக்கு காட்டினால் தான், அவனும் திருந்துவான். இதை காட்ட கோவை வரை சென்று இருக்க தேவையில்லை என்கிறார்கள் தர்பியா மன்னர்கள். நாம் கோவைவரைக்கும் இதைற்காக போகவில்லை. அந்த கோவை கேடியை அழைத்து வந்து தர்பியா, பொதுக்கூட்டம் நடத்துவது யார்? என்றால் நிரூபர்களின் முக்கியஸ்தவர் தான். கேடியை வைத்து தர்பியா நடத்தி, அவனை உத்தம புத்திரனாக அண்ணண்மார்கள் காட்ட முயல்வதால், அது பற்றி உண்மையை நாம் லெசாக சொன்னோம் (கோவை அய்யுப் என்ற கேடியை பற்றி, ஜாக் அமைப்பை சேர்ந்தவர்களே பெரும்பாலனோர் அவன் கேடி என்று ஒத்துக்கொள்வார்கள், கோவையில் சமீபத்தில் கோவை அய்யுபின் செயலாளல் அதிர்ச்சி அடைந்த, கோவை அய்யுவை உத்தமன் என்று நம்பி ஜாக் அமைப்பை சார்ந்தவர்கள் ஒரு உண்மை அறியும் விசாரனையை நடத்தியுள்ளார்கள், அதில் கோவை அய்யுபின் கேடிதனத்தை அவர்கள் வெளியே கொண்டு வந்துள்ளார்கள், அதையும் நாம் எமது தளத்தில் வெளியிட உள்ளோம், அப்போது தர்பியா நடத்துனர்களின் உண்மை முகம் வெளியே வரும், படுத்துக்கொண்டு எச்சில் துப்புபவர்கள் யார் என்று அப்போது தெரியும்).

கோவை அய்யுபின் கேடிதனத்தை சரிகாணும் அண்ணண்மார்கள், கோவை அய்யுப் உங்களுடன் இருந்தவர் தானே என்று வினாவியுள்ளார்கள். அண்ணண்மார்களுடன் இருக்கும் யாராவது தவறான காரியத்தில் ஈடுபட்டால், அண்ணண்மார்களும் அப்படி என்று நாமும் நினைக்கலாமா? இவ்வாறு நினைப்பது தவறு. எங்களுடன் இருந்த ஒருவன் இவ்வாறு கேடு கெட்ட செயலை செய்யும் போது, அதை நாங்கள் ஆதரித்தால், அவனை பதவியில் வைத்து அழகு பார்த்தால், அவனின் கேடித்தனத்தை பற்றியோஅல்லது மற்றவர்களின் கேடித்தனத்தை பற்றியோ நாங்கள் கேள்வியெழுப்ப முடியாது. கோவை அய்யுப் என்ற மகான், நெடும் காலமாக ஜாக் என்ற அமைப்பில் இருப்பவன். பிஜே உள்பட மற்ற தாயிக்கள், ஜாக் என்ற அமைப்மை விட்டு வெளியேறுவதற்கு முக்கியமான காரணங்களில் கோவை அய்யுபின் செயலும் காரணம், ஜாக் அமைப்பில் உள்ள பலர் பெருதாளர மோசடி மற்றும் பாலியல் சம்பந்தப்பட்ட செயல்களில் ஈடுபட்டு, தவ்ஹீத் பிரச்சார பணிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறார்கள், இவர்களை அமைப்பில் இருந்து நீக்குங்கள் பிஜே உள்பட பலர் ஜாக்கின் அன்றைய தலைவராக இருந்த கமாலுத்தீன் மதனியிடம் கோரிக்கை வைக்கிறார்கள். இதை ஆய்வு செய்து, கமாலுத்தீன் மதனி என்பவர், கேடு கெட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் மாவட்ட பொருப்பில் இருந்தால், அவர்களை மாநில பொருப்பில் நியமித்து, கேடுகெட்ட செயல்களுக்கு ஜாக் அமைப்பில் அங்கீகாரம் தந்தார். இதை கண்ட பிஜே உள்பட பல தாயிக்கள் ஜாக் என்ற அமைப்பை விட்டு வெயியேறினார்கள். இது தான் உண்மை. கோவை அய்யுப் போன்றவர்களின செயலை அங்கீகரிக்காதவர்கள், அவனின் கேடுகெட்ட செயலுக்கு எப்படி பொறுப்பவர்கள். இவன் கேடி என்று தெரிந்துக்கொண்டு, அழைத்துக்கொண்டு வந்து தர்பியா நடத்துபவர்கள் தான் அயோக்கியர்கள்.

பாக்கர் என்பவரை பற்றியும் காப்பி பேஸ்ட் மேதை உங்களுடன் இருந்தவர் தானே என்று தனது அறிவின் முதிர்ச்சியை காட்டியுள்ளார். பாக்கர் எங்களுடன் இருந்தவர் தான். அவர் கேடுகெட்ட செயல்களில் ஈடுபட்ட காரணத்தினால், அவரை தவ்ஹீத் ஜமாஅத் விரட்டி அடித்து விட்டது (அதாவது பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியை கூட நீக்கி). இதை காட்டி பார்த்தீர்களா? உங்களுடன் உள்ளவர் இவ்வாறு செய்துள்ளார் என்று நீங்கள் சொல்லியுள்ளீர்கள் என்று. அவர் தவறு செய்தது உண்மை, அவர் முதலில் கண்டிப்பட்டு, பிறகு தண்டித்து, விரட்டி அடிக்கப்பட்டது உண்மை. பாக்கரின் கேடுகெட்ட செயலை, நாம் ஆதரிக்கவில்லை, அதனால் தான், அவர் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டார். தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்த ஒருவர், தவறு செய்து, அந்த தவறுக்காக அவரை தவ்ஹீத் ஜமாஅத் நீக்கிய பிறகும், அதற்கு தவ்ஹீத் ஜமாஅத் எப்படி பொறுப்பாகும்? என்ன வாதம் இது? ஒரு பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன், கேடுகெட்ட செயலை செய்யும் போது, அந்த பள்ளி அந்த மாணவனை பள்ளியை விட்டு நீக்கிவிடுகிறது என்றால், அந்த கேடுகெட்ட செயலுக்கு அந்த பள்ளி பொறுப்பாக ஆகுமா? அல்லது அந்த பள்ளி அந்த தவறை தான் ஆதரித்ததாக ஆகுமா? பாக்கர் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து அவரின் கேடுகெட்ட செயல்கள் நிரூபிக்கப்பட்டு, பாக்கர் தன்னை உத்தமனாக காட்ட ஆரம்பித்த இயக்கத்தின் மூலம் பாக்கரை வைத்து நிகழ்ச்சி நடத்தியது யார்? பாக்கர் போன்றவர்களை வைத்து நிகழ்ச்சி நடத்துவது யார்? ஜூம்ஆ நடத்துபவர்கள் யார்? துபாயில் உள்ள தர்பியா இல்லம் யாரின் பிண்ணணியில் உள்ளது என்பதை எல்லாம் நாம் வெளியிடும் போது, பல்லை நோண்டி வாங்கி கட்டியது யார் என்று தெரியவரும்.

இவ்வாறு நாம் ஏன் கேடுகேட்டவர்களை எல்லாம் வைத்து தர்பியா நடத்துகிறீர்கள் என்று கேட்டதை கண்டு அண்ணண்மார்கள் அதிகமாக கொதித்துள்ளார்கள். அதாவது, கட்டபொம்பன் ஸ்டைலில் கேள்வி கேட்கிறார்களாம். யாரோ காப்பி போஸ்ட் மன்னர் இடத்தில் போனில் சொன்னார்களாம், தவ்ஹீத் ஜமாஅத்தை சார்ந்த எவரோ ஆசிரியையை வளைத்தாராம், பின்னர் கைவிட்டாராம், இந்த கதை எல்லாம் எடுத்துவிட்டுவிடுவார்களாம். இதோ பாரு, எங்களின் தர்பியா தாயிக்களை பற்றி பேசினால், நாங்கள் உங்கள் ஆட்களை பற்றி பேசுவோம் என்று கொக்கரிக்கிறார்கள். நாம் இவர்களுக்கு சொல்லுவது, (அவர்கள் கேட்ட ஸ்டைலில்), 'அட அந்த கதையை எடுத்துவிடுமய்யா, உங்களின் தர்பியா தாயிக்களின் பேடிதனத்தை பகிரங்கப்படுத்த எமக்கு ஒரு வாய்ப்பு தாருமய்யா'. 

இறுதியாக, முந்தைய கட்டுரையின் ஆசிரியர், ஃபேஸ்புக்கில், தவ்ஹீத் ஜமாஅத் குர்பானி கறியில் இலாபம் பார்ப்பதாக அவதூறு செய்து இருந்ததை எடுத்துக்காட்டியிருந்தோம்.

''Ebrahim Ansari Masthan Samad தப்லீக் தனது சொந்த சகோதரனை தூஷித்துப் போஸ்டர் ஒட்டுவதில்லை, ஜமாத்தில் நடக்கும் விவகாரங்களுக்காக காவல்துறையிடம் புகார் கொடுப்பதில்லை; நோட்டுப் போட்டு அல்லது ரசீது போட்டு வசூல் செய்வது இல்லை. பித்ரா அரிசி வசூளிப்பதோ குர்பானி கறியில் இலாபம் பார்ப்பதோ இல்லை''.

தவ்ஹீத் ஜமாஅத் குர்பானி கறியில் இலாபம் அடிக்கிறது என்று அண்ணண் நிரூபிப்பரா? என்றும் கேட்டிருந்தோம். இதற்கு பதில் சொல்ல புகுந்த அண்ணண், தவ்ஹீத் ஜமாஅத் என்று நான் பெயர் குறிப்பிட்டு நான் சொல்லியுள்ளேனா? என்று கேட்டு தப்பிக்க பார்த்துள்ளார். குர்பானிக்கான பணியை சில அமைப்பு தான் செய்கினறன. அதாவது, இவர் எல்லாரும் தான் குர்பானி கறியில் இலாபம் பார்க்கிறார்கள் என்று சொன்னாராம். எல்லா அமைப்புகளும் என்றால், இவ்வாறு இலாபம் பார்க்கிறது என்றால், அதில் தவ்ஹீத் ஜமாஅத்தும் அடங்கும் அல்லவா? இவ்வாறு எல்லா இயக்கமும் செய்தது என்பதற்கு என்ன ஆதாரம் வைத்துள்ளார் அண்ணண். தவ்ஹீத் ஜமாஅத்தும் அண்ணண்மார்களின் பினாமி இயக்கமான தமுமுகவை பற்றி, பித்ராவிலும், சுனாமியிலும் ஊழல் செய்தார்கள் என்று சொல்லுகிறது, அதை நிரூபிக்க தயாராக உள்ளது, ஊழல் செய்த ஆதாரத்தை கையில் வைத்துள்ளது (ஆனால், தமுமுக வரவில்லை). ஆதாரம் இல்லாமல் இப்படி புளுகும் இவரை எப்படி ஆதரிக்க நடுநிலை நாயகர்களுக்கு மனம் வருகிறது என்று தெரியவில்லை. ஆதாரமில்லாமல் இப்படி எழுதலாமா? என்று அந்த நடுநிலை யோக்கியர்கள் கேட்கவில்லை, கேட்கவும் மாட்டார்கள், காரணம் நடுநிலை என்பது அவர்கள் போட்டுள்ள வேடம். 

தப்லீக் ஜமாஅத் குர்பானி கறியில் இலாபம் எல்லாம் பார்ப்பது இல்லை என்பதை காட்டத்தான் அண்ணண் மற்ற இயக்கங்கள் மீது குர்பானி கறியில் இலாபம் பார்ப்பதாக அவதூறு சொன்னாராம். நல்லா இருக்கு உங்களின் அவதூறு. [இந்த தகவலை அண்ணண் ஃபேஸ்புக்கில் பதிந்து இருந்தார் என்று சொல்லியிருந்தோம். இந்த செய்தியை அண்ணண் பொய் சொல்ல தயங்காதவர் என்று காட்டத்தான் எடுத்துச்சொல்லி இருந்தோம் . இதற்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறிய அண்ணண், ஃபேஸ்புக்கில் நான் வேறு இரண்டு செய்திகள் போட்டு இருந்தேனே அது உண்மையா என்று கேட்டுள்ளார். அண்ணண் அவர்களுக்கு தைரியம் என்று ஒன்று இருந்தால், ஃபேஸ்புக்கில் போட்டதை கட்டுரையில் எடுத்துக்காட்டட்டும், பின்னர் வரும் இடி! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, அண்ணணுக்கு பொய் தான் பிழைப்பு என்று காட்டத்தான் குர்பானி கறி குறித்து சொன்ன அவதூறுரை எடுத்து காட்டியிருந்தோம். மற்றவை தேவைப்படும் போது எடுத்து காட்டப்படும்.]

இவர் பார்வையில் தப்லீக் ஜமாஅத் மட்டும் தான் சரியானது என்று சொல்லுகிறார். இது உண்மையென்றால், படிக்கும் மாணவர்களையும், வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டியவர்களையும், நாலு மாதம் வா, முடியாவிட்டால் நாற்பது நாட்கள் வா, முடியாவிட்டால் ஏழு நாட்கள் வா, அதுவும் முடியாவிட்டால் மூன்று நாட்கள் வா என்று சமுதாய மாணவர்களின் கல்வியையும், உழைக்க வேண்டியவர்களின் வாழ்வாதாரத்தையும் பாழாக்கி, அவர்களின் குடும்ப செலவுக்கு கூட வழியில்லாமல் ஆக்கும் தப்லீக் ஜமாஅத்தை எதிர்த்து அண்ணண் எப்போது கட்டுரை போடுவார்.

மற்ற இயக்கங்கள் வருடத்தில், அல்லது பல மாதங்களுக்கு பிறகு என்றாவது மாநாடு என்று அழைக்கின்றன, கஸ்து, ஜோடு, போடு, கோடுனு, வாரா வாரம் மாத மாதம் சமுதாய மாணவர்களின் வாழ்வை கேள்வி குறியாக்கும் தப்லீக் ஜமாஅத்தை பற்றி விமர்சன கட்டுரை வருமா? தைரியம் இருந்தால் போடுங்கள் அன்பரே! பெரியார் என்ற பெயரில் கதைகளையும் கப்சாக்களையும் பரப்பும் தப்லீக் ஜமாஅத்தினரை சரிகாணும் இவர்கள் தவ்ஹீத்வாதிகள் என்று வேறு தங்களுக்கு தாங்களே பட்டம் சூட்டிக்கொண்டுள்ளார்கள்.

அண்ணணுக்கு ஆஹா ஓஹோ என்று கருத்து போடும் அருமை தம்பிகள் சில வாதங்கள் முன்வைத்து இருந்தார்கள், அதற்கான பதில் தனியாக வரும், இன்ஷா அல்லாஹ். சில கருத்துக்களுக்கான பதில் எமது முந்தைய ஆக்கத்தின் கருத்துக்களில் பதில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் தமிழில் உளறுவது போதாது என்று, ஆங்கிலத்தில் சிலர்  உளறுகிறார்கள். ஆங்கலத்தில் எழுதினால் நமக்கு புரியாதல்லவா என்று கிண்டல் வேறு. தமிழில் நாம் கொடுத்த பதிலுக்கே பதில் தெரியாமல் முழிக்கும் இந்த நிருபர்கள், ஆங்கில உளறல்களுக்கு வேற மரண அடி வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தேவைப்பட்டால் ஆங்கில உளறல்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பபடும்.

இவர்கள் தவ்ஹீத்வாதிகள் என்று தங்களுக்கு தங்களே பட்டம் சூட்டிக்கொண்டு தவ்ஹீத்வாதிகளை ஏமாற்றுகிறார்கள். இதற்கு ஒரு மிகப்பெரிய ஆதாரம், அதிரையில் கவிஞர் தாஹா என்பவரை பற்றி ஒரு அறிமுக  கட்டுரை ஆகே ஓகே என்று புகழ்ந்து எழுதினார்கள். தாஹா அவர்களை பொறுத்தவரை அதிரையில் தரீக்கா கொள்கையும் மற்றும் அவ்லியாக்களிடம் கேட்க வேண்டும் என்ற இணைவைப்பை அதிகமாக பெண்கள் மத்தியில் பிரச்சாரம் செய்பவர். இவரை மிகப்பெரிய மகானாக சித்திரித்து கட்டுரை வரைந்தார்கள், அதற்கு புகழ் மேல் புகழ் மாலைகள். அதில் ஒருவர் கவிஞர் தாஹா அவர்கள் ஹஜ் செய்துள்ளார், எனவே ஹாஜி என்று சேர்த்து எழுதுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார். நமது தவ்ஹீத் வேர்கள் என்ன பதிலாக தந்தார்கள் தெரியுமா? உங்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு ஹாஜி என்ற புகழ் மாலை சேர்க்கப்பட்டுள்ளது என்று பதில் தந்தார்கள் (ஆதாரம் கீழே). ஹாஜி என்று எழுதுவது அமலை புகழாக்கி, அதற்கு கிடைக்க வேண்டிய நன்மையை நாசமாக்கும் செயலாகும் இருக்கிறது என்று தெரிந்து கொண்டும் இவ்வாறு இவர்கள் செய்கிறார்கள் என்றால் இவர்கள தவ்ஹீத்வாதிகளா? அல்லது வியாதிகளா? இதில் இவர்கள் வேர்களாம், நாம் விழுதுகளாம். ஹாஜி என்று எழுதுவது வழிகேடு என்று சுன்னத் ஜமாஅத்தினர் கூட அவற்றை தவிர்த்து வரும் நேரத்தில், இந்த தவ்ஹீத் நடிகர்களுக்கு இது சாதராண விஷயமாக தெரிகிறது.
ஹாஜி என்று போட்டாச்சு, தவ்ஹீத்வாதிகள் என்று பெயரும் வாங்கியாச்சு.......
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய், அந்த பொய்யை மறைக்க ஆயிரம் பொய் என்று பாவத்தை சேர்க்காமல் உண்மையான நடுநிலை எது அறிந்து அதன்படி நடக்க முன்வாருங்கள் என்று அன்புடன் சம்பந்தப்பட்டவர்களை கேட்கிறோம். உங்களை தரம் தாழ்த்த வேண்டிய எந்த நிர்பந்தமும் எங்களுக்கு இல்லை.

கட்டுரை காப்பியாளரான கட்டுரையாளர் தமுமுகவின் பினாமி என்று எழுதியிருந்தோம். இதை நிருபிக்கும் வகையில் கட்டுரையாளர் தமுமுகவின் எம்எல்ஏவையும், பொதுச்செயலாளரை போட்டிக்கண்டு, தமுமுக எம்எல்ஏ சட்டமன்றத்தில் கிழித்தவைகளை பற்றி அள்ளிவிட்டார், அதை அப்படியே கட்டுரையாளர் ஜால்ரா தட்டி, அட ஆமா அட ஆமா. ஜெயலலிதா தான் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவரயிற்றே அப்படி இருக்கையில் அவரிடம் இடஒதுக்கீடு கேட்கலாமா? என்று கட்டுரை எழுதியவர் (சாரி காப்பி அடித்தவர்) கேட்வில்லை. இதிலிருந்தே இவர்களின் யோக்கியத்தனம், மட நிருபர்களின் வேடமும் கிழிந்து தொங்குகிறது. 

ஈரோட்டில் நடைபெற்ற 15 வது மாநில பொதுக்குழு தீர்மானங்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 15வது மாநிலப் பொதுக்குழு ஈரோட்டில் உள்ள பிளாட்டினம் மஹாலில் 23.02.14 ஞாயிற்றுக்கிழமை அன்று கூடியது. இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நன்றி அறிவிப்புத் தீர்மானங்கள் :

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் நீண்ட காலமாக முஸ்லிம் சமுதாயம் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. மத்தியில் 10 சதவீதமும், மாநிலத்தில் 7 சதவீதமும் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளித்தால்தான் முஸ்லிம்கள் போதுமான பிரதிநிதித்துவம் பெற முடியும் என்பதைக் கவனத்தில் கொண்டு ஜனவரி 28அன்று சென்னை, திருச்சி, நெல்லை, கோவை ஆகிய நான்கு நகரங்களில் மாபெரும் சிறைநிரப்பும் போராட்டத்திற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை உரிய முறையில் மக்கள் உள்ளங்களில் பதியச் செய்து லட்சக்கணக்கான மக்களைத் திரளச் செய்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு தனது நன்றியை இப்பொதுக்குழு உரித்தாக்குகின்றது.

சமுதாயத்தின் நன்மைக்காக மட்டுமே இப்போராட்டம் நடத்தப்படுகின்றது என்று உளப்பூர்வமாக உணர்ந்து போராட்டத்தில் பங்கேற்ற தாய்மார்கள், பெரியோர்கள், இளைஞர்கள் மற்றும் பலவீனர்கள் அனைவருக்கும், இப்போராட்டம் வெற்றிகரமாக அமைய தன்னலம் பாராமல் உழைத்த தொண்டர்களுக்கும் பொருளுதவி செய்த நல் உள்ளங்களுக்கும், பள்ளிவாசல்களில் இப்போராட்டம் குறித்து அறிவிப்புச் செய்த ஜமாஅத்தார்களுக்கும், தவ்ஹீத் ஜமாஅத் மீது நம்பிக்கை வைத்து கலந்து கொண்ட மாற்றுக் கருத்துடையவர்களுக்கும் இப்பொதுக்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

அயல் நாடுகளில் பணிபுரிந்தாலும் தங்களது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போராட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வமூட்டிய நல்லுள்ளங்களுக்கும் இப்பொதுக்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

இப்போராட்டத்திற்கு தேவையற்ற முட்டுக்கட்டைகளைப் போடாமல் இந்திய அரசியல் சாசனம் வழங்கிய கருத்துரிமையை மதித்து சிறப்பான முறையில் ஒத்துழைப்பும், பாதுகாப்பும் அளித்த தமிழக அரசுக்கும், தமிழகக் காவல்துறைக்கும், உளவுத்துறைக்கும் இப்பொதுக்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

போராட்டத்திற்கு முன்னரும், போராட்டம் நடந்த நாளிலும், போராட்டத்திற்குப் பின்னரும் இச்செய்தியைத் தக்க முறையில் மக்கள் மத்தியில் கொண்டு சென்ற அனைத்து ஊடகங்களுக்கும், குறிப்பாக இப்போராட்டத்தை நேரடியாக ஒளிபரப்புச் செய்த ஊடகங்களுக்கும் இப்பொதுக்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

தவ்ஹீத் ஜமாஅத் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப நடந்து கொள்ளவும், அந்த நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தும் வகையில் அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செயலாற்றுவது என்று இப்பொதுக்குழு உறுதி பூணுகிறது.

இடஒதுக்கீடு

தனி இடஒதுக்கீடு கோரிக்கை ஒரு தனி இயக்கத்தின் கோரிக்கை மட்டுமல்ல; ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் கோரிக்கை என்பதை ஜனவரி 28 போராட்டம் மத்திய மாநில ஆட்சியாளர்களுக்கு தெள்ளத்தெளிவாக அறிவித்துவிட்டது. முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்தித் தருவதாக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதியை லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்று திரண்டு வலியுறுத்தியதை மதித்து தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தித்தர வேண்டும் என்று தமிழக முதல்வரை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.

முஸ்லிம்கள் இடஒடுக்கீட்டை அதிமுக அரசு உயர்த்தித்தந்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிப்பதுடன் அதன் வெற்றிக்கு முழு மூச்சுடன் பாடுபடுவது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கின்றது.

கடந்த இரண்டு தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்த காங்கிரஸ் தொடர்ந்து முஸ்லிம்களை ஏமாற்றியதையும், சென்னை தீவுத்திடலில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்ட பேரணியிலும், மாநாட்டிலும் இது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றிய பின்பும், இந்தத் தீர்மான விபரங்களை பிரதமரிடமும், சோனியா காந்தி அவர்களிடமும் நேரிலேயே தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமை நிர்வாகிகள் விளக்கம் கூறி வலியுறுத்திய பின்பும், முஸ்லிம்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

பொய்யான மோடி அலை

மோடிதான் அடுத்த பிரதமர் என்று ஊதிப் பெரிதாக்கி, போலி கருத்துக்கணிப்பு நடத்தி கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் நாணயமற்ற ஊடகங்களை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

ஊழலின் இலக்கணமாக திகழும் எடியூரப்பாவை அருகில் வைத்துக் கொண்டு ஊழலை ஒழிப்பதாக கூறும் மோடி, ரிலையன்ஸ் விஷயமாக கெஜ்ரிவால் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனம் காக்கும் மோடி, ஊழலை ஒருக்காலும் ஒழிக்கமாட்டார் என்று நாட்டு மக்களை இப்பொதுக்குழு எச்சரிக்கின்றது.

இளம் பெண் ஒருவருக்காக தனது மாநிலத்திலும், அண்டை மாநிலங்களிலும் அதிகார துஷ்பிரயோகம் செய்தும், அப்பெண் யாருடன் பழகுகின்றாள் என்பதை அறிவதற்காக அரசுப் பணியாளர்களையும் உயர் அதிகாரிகளையும் பயன்படுத்தியுள்ளதையும், தன் மனம் கவர்ந்த பெண்ணுக்காக ஒட்டுமொத்த காவல்துறையையே கேவலமாக பயன்படுத்திய நரேந்திர மோடியால் ஒருக்காலும் நல்லாட்சி தரமுடியாது என்று நாட்டுமக்களுக்கு இப்பொதுக்குழு எச்சரிக்கின்றது.

மோடி தனது மாநிலத்தைக் கடந்து அண்டை மாநிலங்களிலும் மனம் கவர்ந்த பெண்ணை உளவு பார்த்த தேசத்துரோகச் செயலை அம்பலப்படுத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்கத் துணிவில்லாத மத்திய அரசின் கையாலாகத் தனத்தை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

முஸ்லிம்கள் என்ற காரணத்துக்காக பல்லாயிரம் முஸ்லிம்களைக் கொன்று குவித்தும், சொத்துக்களைச் சூறையாடியும், பள்ளிவாசல்களை இடித்தும் பாலியல் பாலியல் கொடுமைகள் செய்தும் வெறியாட்டம் போட்டவர் மோடி என்பதை நடுநிலையான இந்துக்கள் மறந்து விடக் கூடாது எனவும், பயங்கரவாதிகளைத் தப்புவிக்க தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க மறுத்தும், இடிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களைக் கூட கட்டித்தர முடியாது என்று பகிரங்கமாக அறிவித்த மதவெறி பிடித்த, சிறுபான்மை மக்களை கருவறுப்பதை ஒரே கொள்கையாக கொண்ட நரேந்திர மோடி பிரதமரானால் நாட்டில் சட்டம் ஒழுங்கும் மத நல்லிணக்கமும் நாசமாகிவிடும். உலக அரங்கில் நாட்டின் நற்பெயர் கெட்டுவிடும் என இந்நாட்டு மக்களை இப்பொதுக்குழு எச்சரிக்கின்றது.

மோடி முஸ்லிம்களைக் கொன்று குவித்து கருவறுத்தவர் என்று சொல்லி முஸ்லிம்களை ஏமாற்றி நடித்து வந்த நயவஞ்சகர் வைகோவின் கட்சியில் எந்த முஸ்லிமும் உறுப்பினராகவோ, பொறுப்பாளர்களாகவோ இருக்கக்கூடாது என்று முஸ்லிம் சமுதாயத்தை உரிமையுடன் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து முஸ்லிம்களின் நண்பனாக வேடம் போடும் கட்சிகளையும் இவ்வாறே புறக்கணிக்க வேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு :

கடந்த 2011ஆம் ஆண்டு நாடு முழுவதும் ஜாதி வாரியாகவும், மத வாரியாகவும் நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தி அதை மத்திய அரசு வெளியிடாமல் உள்ளது. பல்வேறு சமுதாயங்களுக்குரிய  இடஒதுக்கீடு உரிய அளவில் கிடைத்திட இக்கணக்கெடுப்பை வெளியிடுவது அவசியம் என்பதால் மத்திய அரசு தாமதமின்றி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வெளியிட வேண்டும் என்று இப்பொதுக்குழு கோரிக்கை வைக்கின்றது.

ஓரினச்சேர்க்கைக்கு கண்டனம் :

ஆணும் பெண்ணும் திருமணத்தின் மூலம் இணைந்து வாழ்வதுதான் இயற்கையானதும், மனித குலத்தின் அழிவைத் தடுக்கக்கூடியதுமாகும். ஓரினச்சேர்க்கை என்பது இயற்கைக்கு மாறானது. சந்ததி பெருக்கமின்றி மனித குலத்தை அழித்து விடக்கூடியது. நமது நாட்டின் பண்பாட்டிற்கு எதிரானது. இது நமது நாட்டின் சட்டப்படியும் குற்றச்செயலாகும் என்று இப்பொதுக்குழு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்துகின்றது.

இதை ஆதரிக்கும் கழிசடைகளுக்கு எதிராக களமிறங்குமாறும், இந்தக் கேடுகெட்ட செயலுக்கு ஆதரவு தெரிவிக்கும் மத்திய அரசிற்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்யுமாறும் இப்பொதுக்குழு நாட்டு மக்களைக் கேட்டுக்கொள்கின்றது.

முஸ்லிம் தனியார் சட்டம்:

இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டங்களும், ஒரே மாதிரியான கிரிமினல் சட்டங்களும்   உள்ளன. ஆயினும் திருமணம் போன்ற மிக சில விஷயங்களில் ஒவ்வொரு மதத்தினரும் அவர்களின் மத நம்பிக்கையின்படி நடக்க அனுமதியுள்ளது. இஸ்லாம் மார்க்கத்தில் ஒரு பெண் உடல் ரீதியாக பருவ வயதை அடைந்துவிட்டால் அவள் திருமணம் செய்யும் தகுதியை அடைந்து விடுகின்றாள். இது முஸ்லிம் தனியார் சட்டப்படி முஸ்லிம்களுக்கு உள்ள உரிமையாகும். பெண்களுக்கு ஏற்ற வாழ்க்கை துணை அமைவது சிரமமாக உள்ள நிலையில் 17வயது மகளுக்கு துணைகிடைக்கும் போது தந்தை மணம் முடிக்க விரும்பினால் அதற்கு இஸ்லாத்தில் அனுமதியுள்ளது. இப்படி செய்ய முஸ்லிம் தனியார் சட்டப்படி முஸ்லிம்களுக்கு உரிமையுண்டு. ஆனாலும் 18வயதிற்கு முன் திருமணம் செய்யக்கூடாது என்ற காரணத்தைக்காட்டி இதைத் தடுக்கும் முயற்சியை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்று இப்பொதுக்குழு  கேட்டுக் கொள்கிறது.

18வயதில் மட்டுமின்றி அதற்குக் குறைவான வயதிலும் எத்தனையோ பெண்கள் காதலனுடன் ஓடிப்போகின்றார்கள் என்பதைப் பார்க்கின்றோம். 18வயதிற்கு முன்பே திருமணத்திற்கு பெண்கள் தயாராகி விடுகின்றார்கள். ஆசைப்படுகிறார்கள்; திருமணம் தாமதமானால் ஓடிப்போவதற்கும் தயாராக உள்ளார்கள் என்ற நடைமுறை உண்மைக்கு ஏற்ப முஸ்லிம் தனியார் சட்டம் உள்ளது. எனவே அனைத்து சமுதாயப் பெண்களுக்கும் திருமண வயதைக் குறைப்பதுதான் அறிவுப்பூர்வமானதும் நடைமுறைக்கு ஏற்றதுமாகும் என்று மத்திய மாநில அரசுகளை இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

திருமணங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டம் வரவேற்கத்தக்கது என்றாலும் நடைமுறையில் பல சிக்கல்கள் கொண்டதாக இச்சட்டம் அமைந்துள்ளது. மணப்பெண்ணின் வயதை நிரூபிக்க பள்ளிச்சான்றிதழ் கேட்கப்படுகின்றது. படிக்காத முஸ்லிம் பெண்கள் அதிகமாக உள்ள முஸ்லிம் சமுதாயத்தில் பள்ளிச்சான்றிதழை அனைவரும் காட்ட முடியாததால் பல திருமணங்கள் அரசால் பதிவு செய்யப்படாமல் உள்ளன. முஸ்லிம் சமுதாயம் முழுமையாக கல்வி அறிவு பெறும் வரை  திருமணத்தை நடத்தி வைக்கும் ஜமாஅத்தார்களின் பதிவேட்டில் உள்ள வயது மற்றும் விபரங்களையே சான்றாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.

குண்டு வெடிப்பு வழக்கில் சரணடைந்து கைது செய்யப்பட்ட சுவாமி அசிமானந்தா ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் உத்தரவுப்படியே தான் குண்டு வைத்ததாகவும், குண்டு வைத்தால் அந்தப் பழி முஸ்லிம்களின் மீது விழும் என்பதால் மதவெறியைத் தூண்டி முஸ்லிம்களை அழித்தொழிக்கலாம் என்ற நோக்கில் குண்டு வைத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளது இந்நாட்டு மக்களுக்கு உண்மையை உணர்த்தியுள்ளது. மாலேகான் குண்டு வெடிப்பு உட்பட ஏராளமான குண்டு வெடிப்புகளில் பெண் சாமியார் பிராக்யா சிங் உள்ளிட்டவர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்து மக்களைக் குண்டு வைத்து கொன்றுவிட்டு பழியை முஸ்லிம்கள் மீது போட்டு இரு சமுதாய மக்களிடையே கலவரம் உண்டாக்கும் சங் பரிவாரத்தின் சதித்திட்டம் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வருவதால் இந்து சகோதரர்கள் இவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.

முஸ்லிம்களுக்கு 6.1 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு அளிப்பதாக புதுவை சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட்து. தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு போராட்டங்கள் நடத்திய பின் புதுவை மாநிலத்தில் ஒரு பகுதியில் மட்டும் இரண்டு சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பதாகவும் இன்னொரு பகுதியில் அறவே இட ஒதுக்கீடு இல்லை எனவும் அறிவித்தது. இது ஒட்டு மொத்த புதுவையில் ஒரு சதவிகிதம் ஆகிறது.  புதுவை அரசின் இந்த துரோகத்தை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

புதுவை சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு ஆறு சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என இப்பொதுக்குழு புதுவை அரசை வலியுறுத்துகிறது.

தேர்தல் முறையில் மாற்றம் தேவை:

இந்தியத் தேர்தல் முறையை விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் மாற்ற அரசியல் சாசனத் திருத்தம் செய்ய வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் இந்திய மக்களையும்  இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
இந்தத் தேர்தல் முறையினால் மட்டுமே அனைத்து கட்சிகளும் அனைத்து சமுதாயமும் தங்களின் பலத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் பெறமுடியும். மேலும் கொள்கை முரண்பாடுள்ளவர்களுடன் பொருந்தாக் கூட்டணி வைக்கும் அவலமும் இதனால் ஒழிக்கப்படும் என்று இப்பொதுக்குழு கருதுகிறது.

நோன்புக்கஞ்சி இலவச அரிசி :

ரமலான் மாதத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நோன்புக் கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு சிறப்பு விலையில் அரசு வழங்கும் பச்சரிசி விநியோக முறையை இலகுவாக்கும்படி இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. சொத்துக்கள் இல்லாத ஏராளமான பள்ளிவாசல்கள் வக்பு வாரியத்தில் பதிவு செய்வதில்லை. இந்த நிலையில் வக்பு வாரியத்தின் கடிதம் கொண்டு வந்தால் தான் அரிசி தரப்படும் என்ற கொள்கை ஏற்கத்தக்கதல்ல. இதனால் ஏழ்மை நிலையில் உள்ள பள்ளிவாசல்கள் பயன்பெற முடியாது. முந்தைய திமுக ஆட்சியில் இருந்ததுபோலவே ஜமாஅத் சார்பில் பள்ளிவாசல் லட்டர்பேடில் மனு கொடுப்பதை விசாரித்து அதன் படி அரிசி வழங்க வேண்டும் என்று இப்பொதுக்குழு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு சில ஊர் பள்ளிவாசல் நிர்வாகிகள் மறுக்கிறார்கள். மனிதாபிமானமற்ற இச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.

மதம் மாறும் தலித்கள் :

பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் கிறித்தவ மத்த்தைத் தழுவினால் அவர்கள் கிறித்தவர்களின் பிற்பட்ட பிரிவினராகக் கருதும் வகையில் அரசாணை உள்ளது. ஆனால் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினால் அவர்கள் குறித்து அரசாணை இல்லை. இதனால் கல்வி வேலை வாய்ப்பில் இவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது. இது குறித்து மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு போட்ட பிறகும் தமிழக அரசு இதுவரை அரசாணை வெளியிடவில்லை. இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக இருந்த நடராஜ் அவர்களைச் சந்தித்து ஆதாரங்களுடன் புகார் கொடுத்தனர். பின்னர் இப்பொறுப்புக்கு வந்த நவநீத கிருஷ்ணன் அவர்களையும் சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால் இன்று வரை இது குறித்து ஆணை பிறப்பிக்கவில்லை. தமிழக அரசின் இந்தப் போக்கை இப்பொதுக்குழு கண்டிப்பதுடன் உடனடியாக இதற்கு அரசாணை பிறப்பித்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

பூரண மதுவிலக்கு :

மதுபானங்களும் இதர போதைப் பொருட்களும் மனிதனின் அறிவை மழுங்கச் செய்கிறது என்பதும், குடும்பத்தில் பிளவை ஏற்படுத்துகிறது என்பதும், கஷ்டப்பட்டு உழைத்த பொருளாதாரத்தைப் பாழாக்கி வறுமையை அதிகரிக்கிறது என்பதும் கொலை அடிதடி போன்ற சட்ட ஒழுங்குப் பிரச்சனைகள் ஏற்படுத்துகிறது என்பதும், இல்லற வாழ்வில் ஈடுப்பாட்டைக் குறைப்பதால் கள்ள உறவுகள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது என்பதும் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். மானம் மரியாதையை ஒருவன் இழப்பதற்கும் போதைப் பழக்கமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இளம் வயதினர் போதைப் பொருளுக்கு அடிமையாவதால் கல்வி கற்பதில் அவர்களின் ஆர்வமும் ஈடுபாடும் குறைந்து எதிர்காலம் நாசமாகி வருகிறது. இன்னும் சொல்லி முடியாத கேடுகள் மதுப்பழக்கத்தால் ஏற்படுவது தெரிந்திருந்தும் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது என்பதற்காக தமிழக அரசாங்கமே மதுக்கடைகளைத் திறந்து குடிப்பழக்கம் இல்லாத மக்களையும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக்குவதை இந்த செயற்குழு கண்டிக்கிறது. வருவாயை விட நாட்டு மக்களின் நலனும் நிம்மதியும் ஒழுக்கமும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணர்ந்து உடனடியாக தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்று சமூக அக்கறையுடன் தமிழக அரசை இந்தப் பொதுக்குழு வற்புறுத்துகிறது.

புகையிலைப் பொருட்கள் :

மது, பீடி சிகரெட், பான்பராக், புகையிலைப் பொருட்கள் ஆகியவற்றின் தீமைகளை மக்களுக்கு விலக்கி இப்பழக்கத்தில் இருந்து விடுபடத்தக்க வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நிர்வாகங்களும் கிளைகளும் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

கல்விக் கூடங்களில் மதத் திணிப்பு :

சிறுபான்மை மக்கள் தனியாக கல்விக்கூடம் நடத்த அரசியல் சாசனம் உரிமை அளித்துள்ளது. இந்த உரிமையை அதிகமான கிறித்தவப் பள்ளிக்கூடங்கள் தவறாகப் பயன்படுத்துகின்றன, கிறித்தவ மத வழிபாட்டை முஸ்லிம்களும் இந்துக்களும் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். தங்கள் சமுதாய மக்களை கல்வியில் உயர்த்திடவே இந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது. மதமாற்றம் செய்வதற்கு அல்ல. இப்படி சட்டத்துக்கு எதிராக நடக்கும் கல்விக் கூடங்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுப்பதுடன் இதுபோன்ற கல்விக்கூடங்களின் அனுமதியை ரத்துச் செய்யுமாறும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
சட்டம் ஒழுங்குப்பிரச்சனை ஏற்படக் காரணமாக உள்ள இது போன்ற பள்ளிக்கூடங்களை அனைத்து சமுதாய மக்களும் புறக்கணிக்க வேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

வளைகுடா பணியாளர் அவலம் :

அரபு நாடுகளில் பணிபுரியும் ஊழியர்களின் நலன்களைப் பேணுவதற்காக அனைத்து நாடுகளும் தமது தூதரகங்களில் கனிவான சிறப்பான பொறுப்பான சேவைகளைச் செய்து தங்கள் நாட்டு ஊழியர்களின் நலன்களைப் பாதுகாத்து வருகின்றன. ஆனால் அரபு நாடுகளில் இயங்கும் இந்தியத் தூதரகங்கள் இந்தியத் தொழிலாளர்கள் விஷயத்தில் திமிராகவும் ஆணவத்துடனும் பொறுப்பின்றியும் நடந்து கொள்வதாக எண்ணற்ற புகார்கள் வந்து வண்ணம் உள்ளன.

தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்கள் தொழிலாளர்களை ஏமாற்றினாலும், ஊதியக் குறைப்பு செய்தாலும், காரணமின்றி ஆட்குறைப்பு செய்தாலும், விபத்துக்களில் சிக்கிக் கொண்டாலும், தொழிலாளர் மரணித்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாத கொடுங்கோலர்கள் தான் இந்தியத் துதரகங்களில் உள்ளனர். இந்தியத் தொழிலாளர்கள் இந்தியத் தூதரகங்களை அணுகவே அஞ்சுகின்ற அளவுக்கு நிலமை மோசமாகவுள்ளது. இப்போக்கை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது. மத்திய அரசு இதை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தூக்கு தண்டனை ரத்து :

குற்றங்கள் குறைவதற்கும, குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நீதி கிடைத்துவிட்டதாக மனநிறைவு அடைவதற்கும்  தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மனநிறைவு அடையாதவகையில் குற்றவாளிகள் மென்மையாகத் தண்டிக்கப்பட்டால் அது பாதிக்கப்பட்டவனுக்கு நீதி வழங்கியதாக ஆகாது.

மரண தண்டனை வேண்டாம் என்று கூப்பாடு போடுபவர்கள் ஏன் வேண்டாம் என்கிறார்கள் என்றால் அவர்கள  பாதிக்கப்படவில்லை என்பது மட்டுமே இதற்குக் காரணமாகும்.

கொலை போன்ற குற்றங்களுக்கு கட்டாயம் மரண தண்டனை அளிக்க வேண்டும். இதுதான் பாதிக்கப்பட்டவருக்கு மனநிறைவை அளிக்கும் சரியான நீதியாகும் என்று இப்பொதுக்குழு அறிவிக்கிறது.

மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் தமது மனைவி, செல்லமாக வளர்த்த பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உடன்பிறந்தவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டால் மரண தண்டனை வேண்டாம்; என் பிள்ளைகள் போனால் போகட்டும் என்று சொல்வார்களா? என்பதைச் சிந்திக்குமாறு இப்பொதுக்குழு கோருகிறது.

சட்டப்படி மரண தண்டனை கொடுப்பதை எதிர்த்து மன்னிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் தங்கள் வாதத்தில் உண்மையாளர்களாக இல்லை. தங்கள் அரசியல் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பவர்களைக் கொன்று மரணதண்டனை கொடுப்பவர்களும், தனது கருத்துக்கு எதிர்க் கருத்து சொன்னால் ஆள் வைத்து அடிப்பவர்களும், தனது வீட்டில் திருடியவனை மன்னிகாமல் வழக்குப் போடுவர்களும் தமது ஒரு ஜான் நிலத்தை ஒருவன் அபகரித்துக் கொண்டால் அதை மீட்க எந்த நிலைக்கும் செல்பவர்களும் கொலையை மன்னிக்கச் சொல்வது அயோக்கியத் தனமாகும் என்று இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது. தன்மீது துரும்பு விழுந்தாலும் மன்னிக்காமல் வாழ்நாள் முழுவதும் நடந்துகொள்வார்கள்; பாதிக்கப்பட்டவன் மற்றவன் என்றால் அப்போது மட்டும் இரக்கமும் கருணையும் பீறிட்டு வருவது வடிகட்டிய சந்தர்ப்பவாதம் என்றும் இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.

ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதை இப்பொதுக்குழு கண்டிக்கிறது. படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவி சோனியாவும், அவரது மகன் ராகுல் காந்தியும், ப்ரியங்கா காந்தியும் கொலையாளிகளை மன்னித்தால் அப்போது கருணை காட்டலாம். அது போல ராஜீவ் காந்தியுடன் கொல்லப்பட்ட 18 நபர்களின் மனைவி மக்களும் மன்னிக்கச் சொன்னால் அப்போது கருணை காட்டலாம். பாதிக்கப்பட்டவன் தனக்கு நீதி கிடைத்துவிட்டதாக மனநிறைவு அடைவதுதான் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது.

இதுதான் சரியான நிலைப்பாடு.

நியாயமான நிலைப்பாடு.மனித உயிர்களை மதிக்கும் உயர்ந்த நிலைப்பாடு.

மரண தண்டனை சரியில்லை என்று கேமராக்களின் முன்னால் காட்டுக்கூச்சல் போடுவோரும் மாநாடுகளில் தீர்மானம் போடுவோரும் இந்தக் கேள்விகளுக்கு நேர்மையான பதிலை பதிலைத் தர முடியாது.

கருணை மனு வேண்டாம் :

நமது நாட்டுச் சட்டத்தில் குறிப்பிட்ட குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்க முடியும். ஆனால் மரண தண்டனைக்குரிய குற்றத்தை ஒருவன் செய்துள்ளான் என்று கீழ்நிலை நீதிமன்றங்களில் இருந்து உச்சநீதிமன்றம் வரை நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற சட்டம் சரியானது என்றாலும் அதை அர்த்தமற்றதாக்கும் விதிவிலக்குகளையும் நமது சட்டம் கொண்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு போட்டு அதை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டால் மரண தண்டனை ரத்தாகி விடும்.

கொல்லப்பட்டவன் குடியரசுத் தலைவரின் மகனாக மனைவியாக இருந்தால் அவர் மன்னிக்கலாம். என் தந்தையை ஒருவன் கொலை செய்தால் அதனால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். நான் தான் அது குறித்து முடிவு எடுக்க வேண்டும். எனக்கு மாமனாகவோ மச்சானாகவோ, உறவினராகவோ இல்லாத குடியரசுத் தலைவர் மரண தண்டனையை மன்னிக்கலாம் என்றால் எதற்காக மரண தண்டனை சட்டப்புத்தகத்தில் இடம் பெற்றதோ அதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.

குடியரசுத் தலைவர் கொலை செய்தாலும் அவரையும் தூக்கில் போட வேண்டும் என்பது தான் சரியான சட்டமாகும். குடியரசுத் தலைவர் பெரும்பாலும் கட்சிகளில் இருந்துவிட்டு தள்ளாத வயதில் குடியரசுத் தலைவராக்கப்படுகிறார்.

அவர் எந்தக் கட்சியில் இருந்து வந்தாரோ அந்தக் கட்சியினர் மீது அவருக்கு கருணை பொங்கும் எதிர்க்கட்சியினர் மீது கருணை வராது.

அவரது கட்சியினரைச் சேர்ந்தவர்கள் கொலை செய்தால் அவரை மன்னித்துவிடுவார். அவரது சொந்த பந்தங்கள் கொலையாளிகளாக இருந்து கருணை மனு போட்டால் அவரகளையும் மன்னித்து விடுவார்.

இதுதான் ஜனநாயகமா? இதுதான் அனைவருக்குமான சமநீதியா? மரண தண்டனை உண்டு; ஆனால் இல்லை என்ற இந்தப்போக்கினால் சட்டம் கேலிக்கூத்தாக்கப்படுகிறது.

குற்றவாளியைக் கண்டுபிடிக்கவும், கைது செய்யவும், சாட்சிகளையும் ஆதாரங்களையும் திரட்டவும் பல ஆண்டுகள் உழைத்து புலனாய்வு அதிகாரிகள் வெட்டி வேலை பார்க்கிறார்களா? மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணத்தில் எதற்காக நீதிமன்றங்களில் பணத்தையும் காலத்தையும் விரயம் செய்ய வேண்டும்?

நாட்டு மக்கள் அனைவரையும் ஒரு உத்தரவில் முட்டாள்களாக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு இருந்தால் அது ஒருக்காலும் மக்களாட்சி ஆகாது.
இந்தக் கிறுக்குத் தனமான விதிவிலக்கை சட்டப்புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று இப்பொதுகுழு வலியுறுத்துகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தவறான தீர்ப்பு :

குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை ஏற்கும் அதிகாரம் நியாயமற்றதாக இருந்தாலும். இந்த விதிவிலக்கு சட்டத்தில் இருக்கும் வரை இதன்படிதான் நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்க முடியும்.

இதைக் குப்பைக் கூடையில் வீசிவிட்டு எந்த நீதிமன்றமும் தீர்ப்பளிக்க முடியாது.

கருணை மனு குறித்து குடியரசுத் தலைவர் முடிவு செய்யாமல் தாமதித்ததால் குற்றவாளிகள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். பல வருடங்கள் வேதனையை அனுபவித்து விட்டார்கள். மரண தண்டனையவிட அதிக துன்பத்தை அவர்கள் அடைந்துவிட்டதால் அவர்களின் தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாக ஆக்கப்படுகிறது என்பது தான் உச்சநீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்.

இது சட்டப்படியான தீர்ப்பு அல்ல. இஷ்டப்படியான தீர்ப்பு என்று நாம் கருதுகிறோம்.

நீதிமன்றங்கள் சட்டப்படி இல்லாமல் சட்டத்துக்கு பொருந்தாத வியாக்கியானம் கூறி தீர்ப்பளிப்பது தற்போது அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அனைத்துத் துறைகளின் மீதும் நம்பிக்கை கொண்ட மக்கள் நீதிமன்றத்தின் மீது ஓரளவு நம்பிக்கை வைத்து இருந்தார்கள். அது தற்போது மாறி வருகிறது.

அவரவர் இஷ்டப்படி தீர்ப்பளிக்கலாம் என்ற அளவுக்கு நமது நாட்டின் நீதித்துறை மிக பலவீனமாக உள்ளது.

குடியரசுத் தலைவர் இவ்வளவு நாட்களுக்குள் கருணை மனுவை பரிசீலிக்காவிட்டால் அந்த அதிகாரத்தை நீதிமன்றம் எடுத்துக் கொள்ளலாம் என்று சட்டப்புத்தகத்தில் உள்ளதா?

குடியரசுத் தலைவர் எந்தக் கருணை மனுவையும் இவ்வளவு காலத்திற்குள் பரிசீலிக்க வேண்டும் என்று சட்டத்தில் எழுதப்பட்டுள்ளதா?

மனரீதியாக ஒருவர் பாதிக்கப்பட்டால் அதுவே மரண தண்டனைக்கு பகரமாகும் என்று சட்டப்புத்தகத்தில் உள்ளதா?

இவற்றில் எதுவுமே இல்லை என்று தொலைக்காட்சி விவாதங்களில் எல்லா வழக்கறிஞர்களும் ஒப்புக் கொள்கின்றனர்.

இன்று செத்துவிடுவேனோ நாளை செத்து விடுவேனோ என்று கொலையாளிகள் செத்து செத்து பிழைத்தார்கள் என்பதால் இருமுறை மரணதண்டனை அளிக்க முடியாது என்பது அறிவுக்குப் பொருந்தாததும் சட்டத்தில் இல்லாததுமான மடமை வாதமாகும்.

நாளை தூக்குத்தண்டனை என்று முடிவு செய்யப்படுகிறது. அறிவிக்கப்பட்ட படி நாளை தூக்கில் போடாமல் நாளை மறுநாள் தூக்கில் போடப்படுகிறது. ஒருநாள் முழுவதும் மரணத்தை எண்ணி எண்ணி மரண வேதனையை அடைந்துவிட்டான். இவனது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக ஆக்குகிறேன் என்று சொல்லலாமா?

தீர்ப்பு அளிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில்தான் ஒருவன் மரணத்துக்கு நிகரான வேதனையை மனதால் அனுபவிப்பான். நாட்கள் செல்லச் செல்ல அதற்கு தன்னைத்தானே தயார் படுத்திக் கொண்டு ஓரளவு தன்னை நிலை நிறுத்திக் கொள்வான் இதுதான் உளவியல்.

ஒருவனுக்கு மரணத்தை ஏற்படுத்தும் நோய் இருப்பது கண்டறியப்படுகிறது. அதை அறிந்த ஓரிரு நாட்களில் மரண வேதனையை மனதால் உணர்வான். ஆனால் மாதங்கள் வருடங்கள் உருண்டோடும் போது அதையே நினைத்துக் கலங்கிக் கொண்டு இருக்கமாட்டான். வருவது வரட்டும் வரும்போது வரட்டும் என்ற மனநிலைக்கு வந்துவிடுவான்.

எனவே நீதிபதிகளின் தீர்ப்பு சட்டப்படியானதும் அல்ல. தர்க்க ரீதியானதும் அல்ல. உளவியல் அடிப்படையில் கூட ஏற்கத்தக்கதல்ல.

உலகில் எந்த நாட்டுச் சட்டமும் மனதால் பாதிக்கப்படுவது பற்றி கருத்தில் கொள்வதில்லை. அது தேவையும் இல்லை.

ஒரு திருடனுக்கு 10 வருடம் சிறைவாசம் அளிக்கப்படுகிறது. அவன் சிறைச் சாலையில் வைத்து சிறை அதிகாரிகளால் செருப்பால் அடிக்கப்படுகின்றான்.
பல வருடங்கள் சிறையில் கிடப்பதால் ஏற்படும் மன உளைச்சலைவிட ஒரு செருப்படியால் நான் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். என்று மனு போட்டால் இவர்கள் இப்படித்தான் தீர்ப்பு அளிப்பார்களா?

உண்மையில் சிறைச்சாலையில் இருப்பதை விட செருப்படி ஒருவனை அதிகம் பாதிக்கும். ஆனாலும் இது தண்டனைகளைக் குறைக்க உதவுமா? கொஞ்சமாவது அறிவுடன் இவர்கள் சிந்திக்க மாட்டார்களா?

ஒரு குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்தி குறிப்பிட்ட தண்டனை வழங்கப்படுகிறது. அப்போது அவன் ஐயா என்னை அடிக்கடி சிறைக்கு அழைத்து வந்து மக்களும் என்னைக் கேவலமாகப் பார்த்துவிட்டார்கள். எனக்கு கைவிலங்கு போட்டதால் நொறுங்கிவிட்டேன். போலீஸ் விசாரணையில் அதிகாரி என்னை ஆபாசமாகத் திட்டியதால் செத்துவிடலாமா என்ற நிலைக்கு நான் வந்துவிட்டேன்.

நான் அனுபவிக்க வேண்டியதை விட அதிக மன உளைச்சலை அடைந்துவிட்டேன் என்று கூறினால் நீ சொல்வது சரிதான் நீ போகலாம் என்று நீதிபதி கூறினால் அவரது அறிவை என்னவென்பது?

அவன் மனதால் பாதிக்கப்படுவது சட்டத்துக்கு அவசியமில்லாதது என்பதால்தான் எந்த நீதிமன்றமும் மேற்கண்டவர்களை விடுதலை செய்வதில்லை.

எனவே இத்தீர்ப்பு கடுகளவும் நியாயமற்ற தீர்ப்பாகும் என்பதில் எமக்குச் சந்தேகம் இல்லை.

ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிப்பது

மரண தண்டனை ஆயுள் தண்டனையாக்கப்பட்டது என்பதோடு நீதிபதிகள் நிறுத்திக் கொள்ள்வில்லை. சிறையில் இருந்து அவர்களை விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இதே நீதிமன்றங்கள்தான் ஆயுள் தண்டனை என்றால் 14 ஆண்டுகள் அல்ல. ஆயுள் முழுவதும் சிறையில் இருப்பதுதான் என்று தீர்ப்பளித்தன. ராஜீவ் கொலையாளிகளில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் விஷயத்திலும் இது போன்ற தீர்ப்பை கூறினர்.

ஆயுள் தண்டனையின் அர்த்தம் ஆயுள் முழுவதும் சிறையில் இருப்பது என்றால் அவர்களை விடுதலை செய்வது பற்றி பரிசீலிக்குமாறு கூறுவது எப்படி?

ஒவ்வொரு நீதிபதியும் இஷ்டத்துக்கு எதையாவது சொல்லிக் கொண்டு போனால் அனைத்து துறைகள் மீதும் ஏற்பட்ட வெறுப்பை விட மக்களின் அதிக வெறுப்புக்கு நீதிபதிகள் ஆளாவார்கள்.

சட்டப்புத்தகத்தில் உள்ளபடி மட்டும் தீர்ப்பு அளிக்கப்பட்டு இருந்தால் இது போல் தீர்ப்பு அளித்திருக்கவே மாட்டார்கள்.

சிலர் நேரடியாக ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர் வேறு சிலர் தூக்குத்தண்டனை குறைக்கப்பட்டதால் ஆயுள்தண்டனைக்கு உள்ளானவர்கள். இவர்களில் யாருக்கு அதிக கருணை தேவை?

ஆரம்பத்திலேயே ஆயுள் தண்டனை பெற்றவர்களின் குற்றம் அவ்வளவு கொடூரமாக இல்லை.

ஆரம்பத்திலேயே தூக்குத்தண்டனை பெற்றவர்களின் குற்றம் கொடூரம் மிகுந்ததாக நீதிமன்றத்தால் பார்க்கப்படுகின்றது.

இவர்களை விடுதலை செய்வதற்கு முன் எல்லா ஆயுள் தண்டனைக் கைதிகளையும அதைவிட குறைவான தண்டனை வழங்கப்பட்டவர்களையும் விடுவித்து இவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று ஏன் சொல்லவில்லை? யாருக்கும் வழங்காத சிறப்புச் சலுகையை இவர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகைக்கு என்ன காரணம? அப்படி காரணம் இல்லா விட்டால் அதன் உள் நோக்கம் என்ன?

மொழியை விட நியாயம் பெரிது:

தமிழ் மொழி பேசுவோர் எனபதற்காக குரல் கொடுப்பதாக் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். தமிழ் மொழி பேசினால் யாரையும் கொன்று குவிக்கலாமா? ராஜீவ் தவிர கொல்லப்பட்ட 18 பேரும் தமிழர்கள் இல்லையா? தன் தந்தையைக் கொன்றவர்களுக்கு எதிராக மகன் ராகுல் பேசினால் ராகுல் காந்தியின் உருவ பொம்மையை கொளுத்தும் அளவுக்கு மிருகங்களாக சிலர் மாற்றப்பட்டுள்ளனர். இவர்களின் அப்பன்மார்கள் அந்த 18 பேரில் இருந்தால் எப்படி இருக்கும்? இவர்களைத் தூண்டி விட்டு அநியாயத்தை நியாயப்படுத்தம் தலைவர்களின் மகன்கள் கொல்லப்பட்டு இருந்தால் கொன்றவனுக்கு மாலை போடுவார்களா? என்று இப்பொதுக்குழு கேட்க விரும்பிகின்றது.









அதிரை கிளை சார்பாக வாழ்வாதார உதவியாக தையில் மிஷின்

அதிரை கிளை சார்பாக வாழ்வாதார உதவியாக தையில் மிஷின்

அதிராம்பட்டினம் பாத்திமா நகரில் வசித்துவரும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக தையல் மிஷின் அதிரை கிளை சார்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.