Thursday, April 16, 2015

பிலால் நகரில் நடைபெற்ற பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பில் பிலால் நகரில் மர்ஹூம் அபூபக்கர் அவர்களின் இல்லத்தில் இன்று மாலை பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பேச்சாளர் அஸ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் செயலாளர் எஸ்.பி பக்கீர் முஹம்மது, தர்ஹா வழிபாடு குறித்து இஸ்லாம் கூறும் கருத்துகளை அறிமுக உரையாக நிகழ்த்தினார். கூட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

இனி வாரந்தோறும் வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க சிறப்பு சொற்பொழிவு தொடர்ந்து நடைபெறும் என கூட்டத்தில் அறிவிப்பு செய்யப்பட்டது.



Tuesday, April 14, 2015

அதிரை TNTJ கிளை - அபுதாபி கூட்டமைப்பின் மாதாந்திர ஆலோசனைக்கூட்டம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


அல்லாஹ்வின் பேரருளால், கடந்த 10-04-2015 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் இரவு 8.00 மணியளவில் அபுதாபி TNTJ சிட்டி மர்கஸில் சகோ. ஜாஹிர் தலைமையில் நடைப்பெற்றது.  

அதிரை அபுதாபி TNTJ கூட்டமைப்பின் கடந்த மஷூராவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் செயல்பாடுகளைப் பற்றி அறிமுகம் செய்யப்பட்டது,   அதில், பெண்கள் மத்ரஸாவின் நிர்வாக செலவினங்களுக்கு, அபுதாபி சார்பில் மாதந்தோரும் பங்களிப்பு செய்யப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும், பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.  கலந்துகொண்ட சகோதரர்கள் நம்மூரில் தஃவா வளர்ச்சிகளுக்கான நல்ல ஆலோசனைகளை வழங்கினார்கள்.


இறுதியில்துஆவுடன் அமர்வு நிறைவுபெற்றது.

நிலவேம்பு கசாயம் வினியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை சார்பாக இன்று காலை 6.00 மணி முதல் இலவச நிலவேம்பு கசாயம் வினியோகிக்கப்பட்டது இதில் 300க்கு அதிகமானவர்கள் கசாயம் அருந்தி சென்றனர்












Monday, April 13, 2015

கீழத்தெருவில் சமாதி வழிப்பாட்டிற்கு எதிரான தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைக்கிளை சார்பாக இன்று இஷா தொழுகைக்கு பிறகு கீழத்தெரு அப்பாஸ் வீட்டின் அருகில் சமாதி வழிப்பாட்டிற்கு எதிரான மாபெரும் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது இதில் மாநில பேச்சாளர் மௌலவி அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி சமாதி வழிப்பாடு எதனால் கூடாது என்பதையும் கந்தூரி தவறு என்பவர் என்ன செய்யவேண்டும் என்பதை தெளிவாக விளக்கி சிறப்புரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்










Saturday, April 11, 2015

கற்பா? கல்லூரியா?


பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிப் படிப்பையும் தாண்டி கல்லூரிப் படிப்பில் சேர்ப்பதற்குப் பெரும் முயற்சி மேற்கொள்கிறார்கள்; பெரும்பாடு படுகிறார்கள். பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு ஒன்றும் தடையில்லை. குறைந்தபட்சம் ஒரு பெண்ணுக்குப் பத்தாம் வகுப்பு வரை கட்டாயம் கல்வி தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பள்ளிப் படிப்புக்கு மேலான படிப்புக்குச் செல்லும் பெண் பிள்ளைகள் கற்பைப் பறி கொடுக்கும் பேரபாயம் காத்திருக்கின்றது என்பதைப் பின்வரும் சில எடுத்துக் காட்டுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 ஆட்டோ அல்லது வேன் பயணம்

 சிலர் தங்களது பருவமடைந்த வயதுப் பெண்களை தன்னந்தனியாக, காரில் அல்லது ஆட்டோவில் அனுப்பி வைக்கின்றனர். சிலர் ஆட்டோவில் நான்கைந்து சக வயதுப் பெண்களுடன் அனுப்பி வைக்கின்றனர். ஆட்டோ ஓட்டுனர்களும் வாலிப வட்டங்கள் தான் என்பதைப் பெற்றோர் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.

 ஆட்டோ பறக்கின்ற போது, ஆட்டோவே அதிர்கின்ற வகையில், அமர்க்களப்படுகின்ற வகையில் துள்ளிசைப் பாடல்கள் காதுகளைப் பிளக்கின்றன. பாடல் வரிகள் அத்தனையும் கொத்துக் கொத்தாய் ஆபாச வார்த்தைகளை வெடித்துத் தள்ளுகின்றன. உள்ளிருக்கைகள் நிரம்பி வழிந்து, ஓட்டுனரை ஒட்டியிருக்கின்ற பலகையில் பருவ வயதுப் பெண்கள் உட்கார்ந்து கொண்டு ஒட்டுகின்ற விரச விளையாட்டுக்கள். 

பள்ளியில் கொண்டு விட்ட பின்னர் மாலையில் படிப்பு முடிந்ததும் மாணவிகள்  நம் சமுதாயப் பெண்கள் வெளியே வருகின்றனர்.

 வாசலில் ஆட்டோவுடன் காத்து நிற்கின்றான் ஆட்டோ ஓட்டுனர். அவனுக்குரிய காக்கிச் சீருடையை அணியாமால் கலர் கலர் பேண்ட், சர்ட் அணிந்து இன் செய்து, சீவிச் சிங்காரித்து எடுப்பாக நிற்கின்றான்.

பள்ளிக்கூடத்தில் மாணவிகளை விடுவது 4 மணி, நான்கரை மணி, 5 மணி என்று முறை வைத்து விடுகின்றார்கள். அல்லது டியூசன் போன்ற காரணங்களால் மாணவிகளின் வருகை நேரம் மாறுபடுகின்றது. இந்த ஆட்டோக்காரன் கடைசி அணி வருகின்ற வரை, ஏற்கனவே வந்த பிள்ளைகளுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கின்றான்.

மீண்டும் அதே உரசலுடன் நம் பிள்ளைகளை வீட்டில் விட்டுச் செல்கிறான். அதன் பின்னர் ஆட்டோ டிரைவர் கரையேறி விட்டாலும் அவனைத் துரத்துகின்ற கனவு அலைகளிலிருந்து அவன் கரையேறுவதில்லை. மறுநாள் காலையில் அதே சொகுசுப் பயணம். வேன் டிரைவர்களும் இதே போன்று தான். இதில் ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம். ஆனால் பெரும்பகுதி இந்த நிலை தான். இப்போது சிந்தியுங்கள். இந்தக் கல்லூரிப் படிப்பு தேவையா என்று!

ஆட்டோ, வேன் பயணம் தான் இப்படி என்றால் பஸ் பயணமும் பாதுகாப்பாக இல்லை. நகரத்தை நோக்கி வருகின்ற பஸ்கள் தன்னுடைய கொள்ளளவையும் தாண்டியே ஆட்களை நிரப்புகின்றன. இங்கும் பெண் பித்தர்கள் சபலப் புத்தியுடன் பெண்களின் உடல் உரசலுக்கு வாய்ப்பு கிடைக்காதா என்று எதிர்பார்த்து ஏங்கியே பயணிக்கின்றனர். நடத்தை கெட்ட சில நடத்துனர்கள், ஓட்டுனர்களுடன் வழிதவறும் பெண்களும் இருக்கிறார்கள். இது போன்ற விவகாரங்களும் சமுதாயத்தில் சந்தி சிரிக்கின்றன.

பட்டப்படிப்புக்காக வெளியூர்களுக்குச் செல்லும் போது, குழுவாகச் செல்லும் இப்பெண்களின் ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கின்றது. ஆர்ப்பரித்துச் சப்தமிடுவது, பாடல்களைப் பாடி ஆடுவது, கும்மாளமிடுவது என கல்லூரிப் பெண்கள் நடத்தும் அத்துமீறல்களுக்கு அளவே இல்லை. பேருந்து நடத்துனர்களுக்குக் கொண்டாட்டம் தான். கணவன், மனைவி போல் அருகருகே அமர்ந்து கொண்டு கொஞ்சிக் குலாவுவது சர்வ சாதாரணமான ஒன்று!

பள்ளி, கல்லூரியில் மட்டுமல்ல! வருகின்ற வழிப் பயணத்திலும், வழிப் பாதையிலும் பெண்களின் கற்புகளைப் பறிப்பதற்கு ஷைத்தான் தன் பரிவாரங்களுடன் முற்றுகையிட்டு நிற்கின்றான். இப்படி ஆபத்துக்கிடையில் பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு தேவையா என்பதைப் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

பாடமா? படமா?

உயர்நிலை மற்றும் கல்லூரியில் படிக்கின்ற மாணவிகள், தங்கள் சக மாணவிகளைப் பார்க்கப் போகின்றேன் என்று சொல்லி விட்டு, பாய் ஃபிரண்ட்ஸ் - ஆண் நண்பர்களுடன் திரையரங்குகளுக்குச் செல்கின்றனர். அருகருகே அமர்ந்து படம் பார்க்கின்றனர். சினிமாக்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலத்திலும் காமக் களியாட்டங்கள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றன. முப்பது வருடங்களுக்கு முன்னால் உள்ள மக்கள் எதை ஆபாசம், விரசம் என்று கருதினார்களோ அதை சினிமாவில் காட்டினார்கள். தற்காலத்தில் உள்ள மக்கள் எதனை காமக் களியாட்டம் என்று வெறுக்கின்றார்களோ அதை தற்போதுள்ள சினிமாக்களில் காட்டுகின்றனர். இந்தப் படத்தைத் தான் நமது அருமை மகள் திரையரங்கில், திரை வெளிச்சத்தைத் தவிர வேறு வெளிச்சமில்லாமல் கொட்டிக் கிடக்கும் கும்மிருட்டில் அருகில் ஒருவனுடன் அமர்ந்து படம் பார்க்கும் காட்சியை பெற்றோர்கள் தங்கள் மனக்கண் முன்னால் சற்று ஓட விட்டுப் பார்க்கட்டும். இரத்தம் கொதிக்கும்; கையில் செருப்பை அல்ல, அரிவாளைக் கூட எடுக்க நினைப்போம். இப்போது நினைத்துப் பாருங்கள். இப்படி ஒரு கல்வி தேவையா?

பிற மதத்தவருடன் காதல் பயணம்

கல்லூரிக்குச் செல்லும் வயதுப் பெண்களின் அவலம் இத்துடன் நிற்கவில்லை. பிற மதத்தவருடன் கற்பைப் பகிர்கின்ற, உள்ளத்தை உறையச் செய்யும் படுபாதகச் செயலும் பகிரங்கமாகவே நடைபெறுகின்றது. இவ்வாறு கூறுகையில், நம் சமுதாய ஆண்களுடன் ஓடலாமா? என்று கேட்கலாம். யாருடன் சென்றாலும் விபச்சாரம் தான். ஆனால் பிற மதத்தவருடன் ஓடும் போது கொள்கையும் சேர்ந்தே போய் விடுகின்றது. கொள்கை மாறுதல் என்பது இஸ்லாத்தில் கொடிய பாவமாகும்.

உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 2:217)

ஓடும் பெண்களும் வாடும் பெற்றோரும்

இவ்வளவு பெரிய கொடுமைகளுக்கு வித்திட்டது எது? இந்தக் கல்லூரிப் படிப்பு! பெற்றோர்களின் கண்டு கொள்ளாத போக்கு! இம்மை வாழ்விற்காக மறுமையைப் பலியாக்கி நம்முடைய பிள்ளைகளை நரகப் படுகுழியின் விறகுகளாக்கத் துணிந்து விட்டோம்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள். (அல்குர்ஆன் 66:6)

இந்த வசனத்தைக் கவனிக்கத் தவறி விட்டோம்.

தமிழகத்தின் தென் பகுதியில் முஸ்லிம்கள் நிறைந்த ஒரு சில ஊர்களில் கல்லூரி, உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்கள் பிற மதத்தவர்களுடன் ஓடுவது சர்வ சாதாரணமான ஒன்றாகி விட்டது.

பெண் பிள்ளைகள் ஓடுகின்றனர்; பெற்றோர்களோ வாடிக் கொண்டிருக்கின்றனர். கண்ணீரும் கம்பலையுமாக கவலையில் ஆழ்ந்து கிடக்கின்றனர். பள்ளிப் படிப்புக்கே இந்தக் கதி என்றால் கல்லூரிப் படிப்பிற்கு என்ன கதி?

ஒரு முஸ்லிம் கல்லூரி நீண்ட காலம் ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரியாகச் செயல்பட்டது. அப்போது கல்லூரி சீருடனும் சிறப்புடனும் செயல்பட்டது. இக்கல்லூரியில் பெண்கள் படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இக்கல்லூரி நிர்வாகம் பெண்களுக்காக தனிக் கல்லூரியைத் துவங்கியிருக்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு, ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கோ எஜுகேஷன் முறையைக் கொண்டு வந்தது. அதன் விளைவு என்ன?

பிற சமுதாய மாணவர்களுடன் நமது சமுதாயப் பெண்கள் சேர்ந்து வழி தவறுகின்றனர். சமுதாயப் பெண்களின் கற்பு மட்டுமல்ல! சமுதாயத்தின் கண்ணியமும் கவுரவமும் சேர்ந்தே காற்றில் பறக்கின்றது. மேலும் இஸ்லாத்தை விட்டே இந்தப் பெண்கள் வெளியேறும் நிலையும் ஏற்படுகின்றது. இதன்படிப் பார்க்கும் போது கல்லூரியா? கற்பா? என்ற கேள்வியைத் தாண்டி, கல்வியா? இறை மறுப்பா? என்று கேட்க வேண்டியுள்ளது.

அத்துடன் இங்கு நாம் இன்னொரு விளைவையும் உணர்ந்தாக வேண்டும். இது போன்று நமது சமுதாயப் பெண்கள் பிற சமுதாயத்தவருடன் ஓடும் போது அதைத் தட்டிக் கேட்பதற்காகச் சில இளைஞர்கள் கிளம்புகின்றனர்; சட்டத்தைக் கையில் எடுக்கின்றனர்.

இது, இஸ்லாமிய சமுதாயத்திற்கும் பிற சமுதாயத்திற்கும் மத்தியில் ஒரு விதமான மோதல் போக்கை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் வகுப்புக் கலவரம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்ச வேண்டிய சூழலும் ஏற்படுகின்றது. 

எனவே இத்தகைய விளைவுகளைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் ஒரு பெண்ணுக்கு அவசியத் தேவை கற்பா? கல்லூரியா? ஈமானா? இறை மறுப்பா? என்று சிந்திக்க வேண்டும்.

நம் மகள் கற்பிழந்தால் அல்லது மதம் மாறினால் அவள் செய்த பாவத்தில் நமக்குப் பங்கில்லை என்று நாம் தப்ப முடியாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கüல் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்கüன் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாüயாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள், தன் எஜமானின் உடைமைகளுக்குப் பொறுப்பாüயாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான். (நூல்: புகாரி 2409)

இந்த ஹதீஸின்படி பெற்றோர்களும் அந்தப் பாவத்தின் சுமையை மறுமையில் சுமந்தே ஆக வேண்டும்.

கண்ணை விற்றுச் சித்திரம் வாங்க வேண்டுமா? என்று சிந்திக்க வேண்டும்.

ஒரு பெண்ணை உயர் கல்வி படிக்க வைக்கும் போது சாதகங்களை விட, பாதகங்களைத் தான் பார்க்க வேண்டும். அப்படியே ஒருவர் தமது மகளைப் படிக்க வைக்க வேண்டுமானால்...

1. குறைந்தபட்சம் அந்தப் பள்ளி அல்லது கல்லூரி ஊருக்குள்ளேயே அமைந்திருக் வேண்டும். நம்முடைய கண்காணிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.

2. உள்ளூராக இருந்தாலும், வெளியூராக இருந்தாலும் பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரியாக இருக்க வேண்டும். (அதிலும் ஆண் நிர்வாகிகள் ஆட்டம் போடுகின்ற, வயதுப் பெண்களிடம் சில்மிஷம் செய்கின்ற பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்)

3. தூரத்தில் இருந்தால் ஆட்டோ, கார் அல்லது வேன் போன்றவற்றில் தனித்துச் செல்லக் கூடாது.

 'கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர ஒரு பெண் மூன்று மைல்கள் தூரத்திற்கான பயணத்தை மேற்கொள்ளக் கூடாது' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: தப்ரானி

4. இந்தப் பெண்கள் ஆட்டோ அல்லது வேனில் பயணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் டிரைவர் திருமணம் முடித்த, வயதானவர்களாக, ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும்.

இது போன்ற நிபந்தனைகளுக்கு ஒத்து வரவில்லையென்றால் பத்தாம் வகுப்புடன் பெண்கள் கல்வியை நிறுத்திக் கொண்டு மார்க்கக் கல்வியைப் பயிற்றுவிப்பது அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையைப் பயக்கும்.

ஒரு சில கட்டங்களில் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பது சிரமமாக உள்ளது. பட்ட மேல்படிப்பு படித்த பெண்களுக்கு அதைவிடச் சிரமமாக உள்ளது. அப்படியே மாப்பிள்ளை அமைந்தாலும் ஒரு குழந்தை, இரு குழந்தைகளுடன் விவாக ரத்தில் போய் முடிகின்றது.

எனவே இப்படிப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் பெண்களின் கல்லூரிப் படிப்பின் சாதக பாதகங்களைப் பெற்றோர்கள் தூக்கிப் பார்க்க வேண்டும். அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும்.

கற்பா? கல்லூரியா? என்ற இந்தத் தலைப்பில் கல்லூரிப் படிப்பில் ஏற்படுகின்ற பாதகங்களைப் பட்டியலிடும் போது கல்லூரியில் படித்த பெண்கள் எல்லாம் தவறானவர்கள் என்று விளங்கிக் கொள்ளக்கூடாது.

இங்கு எழுதப்பட்டவை அனைத்தும் நடப்பவை, நடந்து கொண்டிருப்பவை. இந்தத் தீமைகளைக் கண்டு நெஞ்சு பொறுக்காமல் இந்தக் கட்டுரை இங்கே பதியப்பட்டுள்ளது.

நன்றி
ஏகத்துவம்

நிரந்தர நண்மையை பெற்றுத்தரும் பணிக்காக உதவிடுவீர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைக்கிளையின் சார்பாக அல்-ஹிக்மா பெண்கள் அரபிக் கல்லூரி வருகிற மே மாதம் புதுமனைத் தெருவில் வீடு ஒன்று வாடகைக்காக அக்ரீமெண்ட போடப்பட்டு துவங்க உள்ளது அல்ஹம்துலில்லாஹ்
அதற்கான ஏற்பாடுகள் துவங்கப்பட்டு மிக முக்கியமான பணிகள்  கட்டிட பாராமரிப்பு வேலை, 2 கழிப்பிட வசதிகள், ஒழு செய்வதற்கான வசதிகள், எலக்ட்ரிக் வேலைகளும் முடிந்துள்ளன  

இன்னும் பல தேவைகள் இருப்பதால் அதற்கான விபரத்தை விரிவாக கீழே குறிப்பிட்டுள்ளோம். இந்த மகத்தான  நிரந்தரமான நன்மைகளை பெற்றுத்தரும்  மார்க்கப் பணிக்காக உங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை அல்லது ஒவ்வொரு வேலைக்காக குறிப்பிட்டுள்ள தொகையை  ஏற்று அந்த வேலைகளை முடிக்க உதவுமாறு அன்போடு அதிரை கிளைசார்பாக கேட்டுக்கொள்கிறோம்

1 4 மாணவிகள் அமர்ந்து படிக்கக்கூடிய மேஜை மற்றும் இருக்கை (பெஞ்ச்|டெஸ்க்) ஒரு செட் விலை ரூ 6000 (தேவை 10 செட்கள்) ரூ 60000
.
2 ஆன்லைனில் பாடம் நடத்துவதற்காக இன்ட்டர்நெட் கணக்ஷன் மற்றும் டி.வி ரூ 30000

3 அலுவலகக் தேவைக்காக பர்னிச்சர் சாமான்கள் ரூ 15000

4 பீரோ 10000

5 பாதுகாப்பிற்காக ஏற்கெனவே உள்ள காம்பவுண்ட் (சுற்றுச்சுவர்) சுவரை கூடுதலாக 3 அடி உயர்த்துவதற்கான செலவு 20000

6 பாடம் நடத்த தேவையான குர்ஆன் தமிழாக்கம் ஹதீஸ் நூற்கள் மற்றும் மார்க்க சம்மந்தமான நூற்கள் வாங்க ரூ 10000

7 கண்கானிப்பு கேமரா ரூ 17000

8 மின் விசிரி 6  ரூ 18000

இது தவிர மாதாமாதம் (மதரஸாவிற்கு) செலவிடப்படுகிற நிர்வாக செலவுகளுக்காக ரூ 35000
(நிர்வாக செலவு விபரம் வாடகை, டெலிபோன் நெட் பில், மின்கட்டணம்? ஆசிரியர்கள் சம்பளம் மற்றும் இதர செவினங்களுக்காக )

தொடர்புக்கு;
மீரா முகைதீன் (பொருளாளர்) 91 99 44 82 45 10
பக்கீர் முகைதீன் (செயலாளர்) 91 95 00 82 14 30
ஜஹபர் சாதிக் (துபை)  00971 52 901 4341
நசீர் (துபை) 00971 50 154 5251

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான்03.04.2015 (வீடியோ)



ஒற்றுமை ஏற்பட என்ன வழி

Thursday, April 09, 2015

அல்ஹிக்மா மற்றும் கோடைகால பயிற்சி முகாம் பற்றிய மஷூரா

அல்ஹிக்மா மற்றும்  கோடைகால பயிற்சி  முகாம் பற்றிய மஷூரா
அஸ்ஸலாமு அலைக்கும் 

இன்று 09/04/5 காலை ஃபஜருக்கு  பிறகு நமது அல் ஹிகமா பெண்கள் இஸ்லாமிய  கல்லூரி தொடர்பாகவும்,வருடா வருடம்  நடக்கும் கோடைகால பயிற்சி  முகாம் பற்றியும் மஷூரா  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்











Tuesday, April 07, 2015

மழலையரைக் காக்க மதரஸாக்கள் நடத்துவோம்!

மழலையரைக் காக்க மதரஸாக்கள் நடத்துவோம்!


ஏகத்துவக் கொள்கை ஒவ்வொரு ஊரிலும் துளிர் விட்டு வளர்வதற்காக உயிர், உடல், பொருள் மூலமாக பெருந்தியாகங்கள் பெருமளவுக்கு முதலீடாகவும், மூலதனமாகவும் செலுத்தப்பட்டிருக்கின்றன.
அதன் பின்னர்தான் ஏகத்துவம் பெரிய மரமாக வளர்ந்து நின்று பலனைத் தருகின்றது. மரம் தான் வளர்ந்து விட்டதே! அத்துடன் நமது வேலை முடிந்து விட்டது என்று ஓர் ஏகத்துவவாதி எண்ணினால் அவர் நிச்சயமாக ஏமாந்து விடுகின்றார். தான் ஈடுபட்ட தியாகத் திருப்பணியில் ஈடுகட்ட முடியாத நஷ்டவாளியாகி விடுகின்றார்.
பூச்சிகள், புழுக்கள் போன்றவை சிறு செடி கொடிகளைத் தான் தாக்கும்; பெரும் மரங்களைத் தாக்காது என்று நினைத்துவிடக் கூடாது. படர்ந்து, விரிந்து நிற்கின்ற பலமான மரத்தைக் கூட வைரஸ் தாக்கி பட்ட மரமாக்கி விட்டிருக்கின்றது.
தவ்ஹீது பாதை என்பது நேரிய, நெடிய பாதையாகும். அந்தப் பாதையின் இறுதி இலக்கை அடைகின்ற வரை ஷைத்தான் ஒரு தவ்ஹீதுவாதியைச் சுற்றிலும் முற்றுகையிட்டு நிற்பான். இதைக் கீழ்க்காணும் வசனத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
"நீ என்னை வழிகெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்'' என்று கூறினான். "பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிக மானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்'' (என்றும் கூறினான்).
அல்குர்ஆன் 7:16, 17
ஏகத்துவப் பிரச்சாரத்தைத் துவங்கிய மாத்திரத்தில், தவ்ஹீது மக்களை வழிமறித்துக் கொண்டு செல்வதற்காக ஜிஹாத் என்ற பெயரில் விடியல் வெள்ளியினர் உள்ளே நுழைந்து வழிகெடுத்தனர். ஜிஹாத் செய்ய வேண்டும் என்ற சிந்தனையை விதைத்தனர். இதற்குப் பதிலடி கொடுத்து அந்த வைரஸ்களிடமிருந்து ஜமாஅத்தைக் காப்பாற்றினோம். இன்றும் அந்த விஷக்கிருமிகள் பிரண்ட், பேக் என பல்வேறு பெயர்களில் வந்து தாக்கிக் கொண்டு தான் இருக்கின்றன. அவற்றை எதிர்த்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.
அஹ்லுல் குர்ஆன் என்ற விஷக் கூட்டம் முளைத்து, குர்ஆன் மட்டும் போதும், ஹதீஸ் தேவையில்லை என்று வாதிட்டனர். அந்த வைரஸ்களை விட்டும் அல்லாஹ்வின் அருளால் மக்களை மீட்டெடுத்தோம்.
சர்வதேசப் பிறை என்ற ஜோதிடக் கணிப்பு கோஷ்டியினர் மூலம் ஒரு வைரஸ் தாக்குதல் வந்தது. அல்லாஹ்வின் கிருபையால் அதை விட்டும் இந்த ஜமாஅத்தைக் காப்பாற்றினோம். அதுவரை ஜாக் இயக்கத்துடன் ஒன்றுபட்டிருந்த நம்மை, அதை விட்டும் பிரிக்கும் மையப்புள்ளியாக இந்த ஜோதிடப் பிறை கணிப்பு அமைந்தது என்பதையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்கிறோம்.
நாம் வளர்த்த தமுமுகவே நம்மை அழிப்பதற்கான வைரஸாக மாறியது. சளைக்காமல், சடையாமல் அதிலிருந்தும் ஜமாஅத்தைக் கரை சேர்த்தோம்.
இப்போது ஸலஃபு என்றொரு வைரஸ் தோன்றியுள்ளது. இதனால் ஜமாஅத்திற்கு நேரடிப் பாதிப்பு இல்லையென்றாலும் ஆங்காங்கே சிறுவர், சிறுமியர் மதரஸாக்களை அமைத்துக் கொண்டு, அவர்களிடம் சிறு வயதிலேயே விஷத்தை விதைத்து, வருங்கால தலைமுறையை வழித்தடம் மாற்றும் வேலையில் இந்த ஸலஃபுகள் இறங்கியுள்ளனர்.
இன்று நமது ஜமாஅத்தின் கிளைகளில் பெண்கள் மதரஸாவை நிறுவுவதில் பெரும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். தற்போதுள்ள கால சூழ்நிலையில் 10 அல்லது 12ஆம் வகுப்பு முடித்ததும் தங்கள் பெண் மக்களை மேற்படிப்பு படிக்க அனுப்புவதற்கு மக்கள் கடுமையாக அஞ்சுகின்றனர். அதனால் பட்டப் படிப்பெல்லாம் தேவையில்லை, நமது பெண்மக்கள் ஆலிமாக்களாக வரட்டும் என்று அவர்களை மார்க்கக் கல்வி படிப்பதற்கு அனுப்பி வைக்கின்றனர். அவர்களுக்குக் கல்வி கொடுக்கின்ற கல்வி நிலையங்கள் அவசியம் தேவை தான். அதில் மாற்றுக்கருத்தில்லை.
ஆனால் பெண் ஆலிமாக்களை உருவாக்கும் இந்தத் துறை பயம் நிறைந்தது; பலன் குறைந்தது. பாடம் நடத்துகின்ற அல்லது நிர்வாகம் செய்கின்றவர்களை ஷைத்தான் வழிகெடுப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. அல்லாஹ் காப்பானாக! அதனால் பெண்கள் மதரஸாக்களில் கவனம் செலுத்துவதை விட காலை, மாலை சிறுவர் சிறுமியருக்கான மதரஸாக்களை நடத்துவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் நமது மழலைகள், சந்ததிகள், வருங்காலத் தலைமுறைகள் நாளை நம்முடன் சுவனத்தில் நுழைவார்கள்.
யார் நம்பிக்கை கொண்டு அவர்களின் சந்ததிகளும் நம்பிக்கை கொள்வதில் அவர்களைப் பின்பற்றினார்களோ அவர்களுடன் அவர்களின் சந்ததிகளைச் சேர்ப்போம். அவர்களின் செயல்களில் எதையும் குறைக்க மாட்டோம்.
அல்குர்ஆன் 52:21
நம் சந்ததிகளுக்கு ஏகத்துவக் கொள்கையை சரியாகப் போதிக்கவில்லை என்றால் அவர்கள் நரகம் போய்ச் சேர்ந்து விடுவார்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். எனவே அந்தச் சின்னஞ்சிறு தளிர்களை தவ்ஹீத் வார்ப்பில் வளர்க்கவும் வார்க்கவும் வேண்டும். அதற்குச் சரியான களமும் தளமும் காலை, மாலையில் நடத்தப்படும் மக்தப் மதரஸாக்கள் தான்.
இன்று தமுமுக, விடியல் வெள்ளி போன்ற அமைப்பினர் தவ்ஹீத் ஜமாஅத் செய்கின்ற வேலைகள் அத்தனையையும் கையில் எடுக்கின்றனர். அவர்கள் காலை, மாலை மக்தப்களையும், பெண்கள் மதரஸாக்களையும் உருவாக்குகின்றனர். இவர்களுக்கு எள்ளளவும் சம்பந்தமே இல்லாத இந்தத் துறையில் ஆர்வம் காட்டுவதற்குக் காரணம் மறுமை அல்ல!    ஈ கூட எட்டிப் பார்க்காத தங்கள் ஆர்ப்பாட்ட, போராட்டக் களங்களுக்கு மக்களை வினியோகம் செய்யும் கருவூலமாக, களஞ்சியமாக இந்தத் துறைகளைப் பயன்படுத்த முனைகின்றனர். இவர்களின் செயல்கள் முழுக்க முழுக்க அரசியல் ஆதாயத்தை நோக்கமாகக் கொண்டது.
இந்தத் துறையில் இவர்கள் கவனம் செலுத்துவதற்கு மற்றொரு காரணம் மார்க்கப்பணி என்றால் அதில் காசு, பணம் பார்க்கலாம். வசூல் வேட்டை நடத்தலாம். அதற்காக இந்த முகமூடியைக் கையில் எடுத்துள்ளனர்.
என்ன தான் இவர்கள் நமது பாதையில் குறுக்கிட்டாலும் அல்லாஹ்வின் அருளால் நமது வளர்ச்சிப் பணி அசாதாரணமாக உள்ளது, அல்ஹம்துலில்லாஹ். இதற்குக் காரணம் நம்முடைய மைய நோக்கமே மறுமை மட்டும் என்பது தான்.
இட ஒதுக்கீடு என்ற சமுதாய நோக்கத்திற்காகத் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளித்து வந்தோம். அதையும் தற்போது அற்று, அறுத்து எறிந்து விட்டோம். மறுமையை மட்டும் உயிர் மூச்சாக ஆக்கிக் கொண்டோம். கொள்கை என்ற விளக்குடன் இலக்கை நோக்கிப் பயணம் செய்வோம்.
இந்தப் பயணத்தின் போது நமது தலைமுறையினரையும் அழைத்துச் செல்வதற்கு, காலை, மாலை நேர மதரஸாக்களில் கவனம் செலுத்துவோம். இதுதவிர மற்ற நேரங்களில் குறிப்பாக மக்ரிப், இஷா நேரங்களில் வாலிபர்கள் மற்றும் முதியவர்களுக்கான மதரஸாக்களை நடத்துவோம். இந்த மதரஸாக்கள் தான் கொள்கை வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்.
நம்மை மட்டும் நரகத்தில் இருந்து காப்பது நமது லட்சியமல்ல! நமது சந்ததிகளையும் சேர்த்து நரகத்திலிருந்து காப்பதே நமது லட்சியமாகும்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறுசெய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.
(அல்குர்ஆன் 66:6)
இந்த வசனத்தின் ஆணைப்படி, நம்மையும் நமது சந்ததிகளையும் நரகத்திலிருந்து காப்போமாக!


http://www.onlinepj.com/egathuvam/2015-ega/-2015-/#.VSMtQEeUeSo

Sunday, April 05, 2015

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 27.03.2015 (வீடியோ)


நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தல்