Tuesday, December 30, 2014

மன அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு அதிரை ஜும்மா

மன அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு
உரை : சகோ அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி

19/12/14

Saturday, December 27, 2014

அமீரகம் துபாய் மண்டல TNTJ அதிரை கிளையினர் நடத்திய மாதாந்திர ஆலோசனைக்கூட்டம் !




இன்று 26/12/2014 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் டேரா துபையில் உள்ள JT மர்க்கஜில் துபாய் மண்டல அதிரை TNTJ கிளையின் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துபாய் மண்டல அதிரை TNTJ கிளையின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் துபாய் மண்டல அதிரை TNTJ கிளையின் பொறுப்பாளர்கள் உறுப்பினர்களுடனும், ஆதரவாளர்களுடனும்   நல்லபல பயன்தரக்கூடிய  திட்டங்கள் யாவும் கலந்து ஆலோசிக்கப்பட்டன.

கூட்டத்தில் பேசப்பட்டு ஆலோசிக்கப்பட்ட திட்டங்கள்: 
-----------------------------------------------------------------------------

1, 2015 கல்வியாண்டில்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரால்  நமதூரில் துவங்கயிருக்கும் இஸ்லாமிய பெண்கள் மதரஸா கல்லூரி  பற்றி அது சம்மந்தமாக பல ஆலோசனைகள் கலந்துரையாடப்பட்டன.

2, அதிரையில் TNTJ சார்பாக இஸ்லாமிய  நூலகம் அமைப்பது குறித்து பேசப்பட்டன.

3, நடுத்தெருவில் உள்ள ஆயிஷா மகளிர் அரங்கத்தில் வாரம் தோறும்  வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரால் நடத்தும் மார்க்க சொற்ப்பொழிவு பயானை மேலும் விரிவுபடுத்துவது  குறித்தும்  அனைவரிடத்திலும் கலந்து ஆலோசிக்கப் பட்டன.
 
 

.


Sunday, December 21, 2014

அதிரை TNTJ கிளை - அபுதாபி கூட்டமைப்பின் மாதாந்திர ஆலோசனைக்கூட்டம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அல்லாஹ்வின் பேரருளால், கடந்த 05-12-2014 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் இரவு 6.40 மணியளவில் அபுதாபி TNTJ சிட்டி மர்கஸில் சகோ. முகமத் அஸ்லம் தலைமையில் நடைப்பெற்றது.  

அதிரை அபுதாபி TNTJ கூட்டமைப்பின் கடந்த மஷூராவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் செயல்பாடுகளைப் பற்றி அறிமுகம் செய்யப்பட்டது,   அதில், 520/- அமீரக திர்ஹம்ஸ் ஜகாத் வசூலிக்கப்பட்டு தலைமை நடத்தும் முதியோர் இல்லத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டது.  

மேலும், பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.  கலந்துகொண்ட சகோதரர்கள் நம்மூரில் தஃவா வளர்ச்சிகளுக்கான நல்ல ஆலோசனைகளை வழங்கினார்கள்.

 இறுதியில், துஆவுடன் அமர்வு நிறைவுபெற்றது.


ஜசாக்கல்லாஹ்..

இலியாஸ்.

Friday, December 19, 2014

மதுரை கோரிப்பாளையம் மஸ்ஜிதுல் சலாம் பள்ளிக்கு இடம் வாங்க வாரி வழங்குவீர்(வீடியோ)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மதுரை கோரிப்பாளையம் மஸ்ஜிதுல் சலாம் பள்ளிக்கு இடம் வாங்குவதர்காக அதிரை மக்களிடம் நன்கொடை நாடி  வந்துள்ளார்கள் அல்லாஹ்வின் ஆலயத்திற்க்கு வாரி வழங்குவீர்...

நன்கொடை வழங்க விரும்புபவர்கள் அதிரை TNTJ கிளையை அனுகவும்







Wednesday, December 17, 2014

இந்திய ஃபேமிலி இஸ்லாத்துக்கு வந்தால்.......... கேள்வி கேட்குது பாரு இலங்கையிலிருந்து வந்து

ஒரு இஸ்லாம் அல்லாத குடும்பம் பத்து வருடமாக ஒரு பிள்ளையை வளர்த்து பின் இஸ்லாத்துக்கு வந்தால் பிள்ளையை விடணுமா இஸ்லாத்தை விடணுமா? --அர்ஹம் ஸைனப் பின்த் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: உம்மு சலமா (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "விரைவில் பருவ வயதை அடையவிருக்கும் அந்தச் சிறுவன் உங்களுடைய வீட்டிற்குள் வருகிறானே! ஆனால், அவன் என் வீட்டிற்குள் வருவதை நான் விரும்பமாட்டேன்" என்று கூறினார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இதற்கான) முன்மாதிரி உங்களுக்குக் கிடைக்க வில்லையா?" என்று கேட்டுவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: அபூஹுதைஃபாவின் மனைவி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! சாலிம் என் வீட்டிற்குள் வருகிறார்; அவர் பருவ வயதையடைந்த மனிதர். இதனால் (அவர் என்னைத் திரையின்றி பார்க்க நேரிடும் என்பதால் என் கணவர்) அபூஹுதைஃபாவின் மனத்தில் அதிருப்தி நிலவுகிறது" என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ சாலிமுக்குப் பால் கொடுத்துவிடு. (அதனால் செவிலித் தாய் - மகன் உறவு ஏற்பட்டு) அவர் உனது வீட்டிற்குள் வரலாமே!" என்று கூறினார்கள். (முஸ்லிம் 2881 ) விதிவிலக்கு என்று சொல்லாத ஒன்றை முன்மாதிரி என்று ஆயிஷா( ரலி ) அவர்கள் சொன்னதாக வரும் ஹதீஸை இவர்கள் ஏற்காமல் பால்குடி சட்டம் சாலிம் (ரலி) அவர்களுக்கு மட்டுமேயான விதிவிலக்கு என்று சொல்வார்களாம். விதிவிலக்கு என்று சொல்லிக்கொண்டே மாற்றுமதத்தில் இருந்து இஸ்லாம் வந்தால் இந்த ஹதீஸின்படி பால் கொடுக்கணும் என்பார்களாம். இது என்ன விதிவிலக்கா? அல்லது உங்கள் மதிவிலக்கா?? இஸ்லாத்தையும் விடாமல் பிள்ளையையும் விடாமல் இருக்க ஐடியா சொல்லிக்கொடுக்க வந்து இருக்கார் அர்ஹம் மௌலானா (சொல்லிட்டோம்...!மௌலானா என்று சொல்லனுமாம் மரியாதையை கேட்டு வாங்குறார் !!) இந்த சூழ்நிலையில் இஸ்லாம் சொல்வது என்ன? தெரியாவிட்டால் கேளுங்கள் மௌலானா நான் அபூ இஹாப் இப்னு அஜீஸ் என்பவரின் மகளை மணந்தேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து, 'நான் உக்பாவுக்கும் அவர் மணந்துள்ள பெண்ணுக்கும் (அவர்களின் குழந்தைப் பருவங்களில்) பாலூட்டியிருக்கிறேன்' என்றார். அதற்கு நான் 'நீங்கள் எனக்குப் பால் கொடுத்ததே எனக்குத் தெரியாது. மேலும் (இத்தகவலை) எனக்கு (இதற்குமுன்) நீங்கள் சொல்லவுமில்லையே' என்று கூறினேன். உடனே (மக்காவில் வாழ்ந்திருந்த நான்) மதீனாவிலிருந்த நபி(ஸல்) அவர்களை நோக்கிப் பயணமானேன். அங்கு சென்று அவர்களிடம் இந்தப் பிரச்சினை பற்றி விளக்கம் கேட்டேன். உடனே நபி(ஸல்) அவர்கள் '(நீர் அந்தப் பெண்ணுக்குச் சகோதரன் என்று) சொல்லப்பட்டுவிட்ட நிலையில் எப்படி (உறவு கொள்வீர்)?' என்று கேட்டார்கள். உடனே நான் அப்பெண்ணை விவாகரத்துச் செய்துவிட்டேன். அந்தப் பெண்ணும் வேறொரு கணவனை மணந்தார்" என உக்பா இப்னு அல்ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். (புஹாரி 88) (எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் 33:5) வளர்ப்பு பிள்ளையை தன் பிள்ளை என்று சொல்லாமல் பிள்ளையை விட்டுடனும்ங்கோ.... மௌலானோவ்...!!!

Tuesday, December 16, 2014

Saturday, December 06, 2014

அதிரையில் நடைபெற்ற விவாதம் TNTJ VS ADT



அதிரையில் நடைபெற்ற விவாதம் பாகம் 2 from Adiraitntj on Vimeo.


  அதிரையில் நடைபெற்ற விவாதம் பாகம் 3 from Adiraitntj on Vimeo.



 அதிரையில் நடைபெற்ற விவாதம் பாகம் 4 from Adiraitntj on Vimeo.




அதிரையில் நடைபெற்ற விவாதம் பாகம் 5 from Adiraitntj on Vimeo.




அதிரையில் நடைபெற்ற விவாதம் பாகம்6



அதிரையில் நடைபெற்ற விவாதம் பாகம் 7


அதிரையில் நடைபெற்ற விவாதம் பாகம் 8


TNTJ VS ADT 9 from mi.abduljabbar on Vimeo.




 
அதிரையில் நடைபெற்ற விவாதம் பாகம்10


TNTJ VS ADT 11 from Jahir on Vimeo.


TNTJ VS ADT 12 from Jahir on Vimeo.



TNTJ VS ADT 13 from Jahir on Vimeo.



அதிரையில் நடைபெற்ற விவாதம் பாகம்14



அதிரையில் நடைபெற்ற விவாதம் பாகம்15


TNTJ VS ADT 16 from Jahir on Vimeo.





அதிரையில் நடைபெற்ற விவாதம் பாகம்17





அதிரையில் நடைபெற்ற விவாதம் பாகம்18



அதிரையில் நடைபெற்ற விவாதம் பாகம்19



அதிரையில் நடைபெற்ற விவாதம் பாகம் 20

TNTJ VS ADT 21 from mi.abduljabbar on Vimeo.





அதிரையில் நடைபெற்ற விவாதம் பாகம் 22






TNTJ VS ADT 23 from Jahir on Vimeo.




TNTJ VS ADT 24 from Adiraitntj on Vimeo.








Tuesday, December 02, 2014

Monday, December 01, 2014

அதிரை நகைக்கடையில் கொள்ளை சம்பவம் தடுக்கப்பட்டது

அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் பேபி ஜுவல்லரி என்ற பெயரில் பல ஆண்டுகளாக ஒரு நகைகடை உள்ளது இந்த கடையில் உரிமையாளர் வழக்கம் போல் இன்றும் காலை 10.30 மணிக்கு கடையை திறக்கும் போது தன்னிடம் உள்ள நகை மற்றும் கொலுசுகளை ஒரு பையில் எடுத்துவந்துள்ளார் இதை நோட்டமிட்ட முகமுடி அணிந்த இருவர் பைக்கில் கடையில் அருகில் பைக்கை நிறுத்தி அதில் ஒருவர் நகை பையை தூக்குவதற்கு முயற்சித்தபோது உரிமையாளர் சேகரின் சத்தத்தை கேட்டு பக்கத்தில் உள்ள பத்திரக்கடை உரிமையாளர் மீரா முகைதீன் (தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை பொருளாராக உள்ளார்) கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது ஒருவன் பைக்கை எடுத்துக்கொண்டு நான்கு கடைகளுக்கு தள்ளி பைக்கை தயாராக வைத்துள்ளான் மற்றொருவனை மீரா முகைதீன் அடித்து கீழலே தள்ளிவிட்டு அவனை பிடிக்க பாய்ந்தபோது கொள்ளையன் மறைந்து வைத்திருந்த அறுவாளை எடுத்து மீரா முகைதீனை நோக்கி வெட்டுவதற்கு முயற்சித்தபோது இதை சற்றும் எதிர்பார்க்காத மீரா முகைதீன் நிலைகுலைந்து தடுமாறி கீழே விழுந்தவுடன் அல்லாஹ்வின் உதவியால் எந்த காயமும் ஏற்படவில்லை கொள்ளையன் இதை சாதகமான பயன்படுத்திக்கொண்டு தயாராக இருந்த பைக்கில் ஏறி தப்பிவிட்டான் இதில் கொள்ளையனிடம் இருந்து நகையை காப்பாற்றியதற்கு கடை உரிமையாளர் சேகர் மீரா முகைதீனை பாராட்டி நன்றி தெரிவித்துக்கொண்டார்