Tuesday, October 22, 2013

நபியை படைக்காவிட்டால் உலகமே இல்லையா?


தவ்ஹீத் போர்வையில் இருக்கும் சிலர் சமீபத்தில் நடத்திய மத நல்லிணக்க நிகழ்ச்சியில் 'நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் படைக்காவிட்டால் இந்த உலகையே படைத்து இருக்க மாட்டான் என்ற இட்டுக்கட்ட பட்ட செய்தியை ஹதீஸ் என்ற பெயரில் எடுத்துக் கூறினார்கள்'. இது தவறு என்று பலருக்கு தெரிந்து இருந்தும், இதை தவறு என்று சொல்லவில்லை. இது பற்றி மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கீழ்காணும் விளக்கம் வெளியிடப்படுகிறது.

நபியை படைக்காவிட்டால் உலகமே இல்லையா?

இந்த நபியை படைக்காவிட்டால் உலகையே படைத்திருக்கமாட்டேன் என்று முஹம்மது நபி(ஸல்) அவர்களைப்பற்றி அல்லாஹ் சொல்வதாக பயான் கேட்டேன். இதற்கு ஆதாரம் உள்ளதா?

முஹம்மதே நீ மட்டும் இல்லாவிட்டால் இந்த உலகத்தை நான் படைத்திருக்கமாட்டேன் என்று அல்லாஹ் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஒரு செய்தி இப்னு அசாகீர் என்ற நூலில் இடம்பெற்றிருக்கின்றது. 

اللآلي المصنوعة - (1 / 249) 

وفضل شهر رمضان والشفاعة كلها لك حتى ظل عرشي في القيامة على رأسك ممدود وتاج الملك على رأسك معقود ولقد قرنت اسمك مع اسمي فلا أذكر في موضع حتى تذكر معي ولقد خلقت الدنيا وأهلها لأعرفهم كرامتك علي ومنزلتك عندي ولولاك ما خلقت الدنيا موضوع أبو السكين وإبراهيم ويحيى البصري ضعفاء متروكون وقال الفلاس يحيى كذاب يحدث بالموضوعات 

الموضوعات لابن الجوزي - (1 / 290) 

ويحيى البصري متروكان. قال أحمد بن حنبل: حرقنا حديث يحيى البصري. وقال الفلاس: كان كذابا يحدث أحاديث موضوعة. وقال الدارقطني: متروك. 

இதன் அறிவிப்பாளர் தொடரில் பலவீனமானவர்களும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களும் இடம்பெற்றிருக்கின்றனர். இதில் இடம்பெறும் அறிவிப்பாளர்களான இப்ராஹீம் அபுஸ்ஸிக்கீன் மற்றும் யஹ்யா ஆகியோர் பலவீனமானவர்கள் என்று இமாம் தஹபீ இமாம் தாரகுத்னீ இமாம் இப்னுல் ஜவ்ஸீ மற்றும் இமாம் அஹ்மது ஆகியோர் குறைகூறியுள்ளனர். 

تلخيص كتاب الموضوعات للذهبي - (1 / 37) 

195-حديث محمد بن عيسى بن حبان المدائني ثنا محمد بن الصباح ثنا علي بن الحسن عن إبراهيم بن اليسع عن العباس الضرير عن الخليل بن مرة عن يحيى البصري عن زادان عن سلمان قال أتى أعرابي جاف بدوي فذكر خبراً طويلاً سمجاً وآخره يا محمد لولاك ما خلقت الدنيا 

قال ابن الجوزي موضوع بلا شك ويحيى البصري تالف كذاب والسند ظلمة 

இந்த செய்தி சந்தேகத்திற்கு இடமின்றி இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்றும் இதன் அறிவிப்பாளர் யஹ்யா என்பவர் பெரும் பொய்யர் என்றும் இமாம் இப்னுல் ஜவ்ஸீ தெரிவித்துள்ளார். மேலும் இதே கருத்தில் திர்மிதீ மற்றும் ஹாகிம் ஆகிய நூல்களிலும் ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆதம் அலை அவர்கள் படைக்கப்பட்டவுடன் சொர்க்கத்தைப் பார்த்தார்களாம். அதன் நுழைவாயிலில் 'லாயிலாஹ இல்லல்லாஹூ' என்பதுடன் 'முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' என்றும் எழுதப்பட்டிருந்ததாம். ''இறைவா உன் பெயருடன் முஹம்மது என்ற பெயரைச் சேர்த்து எழுதியுள்ளாயே அவர் யார்'' என்று ஆதம் (அலை) கேட்டர்களாம். அதற்கு இறைவன் ''அவர் உமது வழித்தோன்றலாக வரவிருப்பவர். அவர் இல்லாவிட்டால் உன்னையே படைத்திருக்க மாட்டேன்'' என்று கூறினானாம். இதன் பின்னர் ஆதம் (அலை) இறைவனின் கட்டளையை மீறிய போது சொர்க்கத்தில் பார்த்தது நினைவுக்கு வந்ததாம். ''இறைவா! அந்த முஹம்மதின் பொருட்டால் என்னை மன்னிப்பாயாக'' என்று அவர்கள் பிரார்த்தனை செய்ததால் உடனே அவர்களை அல்லாஹ் மன்னித்தானாம். 

இச்செய்தி திர்மிதீ, ஹாகிம் மற்றும் சில நூல்களிலும் பதிவு செய்யப்பட்டடுள்ளது. இச்செய்தி அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் வழியாகவே அறிவிக்கப்படுகிறது. இவர் இட்டுக் கட்டிக் கூறுவதில் பிரசித்தி பெற்றவர். எனவே இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டது என அறிஞர்கள் கூறியுள்ளனர். 

மேலும் இந்த செய்தியின் கருத்து குர்ஆனுடன் முரண்படுகிறது. அல்லாஹ் திருக்குர்ஆனில் இந்த உலகத்தை படைத்ததற்கான காரணத்தை பற்றி கூறும் போது அவனை வணங்குவதற்காகத் தான் இந்த உலகத்தை படைத்ததாக குறிப்பிடுகிறான். 

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِي(56)51 

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. 

அல்குர்ஆன் (51:56) 

இறைவன் தன்னை வணங்குவதற்காகத்தான் மனிதனையும், ஜின்களையும் படைத்திருப்பதாக கூறிக்காட்டும் போது, முஹம்மது நபி(ஸல்) அவர்களை படைக்காவிட்டால் இந்த உலகத்தையே படைத்திருக்கமாட்டேன் என்று கூறுவதாக சொல்லுவது இந்த வசனத்தோடு நேரடியாக மோதுகின்றது. எனவே இந்த செய்தி இட்டுக்கட்டப்பட்டது என்பது இதன் மூலம் மேலும் உறுதியாகிறது.

எல்லாரையும் மேடை ஏற்றுவது எப்படி தவறாகும்? என்று கேட்டவர்கள் இப்போதாவது அது தவறு என்று புரிந்து கொண்டால் போதுமானது. 

4 கருத்துரைகள் :

அஸ்ஸலாமு அழைக்கும்
அன்பிற்கினிய சகோதர சொந்தங்களே தயவுசெய்து வாதங்களை கிளப்பக்கூடிய வரிகளை சுட்டிக்காட்டி குறை கூறாமல் இதில் பேணப்பட்ட மத நல்லிணக்க செயல்கள் வெற்றிகரமாக இறைவன் துணைக்கொண்டு நல்லமுறையில் நடந்தேறியது மிகவும் மகிழ்ச்சிக்குரியது அனைத்து சமுதாய சொந்தக்கலகங்களும் ஆதரவு அளித்ததுபோல் நாமும் அதரவு நலுகுவது நம் சமுதாயத்திற்கு மாபெரும் வெற்றியாக அமையட்டுமே
ஒரு வேண்டுகோள்: தயவுசெய்து அவ்விழாவில் ஏதேனும் இஸ்லாத்தில் கூறாத ஹதீஸ்களை தவறாக கூறி இருந்தால் அதை ஒரு வேண்டுகோளாக அழகியமுரையில் எடுத்துகூறுவோம் நம்மிடைய வாதப்பிரயோகம் வேண்டாம் இன்ஷால்லாஹ் இனிவரும் வருடங்களில் நாமும் - இல்லை இல்லை - அவர்களை நம்முடன் இணைத்து ஒரு மாபெரும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் உதவி செய்து இதன்மூலம் நம் அனைவரையும் ஒன்றினைப்பானாக ஆமீன்

அஸ்ஸலாமு அலைக்கும்.

இஸ்லாத்தில் இல்லாத தவறான இட்டுக்கட்டப்பட்ட செய்தியை சொல்லி, வணக்கம் சொல்லி, இஸ்லாத்திற்கு சம்மந்தமில்லாத பல கற்பனை கதைகளை இஸ்லாம் என்று இஸ்லாத்தை அறியாத மாற்று மதத்தவர்களால் சொல்ல விட்டு இந்த நிகழ்ச்சி நடத்துவதால் என்ன பயன்?

இஸ்லாமிய கொள்கைகளை தப்பும் தவறுமாக மாற்று மதத்தவர்களை வைத்து பேச விடுவதால், வந்த மக்களை குழப்பியதை தவிர வேறு ஒன்றும் பலன் இல்லை.

தம் இயக்கத்தை தவிர மற்றவர்களை மேடை ஏற்றக்கூடாது என்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையை விமர்சனம் செய்தவர்கள், இந்த நிகழ்ச்சி மூலம் அம்பலப்பட்டு போனார்கள் என்பதே உண்மை.

இஸ்லாத்தை சரியாக அறியாதவர்கள் மேற்காணும் செய்தியை தவறாக விளங்கி விடக்கூடாது என்பதற்கு விளக்கமாக தான் இந்த ஆக்கம் வெளியிடப்படுகிறது.

தவறை யார் செய்தாலும் சூட்டிக்காட்ட வேண்டும், அப்போது தான் தவறு செய்பவர்கள் திருந்தும் வாய்ப்பு கிடைக்கும். அந்த அடிப்படையில் தான் ஒரு சிறிய விளக்கத்துடன் வெளியிடப்பட்டது.

தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக மாற்றுமதத்தினருக்காக 'இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சி பல வருடங்களாக தமிழகத்தில் நடைபெறுகிறது. அங்கு மற்ற மதத்தினரை பேச அனுமதிப்பது இல்லை இஸ்லாம் குறித்த அவர்களின் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறும் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்காணோர் இஸ்லாத்தை விளங்கி வருகிறார்கள்


நீங்கள் குறிப்பிடும் நிகழ்ச்சி இஸ்லாத்தை மற்றவர்களுக்கு சொல்ல நடத்தப்பட்டதா? அல்லது மத நல்லிணக்கம் என்ற பெயரில் எல்லாம் சம்மதம் என்பதற்காக நடத்தப்பட்தா? என்ற கேள்வியை உங்களின் கருத்து உருவாக்குகிறது

அஸ்ஸலாமு அலைக்கும்.

இஸ்லாத்தில் இல்லாத தவறான இட்டுக்கட்டப்பட்ட செய்தியை சொல்லி, வணக்கம் சொல்லி, இஸ்லாத்திற்கு சம்மந்தமில்லாத பல கற்பனை கதைகளை இஸ்லாம் என்று இஸ்லாத்தை அறியாத மாற்று மதத்தவர்களால் சொல்ல விட்டு இந்த நிகழ்ச்சி நடத்துவதால் என்ன பயன்?

இஸ்லாமிய கொள்கைகளை தப்பும் தவறுமாக மாற்று மதத்தவர்களை வைத்து பேச விடுவதால், வந்த மக்களை குழப்பியதை தவிர வேறு ஒன்றும் பலன் இல்லை.

தம் இயக்கத்தை தவிர மற்றவர்களை மேடை ஏற்றக்கூடாது என்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையை விமர்சனம் செய்தவர்கள், இந்த நிகழ்ச்சி மூலம் அம்பலப்பட்டு போனார்கள் என்பதே உண்மை.

இஸ்லாத்தை சரியாக அறியாதவர்கள் மேற்காணும் செய்தியை தவறாக விளங்கி விடக்கூடாது என்பதற்கு விளக்கமாக தான் இந்த ஆக்கம் வெளியிடப்படுகிறது.

தவறை யார் செய்தாலும் சூட்டிக்காட்ட வேண்டும், அப்போது தான் தவறு செய்பவர்கள் திருந்தும் வாய்ப்பு கிடைக்கும். அந்த அடிப்படையில் தான் ஒரு சிறிய விளக்கத்துடன் வெளியிடப்பட்டது.

தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக மாற்றுமதத்தினருக்காக 'இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சி பல வருடங்களாக தமிழகத்தில் நடைபெறுகிறது. அங்கு மற்ற மதத்தினரை பேச அனுமதிப்பது இல்லை இஸ்லாம் குறித்த அவர்களின் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறும் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்காணோர் இஸ்லாத்தை விளங்கி வருகிறார்கள்


நீங்கள் குறிப்பிடும் நிகழ்ச்சி இஸ்லாத்தை மற்றவர்களுக்கு சொல்ல நடத்தப்பட்டதா? அல்லது மத நல்லிணக்கம் என்ற பெயரில் எல்லாம் சம்மதம் என்பதற்காக நடத்தப்பட்தா? என்ற கேள்வியை உங்களின் கருத்து உருவாக்குகிறது

தர்ஹா இல்லாமல் நடைபெற்ற கந்தூரி விழா
மந்தி சாப்பாடு வீன்விரையம் என்று கூறியவர்கள் லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்து இஸ்லாத்தில் இல்லாததையும் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களையும் மாற்று மத நன்பர்களுக்கு செல்லியுள்ளார்கள்

பொருநாள் சந்திப்பின் நோக்கம் என்ன? மாற்றுமத நன்பர்களையும் முஸ்லிம்களையும் ஓரே இடத்தில் சந்திக்கவைப்பதுதான் பொருநாள் சந்திப்பின் நோக்கம் என்றால் அதற்கு ஏன் இவ்வளவு செலவு செய்யவேண்டும்

நமதூரில் நடைபெறும் கந்தூரில் முஸ்லிம்களும் மாற்று மத நன்பர்களும் ஒன்று கூடுகிறார்கள், அரசியல்வாதிகளின் இல்லத்திருமணத்தில் ஒன்று கூடுகிறார்கள், ஏன் பஜாரில் ஒன்று கூடுகிறார்கள்

இங்கேல்லாம் எப்படி இஸ்லாத்தை பற்றி தவறான தகவல்கள் தரப்பட்டதோ ஆதேபோல் தான்பொருநாள் சந்திப்பிலும் சொல்லப்போனால் அதற்கு ஒருபடி மேலே இஸ்லாத்தை பற்றி தவறான தகவல்கள் சொல்லப்பட்டுள்ளது.
ஒற்றுமை குழைந்துவிடக்கூடாது என்பதற்காக தர்ஹா பற்றி கேள்விக்கு மழுப்பலான பதில் அளித்து இஸ்லாத்தில் தர்ஹா உள்ளது போல் காட்டியுள்ளனர்

இஸ்லாத்தில் இசை ஹராம் ஆனால் வந்த மாற்றுமத நன்பர்களுக்கு சினிமா சிடி கொடுத்து இஸ்லாத்தில் இசை கூடும் என்ற தகவல்கள் தரப்பட்டுள்ளது

ஒரு தரப்பினருக்கு வேண்டியவர்களை அழைத்தும் வேண்டாதவர்களை புறக்கணித்து நடத்தப்பட்டு முதலில் எங்களுக்குள் ஒன்றுமை இல்லை என்பதை வந்தவர்களுக்கு காட்டியுள்ளார்கள்

இவ்வளவு பணத்தை செலவு செய்து இஸ்லத்தை தப்பும் தவறுமாக சொன்னதுதான் மிச்சம்

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.