Friday, March 30, 2012

Wednesday, March 28, 2012

சமூக தீமைகளை கண்டிக்காத தப்லீக் உலமாக்கள் (ஆடியோ)


17.03.2012 செவ்வாய் கிழமை இரவு இஷா தொழுகைக்கு பிறகு மேலத்தெரு அல்பாக்கியாத் பள்ளிவாசல் அருகில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரா் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் 'சமூக தீமைகளை கண்டிக்காத தப்லீக் உலமாக்கள்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இதில் 50க்கு அதிகமானவர்கள் கலந்துக்கொண்டார்கள்.




தெருமனை பிரச்சாரத்தில் அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் ஆற்றிய உரை

Monday, March 26, 2012

பெண்கள் பள்ளிக்கு வரலாமா?

பெண்கள் பள்ளிக்கு வரலாமா?

Sunday, March 25, 2012

ஆடம்பர திருமணத்தில் கலந்து கொள்ளலாமா?


ஆடம்பர திருமணத்தில் கலந்து கொள்ளலாமா?


Friday, March 23, 2012

Thursday, March 22, 2012

பெண்கள் முகம் மூடுதல் அவசியமா?

ஒரு இணையத்தளத்தில் முகத்தை மூடுவது தொடர்பாக வெளியிடப் பட்ட கட்டுரைக்கு எதிராக முகத்தை மூடுவது தொடர்பான எனது கருத்தை அதாவது முகத்தை மூடுவது இஸ்லாத்திற்கு முரனானது என்றும் நபியவர்கள் முன் ஸஹாபியப் பெண்கள் முகத்தை மூடாத நிலையில் கேள்விகள் கேட்டுள்ளார்கள் என்றும் நபியவர்கள் ஒரு போதும் முகத்தை மூடுமாறு சொல்லவில்லை என்றும் கூறினேன்.

அதற்கு அவர்கள் குரான் மற்றும் ஹதீஸை மேற்கோள் காட்டி பதில் கொடுத்துள்ளனர்.

நான் பார்த்த இணையத்தளத்தில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட பதில்.

இதற்கான உங்கள் பதிலை அன்புடன் வேண்டுகிறேன்.

அஷ்ரப் துபை

Mr. Ashref Mohamed. Thank you for suggesting your thoughts. As you you said all the human has to follow the Quran and Hadhidh. I appreciate that you have some ideas of Niqab. I hope you do not have full idea on it. Any way brother There are many proof has been given here from the Quran and the Hadhidh which proven by Ulamas and Scholars. Niqab is not Fard, but it is wajib.

There are many ayat from the Quran and Sahih Hadith that prove this. We will be reading the translation and tafseer of the most authentic Mufassireen (Ullima who made tafseer) like Ibn Kathir, Al-Qurtubi and At-Tabari, who are known for there great understanding of the Quran and recognized by the whole Muslim world. And all the hadith we will be citing are Authentic Sahih hadith. Allah(SWT) says in the Quran "O Prophet! Tell your wives and your daughters and the women of the believers to draw their cloaks (veils all over their bodies (i.e. screen themselves completely except the eyes or one eye to see the way)" (Surah Al-Ahzaab – Verse #59 ) and the Ayah is explained by Aisha (Radhiallaahu Ánha) herself in this hadith from Al Bukhari "Narrated Safiya bint Shaiba: 'Aisha (Radhiallaahu Ánha) used to say: "When (the Verse): "They should draw their veils over their necks and bosoms," was revealed, (the ladies) cut their waist sheets at the edges and covered their faces with the cut pieces." [Sahih Al-Bukhari Volume 6, Book 60,Hadith # 282].

Allah (SWT) says in the most holy Quran "And Say to the believing women to lower their gaze (from looking at forbidden things), and protect their private parts (from illegal sexual acts) and not to show off their adornment except only that which is apparent (like both eyes for necessity to see the way, or outer palms of hands or one eye or dress like veil, gloves, head cover, apron), and to draw their veils all over Juyubihinna (i.e. their bodies, faces, necks and bosoms)" ( Surah An-Nur, Verses #30 and #31) ' even for this ayah Aisha (Radhiallaahu Ánha) narrated: "May Allah bestow His Mercy on the first Muhajirat. When Allah revealed, '...and draw their Khumur over their Juyubihinna...', they (i.e. the women) tore their material and covered themselves with it." [Saheeh Al-Bukhari].

Ibn Hajar Al-Asqalanee, who is known as Ameer Al-Mu'mineen in the field of Hadith, said that the phrase, "Covered themselves", in the above Hadith means that they "Covered their faces". [FathAl-Bari]. Now you have to think who would understand these ayat better than Aisha (Radhiallaahu Ánha) the MOST knowledgeable women in the matters of deen and the wife of Rasulullah(saw).

Ibn Abbas (Radhiallaahu Ánhu) is one of the most learned men from the Sahaba (Radhiallaahu Ánhumaa). Rasulullah (Sallallaahu Álayhi Wasallam) even made duwaa for him saying "O Allah, make him acquire a deep understanding of the religion of Islam and instruct him in the meaning and interpretation of things." He has been cited in Ma'riful Qur'an with reference to Surah Ahzaab on the authority of Ibn Jarir (RA) with a sahih chain of narrators, that "The Muslim women are ordered to cover

their head and faces with outer garments except for one eye." Now this is the interruption of the

Quran from a sahabi for who Rasulullah(Sallallaahu Álayhi Wasallam) made duwaa to be able to understand the

interpretation of Quran.

Imaam Qurtubi cites in his Tafseer of the Ayah on Jilbaab (Al-Ahzab 33:59), that the Jilbaab is: "a cloth which covers the entire body... Ibn 'Abbaas (Radhiallaahu Ánhu) and 'Ubaidah As-Salmaani (Radhiallaahu Ánhu) said that it is to be fully wrapped around the women's body, so that nothing appears but one eye with which she can see." [Tafseer Al-Qurtubi].

Some people make the false claim that this was only for the wives of the Prophet (Sallallaahu Álayhi Wasallam) but this has been proven wrong from the following hadith Yahya related to me from Malik from Hisham ibn Urwa that Fatima bint al-Mundhir said, "We used to veil our faces when we were in ihram in the company of Asma bint Abi Bakr as-Siddiq." [Imaam Malik's MUWATTA Book 20 Hadith # 20.5.16] This again proves that not only the wives of Rasulullah(Sallallaahu Álayhi Wasallam) wore the Niqaab and that even though in Ihram women are not supposed to wear Niqab but if men are there they still have to cover the face as it is supported by this next hadith from Aisha... Narrated Aisha, Ummul Mu'minin: (Radhiallaahu Ánha) who said, "The riders would pass us while we were with the Messenger of Allah (Sallallaahu Álayhi Wasallam). When they got close to us, we would draw our outer cloak from our heads over our faces. When they passed by, we would uncover our faces. ] Recorded by Abu Dawud Book 10, Hadith # 1829: Ahmad, Abu Dawud and Ibn Majah have all narrated it , Narrated 'Aisha. [In his work Jilbab al-Marah al-Muslimah, al-Albani states (p. 108) that it is hasan due to corroborating evidence. Also, in a narration from Asma {who was not the wife of Rasulullah(Sallallaahu Álayhi Wasallam)}, Asma also covered her face at all times in front of men.]

And from the great scholars of the past and many of the contemporary scholars of today also hold this opinion. Ibn Kathir (RA) wrote "Women must not display any part of their beauty and charms to strangers except what cannot possibly be concealed." And Imaam Ghazaali (RA) mentions in his famous book of Fiqh Ihyaal Uloom "Woman emerged (during the time of Rasulullah 'Sallallaahu Álayhi Wasallam') with NIQAABS on their Faces."

Shaikh Muhammed Salih Al-Munajjid mentioned in his fatwaa "The most correct opinion, which is supported by evidence, is that it is obligatory to cover the face, therefore young women are forbidden to uncover their faces in front of non-mahram men in order to avoid any mischief, and they should certainly do so when there is fear of fitnah (temptation)."

Jamiatul Ulama Junbi Africa sate in the book Islamic Hijab by Jamiatul Ulama P.12: that the proper opinion for the Hanafi madhab is that "A woman must be properly and thoroughly covered in a loose outer cloak which totally conceals her entire body including her face!"

Great scholars of our time also agree on this, like Shaikh AbdulAziz Bin Bazz who writes in his book Islamic Fatwas regarding Women "It is compulsory for a woman to cover her face in front of non mahram men" and Shaikh ibn Uthaimin writes in the same book on page # 289 "The Islamic hijab is for the women to cover everything that is forbidden for her to expose. That is, she covers everything that she must cover. The first of those bodily parts that she must cover is her face." Other great scholars that agree with the niqaab being wajib are Ibn Hajar Al-Asqalanee (RA), Shaikh Jamaal Zarabozo, Shaikh ibn Jibreen, Hakimul Ummah Maulana Ashraf Ali Thanvi (RA), Mufti Ebrahim Desai and many more.

There are many more hadith and many great scholars of Islam have agreed upon this but if we were to quote all of them it would take me writing a book.

And Allah(SWT) knows best.

Uthman Ibn Farooq

பதில் :

வஅலைக்குமுஸ்ஸலாம்.

மேற்கண்டவாறு உங்களுக்கு விளக்கமளித்த உஸ்மான் பின் ஃபரூக் என்பவர் பெண்கள் முகத்தை மூடுவது கட்டாயம் என்ற வாதத்தை வைக்கின்றார். இதற்கு ஆதாரமாக குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் அறிஞர்களின் கூற்றுக்களையும் சுட்டிக்காட்டுகிறார்.

இவர் சுட்டிக்காட்டும் ஆதாரங்களுக்கும் இவருடைய வாதத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மேலும் இவர் குறிப்பிட்ட சில செய்திகள் பலவீனமாக அமைந்துள்ளன.

ஒரு ஆய்வாளர் தன்னுடைய வாதங்களையும் எடுத்து வைப்பதோடு எதிர் கருத்தில் உள்ளவர்கள் ஆதாரமாகக் கருதும் விஷயங்களுக்கும் பதில் அளிப்பது அவருடைய கடமை. ஆனால் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டியதில்லை என்பதற்கு நாம் சுட்டிக்காட்டும் ஆதாரங்கள் எதற்கும் இவர் பதிலளிக்கவில்லை.

இவருடைய வாதங்களுக்கு சரியான விளக்கத்தை அறிந்து கொள்வதற்கு முன்னால் பெண்கள் முகத்தை மறைப்பது தொடர்பாக நமது நிலைபாட்டை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

பெண்கள் முகத்திரை அணிவது கட்டாயமில்லை

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் முகத்தைத் திறந்து இருந்ததற்கு பல சான்றுகள் உள்ளது.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன் அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழகை நடத்தினார்கள் பாங்கோ இகாமத்தோ இல்லை. பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்து கொண்டு இறையச்சத்தைக் கடைப்பிடிக்குமாறும் இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் கட்டுப்படுமாறும் வலியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வழங்கினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு பெண்கள் பகுதிக்கு சென்று அவர்களுக்கும் நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள். மேலும் பெண்களை நோக்கி தர்மம் செய்யுங்கள் நீங்கள் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவிர்கள் என்று கூறினார்கள். அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மனி எழுந்து ஏன் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் அதிகமாக குறை கூறுகின்றீர்கள். நன்றி மறந்து கணவனை நிராகரிக்கின்றீர்கள் என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள் தம் காதனிகள் மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்கனை பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போட்டார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (1612)

கண்ணங்கள் கருத்த பெண்மனி என்று ஜாபிர் (ரலி) அவர்கள் குறிப்பிடுவதாக இருந்தால் அப்பெண்ணின் முகம் திறந்திருந்தாலே இது சாத்தியம்.

பெண்கள் முகத்தை மறைப்பது கட்டாயமாக இருந்திருந்தால் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னிலையில் நபித்தோழியர்கள் முகத்தைத் திறந்திருக்க மாட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் இதைக் கண்டிக்காமல் இருக்க மாட்டார்கள். பெண்கள் முகத்தை மறைக்க வேண்டியதில்லை என்பதாலே இதை நபி (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை.

('விடைபெறும்' ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகானவராயிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அüப்பதற்காகத் தமது வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) 'கஸ்அம்' குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபி (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்த போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்லின் முகவாயைத் தமது கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்க விடாமல் அவரது முகத்தைத் திருப்பி விட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)  புகாரி (6228)

அழகான பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார் எனக் கூறுவதாக இருந்தால் அப்பெண்ணின் முகம் திறந்திருந்தாலே இது சாத்தியம். நபியவர்களிடம் வந்த பெண்ணை ஃபள்ல் (ரலி) அவர்கள் கூர்ந்து பார்த்தார்கள் என்றும் இந்த ஹதீஸ் கூறுகின்றது.

இந்நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் ஃபள்ல் (ரலி) அவர்களின் முகத்தைத் திருப்பி விடுகிறார்களே தவிர முகத்தை மூடிக்கொள்ளுமாறு அப்பெண்ணுக்கு நபியவர்கள் உத்தரவு போடவில்லை. எனவே பெண்கள் முகத்தை மூட வேண்டியதில்லை என்பதை இந்தச் செய்தி தெள்ளத் தெளிவாக கூறுகின்றது.


3991حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ عَنْ يَحْيَى عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ذُكِرَ لَهُ أَنَّ سَعِيدَ بْنَ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ وَكَانَ بَدْرِيًّا مَرِضَ فِي يَوْمِ جُمُعَةٍ فَرَكِبَ إِلَيْهِ بَعْدَ أَنْ تَعَالَى النَّهَارُ وَاقْتَرَبَتْ الْجُمُعَةُ وَتَرَكَ الْجُمُعَةَ وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ أَنَّ أَبَاهُ كَتَبَ إِلَى عُمَرَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَرْقَمِ الزُّهْرِيِّ يَأْمُرُهُ أَنْ يَدْخُلَ عَلَى سُبَيْعَةَ بِنْتِ الْحَارِثِ الْأَسْلَمِيَّةِ فَيَسْأَلَهَا عَنْ حَدِيثِهَا وَعَنْ مَا قَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ اسْتَفْتَتْهُ فَكَتَبَ عُمَرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْأَرْقَمِ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ يُخْبِرُهُ أَنَّ سُبَيْعَةَ بِنْتَ الْحَارِثِ أَخْبَرَتْهُ أَنَّهَا كَانَتْ تَحْتَ سَعْدِ بْنِ خَوْلَةَ وَهُوَ مِنْ بَنِي عَامِرِ بْنِ لُؤَيٍّ وَكَانَ مِمَّنْ شَهِدَ بَدْرًا فَتُوُفِّيَ عَنْهَا فِي حَجَّةِ الْوَدَاعِ وَهِيَ حَامِلٌ فَلَمْ تَنْشَبْ أَنْ وَضَعَتْ حَمْلَهَا بَعْدَ وَفَاتِهِ فَلَمَّا تَعَلَّتْ مِنْ نِفَاسِهَا تَجَمَّلَتْ لِلْخُطَّابِ فَدَخَلَ عَلَيْهَا أَبُو السَّنَابِلِ بْنُ بَعْكَكٍ رَجُلٌ مِنْ بَنِي عَبْدِ الدَّارِ فَقَالَ لَهَا مَا لِي أَرَاكِ تَجَمَّلْتِ لِلْخُطَّابِ تُرَجِّينَ النِّكَاحَ فَإِنَّكِ وَاللَّهِ مَا أَنْتِ بِنَاكِحٍ حَتَّى تَمُرَّ عَلَيْكِ أَرْبَعَةُ أَشْهُرٍ وَعَشْرٌ قَالَتْ سُبَيْعَةُ فَلَمَّا قَالَ لِي ذَلِكَ جَمَعْتُ عَلَيَّ ثِيَابِي حِينَ أَمْسَيْتُ وَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَأَفْتَانِي بِأَنِّي قَدْ حَلَلْتُ حِينَ وَضَعْتُ حَمْلِي وَأَمَرَنِي بِالتَّزَوُّجِ إِنْ بَدَا لِي رواه البخاري

உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

என் தந்தை அப்துல்லாஹ் பின் உத்பா அவர்கள், உமர் பின் அப்தில்லாஹ் பின் அர்கம் அஸ்ஸுஹ்ரீ அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். அதில் சுபைஆ பின்த் ஹாரிஸ் அல் அஸ்லமிய்யா (ரலி) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சுபைஆ மார்க்கத் தீர்ப்பு கேட்டது பற்றியும், அதற்கு அவர்கள் அளித்த பதில் பற்றியும் கேட்டு எழுதுமாறு பணித்திருந்தார்கள். (அதன்படி, சுபைஆ ரலி அவர்கüடம் சென்று) உமர் பின் அப்தில்லாஹ் அவர்கள் (கேட்டறிந்து என் தந்தை) அப்துல்லாஹ் பின் உத்பா அவர்களுக்கு(ப் பின்வருமாறு பதில்) செய்தி அனுப்பினார்கள்:

சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் அவர்கள் 'பனூ ஆமிர் பின் லுஅய்' குலத்தைச் சேர்ந்த சஅத் பின் கவ்லா (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார். சஅத் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்டவராவார். 'விடைபெறும் ஹஜ்ஜின் போது சஅத் (ரலி) அவர்கள் இறந்து விட்டார்கள். அப்போது 'சுபைஆ' கர்ப்பமுற்றிருந்தார். சஅத் அவர்கள் இறந்து நீண்ட நாட்கள் ஆகியிருக்கவில்லை; (அதற்குள்) சுபைஆ பிரசவித்து விட்டார். (பிரசவத்திற்குப் பின் ஏற்படும்) உதிரப்போக்கிலிருந்து சுபைஆ அவர்கள் சுத்தமான போது, பெண் பேச வருபவர்களுக்காகத் தன்னை அலங்கரித்துக் கொண்டார். அப்போது, பனூ அப்தித் தார் குலத்தில் ஒருவரான 'அபுஸ் ஸனாபில் பின் பஅக்கக்' (ரலி) அவர்கள் சுபைஆ அவர்களிடம் வந்து, ''திருமணம் புரியும் ஆசையில் பெண் பேச வருபவர்களுக்காக உங்களை நீங்கள் அலங்கரித்திருப்பதை நான் காண்கின்றேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (கணவன் இறந்த ஒரு பெண் அவனது இறப்புக்குப் பின் இருக்க வேண்டிய 'இத்தா' காலமாகிய) நான்கு மாதம் பத்து நாட்கள் முடியும் வரையில் நீங்கள் (மறு)மணம் புரிந்து கொள்ள முடியாது'' என்று கூறினார்கள். சுபைஆ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இதை அபுஸ்ஸனாபில் என்னிடம் சொன்னதையடுத்து நான் மாலை நேரத்தில் எனது உடையை உடுத்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்களிடத்தில் இது பற்றிக் கேட்டேன். அதற்கு, 'நீ பிரசவித்து விட்ட போதே (மணம் புரிந்து கொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகிவிட்டாய். நீ விரும்பினால் (மறு)மணம் செய்துகொள்' என்று நபி (ஸல்) அவர்கள் மார்க்கத் தீர்ப்பு வழங்கினார்கள்.
புகாரி (3991)

இந்தச் செய்தியில் சுபைஆ (ரலி) அவர்கள் அலங்காரம் செய்திருந்தார் என்று பொதுவாகக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் எந்த அலங்காரம் செய்திருந்தார்கள் என்பதை அஹ்மதில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் தெளிவுபடுத்துகின்றன.

26166 26167 ஆகிய எண்களில் அஹ்மதில் பதிவாகியுள்ள அறிவிப்புகளில் சுபைஆ (ரலி) அவர்கள் கண்ணுக்கு சுர்மா இட்டிருந்ததாகவும் கையில் மருதாணி பூசியிருந்ததாகவும் இதை அந்நியரான அபுஸ்ஸனாபில் பார்த்துவிட்டு நபியவர்களிடம் கூறியதாவும் சொல்லப்பட்டுள்ளது. சுபைஆ (ரலி) அவர்கள் செய்ததை நபியவர்கள் கண்டிக்கவில்லை.

எனவே பெண் தனது முகத்தையும் தனது முன் கையையும் வெளிப்படுத்திக் கொள்ள இந்தச் செய்தி தெளிவான ஆதாரமாக அமைந்துள்ளது.

முகத்தை மறைப்பதில் தவறில்லை

பெண்கள் முகத்தை மறைப்பது கட்டாயம் இல்லை என்றே நாம் கூறுகின்றோம். அதே நேரத்தில் ஒரு பெண் தனது சுயவிருப்பத்தின் அடிப்படையில் தனது முகத்தை மறைத்துக் கொண்டால் அது மார்க்க அடிப்படையில் தவறல்ல.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சில பெண்கள் தங்கள் முகங்களை மறைத்துக் கொள்ளும் வழக்கமும் இருந்துள்ளது. அதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்யவில்லை.

இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரையை அணியக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி (1838)

முகத்திரை அணியும் வழக்கம் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்ததால் இஹ்ராமின் போது மாத்திரம் அதை அணியக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே இஹ்ராம் அணியாத மற்ற பெண்கள் முகத்திரை அணிவதற்குத் தடை இல்லை என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

பெண்கள் முகத்தை மறைப்பது கட்டாயமில்லை என்பதும் இந்த ஹதீஸிலிருந்து விளங்குகிறது. ஏனென்றால் பெண்களின் முகம் மறைக்கப்பட வேண்டிய பகுதியாக இருந்தால் ஹஜ்ஜின் போது அதை வெளிப்படுத்த வேண்டும் என்று நபியவர்கள் உத்தரவிட மாட்டார்கள்.

பெண்கள் முகத்தை மறைப்பது மார்க்க அடிப்படையில் தவறில்லை என்றாலும் முகத்தை மறைப்பதால் தற்காலத்தில் ஏற்படும் தீமைகளையும் நமது கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக் குறைவே! பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்புப் பாதிக்கப்படும் என்பது தான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இது தான் காரணம்.

ஒரு பெண் முகத்தையும் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் எனும் போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். மற்றவர்கள் பார்த்து ரசிப்பார்கள் என்பதற்காக முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.

பெண்கள் தாம் என்று இல்லை. ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுய ரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லாவிட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்ட வேண்டும்.

தவறு செய்ய நினைப்பவர்கள் இந்த முகத்திரையைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு துணிச்சலாகச் செயல்படுகிறார்கள். எனவே தான் முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடவில்லை.

மார்க்கத்தில் முகத்தை மறைக்காமல் இருப்பதற்கு அனுமதி உள்ளது போல் முகத்தை மறைத்துக் கொள்ளவும் அனுமதி உள்ளது. அனுமதிக்கப்பட்ட காரியங்களின் மூலம் கேடுகள் ஏற்படுமானால் அந்தக் கேடுகளின் காரணமாக அதைத் தவிர்ப்பதும் மார்க்கத்தின் ஒரு அம்சமாகும். அதிகக் கொழுப்புள்ள உணவுகள் அனுமதிக்கப்பட்டவை என்றாலும் உடலுக்கு அது நல்லதல்ல என்றால் அதை நாம் தவிர்ப்பதே நல்லதாகும். பெண்கள் முகத்தை மறைப்பதால் ஏற்படும் கேடுகள் நமக்கு பளிச் சென்று தெரிகின்றன.

முகத்தை மறைத்துக் கொள்வதைக் கேடயமாகப் பயன்படுத்தி கூடாத செயலில் பெண்கள் ஈடுபடுதல்

கேடுகெட்ட பெண்கள் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முகம் மறைப்பதைக் கேடயமாகப் பயன்ப்டுத்திக் கொள்வது

ஆண்கள் கூட பெண்களைப் போல் முகத்தை மூடிக் கொண்டு தீய கரியங்களில் ஈடுபடுவது

இப்படி பலவாறான கேடுகள் ஏற்படும் போது எதைல் கேடு இல்லையோ அதைத் தான் நாம் தேர்வு செய்ய வேண்டும்.

முகம் மறைக்காமல் இருப்பதால் ஏற்படும் கேடுகளை விட மறைப்பதால் ஏற்படும் கேடுகள் மிக அதிகமாகும்.

முகத்தை மறைத்து ஆக வேண்டும் என்று மார்க்கத்தில் கட்டளை இருந்தால் அப்போது விளைவுகளை நாம் கவனிக்கக் கூடாது. இரண்டும் அனுமதிக்கப்பட்ட காரிய்ங்களில் மட்டும் எதில் கேடுகள் உள்ளதோ அதைத் தவிர்க்கத் தான் வேண்டும். இந்த அடிப்படையில் தான் பெண்கள் முகம் மறைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று நாம் கூறுகிறோம்

தவறான வாதங்களுக்கு சரியான விளக்கம்.

சகோதரர் தனது கருத்துக்கு அறிஞர்களின் கூற்றுக்களையும் ஆதாரமாகச் சுட்டிக் காட்டுகிறார். இவருடைய கருத்துக்கு மாற்றமாக பெண்கள் முகத்தை மறைக்க வேண்டியதில்லை எனவும் அதிகமான அறிஞர்கள் கூறியுள்ளனர். அறிஞர்களின் கூற்றுக்கள் மார்க்க ஆதாரமாக முடியாது என்பதால் இதில் நாம் மூழ்க வேண்டியதில்லை.

குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டின் அடிப்படையில் மட்டும் அவர் எழுப்பிய வாதங்களுக்கு சரியான விளக்கத்தைப் பார்ப்போம்.

يَاأَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا(59)33

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் (33 : 59)

கண்களைத் தவிர்த்து முகம் உட்பட உடலின் அனைத்து பாகங்களையும் மறைக்க வேண்டும் என்று இவ்வசனம் கூறுவதாகச் சகோதரர் வாதிடுகிறார்.

இவ்வசனத்தில் முகத்தை மறைக்க வேண்டும் என்று கூறப்படவில்லை. பொதுவாக முக்காடுகளைத் தொங்க விட வேண்டும் என்ற கட்டளை மட்டுமே இவ்வசனத்தில் இடப்படுகின்றது.

திருக்குர்ஆனுக்கு விளக்கமாக ஹதீஸ்கள் அமைந்துள்ளன. இவ்வசனத்தில் கூறப்படும் முக்காடுகளால் மறைக்கப்பட வேண்டிய பகுதியில் முகமும் முன் கையும் அடங்காது என்றும் முகமும் முன்கையும் வெளிப்படுத்த அனுமதிக்கப்பட்ட பகுதி என்றும் மேலே நாம் சுட்டிக்காட்டிய ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

இதற்கு மாற்றமாக பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்பதே இவ்வசனத்தின் பொருள் எனக் கூறினால் பெண்கள் முகத்தை வெளிப்படுத்தலாம் எனக் கூறும் ஹதீஸ்களை மறுக்க வேண்டிய நிலை ஏற்படும். அல்லது திருக்குர்ஆன் வசனத்துக்கு மாற்றமான ஒரு காரியத்தை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்தார்கள் என்ற தவறான கருத்து உருவாகும். எனவே அந்த ஹதீஸ்களுக்கும் இந்த வசனத்துக்கும் முரணில்லாத வகையில் நாம் முன்பு கூறியவாறு விளங்குவதே சரி.

பெண்கள் தங்களுடைய கண்களை மட்டும் வெளிப்படுத்தலாம் என சகோதரர் மேற்கண்ட வசனத்துக்கு விளக்கம் அளித்துள்ளார். பெண்கள் கண்களை மட்டும் வெளிப்படுத்திக் கொள்ளலாம் என்று விதிவிலக்கு கொடுப்பதற்கு இவரது சுயவிருப்பத்தைத் தவிர இவ்வசனத்தில் வேறு எந்த ஆதாரமும் இல்லை.

எனவே இவ்வசனத்தில் நமது மனோ இச்சை அடிப்படையில் விதிவிலக்கு அளிப்பதை விட ஹதீஸ்கள் அடிப்படையில் பெண்கள் முகத்தையும் முன்கையையும் வெளிப்படுத்தலாம் என விதிவிலக்கு அளிப்பதே சரியானது.

மேற்கண்ட வசனத்தில் முக்காடுகள் என்று மொழி பெயர்த்துள்ள இடத்தில் ஜலாபீப் என்ற பன்மைச் சொல் இடம் பெற்றுள்ளது. ஜில்பாப் என்பது இதன் ஒருமையாகும்.

இவ்வசனம் இறங்கியவுடன் நபித்தோழியர்கள் தங்களுடைய முகங்களை துணியால் மறைத்துக் கொண்டதாக ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வசனத்துக்கு விளக்கம் கூறினார்கள் என சகோதரர் கூறினார். ஆனால் இவர் கூறியது போல் புகாரியில் எந்தச் செய்தியும் இடம்பெறவில்லை.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக பின்வரும் செய்தி மட்டுமே புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


4759 حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ عَنْ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا كَانَتْ تَقُولُ لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ أَخَذْنَ أُزْرَهُنَّ فَشَقَّقْنَهَا مِنْ قِبَلِ الْحَوَاشِي فَاخْتَمَرْنَ بِهَا رواه البخاري

ஸஃபிய்யா பின்த் ஷைபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

''(நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கüடம் கூறுக:) அவர்கள் தங்களின் மார்புகள் மேல் தங்களின் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்'' எனும் (24:31ஆவது) வசனம் இறங்கிய போது பெண்கள் தங்கள் கீழ் அங்கிகளின் ஓரத்தைக் கிழித்து அதனைத் துப்பாட்டா ஆக்கி (மறைத்து)க் கொண்டார்கள்.புகாரி (4759)

33 : 59 வது வசனத்துக்கு விளக்கமாக ஆயிஷா (ரலி) அவர்கள் இந்தச் செய்தியைக் கூறியதாக சகோதரர் கூறினார். ஆனால் ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த வசனத்துக்கு இவ்வாறு விளக்கம் கூறவில்லை. மாறாக 24 : 31 ஆவது வசனத்துக்கே மேற்கண்டவாறு விளக்கம் அளித்துள்ளார்கள்.

அவர்கள் அறிவித்துள்ள இந்தச் செய்தியில் முகத்தை மறைப்பது பற்றி எந்தத் தகவலும் இடம் பெறவில்லை. எனவே சகோதரர் இதைத் தவறுதலாக கூறியிருப்பார் என்றே நாம் நல்லெண்ணம் வைக்கின்றோம்.

பலவீனமான செய்திகள்

33 : 59 ஆவது வசனம் பெண்கள் தங்கள் முகங்களை மறைக்க வேண்டும் எனக் கூறுவதாக இப்னு அப்பாஸ் கூறினார்கள் என சகோதரர் கூறியிருந்தார்.

இவ்வாறு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக இமாம் தப்ரீ அவர்கள் எழுதிய ஜாமிஉல் பயான் எனும் நூ¬ல் ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
جامع البيان في تفسير القرآن للطبري سورة الأحزاب
القول في تأويل قوله تعالى : يا أيها النبي قل لأزواجك حديث :26266‏

ذكر من قال ذلك : حدثني علي ، قال : ثنا أبو صالح ، قال : ثني معاوية ، عن علي ، عن ابن عباس ، قوله : يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ' أمر الله نساء المؤمنين إذا خرجن من بيوتهن في حاجة أن يغطين وجوههن من فوق رءوسهن بالجلابيب ، ويبدين عينا واحدة '

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் (33 : 59)

இறைநம்பிக்கையாளர்களின் பெண்கள் ஒரு தேவைக்காக தங்களுடைய வீடுகளிலிருந்து வெளியே செல்லும் போது அவர்கள் தங்கள் முகங்களை முக்காடுகளால் தலையின் மேற்புறத்திலிருந்து மூடிக் கொள்ள வேண்டும் என அல்லாஹ் (இவ்வசனத்தில்) அப்பெண்களுக்கு உத்தரவிடுகிறான்.

நூல் : ஜாமிஉல் பயான்

இதன் அறிவிப்பாளர் தொடரில் அபூ ஸா¬ஹ் என்பவர் இடம் பெறுகின்றார். அறிஞர்களின் கூற்றுப்படி இவர் பலவீனமானவர் ஆவார்.

இவர் அதிகம் தவறிழைப்பவர் என்று இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார். இவரிடம் பலவீனம் இருப்பதாக இமாம் தஹபீ தெரிவித்துள்ளார். இவர் நம்பகமானவர் இல்லை என இமாம் நஸாயீ தெரிவித்துள்ளார்.

இவ்வசனத்தின் விளக்கத்தை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அலீ பின் அபீ தல்ஹா என்பவர் அறிவிக்கின்றார். அலீ பின் அபீ தல்ஹா திருக்குர்ஆனின் விளக்கம் தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து எதையும் நேரடியாகச்செவியுறவில்லை என துஹைம் என்ற அறிஞர் கூறியுள்ளார்.

மேற்கண்ட செய்தி திருக்குர்ஆனின் விளக்கம் தொடர்பானதாகும். இதை இவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக செவியுறவில்லை. இவருக்கும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் இடையில் யாரோ விடுபட்டுள்ளார்கள். எனவே இச்செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் முறிவு இருப்பதாலும் அறிவிப்பாளர் அபூ ஸா¬ஹ் பலவீனமானவர் என்பதாலும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு பேச்சுக்கு இந்தச் செய்தி சரி என்று ஏற்றுக் கொண்டாலும் இதை ஆதாரமாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் இவ்வசனத்துக்கு இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கம் கொடுக்கவில்லை. மாறாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களே விளக்கம் கொடுத்துள்ளார்கள். நபித்தோழர்கள் கூறும் விளக்கங்களை நாம் ஏற்க வேண்டும் என மார்க்கம் நமக்குக் கூறவில்லை. இந்த விளக்கம் பல நபிமொழிகளுக்கு மாற்றமாக இருப்பதால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அடுத்து சகோதரர் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்பதற்குப் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகிறார்.

1562حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا هُشَيْمٌ أَخْبَرَنَا يَزِيدُ بْنُ أَبِي زِيَادٍ عَنْ مُجَاهِدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ الرُّكْبَانُ يَمُرُّونَ بِنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْرِمَاتٌ فَإِذَا حَاذَوْا بِنَا سَدَلَتْ إِحْدَانَا جِلْبَابَهَا مِنْ رَأْسِهَا عَلَى وَجْهِهَا فَإِذَا جَاوَزُونَا كَشَفْنَاهُ رواه أبو داود

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

(பெண்களாகிய) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் இருந்த போது ஒட்டகத்தில் பயணிப்பவர்கள் எங்களை கடந்து சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் எங்களுக்கு அருகில் வரும் போது தலையில் உள்ள முக்காட்டை முகத்தின் மீது போட்டுக் கொள்வோம். அவர்கள் எங்களை கடந்து சென்றுவிட்டால் முக்காட்டை அகற்றிக் கொள்வோம்.
அபூதாவுத் (1562)

இந்த செய்தியில் யஸீத் பின் அபீ ஸியாத் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்று இமாம் அஹ்மது பின் ஹம்பள், இமாம் யஹ்யா பின் முயீன், இமாம் அபூ சுர்ஆ, இமாம் அபூ ஹாதிம், இமாம் இப்னு அதீ ஆகியோர் கூறியுள்ளனர். எனவே இது பலவீனமான செய்தி.

ஒரு பேச்சுக்கு இந்தச் செய்தியை ஏற்றுக் கொண்டால் கூட இதை வைத்து பெண்கள் முகத்தை மூடுவது கட்டாயம் என்று கூற முடியாது. ஏனென்றால் இந்தச் செய்தியில் ஆண்கள் பெண்களைக் கடந்து செல்லும் போது பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிடவில்லை. நபித்தோழியர்களே சுயமாகவே இவ்வாறு செய்கின்றனர்.

எனவே அதிகபட்சமாக இந்தச் செய்தியை வைத்து பெண்கள் முகத்தை மூடுவது தவறல்ல என்று வாதிடமுடியுமே தவிர முகத்தை அவசியம் மூட வேண்டும் என்று வாதிட முடியாது. எனவே இது நமக்கு எதிரான ஆதாரமல்ல.

ஆதாரத்திற்கு தகுதியற்றவை

குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே மார்க்கப் பிரச்சனைகளுக்கு ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளப்படும். இதை விடுத்து நபித்தோழர்களின் கூற்றுக்களையோ அவர்களுக்குப் பின்னால் வந்தவர்களின் கூற்றுக்களையோ ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.

ஆனால் சகோதரர் பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்பதற்கு நபித்தோழர்களின் கூற்றுக்களையும் அவர்களுக்குப் பின்னால் வந்தவர்களின் கூற்றுக்களையும் ஆதாரமாக காட்டியுள்ளார்.
جامع البيان في تفسير القرآن للطبري سورة الأحزاب
القول في تأويل قوله تعالى : يا أيها النبي قل لأزواجك حديث : ‏26268‏48197
حدثني يعقوب ، قال : ثنا هشيم ، قال : أخبرنا هشام ، عن ابن سيرين ، قال : سألت عبيدة ، عن قوله : قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن قال : ' فقال بثوبه ، فغطى رأسه ووجهه ، وأبرز ثوبه عن إحدى عينيه ' وقال آخرون : بل أمرن أن يشددن جلابيبهن على جباههن *

இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! என்ற வசனம் குறித்து நான் உபைதா பின் அம்ர் (ரஹ்) அவர்களிடம் வினவினேன். அதற்கு அவர்கள் தனது ஆடையைக் கொண்டு தனது இரு கண்களில் ஒன்றை மட்டும் வெளிப்படுத்தி தன் தலையையும் முகத்தையும் மூடிக்காட்டி(இவ்வாறு பெண்கள் முக்காடு அணிய வேண்டும் என்று கூறி)னார்கள்.

நூல் : ஜாமிஉல் பயான்

முகத்தில் ஒரு கண்ணை மட்டும் திறந்து மற்ற அனைத்தையும் மூட வேண்டும் எனக் கூறிய அம்ர் என்பவர் நபித்தோழர் அல்ல. தாபியீன் ஆவார். இவ்வசனத்துக்கு இவர் கூறிய விளக்கம் பெண்கள் முகத்தைத் திறக்கலாம் என்று கூறும் ஹதீஸ்களுடன் முரண்படுகின்றது. இவ்விளக்கத்தை இவர் சுயமாகத் தெரிவிக்கின்றார். எனவே இதை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.

அடுத்து சகோதரர் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டியுள்ளார்.

634 و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ أَنَّهَا قَالَتْ كُنَّا نُخَمِّرُ وُجُوهَنَا وَنَحْنُ مُحْرِمَاتٌ وَنَحْنُ مَعَ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رواه مالك

ஃபாத்திமா பின்த் முன்திர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

நாங்கள் இஹ்ராம் அணிந்திருந்த நிலையில் அஸ்மாஉ பின்த் அபீ பக்ர் சித்தீக் (ரலி) அவர்களுடன் இருந்த போது நாங்கள் எங்கள் முகங்களை மறைத்துக் கொள்வோம்.
நூல் : மா¬க் (634)

நபித்தோழர்களின் கூற்றுக்களே ஆதாரமாக முடியாது என்கிற போது அவர்களின் அங்கீகாரங்களை ஆதாரமாக எடுக்கவே முடியாது. அஸ்மாஉ (ரலி) அவர்கள் முந்நிலையில் பெண்கள் முகத்தை மூடியுள்ளதால் இதிலிருந்து எப்படி மார்க்க சட்டத்தை எடுக்க முடியும்?

மேலும் இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்கு எதிராக உள்ளது. இஹ்ராம் அணிந்த பெண்கள் முகத்தை மறைக்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த ஹதீஸை முன்பே பார்த்தோம்.

ஒரு பேச்சுக்கு இந்தச் செய்தியை ஆதாரமாக ஏற்றால் கூட இஹ்ராம் அணிந்த நிலையில் பெண்கள் முகத்தை மூடிக் கொள்ள அனுமதி உண்டு என்று தான் விளங்க முடியும். பெண்கள் எல்லா நேரத்திலும் முகத்தைக் கட்டாயம் மூட வேண்டும் என்ற கருத்தை இச்செய்தி தரவில்லை.

எனவே பெண்கள் முகத்தை மூடுவது வாஜிப் (கட்டாயம்) என்ற கருத்துக்கு இது ஆதாரமாக முடியாது.

அடுத்து சகோதரர் பின்வரும் செய்தியை பெண்கள் அவசியம் முகத்தை மூட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக காட்டுகிறார்.

صحيح ابن خزيمة كتاب المناسك

حدثنا حمد بن العلاء بن كريب ، حدثنا زكريا بن عدي ، عن إبراهيم بن حميد ، حدثنا هشام بن عروة ، عن فاطمة بنت المنذر ، عن أسماء قالت : كنا نغطي وجوهنا من الرجال ، وكنا نمتشط قبل ذلك *

அஸ்மாஉ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நாங்கள் ஆண்களிடமிருந்து எங்கள் முகங்களை மறைத்துக் கொள்வோம். இதற்கு முன்பே தலைவாரிக் கொள்வோம்.
நூல் : ஸஹீஹு இப்னி குஸைமா

இந்தச் செய்தியும் நாம் முன்பு கூறிய செய்தியைப் போன்றே அமைந்துள்ளது.

பெண்கள் முகத்தை மறைக்கலாம் என்று தான் இந்த செய்தி கூறுகின்றது. அவசியம் மறைக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் பெண்கள் முகத்தை மூடுவது கட்டாயம் என்பது சகோதரரின் வாதமாகும்.

பெண்கள் முகத்தை மறைப்பது கூடாது என்று நாம் கூறவில்லை. இவ்வாறு செய்வது மார்க்கத்தில் வலியுறுத்தப்படவில்லை. மறைக்காமல் வெளிப்படுத்தினால் குற்றமில்லை என்றே கூறுகிறோம். எனவே இது நமது கருத்துக்கு எதிரான செய்தியல்ல. மாறாக பெண்கள் முகத்தை மறைக்க அனுமதியுண்டு என நாம் கூறும் கருத்துக்கு ஆதாரமாக உள்ளது.

கிமார் என்றால் என்ன?

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.
அல்குர்ஆன் (24 : 31)

முக்காடுகள் என நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் குர்ஆனில் கும்ரு என்ற அரபுச் சொல் இடம் பெற்றுள்ளது. கிமார் என்பது இதன் ஒருமைச் சொல்லாகும். கிமார் என்றால் முகம் உட்பட தலையை மறைக்கும் ஆடை என சகோதரர் வாதிடுகிறார். இவ்வாறு இப்னு ஹஜர் இவ்வார்த்தைக்கு விளக்கம் கொடுத்ததாகவும் சுட்டிக் காட்டுகிறார்.

இவ்வசனத்தில் முக்காடுகளை மார்பின் மீடு போட்டுக் கொள்ள வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது. முகத்தின் மீது போட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தாலே முகத்தை மறைக்க வேண்டும் என்பதற்கு இவ்வசனத்தை ஆதாரமாகக் காட்டலாம். ஆனால் அவ்வாறு கூறப்படவில்லை என்பதால் இதை முகத்தை மறைக்க ஆதாரமாகக் காட்ட முடியாது.

கிமார் என்றால் முகத்தை மூடும் ஆடை என்ற கருத்து தவறானது. தலையை மறைக்கும் துணி என்பதே இதன் சரியான பொருள். இவ்வாறே அரபு அகராதி நூற்களிலும் ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ளது.

அல்முஃஜமுல் வசீத் மற்றும் லிசானுல் அரப் ஆகிய அகராதி நூற்களில் பெண்களின் கிமார் என்பது அவர்கள் தங்களுடைய தலையை மறைத்துக் கொள்ளும் துணிக்குச் சொல்லப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் கிமார் என்பதற்கு தனது நூலான ஃபத்ஹுல் பாரியில் அது ஆண்கள் அணியும் தலைப்பாகையைப் போன்றது எனக் கூறுகிறார். அதாவது ஆண்கள் தங்களது தலையை மறைக்க தலைப்பாகையைப் பயன்படுத்துவது போல் பெண்கள் தங்களது தலையை மறைக்க கிமாரைப் பயன்படுத்துவார்கள் என்று கூறுகிறார். தலைப்பாகை என்பது முகத்தை மறைக்கும் ஆடையல்ல. எனவே கிமார் என்பது முகத்திரை அல்ல. தலைத்துணி தான் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

ஹதீஸ்களில் கிமார் என்பது தலைத்துணி என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.

546حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ قَتَادَةَ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ صَفِيَّةَ بِنْتِ الْحَارِثِ عَنْ عَائِشَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةَ حَائِضٍ إِلَّا بِخِمَارٍ قَالَ أَبُو دَاوُد رَوَاهُ سَعِيدٌ يَعْنِي ابْنَ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ عَنْ الْحَسَنِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه أبو داود

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

மாதவிடாய் (ஏற்படும் பருமடைந்த) பெண்ணின் தொழுகையை முக்காடுடன் (அவள் தொழுதாலே) தவிர அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அபூதாவுத் (5460

பெண்கள் தொழும் போது முக்காடுடன் தொழ வேண்டும் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. முக்காடு என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் ஹதீஸில் கிமார் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. கிமார் என்றால் அது முகத்தை மூடும் ஆடை என தவறான பொருளை இங்கே பொறுத்தினால் பெண்கள் தொழுகையின் போது முகத்தை மூடுவது கட்டாயம் என்ற தவறான முடிவு ஏற்படும்.

2865حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ قَالَ أَخْبَرَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ الْأَنْصَارِيُّ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ زَحْرٍ أَنَّ أَبَا سَعِيدٍ أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَالِكٍ أَخْبَرَهُ أَنَّ عُقْبَةَ بْنَ عَامِرٍ أَخْبَرَهُ أَنَّهُ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أُخْتٍ لَهُ نَذَرَتْ أَنْ تَحُجَّ حَافِيَةً غَيْرَ مُخْتَمِرَةٍ فَقَالَ مُرُوهَا فَلْتَخْتَمِرْ وَلْتَرْكَبْ وَلْتَصُمْ ثَلَاثَةَ أَيَّامٍ روه أبو داود

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

எனது சகோதரி காலணி அணியாமலும் கிமார் (தலைத் துணி) அணியாமலும் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்துள்ளார் என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் (கூறி இது பற்றி) வினவினேன். அதற்கு அவர்கள் உங்களுடைய சகோதரிக்கு நீங்கள் உத்தரவிடுங்கள். அவர் தலைத் துணி அணிந்து கொள்ளட்டும். வாகனத்தில் ஏறி வரட்டும். அவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறினார்கள்.
அபூதாவுத் (2865)

ஹஜ் செய்யும் பெண்கள் முகத்தை மூடக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த ஹதீஸை முன்பே பார்த்து விட்டோம். மேற்கண்ட ஹதீஸில் கிமார் அணிய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களின் சகோதரிக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

கிமார் என்பது முகத்தை மறைக்கும் ஆடையாக இருந்தால் முகத்தை மறைக்கக் கூடாத இடமான ஹஜ்ஜில் கிமாரை அணியுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டிருக்க மாட்டார்கள்.

கிமார் என்பது தலையை மட்டும் மறைக்கும் துணி என்பதாலே இதை ஹஜ்ஜின் போது அணியுமாறு நபியவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

எனவே பெண்கள் முகத்தைக் கட்டாயம் மறைக்க வேண்டும் என்பதற்கு ஏற்கத் தகுந்த எந்த ஆதாரமும் இல்லை. பெண்கள் முகத்தை மறைப்பதற்கும் மறைக்காமல் இருப்பதற்கும் அனுமதியுள்ளது.

தற்காலத்தில் முகத்தை மறைப்பதால் தீமைகள் அதிகம் ஏற்படுகின்றது. எனவே இத்தீமைகளை தடுக்கும் விதமாக முகத்தை மறைப்பதைக் காட்டிலும் மறைக்காமல் இருப்பது சிறந்தது.






இது குறித்து வீடியோ ஆடியோ வடிவில் பதில் அறிய இங்கே கிளிக் செய்யவும்

நன்றி
ஆன்லைன்பிஜே

Monday, March 19, 2012

மேலத்தெருவில் நடைபெற்ற பெண்கள் பயான் (ஆடியோ)


கடந்த 14.03.2012 அன்று மேலத்தெரு சானவயலில் ஜாகிர் (தண்ணீர் டேங்கி அருகில்) அவர்களின் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் உரையாற்றினார். இதில் திரளாக பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் நடத்த விரும்புவோர் அதிரை கிளை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.





நிகழ்ச்சியில் அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் ஆற்றிய உரை


பாகம்-1


பாகம்-2

வெட்டுபட்ட இடத்தில் வளர்ந்த ஏகத்துவம்

வெட்டுபட்ட இடத்தில் வளர்ந்த ஏகத்துவம்

உரை : ஷம்சுல்லுஹா











Sunday, March 18, 2012

சர்வதேசப் பிறையும், அறியாமை வாதமும்!


சர்வதேசப் பிறை தான் சரியானது என்று பேசி வரும் அக்கரைப்பற்று அன்சார் மௌலவியை பல தடவைகள் நேருக்கு நேர் களத்தில் சந்தித்து உங்கள் கருத்தை நிலை நாட்டுங்கள் என்று அழைப்பு விடுத்தும் அதற்கு ஒத்துக் கொள்ளாத அவர், அண்மையில் சர்வதேசப் பிறை தொடர்பாக ஒரு சிடி யை வெளியிட்டுள்ளார். 

அந்த சிடி யில் அவர் வைத்துள்ள வாதங்களுக்கு வரிக்கு வரி பதில் கொடுக்கப்பட்டது.

அந்த பதில்கள் அடங்கிய வீடியோக்களை இங்கு தனித்தனியாக வெளியிடுகின்றோம்.


பிறை பற்றி தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு




பிறை ஹதீஸில் சாத் ஆன ஹதீஸ் எது?

அமரஹும், அமரன் நாஸ் இரண்டும் ஒரே கருத்தா?

சாட்சி சொன்னாலே மற்றவர்களுக்குத் தானே?


பிரயாணக் கூட்டத்தினர் நோன்பு வைத்துக் கொண்டு வந்தார்கள் என்பது பொய்யா?

நோன்பை பிடித்தவர்களுக்கு, விடத் தெரியாதா?

அமரன் நாஸ் - பி.ஜெ பொய் சொன்னாரா?

பிறை பற்றிய ஹதீஸ் இப்னு அப்பாஸின் சொந்தக் கருத்தா?

இப்னு அப்பாஸ் ஹதீஸை சொன்னது எப்படி?

வெளிநாட்டில் இருந்து வருபவருக்கு பெருநாள் எப்படி?

அனைவரும் ஒரே நேரத்தில் நாளை அடையாளமா?


யார் ரமழான் மாதத்தை அடைகிறாரோ - விளக்கம்

பிறையின் எல்லைகளை எப்படி தீர்மானிப்பது?

ஹதீஸ் கலை அறிவோம் : பலவீனமான ஹதீஸ்களின் வகைகள்

முந்தைய பகுதிகள்: 
- ஹதீஸ்களின் வகைகள்
- ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமான) ஹதீஸ்கள்
- மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்ட) ஹதீஸ்கள்
- மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது) மற்றும் ளயீஃப் (பலகீனமான) ஹதீஸ்கள்


பலவீனமான ஹதீஸ்களின் வகைகள்:

அறிவிப்பாளர் தொடரை வைத்து ளயீஃபான ஹதீஸ்களை கீழ்க்கண்ட விதமாக வகைப்படுத்தலாம். 

1. முர்ஸல்:

ஹதீஸ்களுக்கு அறிவிப்பாளர் தொடர் அவசியம் என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். எல்லா அறிவிப்பாளரையும் சரியாகக் கூறி விட்டு நபித்தோழரை மட்டும் கூறாவிட்டால் அத்தகைய ஹதீஸ்கள் முர்ஸல் எனப்படும். 

உதாரணத்துக்காக நாம் முன்னர் சுட்டிக் காட்டிய திர்மிதீயின் முதல் ஹதீஸையே எடுத்துக் கொள்வோம். அதில் இப்னு உமர் என்ற நபித்தோழர் விடுபட்டு விட்டால் அது முர்ஸல் எனும் வகையில் சேரும். 

ஹன்னாத் – வகீபு – இஸ்ராயீல் – ஸிமாக் – முஸ்அப் – நபிகள் நாயகம் என்ற சங்கிலித் தொடரில் மேற்கண்ட ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வைத்துக் கொள்வோம். 

அறிவிப்பாளர் தொடர் சரியாகவே கூறப்பட்டாலும் நபித்தோழர் மட்டும் விடப்பட்டு விட்டார். முஸ்அப் என்பவர் நபித்தோழர் அல்ல. அவர் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்கவே முடியாது. 

இத்தகைய தன்மையில் அமைந்த ஹதீஸ்கள் முர்ஸல் எனப்படும். 

முர்ஸல் எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ்களை ஏற்கலாமா? கூடாதா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. அதற்கு ஒரு அடிப்படையும் உள்ளது. 

அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையை ஆராயும் போது நபித்தோழர்களைப் பற்றி ஆராய மாட்டார்கள். ஏனெனில் நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள். அவர்கள் மனிதர்கள் என்ற அடிப்படையில் தவறுகள் செய்திருக்கக் கூடும். என்றாலும் நிச்சயமாக நபிகள் நாயகத்தின் பெயரால் எதையும் இட்டுக்கட்டவே மாட்டார்கள். நபித்தோழர்களை அல்லாஹ்வும் புகழ்ந்து பேசுகின்றான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் புகழ்ந்து கூறியுள்ளார்கள். 

மேலும் ஒருவர் நம்பகமானவர் அல்ல என்று கூறுவதாக இருந்தால் அவரது காலத்தவர் தான் கூற வேண்டும்.  ஒரு நபித்தோழர் பற்றி வேறொரு நபித்தோழர் தான் நம்பகமற்றவர் என்று கூற வேண்டும். எந்த நபித்தோழரும் எந்த நபித்தோழர் பற்றியும் இத்தகைய விமர்சனம் செய்ததில்லை. எனவே நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பது ஷியாக்களைத் தவிர உலக முஸ்லிம் அறிஞர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட உண்மையாகும். 

இப்போது முர்ஸல் என்ற தன்மையில் அமைந்த ஹதீஸுக்கு வருவோம். இந்த ஹதீஸில் நபித்தோழர் தான் விடப்பட்டுள்ளார். விடப்பட்டவரின் பெயரோ, மற்ற விபரமோ தெரியாவிட்டாலும் விடப்பட்டவர் நபித்தோழர் என்பது உறுதி. அவர் யாராக இருந்தால் நமக்கென்ன? நபித்தோழர் தான் விடப்பட்டுள்ளார் என்று தெரிவதால் மற்ற அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்களாக இருப்பதால் இது ஏற்கப்பட வேண்டியது தான் என ஒரு சாரார் கூறுகின்றனர். 

இந்த வாதம் பாதி தான் சரியானது. நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் முர்ஸல் என்ற நிலையில் உள்ள ஹதீஸ்களில் நபித்தோழர் மட்டும் தான் விடுபட்டிருப்பார் என்பது நிச்சயமானதல்ல. 

இத்தகைய ஹதீஸை அறிவிக்கும் தாபியீ ஒருவர் தம்மைப் போன்ற மற்றொரு தாபியீயிடம் இதைக் கேட்டிருக்கலாம். இதற்கும் சாத்தியம் உள்ளது. முர்ஸல் என்றால் விடுபட்டவர் நபித்தோழர் மட்டும் தான் என்று நிச்சயமாகக் கூற முடியாது. ஒரு தாபியீயும் ஒரு நபித்தோழரும் கூட விடுபட்டிருக்கலாம். 

அந்தத் தாபியீ யார்? அவர் நம்பகமானவர் தானா? என்பதைக் கட்டாயம் பரிசீலிக்க வேண்டும். அவர் யார் என்பதே தெரியாத போது பரிசீலிக்க எந்த வழியும் இல்லை. எனவே நபித்தோழர் மட்டுமோ அல்லது நபித்தோழரும் ஒரு தாபியுமோ விடுபட்டிருக்க வாய்ப்புள்ளதால் சந்தேகத்திற்குரியதை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர். 

இவர்களின் வாதத்தில் வலிமை உள்ளதால் இதுவே சரியானதாகும். 

ஒரு நம்பகமான தாபியீ, ”நான் எந்த ஹதீஸையும் நபித்தோழர் வழியாக மட்டுமே அறிவிப்பேன்” என்று அறிவித்திருந்தால் அத்தகைய முர்ஸஸை ஆதாரமாகக் கொள்ளலாம். ஆனால் எந்தத் தாபியீயும் அவ்வாறு கூறியதாக நாம் அறியவில்லை. 

2. முன்கதிவு (தொடர்பு அறுந்தது):

நபித்தோழர் தான் விடுபட்டிருக்கின்றார் என்ற சந்தேகம் இருந்தால் அதை முர்ஸல் என்கிறோம். இடையில் வேறு அறிவிப்பாளர்கள் விடுபட்டிருப்பார்கள் என்றால் அல்லது விடுபட்டிருப்பதாகச் சந்தேகம் ஏற்பட்டால் அத்தகைய ஹதீஸ்களை முன்கதிவு (தொடர்பு அறுந்தவை) என்று கூறுவார்கள். 

உதாரணத்திற்கு நாம் முன்னர் சுட்டிக் காட்டிய திர்மிதீயின் முதல் ஹதீஸையே எடுத்துக் கொள்வோம். 

ஹன்னாத் – வகீபு – இஸ்ராயீல் – ஸிமாக் – முஸ்அப் – இப்னு உமர் – நபிகள் நாயகம். 

இதில் ஸிமாக் என்பவர் குறிப்பிடப்படாமல் ஹன்னாத் – வகீவு – இஸ்ராயீல் – முஸ்அப் – இப்னு உமர் – நபிகள் நாயகம் என்று குறிப்பிட்டால் முன்கதிவு (தொடர்பு அறுந்தவை) என்று ஆகிவிடும். 

இதைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். 

2004 வது ஆண்டில் 40 வயதில் உள்ள ஒருவர் காந்தி கூறியதாக ஒரு செய்தியைக் கூறுகின்றார். அவர் பொய் சொல்லாதவராகவும், நம்பிக்கைக் குறியவராகவும் இருக்கின்றார். இவர் பிறந்தது 1964 ஆம் ஆண்டு. காந்தி கொல்லப்பட்டது 1948 ஆம் ஆண்டு. காந்தி கொல்லப்படும் போது பிறக்காத இவர் காந்தி கூறியதாக ஒரு செய்தியைத் தெரிவித்தால் யாரோ இவருக்கு அதைச் சொல்லியிருக்க வேண்டும். 

இது போன்ற தன்மைகளில் அமைந்தவை முன்கதிவு எனப்படும். இதைக் கண்டுபிடிக்க பல வழிகள் உள்ளன. 

ஆ என்ற அறிவிப்பாளர் ஹிஜ்ரி 120 ல் மரணித்த விட்டார்.

இ என்ற அறிவிப்பாளர் 120 ல் தான் பிறந்தார் என்று வைத்துக் கொள்வோம். 

இ என்பவர் ஆ என்பவர் வழியாக ஒரு செய்தியை அறிவித்தால் நிச்சயம் இடையில் ஒருவரோ, இருவரோ விடுபட்டிருப்பார்கள் என்பதைக் கண்டுபிடித்து விடலாம். 

ஆ என்பவர் மக்காவில் வாழ்ந்தார்.

இ என்பவர் எகிப்தில் வாழ்ந்தார்.

ஆ என்பவர் ஒரு போதும் எகிப்து செல்லவில்லை.

இ என்பவர் ஒரு போதும் மக்கா செல்லவில்லை. 

வேறு பொது இடத்தில் இருவரும் சந்தித்ததாகவும் வரலாற்றுக் குறிப்பு இல்லை. 

ஆயினும் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கின்றார்கள். 

இந்த நிலையில் ஆ என்பார் இ என்பார் வழியாக ஒன்றை அறிவித்தால் யார் மூலமாகவோ தான் அதை அறிந்திருக்க முடியும். நிச்சயம் இடையில் ஒருவரோ, இருவரோ விடுபட்டிருப்பார்கள் என்பதை இப்போதும் கண்டுபிடித்து விடலாம். 

ஆ என்பவர் 120 ஆம் ஆண்டு இறந்தார்

இ என்பவர் 115 ல் பிறந்தார் 

இப்போது ஆ என்பவரிடமிருந்து இ என்பவர் அறிவித்தாலும் இடையில் யாரோ விடுபட்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் ஆ என்பவர் மரணிக்கும் போது இ என்பவரின் வயது ஐந்து தான். ஐந்து வயதில் ஹதீஸ்களைக் கேட்டு அறிவிக்க முடியாது. 

ஆ என்பவரிடமிருந்து அறிவிக்கும் இ என்பவர், தான் அரைப் பார்த்ததே இல்லை என்று வாக்குமூலம் தருகின்றார். அப்போதும் யாரோ விடுபட்டதைக் கண்டு பிடித்து விடலாம். 

இத்தகைய தன்மைகளில் அமைந்த ஹதீஸ்கள் ஆதாரமாகக் கொள்ளப்படாது. இதை ஏற்று அமல் செய்ய முடியாது. ஏனெனில் விடுபட்டவர் பொய்யராக இருக்கக் கூடும் அல்லது நினைவாற்றல் இல்லாதவராக இருக்கக் கூடும். 

3. முஃளல்:

ஒரே ஒரு அறிவிப்பாளர் விடுபட்டிருந்தால் அதை முன்கதிவு என்பார்கள். முஃளல் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிப்பாளர்கள் விடுபட்டதாகும். 

ஒரு அறிவிப்பாளர் விடுபட்டதையே ஆதாரமாகக் கொள்ள முடியாது என்றால் பலர் விடுபட்டிருப்பதைப் பற்றி கூறத் தேவையில்லை. எனவே இவையும் பலவீனமான ஹதீஸ்களாகும். 

4. முஅல்லக்:

ஒரு நூலாசிரியர் தமக்கு அறிவித்தவரை விட்டு விட்டு அறிவிப்பவை முஅல்லக் எனப்படும். 

வேறு சிலரின் கருத்துப்படி அறிவிப்பாளர் தொடர் அறவே இல்லாதவை முஅல்லக் எனப்படும். 

உதாரணமாக எந்த அறிவிப்பாளர் வரிசையும் இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் என்று திர்மிதீ கூறுவதாக வைத்துக் கொள்வோம். அது முஅல்லக் ஆகும். 

அல்லது உதாரணத்திற்கு நாம் சுட்டிக்காட்டிய திர்மிதீ முதல் ஹதீஸில் ஹன்னாத் என்ற அறிவிப்பாளரை மட்டும் விட்டு விட்டு மற்றவர்களைக் கூறுவதாக வைத்துக் கொள்வோம். அதுவும் முஅல்லக் தான். 

ஸஹீஹுல் புகாரியில் முஅல்லக் என்ற வகையில் பல ஹதீஸ்கள் உள்ளன. எந்த அறிவிப்பாளர் வரிசையும் இல்லாமல் ஹதீஸை மட்டும் புகாரி கூறுவார். 

இத்தகைய நிலையில் உள்ள ஹதீஸ்களை ஆய்வு செய்ய வேண்டும். புகாரி போன்றவர்கள் அப்படிக் கூறினால் அவரிடம் அறிவிப்பாளர் தொடர் இருக்கின்றதா? என்று தேடிப் பார்க்க வேண்டும். வேறு எங்காவது அறிவிப்பாளர் தொடருடன் கூறியிருந்தால் அல்லது வேறு நூற்களில் அறிவிப்பாளர் தொடர் கிடைத்தால் அது நம்பகமானதாகவும் இருந்ததால் அதை ஏற்றுச் செயல்படலாம். 

அவ்வாறு கிடைக்கவில்லையானால் விடுபட்டவர்கள் யார் என்பது தெரியாததால் அதை விட்டு விட வேண்டும். 

பலவீனமான ஹதீஸ்களின் மற்றொரு வகை: 

அறிவிக்கப்படும் செய்தி மற்றும் அறிவிப்பாளரைக் கவனத்தில் கொண்டு ளயீஃபான ஹதீஸ்கள் பின்வருமாறு பிரிக்கப்படும். 

1. ஷாத்

அரிதானது என்பது இதன் பொருள். 

ஒரு ஆசிரியரிடம் பல மாணவர்கள் ஒரு ஹதீஸைச் செவியுறுகின்றனர். பத்து மாணவர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்று வைத்துக் கொள்வோம். 

இந்தப் பத்து பேரும் தாம் கேட்ட ஹதீஸைப் பலருக்கும் அறிவிக்கன்றார்கள். ஒன்பது பேர் அறிவிப்பது ஒரே மாதிரியாக உள்ளது. ஆனால் ஒருவர் அறிவிப்பது மட்டும் ஒன்பது பேர் அறிவிப்பதற்கு முரணாகவுள்ளது. இப்படி அமைந்த அறிவிப்பைத் தான் ஷாத் என்று கூறுவர். 

தொழுகையில் நான்கு தடவை நபி (ஸல்) அவர்கள் கைகளை உயர்த்தினார்கள் என்ற ஹதீஸை எடுத்துக் கொள்வோம். 

இப்னு உமர் (ரலி) மூலம் ஸாலிம், நாஃபிவு, முஹாரிப் ஆகியோர் அறிவித்துள்ளனர். அதே இப்னு உமர் (ரலி) மூலம் முஜாஹித் அறிவிக்கும் போது முதல் தக்பீரில் தவிர கைகளை உயர்த்தவில்லை என்கிறார். 

நால்வருமே நம்பகமானவர்கள் தான். ஆனாலும் மூவருக்கு மாற்றமாக ஒருவர் அறிவிக்கும் போது அது ஷாத் எனும் நிலையை அடைகிறது. 

இங்கே இரண்டு செய்திகளும் ஒன்றுக்கொன்று நேர் முரணானவையாக உள்ளன. இரண்டில் ஏதேனும் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும். இந்த நிலையில் என்ன செய்ய வேண்டும்? 

மூன்று பேர் தவறுதலாக கூறுவதை விட ஒருவர் தவறாகக் கூறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே மூவர் கூறுவதை ஏற்றுக் கொண்டு ஒருவர் கூறுவதை விட்டு விட வேண்டும். 

நபித்தோழரிடம் கேட்டவர்களுக்கிடையே தான் இந்த நிலை ஏற்படும் என்று கருதக் கூடாது. அறிவிப்பாளர் வரிசையில் எந்த இடத்திலும் இந்த நிலை ஏற்படும். 

உதாரணமாக குதைபா என்ற அறிவிப்பாளரை எடுத்துக் கொள்வோம். இவரிடம் ஏராளமானவர்கள் ஹதீஸ்களைக் கற்றுள்ளனர். புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவுத், நஸயீ, மூஸா பின் ஹாரூன், ஹஸன் பின் சுஃப்யான் ஆகியோர் இவர்களில் முக்கியனானவர்கள். எல்லோரும் அறிவிப்பதற்கு மாற்றமாக நஸயீ மட்டும் வேறு விதமாக அறிவித்தால் அதுவும் ஷாத் என்ற வகையில் சேரும். 

ஷாத் என்பது ஹதீஸின் வாசகத்திலும் ஏற்படலாம். அறிவிப்பாளர் பெயரைப் பயன்படுத்துவதிலும் ஏற்படலாம். 

ஒரு ஹதீஸை ஒரு ஆசிரியர் வழியாக நான்கு பேர் அறிவிப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த ஹதீஸின் மூன்றாவது அறிவிப்பாளர் பெயர் இஸ்மாயீல் பின் முஹம்மத் என்று மூன்று பேர் குறிப்பிடுகின்றனர். ஒருவர் மட்டும் இஸ்மாயீல் பின் மூஸா என்று குறிப்பிடுகின்றார். 

ஒரே ஆசிரியரிடம் இருந்து அறிவிக்கும் இந்த பெயர்ப் பட்டியலில் மூவர் குறிப்பிட்ட பெயருக்கு மாற்றமாக ஒருவர் குறிப்பிடுவதால் இதுவும் ஷாத் என்ற வகையைச் சேர்ந்தது தான். மூவர் குறிப்பிடக்கூடிய பெயர் தான் சரியானதாக இருப்பதற்கு அதிகச் சாத்தியம் உள்ளது. 

அதாவது மூன்றாவது அறிவிப்பாளராகக் குறிப்பிட்ட இஸ்மாயீல் பின் முஹம்மத் பலவீனமானவராக உள்ளார். ஆனால் இஸ்மாயீல் பின் மூஸா பலவீனமானவர் இல்லை என்று வைத்துக் கொள்வோம். இந்த இடத்தில் தான் அறிவிப்பாளர் வரிசையிலும் ஷாத் ஏற்படுத்தும் விளைவைப் புரிந்து கொள்ள இயலும். 

இஸ்மாயீல் பின் முஹம்மத் நம்பகமானவரா? இஸ்மாயீல் பின் மூஸா நம்பகமானவரா? என்பதை விட வேறொரு விஷயத்தைத் தான் நாம் கவனிக்க வேண்டும். 

அதாவது இஸ்மாயீல் பின் முஹம்மத் என்பவரைத் தான் மூன்று பேர் கூறுகின்றனர். எனவே இவர்களின் ஆசிரியர் இந்தப் பெயரைத் தான் குறிப்பிட்டிருப்பார். இஸ்மாயீல் பின் மூஸா என்று ஒருவர் கூறுவதால் அந்த அறிவிப்பு ஷாத் என்ற நிலைக்கு வந்து விடும். 

இஸ்மாயீல் பின் முஹம்மத் என்பது தான் சரியானது என்று நாம் நினைக்கும் போது அந்த ஹதீஸ் பலவீனமானதாக ஆகி விடுகின்றது. ஏனெனில் இஸ்மாயீல் பின் முஹம்மத் பலவீனமானவராக உள்ளார். 

அதாவது இஸ்மாயீல் பின் முஹம்மத் என்ற பெயரைக் குறிப்பிட்டது தான் சரி என்பது வேறு. பலவீனராக உள்ளதால் இந்த அறிவிப்பைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது வேறு. இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

ஒரு ஆசிரியரிடமிருந்து ஒரு ஹதீஸை அறிவிக்கும் ஐந்து பேரில் நால்வர் அறிவிப்பதற்கு மாற்றமாக, முரணாக ஒருவர் அறிவிப்பது தான் ஷாத். நால்வர் கூறாத ஒரு விஷயத்தைச் சேர்த்துக் கூறினால் அது ஷாத் அல்ல. அதை நாம் ஏற்கலாம். ஏற்க வேண்டும். 

”முதல் ரக் அத்தில் இக்லாஸ் அத்தியாயம் ஓதினார்கள் என்று ஒரு ஆசிரியரின் நான்கு மாணவர்கள் கூறுகின்றனர். முதல் ரக்அத்தில் இக்லாசும், இரண்டாம் ரக்அத்தில் நாஸ் அத்தியாயமும் ஓதினார்கள்” என்று அதே ஆசிரியரின் ஒரு மாணவர் அறிவிக்கின்றார். 

இது ஷாத் எனும் வகையில் சேராது. ஏனெனில் நால்வர் கூறியதை இது மறுக்கவில்லை. மாறாக அதை ஒப்புக் கொள்வதுடன் மேலும் அதிகமான ஒரு செய்தியைக் கூறுகின்றது. இவரும் நம்பகமானவராக உள்ளதால் இந்த அறிவிப்பையும் நாம் ஏற்க வேண்டும். 

பல பேர் கூறாமல் விட்டு விட்டதை ஒரே ஒருவர் மட்டும் கூறுவது சர்வ சாதாரணமான நிகழ்வு தான். 

இது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விளக்கமாகும். 

ஒரு ஆசிரியர் வழியாக இல்லாமல் வெவ்வேறு ஆசிரியர் வழியாகப் பலரும் பலவிதமாக அறிவித்தால் ஷாத் என்ற பேச்சு அங்கே எழாது. 

நான்கு பேர் ஹன்னாத் வழியாக ஒரு செய்தியை அறிவிக்கின்றனர். ஆனால் குதைபா வழியாக அதற்கு மாற்றமாக ஒருவர் அறிவிக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் ஒருவர் அறிவிப்பது தவறு. நால்வர் அறிவிப்பது சரி என்று கூற முடியாது. ஏனெனில் உண்மையில் இவர்கள் முரண்படவில்லை. இவர்கள் யாரிடம் செவியுற்றார்களோ அவரிடம் தான் முரண்பாடு உள்ளது. இந்த ஒருவர் தனது ஆசிரியரிடம் தான் கேட்டதை அறிவிக்கின்றார். அந்த நால்வர் தங்களது ஆசிரியர்களிடம் கேட்டதை அறிவிக்கின்றார்கள். 

எனவே இதை ஷாத் என்று கூற முடியாது. முரண்பாடாகக் கூறிய இவர்களது இரு ஆசிரியர்களின் தகுதிகளையும் இன்ன பிற அம்சங்களையும் கவனத்தில் கொண்டு எது சரியானது?  என்ற முடிவுக்கு வர வேண்டும். 

ஒரு ஆசிரியரிடமிருந்து பல மாணவர்கள் அறிவிக்கும் போது பலர் ஒரு விதமாகவும். ஒருவர் அதற்கு முரணாகவும் அறிவித்து இருந்தால் அதை ஷாத் என்கிறோம்.  

முரணாக ஒருவர் அறிவிப்பது ஷாத் என்றால் இதற்கு மாற்றமாகப் பலர் அறிவிப்பதற்கு தனிப் பெயர் உண்டா என்றால் உண்டு. இதை மஹ்பூள் என்று கூறுவார்கள். 

ஒரு ஹதீஸ் பற்றி மஹ்பூள் என்று கூறப்பட்டால் எதிராக ஷாத் எனும் அறிவிப்பு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மஹ்பூள் என்பது ஆதாரமாகக் கொள்ளத் தக்கதாகும். 

2. முன்கர் (நிராகரிக்கப்பட்டது):

ஒரு ஆசிரியரிடமிருந்து கற்ற பல மாணவர்கள் ஒரு செய்தியை எப்படி அறிவிக்கின்றார்களோ அதற்கு முரணாக ஒரே ஒருவர் அறிவித்தால் அவர் நம்பகமானவராகவும் இருந்தால் அதை ஷாத் என்று அறிந்தோம். மற்றவர்களை விட உறுதி குறைந்தவராக, நினைவாற்றல் குறைவானவராக அந்த ஒருவர் இருந்து விட்டால் அது முன்கர் எனப்படும். 

ஒரு ஹதீஸ் பற்றி முன்கர் என்று கூறப்பட்டால் அதை அறிவிக்கும் ஒருவர் பலவீனமாக உள்ளார் என்பதும் அதற்கு மாற்றமாக அதே ஆசிரியர் வழியாக நம்பகமான மற்ற மாணவர்கள் அறிவித்துள்ளனர் என்பதும் பொருள். 

ஷாத் என்ற நிலையில் அமைந்த ஹதீஸ்களையே ஆதாரமாகக் கொள்வதில்லை எனும் போது முன்கர் என்ற நிலையில் அமைந்த ஹதீஸைப் பற்றி சொல்லத் தேவையில்லை. 

இப்னு ஸலாஹ் என்ற அறிஞர் முன்கர், ஷாத் இரண்டுமே ஒரு வகைக்கான இரண்டு பெயர்கள் என்று கூறுகின்றார். 

முன்கர் என்ற நிலையில் இல்லாத ஹதீஸ்கள் மஃரூஃப் என்று கூறப்படும். 

அதாவது ஒரு ஆசிரியரிடமிருந்து ஐந்து மாணவர்கள் அறிவிக்கின்றனர். ஐவரில் நால்வர் அறிவிப்பதற்கு மாற்றமாக ஒருவர் மட்டும் அறிவிக்கின்றனர். அந்த நால்வர் நம்பகமானவர்களாக இருப்பது போல் இந்த ஒருவர் நம்பகமானவராக இல்லை. இந்த ஒருவர் அறிவிப்பது முன்கர் என்போம். அந்த நால்வர் அறிவிப்பது மஃரூஃப் என்போம். மஃரூஃப் என்பது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் ஒரு வகையாகும். 

பலவீனமான ஹதீஸ்களின் இன்னொரு வகை:

அறிவிக்கப்படும் விதத்தைக் கவனத்தில் கொண்டு ளயீஃபான ஹதீஸ்கள் கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படும். 

1. முதல்லஸ்:

பலவீனமான ஹதீஸில் முதல்லஸ் என்பதும் ஒரு வகையாகும். முதல்லஸ் என்றால் என்ன? என்பதைப் புரிந்து கொள்ள ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசை எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். 

உதாரணத்திற்கு திர்மிதீயின் இரண்டாவது ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை எவ்வாறு அமைந்துள்ளது? என்பதைப் பார்ப்போம்.

1. நமக்கு இஸ்ஹாக் பின் மூஸா அல்அன்சாரி அறிவித்தார்.

2. மஃன் பின் ஈஸா நமக்கு அறிவித்தார் என்று அவர் கூறினார்.

3. மாலிக் பின் அனஸ் நமக்கு அறிவித்தார் என்று மஃன் பின் ஈஸா கூறினார்.

4. மாலிக், ஸுஹைல் பின் அபீஸாலிஹ் வழியாக அறிவித்தார்.

5. அபூஸாலிஹ், அபூஹுரைரா (ரலி) வழியாக அறிவித்தார்.

6. அபூஹுரைரா (ரலி), நபி (ஸல்) கூறியதாக பின்வரும் செய்தியைக் கூறினார்.

இது திர்மிதீ நூலின் இரண்டாவது ஹதீஸின் அறிவிப்பாளர் தொடராகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய இந்தச் செய்தி சங்கிலித் தொடராக ஆறு நபர்கள் வழியாக திர்மிதீ இமாமுக்குக் கிடைத்துள்ளது.  

இந்தப் பட்டியல் எவ்வாறு அமைந்துள்ளது? என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். 

ஆரம்பத்தில் ”நமக்கு இஸ்ஹாக் அறிவித்தார்” என்று கூறப்படுகின்றது. ”நமக்கு அறிவித்தார்” என்ற வாசக அமைப்பிலிருந்து இமாம் திர்மிதீ நேரடியாக இஸ்ஹாக்கிடம் கேட்டிருக்கிறார் என்பது விளங்குகின்றது. 

இது போல் 2,3,4 ஆகிய அறிவிப்பாளர்களும் தமக்கு முந்திய அறிவிப்பாளர்களிடமிருந்து அதைக் கேட்டுள்ளனர் என்பது வாசக அமைப்பிலிருந்தே அறியப்படுகின்றது. எல்லாருமே நமக்கு இதை அறிவித்தார் (ஹத்தஸனா) எனக் கூறுகின்றனர். 

ஆனால் ஐந்தாவதாக ”குதைபா மாலிக் வழியாக அறிவித்தார்” என்று தான் கூறப்பட்டுள்ளது. 

இந்த வாசக அமைப்பைப் பார்க்கும் போது இரு விதமாகப் புரிந்து கொள்ள இயலும். 

குதைபா, மாலிக்கிடம் நேரடியாகவே கேட்டிருக்கலாம். 

குதைபா நேரடியாக மாலிக்கிடம் கேட்காமல் மாலிக்கிடம் கேட்ட இன்னொருவரிடம் கேட்டிருக்கலாம். அவரை விட்டு விட்டு மாலிக்கைக் கூறியிருக்கலாம். 

இன்றைக்கும் கூட நாம் அன் அபீஹுரைரா (அபூஹுரைரா மூலம்) என்று கூறுகின்றோம். அபூஹுரைராவிடம் நாம் கேட்டோம் என்பது இதன் பொருளன்று. 

இந்த இடத்தில் குதைபா என்பார் மாலிக்கிடம் நேரடியாகக் கேட்டாரா? இடையில் இன்னொருவர் துணையுடன் கேட்டாரா? என்பதைப் பொருத்தே ஹதீஸின் தரம் முடிவாகும். 

குதைபா, மாலிக்கிடம் நேரடியாகக் கேட்டிருந்தால் இருவரும் நம்பகமானவர்கள் என்பதால் இந்த அறிவிப்பு சரியானது என்று எளிதாக முடிவு செய்து விடலாம். 

குதைபா, மாலிக்கிடம் நேரடியாக கேட்டிருக்கா விட்டால் இடையில் ஒருவரை அவர் விட்டிருக்கலாம். அந்த ஒருவர் பொய்யராக இருக்கலாம். நம்பகமற்றவராக இருக்கலாம். அவரிடம் ஹதீஸைப் பலவீனமாக்கும் ஏனைய குறைபாடுகளில் ஏதேனும் ஒன்று இருக்கலாம். 

எனவே நேரடியாகக் கேட்டாரா? இல்லையா? என்பதை முடிவு செய்யும் கட்டாயம் ஏற்படுகின்றது. 

இது எல்லா நேரத்திலும் அவசியப்படாது. 

குதைபா என்பவர் தாம் யாரிடம் நேரடியாகச் செவியுற்றாரோ அவரைத் தான் குறிப்பிடுவார். யாரையும் இடையில் விட்டு விடும் வழக்கமுடையவரல்ல என்பது வேறு வழியில் நமக்குத் தெரிந்திருந்தால் இந்த இடத்தில் யாரோ விடுபட்டிருப்பார்கள் என்ற சந்தேகம் நமக்கு ஏற்படாது. மாலிக் வழியாக குதைபா என்பதை ”மாலிக் நமக்கு அறிவித்தார்” என்ற நிலையில் வைத்துக் கொள்ளலாம். 

ஆனால் குதைபா என்பவர், தாம் நேரடியாகக் கேட்காவிட்டாலும் அவர் வழியாக என்று கூறுவார்; நேரடியாகக் கேட்டவரை விட்டு விட்டு அதற்கடுத்த அறிவிப்பாளரைக் குறிப்பிட்டு அவர் வழியாக என்று அறிவிப்பார் என்று வைத்துக் கொள்வோம். 

(குதைபா அப்படிப்பட்டவர் அல்ல. உதாரணத்திற்குத் தான் இவ்வாறு கூறுகின்றோம்) 

இப்போது மாலிக் வழியாக என்று அவர் கூறுகின்றார் என்றால் தனது ஆசிரியரை விட்டு விட்டு, தனது ஆசிரியருடைய ஆசிரியரைக் குறிப்பிடும் அவரது வழக்கம் காரணமாக யாரோ இடையில் விடுபட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் வருகின்றது. இப்படி அமைந்த ஹதீஸ்கள் தாம் முதல்லஸ் எனப்படும். இந்த வழக்கமுடையவர் முதல்லிஸ் எனப்படுவார். இவரது செயல் தக்லீஸ் எனப்படும். 

இத்தகைய ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது. ஏனெனில் விடுபட்ட ஒருவர் மோசமானவராகவும் இருக்கக் கூடும். 

ஒருவர் தமது ஆசிரியரை விட்டு விட்டு அடுத்தவரைக் கூறும் வழக்கமுடையவராகவும் இருக்க வேண்டும். அந்த ஹதீஸிலும் அவ்வாறு வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். இரண்டும் சேர்ந்தால் மட்டுமே ஒரு ஹதீஸ் முதல்லஸ் என்ற நிலைமையை அடையும். 

ஒரு நபர் சில நேரங்களி்ல தாம் யாரிடம் செவியுற்றாரோ அவரைக் கூறாமல் அவருக்கு முந்திய அறிவிப்பாளரைக் கூறும் வழக்கமுடையவராக இருந்தார் என்று வைத்துக் கொள்வோம். இத்தகைய வழக்கமுடைய ஒருவர், குறிப்பிட்ட  ஹதீஸை அறிவிக்கும் போது இந்த வழக்கத்தைக் கடைப்பிடிக்காமல் ”நமக்கு இவர் அறிவித்தார்” என்று தெளிவாக அறிவிக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். 

இவர் முதல்லிஸ் (தக்லீஸ் செய்பவர்) என்றாலும் இந்த ஹதீஸில் யாரையும் அவர் விட்டு விடவில்லை என்பதால் இந்த ஹதீஸை நாம் ஏற்கலாம். 

ஒவ்வொரு ஹதீஸிலும் தத்லீஸ் என்ற தன்மை உள்ளதா? என்று பார்க்க வேண்டுமே தவிர ஒரு நபர் தத்லீஸ் செய்பவர் என்பதால் அவர் அறிவிக்கும் எல்லா ஹதீஸ்களையும் நிராகரித்து விடக்கூடாது. 

இந்த விஷயத்தில் அறிஞர் பெருமக்களிடையே கருத்து வேறுபாடு இல்லை. 

2. முஅன்அன்:

”அன்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது முஅன்அன் எனப்படும். 

”அன் அபீஹுரைரா” ”அன் ஆயிஷா” (அபூஹுரைரா வழியாக – ஆயிஷா வழியாக) என்பது போல் குறிப்பிடும் ஹதீஸ்கள்  முஅன்அன் எனப்படும். 

”நமக்குச் சொன்னார்” ”நமக்கு அறிவித்தார்” ”நம்மிடம் தெரிவித்தார்” ”நான் காதால் அவரிடம் செவியுற்றேன்” என்பது போல் அறிவிக்கப்படும் ஹதீஸ்களில் அறிவிப்பாளர் நம்பகமானவர்களாக இருந்தால் அப்படியே அதை ஏற்க வேண்டும். 

ஆனால் முஅன்அன் என்ற வகையில் அமைந்த ஹதீஸ்கள் பரிசீலனைக்குப் பிறகே ஏற்கப்படும். 

தக்லீஸ் செய்யும் வழக்கமுடையவராக அவர் இல்லாதிருந்து இவ்வாறு பயன்படுத்தினால் அதனால் ஹதீஸின் தரம் பாதிக்காது. ”அவர் வழியாக” ”அவர் மூலம்” என்றெல்லாம் இவர் பயன்படுத்துவதற்கும், நமக்கு அறிவித்தார் என்பதற்கும் இவரைப் பொறுத்தவரை வித்தியாசம் இல்லை.

அவர் தக்லீஸ் செய்யும் வழக்கமுடையவராக இருந்து இவ்வாறு அவர் அறிவித்தால். இவர் நேரடியாகச் செவியுற்றது வேறு வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளதா? என்று பார்க்க வேண்டும். நிரூபிக்கப்பட்டிருந்தால் ஏற்கலாம். அவ்வாறு நிரூபிக்கப்படாவிட்டால் அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது. 

அதாவது முஅன்அன் என்று கூறப்பட்டவுடன் அதை ஏற்கவோ மறுக்கவோ கூடாது. மாறாக ஆய்வு செய்த பின்னர் தான் அது பற்றி முடிவு செய்ய வேண்டும். 

3. முத்ரஜ் (இடைச் செருகல்):

ஹதீஸின் அறிவிப்பாளர், ஹதீஸை அறிவிக்கும்  போது ஹதீஸில் தனது வார்த்தையையும் சேர்த்துக் கூறி விடுவதுண்டு. 

”இந்த நேரத்தில்  இதை ஓது” என்ற கருத்தில்  ஒரு ஹதீஸ் இருப்பதாக  வைத்துக் கொள்வோம். இதை அறிவிக்கும்  அறிவிப்பாளர், இந்த நேரத்தில்  இதை ஓது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைத் தெரிவித்து விட்டு, “இவ்வளவு எளிமையான வணக்கத்தை விட்டு விடாதீர்கள்” என்று சுய கருத்தையும் கூறிவிடுவார். 

இத்தகைய இடைச்செருகல் உள்ள ஹதீஸ்கள் முத்ரஜ் எனப்படும். இத்தகைய  ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள்  கூறியது எது? இடைச் செருகல்  எது? என்பதைப் பிரித்து அறிந்து இடைச் செருகலை மட்டும்  விட்டு விட வேண்டும். 

வேறு அறிவிப்பைப் பார்த்தும் இடைச் செருகலைக் கண்டு  பிடிக்கலாம். 

இந்த அறிவிப்பாளரே பிரிதொரு சந்தர்ப்பத்தில், இது நபி (ஸல்) அவர்களின்  கூற்று அல்ல மாறாக என்னுடைய கூற்று தான் என்றோ அல்லது எனக்கு அறிவித்தவரின் சொந்தக் கூற்று என்றோ கூறுவதை வைத்தும் கண்டுபிடிக்கலாம். 

அல்லது இது நிச்சயம் நபி (ஸல்) அவர்கள்  கூறியதாக இருக்க முடியாது என்று முடிவு செய்யத் தக்க வகையில் அதன் கருத்து அமைந்திருப்பதை வைத்தும் கண்டு பிடிக்கலாம். 

அல்லது இத்துறையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட நல்லறிஞர்கள் எண்ணற்ற அறிவிப்புகளை ஆய்வு செய்து கூறும் முடிவின் அடிப்படையிலும் தெரிந்து கொள்ளலாம். 

பின்வரும் விதமாகவும் ஹதீஸ்கள் வகைப்படுத்தப்படுகின்றன. 

பலவீனமான ஹதீஸ்களின் மேலும் ஒரு வகை:

1. முள்தரப்:

குழப்பமானது என்று இதன் பொருள். 

முள்தரப் என்பதும் ஏற்கத் தகாத, பலவீனமான ஹதீஸ்களின் ஒரு வகையாகும். 

ஒரு ஆசிரியரிடமிருந்து ஒரு ஹதீஸைப் பல மாணவர்கள்  செவியுற்று, ஒருவர் மட்டும் மற்றவர்கள் அறிவிப்பதற்கு முரணாக அறிவித்தால் அது  ஷாத் எனப்படுகின்றது. என்பதை ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம். 

முள்தரப் என்பது ஓரளவு இது போன்றது தான் என்றாலும் இரண்டுக்கும் முக்கியமான வித்தியாசம்  உள்ளது. 

ஒரு குறிப்பிட்ட செய்தியைப் பலரும் அறிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் அறிவிப்பதற்கு மாற்றமாக சிலர் அறிவிக்கின்றார்கள். இவர்கள் ஒரு ஆசிரியர் வழியாக அறிவிக்கவில்லை. வெவ்வேறு ஆசிரியர் வழியாக இப்படி அறிவிக்கின்றார்கள் என்றால் அதற்கு முள்தரப் எனப்படும். 

ஒரு சம்பவம் மக்காவில் நடந்ததாக ஐந்து பேர் அறிவிக்க, மதீனாவில்  நடந்ததாக இரண்டு பேர் அறிவிக்கின்றார்கள் என்றால் இரண்டு பேர் அறிவிப்பது முள்தரப் எனப்படும். 

இந்த முடிவைக் கூட அவசரப்பட்டு எடுத்துவிடக் கூடாது. மக்காவிலும் மதீனாவிலும் இரு வேறு சந்தர்ப்பங்களில் நடந்திருக்க முகாந்திரமோ, ஆதாரமோ இருந்தால் அதை முள்தரப் என்று கூறக் கூடாது. 

முள்தரப் என்பது இன்னொரு வகையிலும் ஏற்படும். 

ஒரு அறிவிப்பாளர் நேற்று மக்காவில் நடந்ததாகக் கூறி விட்டு, இன்று மதீனாவில் நடந்ததாக அறிவித்தால் அதுவும் முள்தரப் (குழப்பத்தால் நேர்ந்த  தவறு) தான். 

கருத்துக்களில் முள்தரப் எனும் நிலை இருப்பது போலவே அறிவிப்பாளர் வரிசையிலும் இந்த நிலை ஏற்படலாம். 

இப்ராஹீம் எனக்கு அறிவித்தார் என்று  ஒரு செய்தியை அறிவித்த அறிவிப்பாளர் பின்னொரு சமயத்தில் அப்துல்  காதிர் அறிவித்ததாக மாற்றிக் கூறினால் இதுவும் முள்தரப் தான். பெயரில் குழப்பம் ஏற்பட்டதால் இவ்விருவர் அல்லாத மூன்றாவது ஒருவராகவும் அவர் இருக்கக் கூடும். அவர் பலவீனமானவராக இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது என்பதால் இது போன்ற நிலையில் அமைந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்வதில்லை. 

2. மக்லுாப் (மாறாட்டம்):

சில நேரங்களில் சில நிகழ்ச்சிகளை ஏறுக்கு மாறாகக் கூறி விடுவோம். இருப்பதாகக் கூறியதை இல்லை என்போம். இல்லை என்று கூறியதை உண்டு என்போம். இப்படி ஏறுக்கு மாறாகவும் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

பிலால் பாங்கு சொன்னால் சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம். இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொன்னால் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு நோன்பு பிடியுங்கள் என்ற ஹதீஸ் பலர் வழியாக பல நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சிலர், பிலால் இடத்தில் உம்மி மக்தூமையும், உம்மி மக்தூம் இடத்தில் பிலாலையும் போட்டு ஏறுக்கு மாறாக அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பாளர் நம்பகமானவர் என்றாலும் இத்தகைய தவறுகளிலிருந்து அப்பாற்பட்டவர்கள் இருக்கவே மாட்டார்கள். 

இது போன்ற ஹதீஸ்களையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது. 

கருத்தில் இப்படி ஏற்படுவது போல் அறிவிப்பாளர் விஷயத்திலும் ஏற்படலாம். ஆசிரியரைக் கூற வேண்டிய இடத்தில் மாணவரையும், மாணவரைக் கூற வேண்டிய இடத்தில் ஆசிரியரையும் போட்டு விடுவதுண்டு. 

3. மஜ்ஹுல் (யாரென அறியப்படாதவர்கள்):

ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் வரலாற்றுக் குறிப்பு இருக்க வேண்டும். அவ்வாறில்லாதவர்கள் மஜ்ஹுல் எனப்படுவர். 

இஸ்மாயீலின் மகன் ஈஸா என்பவர் அறிவித்ததாக நம்பகமானவர் கூறுகின்றார். நமது சக்திக்கு உட்பட்டு தேடிப் பார்த்தால் அப்படி ஒருவர் பற்றிய எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். இவர் மஜ்ஹுல் எனப்படுவார். 

அல்லது இப்படி ஒருவர் இருந்ததாகத் தெரிகின்றது. ஆனால் அவர் எப்போது பிறந்தார்? எப்போது மரணித்தார்? அவரது நம்பகத்தன்மை எத்தகையது? அவரது நினைவாற்றல் எப்படி? என்ற எந்த விபரமும் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம் இவரும் மஜ்ஹுல் தான்.  

ஒருவர் நம்பகமானவர் தானா? என்பதைத் தீர்மானிப்பதற்கு தேவையான தகவல் கிடைக்கப் பெறாத ஒவ்வொருவரும் மஜ்ஹுல் எனப்படுவர். 

இத்தகையோர் அறிவிக்கும் ஹதீஸ்களும் ஆதாரமாகக் கொள்ளப்படாது. இதன் அடிப்படையில் எந்தச் சட்டமும் எடுக்கப்படக் கூடாது. 

யாரைப் பற்றிய செய்தி என்ற அடிப்படையில் வகைப்படுத்துதல் 

இது வரை பலவீனமான ஹதீஸ்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன என்ற விபரத்தைப் பார்த்தோம். 

யாரைப் பற்றிய செய்தி என்பதைப் பொறுத்தும் ஹதீஸ்கள் பிரிக்கப்பட்டுள்ளன. 

யாருடைய சொல், செயல், அங்கீகாரம் அறிவிக்கப்படுகின்றது என்ற அடிப்படையில் ஹதீஸ்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. 

நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட செய்திகள் மர்பூஃவு என்றும்  

நபித்தோழர்கள் சம்பந்தப்பட்ட செய்திகள் மவ்கூஃப் என்றும் 

அதற்கடுத்த தலைமுறையினர் சம்பந்தப்பட்ட செய்திகள் மக்தூவு என்றும் கூறப்படும். 

இதை விரிவாகப் பார்ப்போம். 

1. முஸ்னத், மர்ஃபுவு:

முஸ்னத் என்றால் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர்கள் முழுமைப்படுத்தப்பட்டது என்று பொருள். மர்ஃபூவு என்றால் சேரும் இடம் வரை சேர்ந்தது என்று பொருள். 

முஸ்னத் என்பது அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் சூட்டப்பட்ட பெயர் இல்லை. நபி (ஸல்) அவர்களுடன் தொடர்பு படுத்திக் கூறப்படும் செய்திகளா? இல்லையா? என்ற அடிப்படையில் கூறப்பட்டது தான். 

முஸ்னதாக இருக்கும் ஹதீஸின் அறிவிப்பாளர்களில் அனைவருமோ அல்லது ஒருவரோ நம்பிக்கைக்குரியவராக இல்லாதிருக்கலாம். எனவே அது முஸ்னதாக இருந்தும் ஏற்கத்தகாத ஹதீஸாகி விடும். 

மர்ஃபூவு என்பதும் ஏறக்குறைய முஸ்னதைப் போன்றது தான். எனினும் இரண்டுக்கும் சிறிய வித்தியாசம் உள்ளது. 

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக – செய்ததாக அறிவிக்கப்படும் ஒரு ஹதீஸின் இடையில் எந்த அறிவிப்பாளரும் விடுபடாமல் இருந்தால் அது முஸ்னத் எனப்படும். 

மர்ஃபூவு எனக் கூறுவதற்கு இந்த நிபந்தனை இல்லை. அறிவிப்பாளர் இடையில் விடுபட்டிருக்கலாம். அல்லது விடுபடாமல் இருக்கலாம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது தான் மர்ஃபூவு என்பதன் முக்கிய நிபந்தனையாகும். 

மர்ஃபூவு எனக் கூறப்படும் ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடரும் ஆய்வு செய்யப்பட வேண்டும். மர்ஃபூவு என்று கூறியவுடன் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. 

2. மவ்கூஃப்:

சில ஹதீஸ்கள் மவ்கூஃப் என்று கூறப்படும். தடைபட்டு நிற்பது என்பது இதன் பொருள். இவை அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் சூட்டப்பட்டதன்று. 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல்லையோ, செயலையோ, அங்கீகாரத்தையோ அறிவிப்பவை தான் ஹதீஸ்கள் எனப்படும். 

அவ்வாறு இல்லாமல் ஒரு நபித்தோழர் இவ்வாறு செய்தார். இவ்வாறு சொன்னார் என்று ஒரு செய்தி அறிவிக்கப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். இச்செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படவில்லை. என்றால் மவ்கூஃப் எனப்படும். 

நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக நபித்தோழர் கூறியது நிரூபிக்கப்பட்டாலும் மார்க்கத்தில் அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது. 

அல்லாஹ்வும் அவனது திருத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறியவை மட்டும் தான் ஆதாரமாக ஆக முடியும். மற்றவர்களின் கூற்று எவ்வளவு நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் நபித்தோழர்களின் கூற்று என்பது தான் உறுதியாகுமே தவிர அது நபிகள் நாயகத்துடன் சம்பந்தப்படாது. 

சில செய்திகள் மேலோட்டமாகப் பார்க்கும் போது மவ்கூஃப் போன்று தோற்றமளித்தாலும் அதை மவ்கூஃப் என்று கூற முடியாத வகையில் அமைந்திருக்கும். 

”நாங்கள் நபி (ஸல்) காலத்தில் இப்படிச் செய்தோம்” 

”எங்களுக்கு இவ்வாறு கட்டளையிடப் பட்டிருந்தது” என்பது போன்ற வாசகங்களைப் பயன்படுத்தி நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாரும் நபித்தோழர்களுக்கு மார்க்கக் கட்டளை பிறப்பித்திருக்க முடியாது. 

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நபித்தோழர்கள் ஒன்றைச் செய்தார்கள் என்று கூறப்பட்டால் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டும் தடுக்கவில்லை என்று பொருள் கொள்ள வேண்டும். எனவே இதை மவ்கூஃப் என்று கூறக் கூடாது என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். சிலர் இதற்கு மாற்றுக் கருத்தும் கொள்கின்றனர். 

மவ்கூஃபுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் சொல் மர்ஃபூவு என்பதாகும். 

மர்ஃபூவு என்றால் நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட செய்தியாகும். மவ்கூஃப் என்றால் நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்படாத செய்தி என்று பொருள். 

3. மக்தூவு (முறிக்கப்பட்டது):

நபித்தோழர்களின் சொல், செயல்களைக் கூறும் ஹதீஸ்கள் மவ்கூஃப் என்று கூறுவது போல், நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையினரான தாபியீன்களின் சொல், செயல்களைக் கூறும் ஹதீஸ்கள் மக்தூவு எனப்படும். நபித்தோழர்களின் கூற்றே மார்க்க ஆதாரமாக ஆகாது எனும் போது அவர்களுக்கு அடுத்த தலைமுறையினரின் சொல்லோ, செயலோ மார்க்க ஆதாரமாக ஆகாது என்பதில் சந்தேகம் இல்லை. 

அறிவிப்பவரின் எண்ணிக்கை அடிப்படையில் வகைப்படுத்துதல்: 

எத்தனை நபர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் ஹதீஸ்கள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. 

1. முதவா(த்)திர் (ஒருமித்து அறிவிக்கப்படுவது):

ஒரு செய்தியை ஒருவர். இருவர் அல்ல. ஏராளமானவர்கள் அறிவிக்கின்றனர். ஒவ்வொரு கால கட்டத்திலும் இவ்வாறு ஏராளமானவர்கள் அறிவித்துள்ளனர் என்றால் இத்தகைய செய்திகளை முதவா(த்)திர் என்று கூறுவர். 

மக்கா என்றொரு நகரம் உள்ளது என்பதை ஒவ்வொரு காலகட்டத்திலும் எண்ணற்றவர்கள் அறிவித்துள்ளனர். பத்ருப் போர் என்றொரு போர் நடந்தது என்பது இது போல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்திகள் ஹதீஸ்களிலேயே மிகவும் பலமானவை. எக்காரணம் கொண்டும் நிராகரிக்கப்பட முடியாதவை. 

நம்பகமான ஒருவர் மூலம் உங்களுக்கு ஒரு ஹதீஸ் கிடைக்கின்றது. அதை நீங்கள் ஒரு லட்சம் பேருக்கு அறிவிக்கின்றீர்கள். அந்த ஒரு லட்சம் பேரும் அடுத்த தலைமுறையினருக்கு அறிவிக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். இது முதவா(த்)திர் என்று கருதப்படாது. ஏனெனில் அந்த ஒரு லட்சம் பேரும் உங்களில் ஒரவர் வழியாகத் தான் அறிந்தனர். நீங்கள் ஒரே ஒருவர் மூலமாகத் தான் அறிந்தீர்கள். எல்லா மட்டத்திலும் ஏராளமான பேர் அறிவித்தால் மட்டுமே அதை முதவா(த்)திர் எனலாம். 

குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு வந்தது என்பதை ஏராளமான நபித்தோழர்கள் அறிவித்தனர். அவர்களிடம் கேட்ட ஏராளமான தாபியீன்கள் ஏராளமான தபவுத் தாபியீன்களுக்கு அறிவித்தனர். இப்படியே தொடர்ந்து இந்தச் செய்தி நம்மை வந்தடைந்துள்ளது. இன்றைக்கு 150 கோடி முஸ்லிம்களும் இந்தச் செய்தியை அடுத்த தலைமுறையினருக்கு அறிவிக்கின்றார்கள். இது தான் முதவா(த்)திர் எனப்படும். 

குர்ஆனை அல்லாஹ்வுடைய வேதம் என்று முதவா(த்)திரான ஹதீஸ்களின் துணையுடன் நம்புகிறோம். 

இப்படி அமைந்த ஹதீஸ்கள் மிகவும் அரிதாகவே உள்ளன. அதற்கு உதாரணம் காட்டும் அறிஞர்கள் அனைவரும். ”யார் என் பெயரால் ஒரு செய்தியை இட்டுக் கட்டிக் கொள்ளட்டும்” என்ற ஹதீஸைத் தான் உதாரணம் காட்டுகின்றனர். இதை அறுபதுக்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர். இப்படியே தலைமுறைதோறும் எண்ணற்றவர்கள் வழியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. 

2. ஹபருல் வாஹித் (தனி நபர் அறிவிப்பது)

தலைமுறை தோறும் எண்ணற்றவர்கள் வழியாக அறிவிக்கப்படாத ஹதீஸ்களை ஹபருல் வாஹித் என்பர். தனி நபர்களின் அறிவிப்பு என்பது இதன் பொருள். 

இதையும் பல வகைகளாகப் பிரித்துள்ளனர். மஷ்ஹுர், கரீப், அஸீஸ் என்று பல வகைகளாகப் பிரித்துள்ளனர். 

இவையெல்லாம் எத்தனை அறிவிப்பாளர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் உள்ளனர் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டவையாகும். நம்பகமானவர்களா? இல்லையா? என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டவை அல்ல. 

எந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளலாம்? என்பதை அறிந்திட மேற்கண்ட விபரங்களே போதுமானவையாகும். இவை தவிர இன்னும் பல அம்சங்களைக் கருத்தில் கொண்டு ஹதீஸ்களை வகைப்படுத்தியுள்ளனர். விரிவஞ்சி அவற்றைத் தவர்த்துள்ளோம். 

ஆதார நூற்கள்:

இதுவரை நாம் கூறிய விபரங்களில் வேறு விதமான விளக்கங்களும் கூறப்பட்டுள்ளன. இப்னு ஜமாஆ, சுயூத்தி ஆகிய அறிஞர்களின் வகைப்படுத்துதலே எளிமையாக உள்ளதால் அதன் அடிப்படையிலேயே இந்த விபரங்களை முன் வைத்துள்ளோம். சுயூத்தியின் தத்ரீபுர்ராவீ, இப்னு ஜமாஆவின் அல்மன்ஹல் ஆகிய நூற்களே இந்நூலுக்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்டுள்ளன.


முற்றும்.


குறிப்பு:

சகோதரர் பீஜே அவர்கள் எழுதிய 'சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்' என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்த புத்தகத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்.