Friday, August 31, 2012

பெண்கள் முகத்தை மூட வேண்டுமா ?

பெண்கள் முகத்தை மூட வேண்டுமா ?





ஒரு ஆய்வாளர் தன்னுடைய வாதங்களையும் எடுத்து வைப்பதோடு எதிர் கருத்தில் உள்ளவர்கள் ஆதாரமாகக் கருதும் விஷயங்களுக்கும் பதில் அளிப்பது அவருடைய கடமை. ஆனால் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டியதில்லை என்பதற்கு நாம் சுட்டிக்காட்டும் ஆதாரங்கள் எதற்கும் இவர்கள் பதிலளிக்கவில்லை

இவர்களுடைய வாதங்களுக்கு சரியான விளக்கத்தை அறிந்து கொள்வதற்கு முன்னால் பெண்கள் முகத்தை மறைப்பது தொடர்பாக நமது நிலைபாட்டை அறிந்து கொள்ள வேண்டும். 

பெண்கள் முகத்திரை அணிவது கட்டாயமில்லை:

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் முகத்தைத் திறந்து இருந்ததற்கு பல சான்றுகள் உள்ளது. 

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன் அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழகை நடத்தினார்கள் பாங்கோ இகாமத்தோ இல்லை. பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்து கொண்டு இறையச்சத்தைக் கடைப்பிடிக்குமாறும் இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் கட்டுப்படுமாறும் வலியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வழங்கினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு பெண்கள் பகுதிக்கு சென்று அவர்களுக்கும் நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள். மேலும் பெண்களை நோக்கி தர்மம் செய்யுங்கள் நீங்கள் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவிர்கள் என்று கூறினார்கள். அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மனி எழுந்து ஏன் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் அதிகமாக குறை கூறுகின்றீர்கள். நன்றி மறந்து கணவனை நிராகரிக்கின்றீர்கள் என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள் தம் காதனிகள் மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்கனை பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போட்டார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (1612)

கண்ணங்கள் கருத்த பெண்மனி என்று ஜாபிர்(ரலி) அவர்கள் குறிப்பிடுவதாக இருந்தால் அப்பெண்ணின் முகம் திறந்திருந்தாலே இது சாத்தியம். 

பெண்கள் முகத்தை மறைப்பது கட்டாயமாக இருந்திருந்தால் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னிலையில் நபித்தோழியர்கள் முகத்தைத் திறந்திருக்கமாட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் இதைக் கண்டிக்காமல் இருக்க மாட்டார்கள். பெண்கள் முகத்தை மறைக்க வேண்டியதில்லை என்பதாலே இதை நபி (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை. 

('விடைபெறும்' ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகானவராயிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அüப்பதற்காகத் தமது வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) 'கஸ்அம்' குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபி (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்த போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்லின் முகவாயைத் தமது கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்க விடாமல் அவரது முகத்தைத் திருப்பி விட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (6228)

அழகான பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார் எனக் கூறுவதாக இருந்தால் அப்பெண்ணின் முகம் திறந்திருந்தாலே இது சாத்தியம். நபியவர்களிடம் வந்த பெண்ணை ஃபள்ல் (ரலி) அவர்கள் கூர்ந்து பார்த்தார்கள் என்றும் இந்த ஹதீஸ் கூறுகின்றது. 

இந்நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் ஃபள்ல் (ரலி) அவர்களின் முகத்தைத் திருப்பி விடுகிறார்களே தவிர முகத்தை மூடிக்கொள்ளுமாறு அப்பெண்ணுக்கு நபியவர்கள் உத்தரவு போடவில்லை. எனவே பெண்கள் முகத்தை மூட வேண்டியதில்லை என்பதை இந்தச் செய்தி தெள்ளத் தெளிவாக கூறுகின்றது.

3991حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ عَنْ يَحْيَى عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ذُكِرَ لَهُ أَنَّ سَعِيدَ بْنَ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ وَكَانَ بَدْرِيًّا مَرِضَ فِي يَوْمِ جُمُعَةٍ فَرَكِبَ إِلَيْهِ بَعْدَ أَنْ تَعَالَى النَّهَارُ وَاقْتَرَبَتْ الْجُمُعَةُ وَتَرَكَ الْجُمُعَةَ وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ أَنَّ أَبَاهُ كَتَبَ إِلَى عُمَرَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَرْقَمِ الزُّهْرِيِّ يَأْمُرُهُ أَنْ يَدْخُلَ عَلَى سُبَيْعَةَ بِنْتِ الْحَارِثِ الْأَسْلَمِيَّةِ فَيَسْأَلَهَا عَنْ حَدِيثِهَا وَعَنْ مَا قَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ اسْتَفْتَتْهُ فَكَتَبَ عُمَرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْأَرْقَمِ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ يُخْبِرُهُ أَنَّ سُبَيْعَةَ بِنْتَ الْحَارِثِ أَخْبَرَتْهُ أَنَّهَا كَانَتْ تَحْتَ سَعْدِ بْنِ خَوْلَةَ وَهُوَ مِنْ بَنِي عَامِرِ بْنِ لُؤَيٍّ وَكَانَ مِمَّنْ شَهِدَ بَدْرًا فَتُوُفِّيَ عَنْهَا فِي حَجَّةِ الْوَدَاعِ وَهِيَ حَامِلٌ فَلَمْ تَنْشَبْ أَنْ وَضَعَتْ حَمْلَهَا بَعْدَ وَفَاتِهِ فَلَمَّا تَعَلَّتْ مِنْ نِفَاسِهَا تَجَمَّلَتْ لِلْخُطَّابِ فَدَخَلَ عَلَيْهَا أَبُو السَّنَابِلِ بْنُ بَعْكَكٍ رَجُلٌ مِنْ بَنِي عَبْدِ الدَّارِ فَقَالَ لَهَا مَا لِي أَرَاكِ تَجَمَّلْتِ لِلْخُطَّابِ تُرَجِّينَ النِّكَاحَ فَإِنَّكِ وَاللَّهِ مَا أَنْتِ بِنَاكِحٍ حَتَّى تَمُرَّ عَلَيْكِ أَرْبَعَةُ أَشْهُرٍ وَعَشْرٌ قَالَتْ سُبَيْعَةُ فَلَمَّا قَالَ لِي ذَلِكَ جَمَعْتُ عَلَيَّ ثِيَابِي حِينَ أَمْسَيْتُ وَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَأَفْتَانِي بِأَنِّي قَدْ حَلَلْتُ حِينَ وَضَعْتُ حَمْلِي وَأَمَرَنِي بِالتَّزَوُّجِ إِنْ بَدَا لِي رواه البخاري

உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

என் தந்தை அப்துல்லாஹ் பின் உத்பா அவர்கள், உமர் பின் அப்தில்லாஹ் பின் அர்கம் அஸ்ஸுஹ்ரீ அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். அதில் சுபைஆ பின்த் ஹாரிஸ் அல் அஸ்லமிய்யா (ரலி) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சுபைஆ மார்க்கத் தீர்ப்பு கேட்டது பற்றியும், அதற்கு அவர்கள் அளித்த பதில் பற்றியும் கேட்டு எழுதுமாறு பணித்திருந்தார்கள். (அதன்படி, சுபைஆ ரலி அவர்கüடம் சென்று) உமர் பின் அப்தில்லாஹ் அவர்கள் (கேட்டறிந்து என் தந்தை) அப்துல்லாஹ் பின் உத்பா அவர்களுக்கு(ப் பின்வருமாறு பதில்) செய்தி அனுப்பினார்கள்:

சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் அவர்கள் 'பனூ ஆமிர் பின் லுஅய்' குலத்தைச் சேர்ந்த சஅத் பின் கவ்லா (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார். சஅத் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்டவராவார். 'விடைபெறும் ஹஜ்ஜின் போது சஅத் (ரலி) அவர்கள் இறந்து விட்டார்கள். அப்போது 'சுபைஆ' கர்ப்பமுற்றிருந்தார். சஅத் அவர்கள் இறந்து நீண்ட நாட்கள் ஆகியிருக்கவில்லை; (அதற்குள்) சுபைஆ பிரசவித்து விட்டார். (பிரசவத்திற்குப் பின் ஏற்படும்) உதிரப்போக்கிலிருந்து சுபைஆ அவர்கள் சுத்தமான போது, பெண் பேச வருபவர்களுக்காகத் தன்னை அலங்கரித்துக் கொண்டார். அப்போது, பனூ அப்தித் தார் குலத்தில் ஒருவரான 'அபுஸ் ஸனாபில் பின் பஅக்கக்' (ரலி) அவர்கள் சுபைஆ அவர்களிடம் வந்து, ''திருமணம் புரியும் ஆசையில் பெண் பேச வருபவர்களுக்காக உங்களை நீங்கள் அலங்கரித்திருப்பதை நான் காண்கின்றேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (கணவன் இறந்த ஒரு பெண் அவனது இறப்புக்குப் பின் இருக்க வேண்டிய 'இத்தா' காலமாகிய) நான்கு மாதம் பத்து நாட்கள் முடியும் வரையில் நீங்கள் (மறு)மணம் புரிந்து கொள்ள முடியாது'' என்று கூறினார்கள். சுபைஆ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இதை அபுஸ்ஸனாபில் என்னிடம் சொன்னதையடுத்து நான் மாலை நேரத்தில் எனது உடையை உடுத்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்களிடத்தில் இது பற்றிக் கேட்டேன். அதற்கு, 'நீ பிரசவித்து விட்ட போதே (மணம் புரிந்து கொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகிவிட்டாய். நீ விரும்பினால் (மறு)மணம் செய்துகொள்' என்று நபி (ஸல்) அவர்கள் மார்க்கத் தீர்ப்பு வழங்கினார்கள்.

புகாரி (3991)

இந்தச் செய்தியில் சுபைஆ (ரலி) அவர்கள் அலங்காரம் செய்திருந்தார் என்று பொதுவாகக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் எந்த அலங்காரம் செய்திருந்தார்கள் என்பதை அஹ்மதில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் தெளிவுபடுத்துகின்றன. 

26166 26167 ஆகிய எண்களில் அஹ்மதில் பதிவாகியுள்ள அறிவிப்புகளில் சுபைஆ (ரலி) அவர்கள் கண்ணுக்கு சுர்மா இட்டிருந்ததாகவும் கையில் மருதாணி பூசியிருந்ததாகவும் இதை அந்நியரான அபுஸ்ஸனாபில் பார்த்துவிட்டு நபியவர்களிடம் கூறியதாவும் சொல்லப்பட்டுள்ளது. சுபைஆ (ரலி) அவர்கள் செய்ததை நபியவர்கள் கண்டிக்கவில்லை. 

எனவே பெண் தனது முகத்தையும் தனது முன் கையையும் வெளிப்படுத்திக் கொள்ள இந்தச் செய்தி தெளிவான ஆதாரமாக அமைந்துள்ளது. 

முகத்தை மறைப்பதில் தவறில்லை:

பெண்கள் முகத்தை மறைப்பது கட்டாயம் இல்லை என்றே நாம் கூறுகின்றோம். அதே நேரத்தில் ஒரு பெண் தனது சுயவிருப்பத்தின் அடிப்படையில் தனது முகத்தை மறைத்துக் கொண்டால் அது மார்க்க அடிப்படையில் தவறல்ல. 

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சில பெண்கள் தங்கள் முகங்களை மறைத்துக் கொள்ளும் வழக்கமும் இருந்துள்ளது. அதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்யவில்லை. 

இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரையை அணியக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி (1838)

முகத்திரை அணியும் வழக்கம் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்ததால் இஹ்ராமின் போது மாத்திரம் அதை அணியக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே இஹ்ராம் அணியாத மற்ற பெண்கள் முகத்திரை அணிவதற்குத் தடை இல்லை என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். 

பெண்கள் முகத்தை மறைப்பது கட்டாயமில்லை என்பதும் இந்த ஹதீஸிலிருந்து விளங்குகிறது. ஏனென்றால் பெண்களின் முகம் மறைக்கப்பட வேண்டிய பகுதியாக இருந்தால் ஹஜ்ஜின் போது அதை வெளிப்படுத்த வேண்டும் என்று நபியவர்கள் உத்தரவிட மாட்டார்கள். 

பெண்கள் முகத்தை மறைப்பது மார்க்க அடிப்படையில் தவறில்லை என்றாலும் முகத்தை மறைப்பதால் தற்காலத்தில் ஏற்படும் தீமைகளையும் நமது கவனத்தில் கொள்ள வேண்டும். 

ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக் குறைவே! பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்புப் பாதிக்கப்படும் என்பது தான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இது தான் காரணம்.

ஒரு பெண் முகத்தையும் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் எனும் போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். மற்றவர்கள் பார்த்து ரசிப்பார்கள் என்பதற்காக முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.

பெண்கள் தாம் என்று இல்லை. ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுய ரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லாவிட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்ட வேண்டும். 

தவறு செய்ய நினைப்பவர்கள் இந்த முகத்திரையைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு துணிச்சலாகச் செயல்படுகிறார்கள். எனவே தான் முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடவில்லை.

மார்க்கத்தில் முகத்தை மறைக்காமல் இருப்பதற்கு அனுமதி உள்ளது போல் முகத்தை மறைத்துக் கொள்ளவும் அனுமதி உள்ளது. அனுமதிக்கப்பட்ட காரியங்களின் மூலம் கேடுகள் ஏற்படுமானால் அந்தக் கேடுகளின் காரணமாக அதைத் தவிர்ப்பதும் மார்க்கத்தின் ஒரு அம்சமாகும். அதிகக் கொழுப்புள்ள உணவுகள் அனுமதிக்கப்பட்டவை என்றாலும் உடலுக்கு அது நல்லதல்ல என்றால் அதை நாம் தவிர்ப்பதே நல்லதாகும். பெண்கள் முகத்தை மறைப்பதால் ஏற்படும் கேடுகள் நமக்கு பளிச் சென்று தெரிகின்றன. 

முகத்தை மறைத்துக் கொள்வதைக் கேடயமாகப் பயன்படுத்தி கூடாத செயலில் பெண்கள் ஈடுபடுதல்
கேடுகெட்ட பெண்கள் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முகம் மறைப்பதைக் கேடயமாகப் பயன்ப்டுத்திக் கொள்வது.

ஆண்கள் கூட பெண்களைப் போல் முகத்தை மூடிக் கொண்டு தீய கரியங்களில் ஈடுபடுவது.

இப்படி பலவாறான கேடுகள் ஏற்படும் போது எதைல் கேடு இல்லையோ அதைத் தான் நாம் தேர்வு செய்ய வேண்டும்.

முகம் மறைக்காமல் இருப்பதால் ஏற்படும் கேடுகளை விட மறைப்பதால் ஏற்படும் கேடுகள் மிக அதிகமாகும்.

முகத்தை மறைத்து ஆக வேண்டும் என்று மார்க்கத்தில் கட்டளை இருந்தால் அப்போது விளைவுகளை நாம் கவனிக்கக் கூடாது. இரண்டும் அனுமதிக்கப்பட்ட காரிய்ங்களில் மட்டும் எதில் கேடுகள் உள்ளதோ அதைத் தவிர்க்கத் தான் வேண்டும். இந்த அடிப்படையில் தான் பெண்கள் முகம் மறைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று நாம் கூறுகிறோம்

தவறான வாதங்களுக்கு சரியான விளக்கம்:

சகோதரர் தனது கருத்துக்கு அறிஞர்களின் கூற்றுக்களையும் ஆதாரமாகச் சுட்டிக் காட்டுகிறார். இவருடைய கருத்துக்கு மாற்றமாக பெண்கள் முகத்தை மறைக்க வேண்டியதில்லை எனவும் அதிகமான அறிஞர்கள் கூறியுள்ளனர். அறிஞர்களின் கூற்றுக்கள் மார்க்க ஆதாரமாக முடியாது என்பதால் இதில் நாம் மூழ்க வேண்டியதில்லை. 

குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டின் அடிப்படையில் மட்டும் அவர் எழுப்பிய வாதங்களுக்கு சரியான விளக்கத்தைப் பார்ப்போம். 

يَاأَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا(59)33

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் (33 : 59)

கண்களைத் தவிர்த்து முகம் உட்பட உடலின் அனைத்து பாகங்களையும் மறைக்க வேண்டும் என்று இவ்வசனம் கூறுவதாகச் சகோதரர் வாதிடுகிறார். 

இவ்வசனத்தில் முகத்தை மறைக்க வேண்டும் என்று கூறப்படவில்லை. பொதுவாக முக்காடுகளைத் தொங்க விட வேண்டும் என்ற கட்டளை மட்டுமே இவ்வசனத்தில் இடப்படுகின்றது. 

திருக்குர்ஆனுக்கு விளக்கமாக ஹதீஸ்கள் அமைந்துள்ளன. இவ்வசனத்தில் கூறப்படும் முக்காடுகளால் மறைக்கப்பட வேண்டிய பகுதியில் முகமும் முன் கையும் அடங்காது என்றும் முகமும் முன்கையும் வெளிப்படுத்த அனுமதிக்கப்பட்ட பகுதி என்றும் மேலே நாம் சுட்டிக்காட்டிய ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன. 

இதற்கு மாற்றமாக பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்பதே இவ்வசனத்தின் பொருள் எனக் கூறினால் பெண்கள் முகத்தை வெளிப்படுத்தலாம் எனக் கூறும் ஹதீஸ்களை மறுக்க வேண்டிய நிலை ஏற்படும். அல்லது திருக்குர்ஆன் வசனத்துக்கு மாற்றமான ஒரு காரியத்தை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்தார்கள் என்ற தவறான கருத்து உருவாகும். எனவே அந்த ஹதீஸ்களுக்கும் இந்த வசனத்துக்கும் முரணில்லாத வகையில் நாம் முன்பு கூறியவாறு விளங்குவதே சரி.

பெண்கள் தங்களுடைய கண்களை மட்டும் வெளிப்படுத்தலாம் என சகோதரர் மேற்கண்ட வசனத்துக்கு விளக்கம் அளித்துள்ளார். பெண்கள் கண்களை மட்டும் வெளிப்படுத்திக் கொள்ளலாம் என்று விதிவிலக்கு கொடுப்பதற்கு இவரது சுயவிருப்பத்தைத் தவிர இவ்வசனத்தில் வேறு எந்த ஆதாரமும் இல்லை. 

எனவே இவ்வசனத்தில் நமது மனோ இச்சை அடிப்படையில் விதிவிலக்கு அளிப்பதை விட ஹதீஸ்கள் அடிப்படையில் பெண்கள் முகத்தையும் முன்கையையும் வெளிப்படுத்தலாம் என விதிவிலக்கு அளிப்பதே சரியானது. 

மேற்கண்ட வசனத்தில் முக்காடுகள் என்று மொழி பெயர்த்துள்ள இடத்தில் ஜலாபீப் என்ற பன்மைச் சொல் இடம் பெற்றுள்ளது. ஜில்பாப் என்பது இதன் ஒருமையாகும். 

இவ்வசனம் இறங்கியவுடன் நபித்தோழியர்கள் தங்களுடைய முகங்களை துணியால் மறைத்துக் கொண்டதாக ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வசனத்துக்கு விளக்கம் கூறினார்கள் என சகோதரர் கூறினார். ஆனால் இவர் கூறியது போல் புகாரியில் எந்தச் செய்தியும் இடம்பெறவில்லை. 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக பின்வரும் செய்தி மட்டுமே புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

4759 حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ عَنْ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا كَانَتْ تَقُولُ لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ أَخَذْنَ أُزْرَهُنَّ فَشَقَّقْنَهَا مِنْ قِبَلِ الْحَوَاشِي فَاخْتَمَرْنَ بِهَا رواه البخاري

ஸஃபிய்யா பின்த் ஷைபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

''(நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கüடம் கூறுக:) அவர்கள் தங்களின் மார்புகள் மேல் தங்களின் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்'' எனும் (24:31ஆவது) வசனம் இறங்கிய போது பெண்கள் தங்கள் கீழ் அங்கிகளின் ஓரத்தைக் கிழித்து அதனைத் துப்பாட்டா ஆக்கி (மறைத்து)க் கொண்டார்கள்.

புகாரி (4759)

33 : 59 வது வசனத்துக்கு விளக்கமாக ஆயிஷா (ரலி) அவர்கள் இந்தச் செய்தியைக் கூறியதாக சகோதரர் கூறினார். ஆனால் ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த வசனத்துக்கு இவ்வாறு விளக்கம் கூறவில்லை. மாறாக 24 : 31 ஆவது வசனத்துக்கே மேற்கண்டவாறு விளக்கம் அளித்துள்ளார்கள். 

அவர்கள் அறிவித்துள்ள இந்தச் செய்தியில் முகத்தை மறைப்பது பற்றி எந்தத் தகவலும் இடம் பெறவில்லை. எனவே சகோதரர் இதைத் தவறுதலாக கூறியிருப்பார் என்றே நாம் நல்லெண்ணம் வைக்கின்றோம். 

பலவீனமான செய்திகள்:

33 : 59 ஆவது வசனம் பெண்கள் தங்கள் முகங்களை மறைக்க வேண்டும் எனக் கூறுவதாக இப்னு அப்பாஸ் கூறினார்கள் என சகோதரர் கூறியிருந்தார். 

இவ்வாறு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக இமாம் தப்ரீ அவர்கள் எழுதிய ஜாமிஉல் பயான் எனும் நூ­ல் ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. 

جامع البيان في تفسير القرآن للطبري سورة الأحزاب

القول في تأويل قوله تعالى : يا أيها النبي قل لأزواجك حديث : ‏26266‏

ذكر من قال ذلك : حدثني علي ، قال : ثنا أبو صالح ، قال : ثني معاوية ، عن علي ، عن ابن عباس ، قوله : يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ' أمر الله نساء المؤمنين إذا خرجن من بيوتهن في حاجة أن يغطين وجوههن من فوق رءوسهن بالجلابيب ، ويبدين عينا واحدة '

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : 

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் (33 : 59)

இறைநம்பிக்கையாளர்களின் பெண்கள் ஒரு தேவைக்காக தங்களுடைய வீடுகளிலிருந்து வெளியே செல்லும் போது அவர்கள் தங்கள் முகங்களை முக்காடுகளால் தலையின் மேற்புறத்திலிருந்து மூடிக் கொள்ள வேண்டும் என அல்லாஹ் (இவ்வசனத்தில்) அப்பெண்களுக்கு உத்தரவிடுகிறான். 

நூல் : ஜாமிஉல் பயான்

இதன் அறிவிப்பாளர் தொடரில் அபூ ஸா­ஹ் என்பவர் இடம் பெறுகின்றார். அறிஞர்களின் கூற்றுப்படி இவர் பலவீனமானவர் ஆவார். 

இவர் அதிகம் தவறிழைப்பவர் என்று இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார். இவரிடம் பலவீனம் இருப்பதாக இமாம் தஹபீ தெரிவித்துள்ளார். இவர் நம்பகமானவர் இல்லை என இமாம் நஸாயீ தெரிவித்துள்ளார். 

இவ்வசனத்தின் விளக்கத்தை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அலீ பின் அபீ தல்ஹா என்பவர் அறிவிக்கின்றார். அலீ பின் அபீ தல்ஹா திருக்குர்ஆனின் விளக்கம் தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து எதையும் நேரடியாகச்செவியுறவில்லை என துஹைம் என்ற அறிஞர் கூறியுள்ளார். 

மேற்கண்ட செய்தி திருக்குர்ஆனின் விளக்கம் தொடர்பானதாகும். இதை இவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக செவியுறவில்லை. இவருக்கும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் இடையில் யாரோ விடுபட்டுள்ளார்கள். எனவே இச்செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் முறிவு இருப்பதாலும் அறிவிப்பாளர் அபூ ஸா­ஹ் பலவீனமானவர் என்பதாலும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

ஒரு பேச்சுக்கு இந்தச் செய்தி சரி என்று ஏற்றுக் கொண்டாலும் இதை ஆதாரமாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் இவ்வசனத்துக்கு இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கம் கொடுக்கவில்லை. மாறாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களே விளக்கம் கொடுத்துள்ளார்கள். நபித்தோழர்கள் கூறும் விளக்கங்களை நாம் ஏற்க வேண்டும் என மார்க்கம் நமக்குக் கூறவில்லை. இந்த விளக்கம் பல நபிமொழிகளுக்கு மாற்றமாக இருப்பதால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

அடுத்து சகோதரர் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்பதற்குப் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகிறார். 

1562حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا هُشَيْمٌ أَخْبَرَنَا يَزِيدُ بْنُ أَبِي زِيَادٍ عَنْ مُجَاهِدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ الرُّكْبَانُ يَمُرُّونَ بِنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْرِمَاتٌ فَإِذَا حَاذَوْا بِنَا سَدَلَتْ إِحْدَانَا جِلْبَابَهَا مِنْ رَأْسِهَا عَلَى وَجْهِهَا فَإِذَا جَاوَزُونَا كَشَفْنَاهُ رواه أبو داود

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

(பெண்களாகிய) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் இருந்த போது ஒட்டகத்தில் பயணிப்பவர்கள் எங்களை கடந்து சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் எங்களுக்கு அருகில் வரும் போது தலையில் உள்ள முக்காட்டை முகத்தின் மீது போட்டுக் கொள்வோம். அவர்கள் எங்களை கடந்து சென்றுவிட்டால் முக்காட்டை அகற்றிக் கொள்வோம்.

அபூதாவுத் (1562)

இந்த செய்தியில் யஸீத் பின் அபீ ஸியாத் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்று இமாம் அஹ்மது பின் ஹம்பள், இமாம் யஹ்யா பின் முயீன், இமாம் அபூ சுர்ஆ, இமாம் அபூ ஹாதிம், இமாம் இப்னு அதீ ஆகியோர் கூறியுள்ளனர். எனவே இது பலவீனமான செய்தி. 

ஒரு பேச்சுக்கு இந்தச் செய்தியை ஏற்றுக் கொண்டால் கூட இதை வைத்து பெண்கள் முகத்தை மூடுவது கட்டாயம் என்று கூற முடியாது. ஏனென்றால் இந்தச் செய்தியில் ஆண்கள் பெண்களைக் கடந்து செல்லும் போது பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிடவில்லை. நபித்தோழியர்களே சுயமாகவே இவ்வாறு செய்கின்றனர். 

எனவே அதிகபட்சமாக இந்தச் செய்தியை வைத்து பெண்கள் முகத்தை மூடுவது தவறல்ல என்று வாதிடமுடியுமே தவிர முகத்தை அவசியம் மூட வேண்டும் என்று வாதிட முடியாது. எனவே இது நமக்கு எதிரான ஆதாரமல்ல. 

ஆதாரத்திற்கு தகுதியற்றவை:

குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே மார்க்கப் பிரச்சனைகளுக்கு ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளப்படும். இதை விடுத்து நபித்தோழர்களின் கூற்றுக்களையோ அவர்களுக்குப் பின்னால் வந்தவர்களின் கூற்றுக்களையோ ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. 

ஆனால் சகோதரர் பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்பதற்கு நபித்தோழர்களின் கூற்றுக்களையும் அவர்களுக்குப் பின்னால் வந்தவர்களின் கூற்றுக்களையும் ஆதாரமாக காட்டியுள்ளார். 

جامع البيان في تفسير القرآن للطبري سورة الأحزاب

القول في تأويل قوله تعالى : يا أيها النبي قل لأزواجك حديث : ‏26268‏48197 

حدثني يعقوب ، قال : ثنا هشيم ، قال : أخبرنا هشام ، عن ابن سيرين ، قال : سألت عبيدة ، عن قوله : قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن قال : ' فقال بثوبه ، فغطى رأسه ووجهه ، وأبرز ثوبه عن إحدى عينيه ' وقال آخرون : بل أمرن أن يشددن جلابيبهن على جباههن *

இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : 

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! என்ற வசனம் குறித்து நான் உபைதா பின் அம்ர் (ரஹ்) அவர்களிடம் வினவினேன். அதற்கு அவர்கள் தனது ஆடையைக் கொண்டு தனது இரு கண்களில் ஒன்றை மட்டும் வெளிப்படுத்தி தன் தலையையும் முகத்தையும் மூடிக்காட்டி(இவ்வாறு பெண்கள் முக்காடு அணிய வேண்டும் என்று கூறினார்கள். 

நூல் : ஜாமிஉல் பயான் 

முகத்தில் ஒரு கண்ணை மட்டும் திறந்து மற்ற அனைத்தையும் மூட வேண்டும் எனக் கூறிய அம்ர் என்பவர் நபித்தோழர் அல்ல. தாபியீன் ஆவார். இவ்வசனத்துக்கு இவர் கூறிய விளக்கம் பெண்கள் முகத்தைத் திறக்கலாம் என்று கூறும் ஹதீஸ்களுடன் முரண்படுகின்றது. இவ்விளக்கத்தை இவர் சுயமாகத் தெரிவிக்கின்றார். எனவே இதை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. 

அடுத்து சகோதரர் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டியுள்ளார். 

634 و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ أَنَّهَا قَالَتْ كُنَّا نُخَمِّرُ وُجُوهَنَا وَنَحْنُ مُحْرِمَاتٌ وَنَحْنُ مَعَ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رواه مالك

ஃபாத்திமா பின்த் முன்திர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : 

நாங்கள் இஹ்ராம் அணிந்திருந்த நிலையில் அஸ்மாஉ பின்த் அபீ பக்ர் சித்தீக் (ரலி) அவர்களுடன் இருந்த போது நாங்கள் எங்கள் முகங்களை மறைத்துக் கொள்வோம். 

நூல் : மா­க் (634)

நபித்தோழர்களின் கூற்றுக்களே ஆதாரமாக முடியாது என்கிற போது அவர்களின் அங்கீகாரங்களை ஆதாரமாக எடுக்கவே முடியாது. அஸ்மாஉ (ரலி) அவர்கள் முந்நிலையில் பெண்கள் முகத்தை மூடியுள்ளதால் இதிலிருந்து எப்படி மார்க்க சட்டத்தை எடுக்க முடியும்?

மேலும் இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்கு எதிராக உள்ளது. இஹ்ராம் அணிந்த பெண்கள் முகத்தை மறைக்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த ஹதீஸை முன்பே பார்த்தோம். 

ஒரு பேச்சுக்கு இந்தச் செய்தியை ஆதாரமாக ஏற்றால் கூட இஹ்ராம் அணிந்த நிலையில் பெண்கள் முகத்தை மூடிக் கொள்ள அனுமதி உண்டு என்று தான் விளங்க முடியும். பெண்கள் எல்லா நேரத்திலும் முகத்தைக் கட்டாயம் மூட வேண்டும் என்ற கருத்தை இச்செய்தி தரவில்லை. 

எனவே பெண்கள் முகத்தை மூடுவது வாஜிப் (கட்டாயம்) என்ற கருத்துக்கு இது ஆதாரமாக முடியாது. 

அடுத்து சகோதரர் பின்வரும் செய்தியை பெண்கள் அவசியம் முகத்தை மூட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக காட்டுகிறார். 

صحيح ابن خزيمة كتاب المناسك


حدثنا حمد بن العلاء بن كريب ، حدثنا زكريا بن عدي ، عن إبراهيم بن حميد ، حدثنا هشام بن عروة ، عن فاطمة بنت المنذر ، عن أسماء قالت : كنا نغطي وجوهنا من الرجال ، وكنا نمتشط قبل ذلك *

அஸ்மாஉ (ரலி) அவர்கள் கூறினார்கள் : 

நாங்கள் ஆண்களிடமிருந்து எங்கள் முகங்களை மறைத்துக் கொள்வோம். இதற்கு முன்பே தலைவாரிக் கொள்வோம். 

நூல் : ஸஹீஹு இப்னி குஸைமா 

இந்தச் செய்தியும் நாம் முன்பு கூறிய செய்தியைப் போன்றே அமைந்துள்ளது. 

பெண்கள் முகத்தை மறைக்கலாம் என்று தான் இந்த செய்தி கூறுகின்றது. அவசியம் மறைக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் பெண்கள் முகத்தை மூடுவது கட்டாயம் என்பது சகோதரரின் வாதமாகும். 

பெண்கள் முகத்தை மறைப்பது கூடாது என்று நாம் கூறவில்லை. இவ்வாறு செய்வது மார்க்கத்தில் வலியுறுத்தப்படவில்லை. மறைக்காமல் வெளிப்படுத்தினால் குற்றமில்லை என்றே கூறுகிறோம். எனவே இது நமது கருத்துக்கு எதிரான செய்தியல்ல. மாறாக பெண்கள் முகத்தை மறைக்க அனுமதியுண்டு என நாம் கூறும் கருத்துக்கு ஆதாரமாக உள்ளது. 

கிமார் என்றால் என்ன?

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். 

அல்குர்ஆன் (24 : 31)

முக்காடுகள் என நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் குர்ஆனில் கும்ரு என்ற அரபுச் சொல் இடம் பெற்றுள்ளது. கிமார் என்பது இதன் ஒருமைச் சொல்லாகும். கிமார் என்றால் முகம் உட்பட தலையை மறைக்கும் ஆடை என சகோதரர் வாதிடுகிறார். இவ்வாறு இப்னு ஹஜர் இவ்வார்த்தைக்கு விளக்கம் கொடுத்ததாகவும் சுட்டிக் காட்டுகிறார். 

இவ்வசனத்தில் முக்காடுகளை மார்பின் மீடு போட்டுக் கொள்ள வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது. முகத்தின் மீது போட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தாலே முகத்தை மறைக்க வேண்டும் என்பதற்கு இவ்வசனத்தை ஆதாரமாகக் காட்டலாம். ஆனால் அவ்வாறு கூறப்படவில்லை என்பதால் இதை முகத்தை மறைக்க ஆதாரமாகக் காட்ட முடியாது. 

கிமார் என்றால் முகத்தை மூடும் ஆடை என்ற கருத்து தவறானது. தலையை மறைக்கும் துணி என்பதே இதன் சரியான பொருள். இவ்வாறே அரபு அகராதி நூற்களிலும் ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ளது. 

அல்முஃஜமுல் வசீத் மற்றும் லிசானுல் அரப் ஆகிய அகராதி நூற்களில் பெண்களின் கிமார் என்பது அவர்கள் தங்களுடைய தலையை மறைத்துக் கொள்ளும் துணிக்குச் சொல்லப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் கிமார் என்பதற்கு தனது நூலான ஃபத்ஹுல் பாரியில் அது ஆண்கள் அணியும் தலைப்பாகையைப் போன்றது எனக் கூறுகிறார். அதாவது ஆண்கள் தங்களது தலையை மறைக்க தலைப்பாகையைப் பயன்படுத்துவது போல் பெண்கள் தங்களது தலையை மறைக்க கிமாரைப் பயன்படுத்துவார்கள் என்று கூறுகிறார். தலைப்பாகை என்பது முகத்தை மறைக்கும் ஆடையல்ல. எனவே கிமார் என்பது முகத்திரை அல்ல. தலைத்துணி தான் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. 

ஹதீஸ்களில் கிமார் என்பது தலைத்துணி என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. 

546حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ قَتَادَةَ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ صَفِيَّةَ بِنْتِ الْحَارِثِ عَنْ عَائِشَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةَ حَائِضٍ إِلَّا بِخِمَارٍ قَالَ أَبُو دَاوُد رَوَاهُ سَعِيدٌ يَعْنِي ابْنَ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ عَنْ الْحَسَنِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه أبو داود

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

மாதவிடாய் (ஏற்படும் பருமடைந்த) பெண்ணின் தொழுகையை முக்காடுடன் (அவள் தொழுதாலே) தவிர அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான். 

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அபூதாவுத் (5460

பெண்கள் தொழும் போது முக்காடுடன் தொழ வேண்டும் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. முக்காடு என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் ஹதீஸில் கிமார் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. கிமார் என்றால் அது முகத்தை மூடும் ஆடை என தவறான பொருளை இங்கே பொறுத்தினால் பெண்கள் தொழுகையின் போது முகத்தை மூடுவது கட்டாயம் என்ற தவறான முடிவு ஏற்படும். 

2865حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ قَالَ أَخْبَرَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ الْأَنْصَارِيُّ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ زَحْرٍ أَنَّ أَبَا سَعِيدٍ أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَالِكٍ أَخْبَرَهُ أَنَّ عُقْبَةَ بْنَ عَامِرٍ أَخْبَرَهُ أَنَّهُ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أُخْتٍ لَهُ نَذَرَتْ أَنْ تَحُجَّ حَافِيَةً غَيْرَ مُخْتَمِرَةٍ فَقَالَ مُرُوهَا فَلْتَخْتَمِرْ وَلْتَرْكَبْ وَلْتَصُمْ ثَلَاثَةَ أَيَّامٍ روه أبو داود

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : 

எனது சகோதரி காலணி அணியாமலும் கிமார் (தலைத் துணி) அணியாமலும் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்துள்ளார் என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் (கூறி இது பற்றி) வினவினேன். அதற்கு அவர்கள் உங்களுடைய சகோதரிக்கு நீங்கள் உத்தரவிடுங்கள். அவர் தலைத் துணி அணிந்து கொள்ளட்டும். வாகனத்தில் ஏறி வரட்டும். அவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறினார்கள். 

அபூதாவுத் (2865)

ஹஜ் செய்யும் பெண்கள் முகத்தை மூடக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த ஹதீஸை முன்பே பார்த்து விட்டோம். மேற்கண்ட ஹதீஸில் கிமார் அணிய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களின் சகோதரிக்கு உத்தரவிட்டுள்ளார்கள். 

கிமார் என்பது முகத்தை மறைக்கும் ஆடையாக இருந்தால் முகத்தை மறைக்கக் கூடாத இடமான ஹஜ்ஜில் கிமாரை அணியுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டிருக்க மாட்டார்கள். 

கிமார் என்பது தலையை மட்டும் மறைக்கும் துணி என்பதாலே இதை ஹஜ்ஜின் போது அணியுமாறு நபியவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். 

எனவே பெண்கள் முகத்தைக் கட்டாயம் மறைக்க வேண்டும் என்பதற்கு ஏற்கத் தகுந்த எந்த ஆதாரமும் இல்லை. பெண்கள் முகத்தை மறைப்பதற்கும் மறைக்காமல் இருப்பதற்கும் அனுமதியுள்ளது. 

தற்காலத்தில் முகத்தை மறைப்பதால் தீமைகள் அதிகம் ஏற்படுகின்றது. எனவே இத்தீமைகளை தடுக்கும் விதமாக முகத்தை மறைப்பதைக் காட்டிலும் மறைக்காமல் இருப்பது சிறந்தது.

16 கருத்துரைகள் :

@அதிரை TNTJ

விரிவான பதிலிற்கு நன்றி!

முகத்தை மூடும் விஷயத்தில் 1400 வருட இஸ்லாமிய வரலாற்றில் இருவேறு கருத்துகள் இருப்பதாக சொன்னேன். இந்த இருவேறு கருத்துகளில் இது சரி, இது தவறு என்று எதையும் நான் முன்னிறுத்தவில்லை என்பதை இங்கு நினைவுபடுத்துகிறேன். என்னுடைய வாதமோ “நீங்கள் முன்னிறுத்தும் இந்த மூன்றாவது கருத்து ( முகத்தை மூடுவது இந்த காலத்திற்கு ஒவ்வாது) ஆதாரங்கள் அடிப்படையில் அமைந்ததல்ல. மாறாக உங்கள் அறிவிற்கு சரியெனப் படும் காரணங்களை நீங்கள் ஆதாராமாக்குகிறீர்கள்” என்பது தான்.

ஆனால் என்னுடைய இந்த கேள்விக்கு சம்பந்தமே இல்லாமல் ”முகத்தை கண்டிப்பாக மூட வேண்டுமா அல்லது முகத்தை திறந்திருக்கலாமா” என்ற கேள்விக்கான பதிலாகவே உங்களது ஆக்கம் அமைந்துள்ளது துரதிருஷ்டமே.

உங்களுடைய மறுமொழியில் கீழ்காணும் விஷயங்களுக்கு பதிலளிப்பீர்க்ள் என நம்புகிறேன்.

1)மார்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு விஷயத்தை, அல்லாஹ்வின் தூதரால் அங்கீகரிக்கபட்ட ஒரு காரியத்தை (முகத்தை மூடுவதை ஸஹாபிய பெண்கள் கடைபிடித்தார்கள்.அதை நபி அவர்கள் அங்கீகரித்தார்கள் என்பதை நீங்களும் ஒப்புக்கொள்கிறீர்கள் )14 நூற்றாண்டுகளுக்குப் பின்னர் நீங்கள் பல்வேறு காரணங்களைக் கூறு வெறுக்கப்பட்டதாக்குகிறீர்கள். இவ்வாறு செய்வது சரி தானா?

2)நீங்கள் சொல்லும் இந்த மூன்றாவது கருத்தை (அதாவது பெண்கள் முகத்தை மூடுவது வெறுக்கத்தக்கது) கொண்டிருந்த மார்க்க அறிஞர்களின் சிலரின் பெயரை குறிப்பிடமுடியுமா? (பி.கு: இஸ்லாம் கடந்த பல நூற்றாண்டுகளாக மொரோக்கோவிலிருந்து இந்தோனேசியா வரை, மங்கோலியாவிலிருந்து தென் ஆப்ரிக்கா வரை பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் கடைமடை ECR ரோட்டில்/சென்னை மண்ணடியில் உட்கார்ந்து கொண்டு ஹிஜ்ரி 1433ல் நீங்கள் தான் முதன் முதலில் இந்த கருத்தை கண்டுபிடித்தீர்கள் என்றால் உங்களுடைய ஆராய்ச்சி திறமையையும், Innovationயும் நான் உச்சிமோந்து மெச்சுவதற்கு வாகாய் இருக்கும்.

சகோதரர் ஃபிர்தவ்ஸ் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

//முகத்தை மூடும் விஷயத்தில் 1400 வருட இஸ்லாமிய வரலாற்றில் இருவேறு கருத்துகள் இருப்பதாக சொன்னேன். இந்த இருவேறு கருத்துகளில் இது சரி, இது தவறு என்று எதையும் நான் முன்னிறுத்தவில்லை என்பதை இங்கு நினைவுபடுத்துகிறேன். என்னுடைய வாதமோ “நீங்கள் முன்னிறுத்தும் இந்த மூன்றாவது கருத்து ( முகத்தை மூடுவது இந்த காலத்திற்கு ஒவ்வாது) ஆதாரங்கள் அடிப்படையில் அமைந்ததல்ல. மாறாக உங்கள் அறிவிற்கு சரியெனப் படும் காரணங்களை நீங்கள் ஆதாராமாக்குகிறீர்கள்” என்பது தான். //

1400 ஆண்டுகளாக இந்த விஷயத்தில் இரண்டு கருத்துகள் தான் இருந்தது என்று எவ்வாறு உறுதி செய்தீர்கள். உங்களுக்கு தமிழிலும் ஆங்கிலமும் மட்டும் தான் தெரியும். குர்ஆன் ஹதீசை சுயமாக புரியவும் தெரியாது. அப்படியிருக்க, பிஜே ஃபத்வா கொடுத்த முடிப்பதற்குள், 1400 ஆண்டுகளாக வாழ்ந்த அனைத்து அறிஞரின் கருத்தை எப்படி ஆய்வு செய்ய முடிகிறது உங்களால்? எதை அடித்துவிட்டாலும், நம்புவதற்கு ஆள் இருக்கிறார்கள் என்பதாலா?

//ஆனால் என்னுடைய இந்த கேள்விக்கு சம்பந்தமே இல்லாமல் ”முகத்தை கண்டிப்பாக மூட வேண்டுமா அல்லது முகத்தை திறந்திருக்கலாமா” என்ற கேள்விக்கான பதிலாகவே உங்களது ஆக்கம் அமைந்துள்ளது துரதிருஷ்டமே.//

ஆரம்பம் முதல் தெளிவாக நாங்கள் எங்களின் நிலைபாட்டை சொல்லி வருகிறோம். பெண்கள் முகத்தை மறைப்பதற்கு மார்க்கத்தில் எந்த கட்டளையும் இல்லை. எனவே, பெண்கள் முகத்தை மறைக்க தேவையில்லை. பெண்கள் முகத்தை தானாக முன்வந்து மறைப்பது தவறு இல்லை என்றாலும், இதனால் ஏற்படும் பின்விளைவுகளை கருத்தில் கொண்டு, மறைக்க வேண்டாம் என்று சொல்லுகிறோம். இல்லை மறைப்பது தான் சரி என்று ஒரு பெண் தனது முகத்தை மறைத்து கொண்டால், அதுவும் சரியே.

குர்ஆன் ஹதீஸின் வழிகாட்டுதலுக்கு எதிராக முகத்தை மறைக்க வேண்டும் என்று சொல்லும் ஹைதர் அலியை கண்டு உங்களுக்கு போபம் வரவில்லை. பிஜே எதை செய்தாலும் அது தவறு என்ற அகீதாவில் இருக்கும் உங்களுக்கு இதுவெல்லாம் புரியப்போவதில்லை.

அடி வலுவாக விழுந்தவுடன் வேற இடத்தில் வந்து நான் கேட்ட கேள்வி எதற்கும் பதில் சொல்லவில்லை என்றால், அது உண்மையாகிவிடுமே? நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் நாம் தெளிவாக குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதில் அளித்துள்ளோம். நாங்கள் கேட்ட கேள்விக்கு உங்களால் பதில் அளிக்க முடியவில்லை என்பதை உங்களால் மறுக்க இயலாது.

//1)மார்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு விஷயத்தை, அல்லாஹ்வின் தூதரால் அங்கீகரிக்கபட்ட ஒரு காரியத்தை (முகத்தை மூடுவதை ஸஹாபிய பெண்கள் கடைபிடித்தார்கள்.அதை நபி அவர்கள் அங்கீகரித்தார்கள் என்பதை நீங்களும் ஒப்புக்கொள்கிறீர்கள் )14 நூற்றாண்டுகளுக்குப் பின்னர் நீங்கள் பல்வேறு காரணங்களைக் கூறு வெறுக்கப்பட்டதாக்குகிறீர்கள். இவ்வாறு செய்வது சரி தானா? //

அனுமதி இருக்கிறது என்பதை நாங்கள் சொல்லி வருகிறோம். அதனால், எற்படும் பின்விளைவுகளை கருத்தில்க்கொண்டு இவ்வாறு சொல்லுகிறோம். சரி, நபி (ஸல்) அவர்கள் முகத்தை மறைக்க சொல்லி எந்த கட்டளையும் போடாமல் இருந்தபோதும், மேலும், நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் பெண்கள் தங்களின் முகத்தை மறைக்காமல் இருந்தபோதும், முகத்தை கட்டாயம் மறைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களுக்கே பாடம் சொல்லிக்கொடுக்கும் ஹைதர் அலியை கண்டு உங்களுக்கு ஏன் கோபம் வரவில்லை? ஒரே கொள்கையில் இருப்பவர்கள் என்பதனாலா?

தப்லீக் ஜமாஅத்தினார் வழிகேடர்கள் என்று அரபுநாட்டு அறிஞர்கள் ஃபத்வா கொடுத்தது உண்மையா?

குர்ஆனில் நேரடியாக தடுக்கப்பட்ட சுயஇன்பத்தை நீங்கள் ஹலாலாக ஆக்கியது சரியா?

தொடரும்......

ஃபிர்தௌஸ் அவர்களுக்கான பதிலின் தொடர்ச்சி.....

//2)நீங்கள் சொல்லும் இந்த மூன்றாவது கருத்தை (அதாவது பெண்கள் முகத்தை மூடுவது வெறுக்கத்தக்கது) கொண்டிருந்த மார்க்க அறிஞர்களின் சிலரின் பெயரை குறிப்பிடமுடியுமா? (பி.கு: இஸ்லாம் கடந்த பல நூற்றாண்டுகளாக மொரோக்கோவிலிருந்து இந்தோனேசியா வரை, மங்கோலியாவிலிருந்து தென் ஆப்ரிக்கா வரை பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் கடைமடை ECR ரோட்டில்/சென்னை மண்ணடியில் உட்கார்ந்து கொண்டு ஹிஜ்ரி 1433ல் நீங்கள் தான் முதன் முதலில் இந்த கருத்தை கண்டுபிடித்தீர்கள் என்றால் உங்களுடைய ஆராய்ச்சி திறமையையும், Innovationயும் நான் உச்சிமோந்து மெச்சுவதற்கு வாகாய் இருக்கும்.//

நாங்கள் சொல்லும் இந்த கூற்று குர்ஆன் ஹதீஸுக்கு எதிரானது என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? முடியாது. எங்களுக்கு முஹம்மது (ஸல்) அவர்கள் தான் தூதர். குர்ஆன் தான் எங்களின் வேதம். இவற்றிக்கு எதிராக எங்களின் செயல்பாடுயிருந்தால், எங்களின் எதிரிகள் சுட்டிக்காட்டினால் கூட, எங்களின் கூற்றை மாற்றிக்கொள்வோம். அதை விடுத்து, அந்த அறிஞர் சொன்னாரா? இந்த அறிஞர் சொன்னாரா? என்ற ஆய்வு எங்களுக்கு தேவையில்லை.

உங்களுக்கு தான் அறிஞர்கள் சொன்னார்களா? என்ற கேள்வி தேவை. காரணம், குர்ஆன் ஹதீஸில் இருந்து காட்டினால், நீங்கள் ஏற்கமாட்டிர்கள். 1400 ஆண்டுகளாக உங்களுக்கு பல்வேறு தூதர் வந்துயிருப்பதை நீங்கள் இப்போது தான் ஒப்புக்கொள்ளுகிறீர்கள்.

பிஜேவை தவரி வேறு யாரும் இந்த கருத்தை சொல்லியிருக்கிறார்களா? என்பதற்கு நீங்கள் செய்த ஆய்வை இங்கே சமர்ப்பியுங்கள். எத்தனை அறிஞர்களின் கருத்தை படித்தீர்கள்? 1400 ஆண்டுகளில் ஒவ்வோரு ஆண்டிலும் வாழ்ந்த ஒரு அறிஞரின் பெயர் இப்போது உங்களுக்கு தெரியுமா? (இணையதளங்களை தோடாமல்!). எதை அள்ளிவிட்டாலும், நம்புவார்கள் என்பது அறிஞர்களை நபியாக ஏற்றுக் இருக்கும் கூட்டத்துக்கு தான் சரிபட்டுவரும்.

1400 ஆண்டுகளில் வாழ்ந்த அறிஞர்களின் ஆய்வுகளை ஐந்து நாட்களில் ஆய்வு செய்த உங்களிடம் சில கேள்விகள். முதன் முதலில் முகத்தை மறைக்க தேவையில்லை (அல்பானியின் கருத்தை) என்று சொன்ன அறிஞர் யார்?

சரி, உங்கள் பார்வையில் தான் பிஜேவும் அவரின் ஆய்வை சரி காணுபவர்களும் காஃபிர்களாயிற்றே! காஃபிர்களின் இணையதளங்களை இப்படி வரிக்கு வரி படித்தால், நீங்களும் அப்படி மாற வழியிருக்கிறது அல்லவா?

பெருநாள் தொழுகையில் திரை போடுவது தவறு என்று சுட்டிக்காட்டிய (குத்திக்காட்டிய, நபிவழி ஏவக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கவில்லை என்பதை தெளிவாக நிரூபித்துள்ளீர்கள்) நீங்கள், நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை மைதானத்தில் தான் தொழுள்ளார்கள். இதை முஸ்லிம் சமுதாயத்தில் இன்று ஐந்து விழுக்காட்டிக்கும் குறைவானவர்கள் தான் செய்கிறார்கள், இதை நடைமுறைப்படுத்துவதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள். சரி, நீங்களாவது அதிரையில் மைதானத்தில் தொழுதீர்களா என்று கேட்க மாட்டோம்.

உங்களின் நோக்கம் குர்ஆன் ஹதீசை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதல்ல. அப்படியிருந்தால், இணைவைப்பிற்கு எதிராகவும் பித்அத்களுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து இருப்பிர்கள். பாவம், அரபு நாட்டு சம்பளத்திற்காக (தவ்ஹீதை சொல்லுகிறோம் என்று சொல்லி சம்பளம் வாங்கிக்கொண்டு) எதையாவது செய்ய வேண்டும், பிஜேவை எதிர்த்தால் தான் மிக விரைவில் பிரபலம் அடையாளம் என்ற நட்பாசையில் கொக்கறிக்கிறார்கள். இஸ்லாத்திற்கு அரபுநாடுகள் குத்தகைகாரர்கள் இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பிஜேவின் பல ஆய்வுகளை உண்மை என்று தெரிந்துகொண்டு, பிஜே அரபுநாட்டில் படிக்கவில்லை என்பதை காரணம் காட்டி அரபு நாட்டு கூலிப்படைகள் மறுத்து தங்களின் எஜமானிய விஷ்வாசத்தை காட்டுகிறார்கள்.

காசுக்காக தான் இவர்கள் கத்துகிறார்கள் என்பதற்கு மிகப்பெரிய சான்று. சவூதியில் உள்ள அறிஞர் புகாரி முஸ்லிம் ஹதீஸ்களில் குர்ஆனுக்கு முரண்படும் சில ஹதீஸ்கள் உள்ளன என்று (பிஜேவின் கருத்தை முன்மொழிந்தார்). பிஜேவை எதிர்த்த அரபுநாட்டு கூலிப்படை இந்த அறிஞரை எதிர்க்கவில்லை. எதிர்த்தால் சம்பளம் வராதே! மார்க்கம் உங்களின் அரபுநாட்டு கூலிப்படைக்கு ஒரு தொழிலே!

வஸ்ஸலாம்.

@ Adirai TNTJ

வ அலைகுமுஸ்ஸலாம்.


கேள்வி ஒன்று: )மார்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு விஷயத்தை, அல்லாஹ்வின் தூதரால் அங்கீகரிக்கபட்ட ஒரு காரியத்தை (முகத்தை மூடுவதை ஸஹாபிய பெண்கள் கடைபிடித்தார்கள்.அதை நபி அவர்கள் அங்கீகரித்தார்கள் என்பதை நீங்களும் ஒப்புக்கொள்கிறீர்கள் )14 நூற்றாண்டுகளுக்குப் பின்னர் நீங்கள் பல்வேறு காரணங்களைக் கூறு வெறுக்கப்பட்டதாக்குகிறீர்கள். இவ்வாறு செய்வது சரி தானா?

உங்கள் பதில்://அனுமதி இருக்கிறது என்பதை நாங்கள் சொல்லி வருகிறோம். அதனால், எற்படும் பின்விளைவுகளை கருத்தில்க்கொண்டு இவ்வாறு சொல்லுகிறோம்.//.

என்னுடைய சந்தேகம்: அல்லாஹ்வின் தூதர் முன்னிலையில் ஒரு காரியம் நடைபெற்றதையும், அதை அவர்கள் தடுக்கவோ, ஆட்சேபிக்கவோ இல்லை என்பதையும் தாங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். அதாவது மார்கத்தில் அது தெளிவாக அனுமதிக்கப்பட்டுவிட்டது. அப்படி அனுமதிக்கப்பட்ட ஒரு காரியத்தை நீங்கள் பல்வேறு ‘அறிவுப்பூர்வமான’ காரணங்களைக் கூறு வெறுக்கப்பட்டதாக்குகிறீர்கள். நீங்கள் எந்த காரணங்களைக் கூறி வெறுக்கப்பட்டதாக்குகிறீர்களோ (பெண்களின் அடையாளம் முகத்தை மூடுவதால் மறைக்கப்படுகிறது)அதே காரணங்கள் அல்லாஹ்வின் தூதர் காலத்திலும் இருந்தது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.அப்படியிருந்தும் அல்லாஹ்வின் தூதர் அதை தடுக்கவில்லை.

முழுமையாக்கப்பட்ட மார்கத்தில் புதிதாக உங்கள் ஆராய்ச்சி வியப்பிற்குரியது.

கேள்வி இரண்டு:)நீங்கள் சொல்லும் இந்த மூன்றாவது கருத்தை (அதாவது பெண்கள் முகத்தை மூடுவது வெறுக்கத்தக்கது) கொண்டிருந்த மார்க்க அறிஞர்களின் சிலரின் பெயரை குறிப்பிடமுடியுமா?

பதில்://அந்த அறிஞர் சொன்னாரா? இந்த அறிஞர் சொன்னாரா? என்ற ஆய்வு எங்களுக்கு தேவையில்லை.// தெளிவான பதிலிற்கு நன்றி. இது தான் உங்கள் கொள்கை என்பதை தெளிவுபடுத்தியமைக்கு சுக்ரன்.

(பி.கு: உங்களின் துணை கேள்விகளான ஏன் இப்னு உதைமீனை, ஹைதர் அலி ஆலிமை நீங்கள் எதிர்க்கவில்லை?,1400 வருட் அறிஞர்களின் கருத்துகள் குறித்து நான் செய்த ஆய்வு,மற்ற என்னால் எந்தெந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமோ அந்த கேள்விகளுக்கு இன்ஷா அல்லாஹ் இந்த பிரதான சப்ஜெக்ட் {முகத்தை ஊடுதல்} முடிவுற்ற பின்னர் கண்டிப்பாக நான் பதிலளிப்பேன்.என்னுடைய பதிலளகள் நாம் எதைப்பற்றி பேசிவருகிறோமே அதிலிருது தடம் புரளச் செய்துவிடக்கூடாது என்ற அச்சமே காரணம். அவ்வாறு நான் பதிலளிக்கும் வரை “பிர்தௌஸ் பதிலளிக்கவிலை. பயத்தால் ஓட்டம்” என்று நீங்கள் சொல்லிக்கொள்ளலாம்.

இப்பொழுது Let us return to the topic. No diversions please.)

ஃபிர்தௌஸ் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

//கேள்வி ஒன்று: )மார்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு விஷயத்தை, அல்லாஹ்வின் தூதரால் அங்கீகரிக்கபட்ட ஒரு காரியத்தை (முகத்தை மூடுவதை ஸஹாபிய பெண்கள் கடைபிடித்தார்கள்.அதை நபி அவர்கள் அங்கீகரித்தார்கள் என்பதை நீங்களும் ஒப்புக்கொள்கிறீர்கள் )14 நூற்றாண்டுகளுக்குப் பின்னர் நீங்கள் பல்வேறு காரணங்களைக் கூறு வெறுக்கப்பட்டதாக்குகிறீர்கள். இவ்வாறு செய்வது சரி தானா?

உங்கள் பதில்://அனுமதி இருக்கிறது என்பதை நாங்கள் சொல்லி வருகிறோம். அதனால், எற்படும் பின்விளைவுகளை கருத்தில்க்கொண்டு இவ்வாறு சொல்லுகிறோம்.//.

என்னுடைய சந்தேகம்: அல்லாஹ்வின் தூதர் முன்னிலையில் ஒரு காரியம் நடைபெற்றதையும், அதை அவர்கள் தடுக்கவோ, ஆட்சேபிக்கவோ இல்லை என்பதையும் தாங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். அதாவது மார்கத்தில் அது தெளிவாக அனுமதிக்கப்பட்டுவிட்டது. அப்படி அனுமதிக்கப்பட்ட ஒரு காரியத்தை நீங்கள் பல்வேறு ‘அறிவுப்பூர்வமான’ காரணங்களைக் கூறு வெறுக்கப்பட்டதாக்குகிறீர்கள். நீங்கள் எந்த காரணங்களைக் கூறி வெறுக்கப்பட்டதாக்குகிறீர்களோ (பெண்களின் அடையாளம் முகத்தை மூடுவதால் மறைக்கப்படுகிறது)அதே காரணங்கள் அல்லாஹ்வின் தூதர் காலத்திலும் இருந்தது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.அப்படியிருந்தும் அல்லாஹ்வின் தூதர் அதை தடுக்கவில்லை.

முழுமையாக்கப்பட்ட மார்கத்தில் புதிதாக உங்கள் ஆராய்ச்சி வியப்பிற்குரியது.//


நீங்கள் இந்த கேள்வியை எங்களிடம் கேட்பதற்கு முன் நீங்கள் உங்களின் மனச்சாட்சிக்கு ஒரு கேள்வியை கேட்க வேண்டும். அதாவது, நபி (ஸல்) அவர்கள் பெண்கள் முகத்தை மறைக்க சொல்லி எந்த கட்டளையும் போடாத போது, முகத்தை கட்டாயமாக மறைக்க வேண்டும் என்று ஆய்வை நீங்கள் எப்படி சரிகாணுகிறீர்கள்? நீங்கள் உண்மையாளராக இருந்தால், இதை அல்லவா முதலில் எதிர்த்து இருக்க வேண்டும்.

//கேள்வி இரண்டு:)நீங்கள் சொல்லும் இந்த மூன்றாவது கருத்தை (அதாவது பெண்கள் முகத்தை மூடுவது வெறுக்கத்தக்கது) கொண்டிருந்த மார்க்க அறிஞர்களின் சிலரின் பெயரை குறிப்பிடமுடியுமா?

பதில்://அந்த அறிஞர் சொன்னாரா? இந்த அறிஞர் சொன்னாரா? என்ற ஆய்வு எங்களுக்கு தேவையில்லை.// தெளிவான பதிலிற்கு நன்றி. இது தான் உங்கள் கொள்கை என்பதை தெளிவுபடுத்தியமைக்கு சுக்ரன்.

(பி.கு: உங்களின் துணை கேள்விகளான ஏன் இப்னு உதைமீனை, ஹைதர் அலி ஆலிமை நீங்கள் எதிர்க்கவில்லை?,1400 வருட் அறிஞர்களின் கருத்துகள் குறித்து நான் செய்த ஆய்வு,மற்ற என்னால் எந்தெந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமோ அந்த கேள்விகளுக்கு இன்ஷா அல்லாஹ் இந்த பிரதான சப்ஜெக்ட் {முகத்தை ஊடுதல்} முடிவுற்ற பின்னர் கண்டிப்பாக நான் பதிலளிப்பேன்.என்னுடைய பதிலளகள் நாம் எதைப்பற்றி பேசிவருகிறோமே அதிலிருது தடம் புரளச் செய்துவிடக்கூடாது என்ற அச்சமே காரணம். அவ்வாறு நான் பதிலளிக்கும் வரை “பிர்தௌஸ் பதிலளிக்கவிலை. பயத்தால் ஓட்டம்” என்று நீங்கள் சொல்லிக்கொள்ளலாம்.

இப்பொழுது Let us return to the topic. No diversions please.)//


நபி (ஸல்) முகத்தை மறைக்க எந்த கட்டளையும் போடவில்லை.மேலும், நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் பெண்கள் தங்களின் முகத்தை மறைக்காமல் வந்துள்ளார்கள். இப்படியிருக்கையில், முகத்கை கண்டிப்பாக மறைக்க வேண்டும் என்று சொன்னவர்களை நீங்கள் எதிர்க்கவில்லையென்றால், எங்களை எதிர்க்கக்கூடிய தகுதியை இழந்து விடுகிறீர்கள். எனவே, இந்த கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்கள். இங்கு தான் வசமாக மாட்டிக்கொள்ளுவீர்கள்.

இந்த கேள்விக்கு நீங்கள் பதில் அளித்த பின்பு தான், நாம் நமது வாதத்தை தொடர முடியும்.

மேலும், இன்னும் ஒரு கேள்விக்கும் பதில் நீங்கள் கண்டிப்பாக பதில் சொல்லியாக வேண்டும்.

பிஜே அவரின் ஆய்வை சரிகாணுபவர்களும் உங்களை பார்வையில் முஸ்லிமா? காஃபிரா? முஸ்லிம் தான் என்றால் ஏன் நீங்கள் இதுவரை ஸலாம் சொல்லி துவங்கவில்லை? எங்களின் ஸலாத்திற்கு ஏன் நாங்கள் கேள்வி கேட்கும் வரை பதில் சொல்லவில்லை?

எங்களின் இந்த கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொன்னால் தான் நமது வாதத்தை தொடர முடியும். இவற்றிக்கு பதில் அளிக்கவிட்டால், உங்களின் புதிய கருத்துகள் அனுமதிக்கப்படாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

சத்தியம் வந்தது! அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியம் அழியக்கூடியதே.

விடைபெறுகிறேன்.மஅஸ்ஸலாமா.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ்.

(பி.கு: "ஃபிர்தௌஸ் நாங்கள் கேட்ட எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை. பிடறி தெறிக்க ஓட்டம்” “ஸலஃபிகள் மண்னைக் கவ்வினர்”,”முண்ணுகுப்பின் உளறிய ஸலஃபிகள், மாபெரும் வெற்றி” என்று நீங்கள் வெற்றி முரசு கொட்டுவதற்கு இனி தடையேதும் இல்லை. தொடரட்டும் உங்கள் சேவை. வளரட்டும் உங்களின் Innovative Researches in Islam)

ஃபிர்தவ்ஸ் அவர்களே,

//சத்தியம் வந்தது! அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியம் அழியக்கூடியதே. //

நாங்கள் சொல்ல வேண்டியதை நீங்களே சொல்லிவிட்டீர்கள். அசத்தியம் வெருன்று ஒடும். அதான் நீங்கள் ஒட்டம் எடுத்துவிட்டீர்கள்.

பிஜே உங்களின் கொள்கைப்படி காஃபிர் என்று நீங்கள் மறைமுகமாக சொல்லி திறிந்தீர்கள். இங்கு பகிரங்கமாக அதை ஒத்துக்கொண்டுவிட்டீர்கள். அல்லாஹ் உங்களை காஃபராக ஆக்கிவிடாமல் இருக்க நாங்கள் துஆ செய்கிறோம்.

உத்தைமீனும் ஹைதர் அலியும் மார்ககத்திற்கு முரணாக என்ன பேசினாலும் அது சரி, பிஜே என்ன சொன்னாலும் தவறு. உங்களின் இந்த நயவஞ்சதனத்தை நிரூபிக்க இந்த கேள்விக்கு பதில் எழுதுங்கள் என்றால், ஒடுகிறீர்கள். அதிமேதாவித்தனமாக வந்து இப்படி மாட்டிக்கொண்டுவிட்டீர்கள்.

எல்லாரும் நல்ல கேட்டுங்க. ஃபிர்தவ்ஸ அவர்கள் நமது எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார். அவரு ஒடவில்லை. தொடர்ந்து விவாதம் செய்து கொண்டு இருக்கிறார். நாங்கள் சொல்லுவதை நம்புங்கள்... இப்படி சொன்னால் சந்தேசமா ஃபிர்தவ்ஸ் அவர்களே.

குர்ஆன் ஹதீஸ் ஒளியில் உங்கள் அறிஞர் கற்றுத்தந்த சுயஇன்பத்தை பற்றி கேள்வி கேட்டால், பதிலை காணோம்....

எற்கனவே, அதிமேலாவிகளாக கருதி, ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று எழுதி வசமாக அடி கொடுத்தவுடன், ஒட்டம் எடுத்தது நமது இணையதள வாசகர்களுக்கு நன்றாக தெரியும்.

இவர்களின் வழிகேட்டு தத்துவங்களை அறிய: இங்கே சொடுக்கவும்

1400 ஆண்டுகளாக வாழ்ந்த அறிஞர்களை ஆய்வு செய்த ஃபிர்தவ்ஸ அவர்கள், இன்னும் அதிகமான விளங்கங்கள் தேவைப்படுவதால், கடந்த 5000 ஆண்டுகளில் வாழ்ந்த அனைத்து அறிஞர்களின் ஆய்வைவும் ஆய்வு செய்ய சென்றுவிட்டார். எனவே, இன்னும் ஒரு 5000 ஆண்டுகளுக்கு இவரிடம் இது சம்பந்தமாக எந்த பதிலையும் வாசகர்கள் எதிர்பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நமக்கு காஃபிர் பட்டம் கொடுத்த ஃபிர்தவ்ஸ் அவர்களை அல்லாஹ் காஃபிராக ஆக்காமல் இருக்க வாசகர்கள் துஆ செய்யவும்.

வஸ்ஸலாம்.

அஹ்மத் ஃபிர்தௌஸ் என்பவரை பற்றி மேலும் சில தகவல்களை இங்கே பதிவு செய்ய வேண்டியுள்ளது.

இவரின் கொள்கைபடி பிஜேவும் அவரின் ஆய்வுகளை சரிகாணுபவர்களும் காஃபிர்கள். இதை இவர் பல இடங்களில் பேசி திரிந்துள்ளார். அதை அவரின் வாயால் சொல்ல வைக்க வேண்டும் என்பதற்காகவே, நாம் பிஜே காஃபிரா? என்று கேட்டோம். கேட்டவுடன், ஆம் என்று சொன்னால், இவருக்கு செருப்படி கிடைக்கும் என்பதால் ஓடிவிட்டார்.

கடந்த வருடம் இந்த சலஃப்பி கும்பல்களின் வழிகேட்டை நமது இணையதளத்தில் தோலுரித்து காட்டினோம். அதை பொறுக்க முடியாத, இந்த அஹ்மத் ஃபிர்தௌஸ் தனது சலஃப்பி கும்பலை சேர்ந்த ஒரு கேடுகேட்டவனை வைத்து, அந்த மகனே இந்த மகனே என்று வசைபாட வைத்தார். அவற்றை நமது பாதுகாத்து வைத்துள்ளோம். பிஜேவை காஃபிர் என்று சொன்ன பிறகு இந்த இவரின் உண்மை முகத்தை மக்களுக்கு அடையாளம் காட்டுவது கட்டாயமாக ஆகிவிட்டது. விரைவில் இவரின் உண்மை முகம் மக்களுக்கு காட்டப்படும்.

மார்க்க அறிவுக்கும் இந்த அஹமத் ஃபிர்தௌஸ்க்கு கொஞ்சம் கூடாது கிடையாது. ஆங்கிலத்திலுள்ள சில இணையதளங்களை அறைகுறையாக படித்துவிட்டு, மார்க்கம் என்று எதையாவது உளரித்தள்ளுவார்.

இவர்களின் நம்பிக்கைப்படி சவூதி அரோபிய ஸலஃபிகளின் நாடு. அந்த ஸலஃபிகள் நாட்டில் தப்லீக் ஜமாஅத் செயல்பட முடியாது. அதே நேரத்தில், சவூதி அரோபியாவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பகிரங்கமாக செயல்பட்டு வருகிறது. பிஜே அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கம் பகிரங்கமாக அங்கே வினியோகம் செய்யப்படுகிறது. பிஜே அவர்களின் பல புத்தகங்களை சவூதி அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் பல தஃவா சென்டர்கள் அச்சிட்டு இலவசமாக வழங்கி வருகின்றது.

இந்த மடையர் இதற்கு என்ன பதில் சொல்லுவார்? ஒரு காஃபிரின் புத்தகத்தை இலவசமாக அச்சிட்டு வினியோகம் செய்யும் ஸலஃபி நாடான சவூதியும் குப்ரை (இறை மறுப்பை) பரப்புகிறது என்று தானே அர்த்தம். முதலில் இவர் குப்ரை பரப்பும் ஸலஃபி நாட்டை திருத்தட்டும்.

இது பற்றி மேலும் விபரம் அறிய:

'மாமனிதர் நபிகம் நாயகம்' புத்தகம் ரியாத் ஜாலியாத் மூலம் மீண்டும் வெளியீடு!

பீ.ஜே சவூதியில் நுழைய தடையா? பீ.ஜே நூல்களுக்கு தடையா?

அஸ்ஸலாமு அலைக்கும்.

பெண்ங்கள் முகத்தை மூட வேண்டுமா? என்ற தலைப்பிட்டு ஒரு ஆக்கத்தை இங்கு வெளியிட்டு இருந்த்திர்கள். ஆனால் சகோதரர் பிர்தவ்ஸ் அவர்களின் கேள்விக்கு பதில் தரமால் தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் ஏதேதோ
//('மாமனிதர் நபிகம் நாயகம்' புத்தகம் ரியாத் ஜாலியாத் மூலம் மீண்டும் வெளியீடு!

பீ.ஜே சவூதியில் நுழைய தடையா? பீ.ஜே நூல்களுக்கு தடையா?)//”

சொல்லிக்கொண்டு போகிரீர்கள்.

உங்கள் அன்னன் பிஜே அவர்களின் கருத்தும், சகோதர் அஸ்ரஃப்தீன் பிர்தவ்சி அவர்களின் கருத்தும் முறன் என்று கேட்டூள்ளார். அதர்க்கு விளக்கம் தாருங்கள்...

”அஹ்மத் ஃபிர்தௌஸ் says: 1 செப்டம்பர், 2012 3:23 am Reply
கூற்று ஒன்று:
“முகத்தை மறைக்க்க்கூடாது என்பதுதான் இஸ்லாத்தின் நிலை. முகம் வந்து கண்டிப்பா என்ன செய்யனும்? தெரியனும்.” –பீ.ஜே (பார்க்க: http://www.youtube.com/watch?v=qJLLPZJQIus நிமிடம்-0:32- 0:39)

Vs

கூற்று இரண்டு:
தவ்ஹீத் ஜமா அத் என்ன சொல்றோம்னா பெண்கள் முகத்தை மறைக்க வேண்டிய தேவை இல்லை…………விரும்பினா மறைச்சுக்கலாம்…மறைக்கவே கூடாதுன்னு நம்ம சொல்ல்ல--அஷ்ரஃப்தீன் ஃபிர்தௌஸி (பார்க்க: http://www.youtube.com/watch?v=GvmM-smb2cs&feature=player_embedded# (நிமிடம்-1: 30- 1:52)

Vs

கூற்று மூன்று:
“அஷ்ரப்தீன் அவர்களின் கருத்து, பிஜேவின் கருத்திற்கு முரணானது இல்லை. “ (பார்க்க: Adirai TNTJவின் மேலிலுருந்து 2வது பின்னூட்டம்)

@Adirai TNTJ இந்த மூன்று கூற்றுகளையும் எவ்வாறு விளங்கி கொள்வது. விளக்கம் தேவை”

யூசுஃப்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

//பெண்ங்கள் முகத்தை மூட வேண்டுமா? என்ற தலைப்பிட்டு ஒரு ஆக்கத்தை இங்கு வெளியிட்டு இருந்த்திர்கள். ஆனால் சகோதரர் பிர்தவ்ஸ் அவர்களின் கேள்விக்கு பதில் தரமால் தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் ஏதேதோ
//('மாமனிதர் நபிகம் நாயகம்' புத்தகம் ரியாத் ஜாலியாத் மூலம் மீண்டும் வெளியீடு!

பீ.ஜே சவூதியில் நுழைய தடையா? பீ.ஜே நூல்களுக்கு தடையா?)//”

சொல்லிக்கொண்டு போகிரீர்கள்.//


கடைசி வரியை மட்டும் படித்தால், தலைப்பிற்கு சம்பந்தம் இல்லாததாக தான் தெரியும். ஃபிர்தௌஸ் என்பவர் பிஜேவை காஃபிர் என்கிறார். அது இங்கு நிரூபணமும் செய்யப்பட்டுள்ளது. எனவே, காஃபிரின் திருக்குர்ஆன் தமிழாக்கத்தையும் புத்தகத்தையும் உங்களின் ஸலஃபி நாட்டில் வெளியிடுகிறார்களே, இவ்வாறு செய்யும் சவூதி நாட்டவர்களும் காஃபிர்களா என்று கேட்க தான் அந்த விஷயம் எழுதப்பட்டது.

//உங்கள் அன்னன் பிஜே அவர்களின் கருத்தும், சகோதர் அஸ்ரஃப்தீன் பிர்தவ்சி அவர்களின் கருத்தும் முறன் என்று கேட்டூள்ளார். அதர்க்கு விளக்கம் தாருங்கள்...//

இந்த கேள்வியை முதலில் நீங்கள் தான் கேட்டீர்கள். உங்களுக்கு பதில் கொடுத்தவுடன், நீங்கள் இதை பற்றி விவாதிக்காமல் அமைதியாகிவிட்டீர்கள். பின்னர், இதே கேள்வியை ஃபிர்தவ்ஸ் அவர்கள் கேட்டார். அவர் ஒடிவுடன், அதே கேள்வியை நீங்கள் கேட்கிறீர்கள்.

நீங்கள் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை கூட படிக்காமல் கருத்து எழுதும் வழக்கம் உள்ளவர்கள் என்பதால், ஒரு விஷயத்தை இங்கே சுட்டிக்காட்டுகிறோம். இந்த ஆக்கத்தில் 'முகத்தை மறைப்பதில் தவறில்லை' என்ற தலைப்பில் பிஜே அவர்கள் 'பெண்கள் முகத்தை மறைத்தால் தவறில்லை' என்று தெளிவாக எழுதியுள்ளார். இதை கூட நீங்கள் படிக்காமல் முரண் முரண் என்று குதிக்கிறீர்கள். இந்த ஆக்கம் 2010 ஆண்டு (நீங்கள் இங்கே இந்த விமர்சனம் செய்வதற்கு முன்னரே) வெளியிடப்பட்டது.

இப்போது என்ன சொல்லப்போகிறீர்கள்?

உங்களை போன்று விமர்சனங்களை எதிர்கொள்ள வக்கற்று போய் ஒட்டம் எடுப்பவர்கள் அல்ல நாங்கள். பிஜேவும் ஃபிர்தவ்ஸியும் முரண்பட்டு பேசுகிறார்கள் என்ற உங்களின் வாதத்திற்கு எங்களிடம் ஆதாரப்பூர்வமான பதில் உள்ளது. அதை எப்போது சொல்ல வேண்டுமே அப்போது சொல்லுவோம். பிஜே எதை சொன்னாலும் அதை எதிர்க்க வேண்டும், மற்றவர்கள் மார்க்கத்திற்கு முரணானாக எதை சொன்னாலும் அது எங்களுக்கு மார்க்கம் தான் என்று இருக்கும் உங்களின் உண்மை முகத்தையும் அடையாளம் காட்ட வேண்டும். அதனால் தான், உங்களின் சில சொத்தை கேள்விகளை நாங்கள் கண்டுகொள்ளவில்லை.

இந்த கேள்விக்கு நீங்கள் முதலில் பதில் தாருங்கள். நபி (ஸல்) அவர்கள் பெண்கள் முகத்தை மறைக்க சொல்லி எந்த கட்டளையும் போடவில்லை எனும்போது, பெண்கள் முகத்தை கண்டிப்பாக மறைக்க வேண்டும் என்று ஃபத்வா கொடுத்த உத்மைமீன் மற்றும் அந்த கருத்தை சொன்ன அதிரை ஹைதர் அலியை நீங்கள் ஆதரிப்பது எப்படி சரி? நான் எதை வேண்டுமானாலும் கேட்பேன், என்னிடம் உள்ள இரட்டை முகத்தை நீங்கள் வெளிப்படுத்த கூடாது என்று சொல்லும் உங்களின் வாதம் சரியா? பெண்கள் கண்டிப்பாக முகத்தை மறைக்க வேண்டும் என்ற ஃபத்வா சரியா? தவறா? தவறு என்றால் அவர்களை ஏன் எதிர்ப்பது இல்லை?

திடலில் தொழுகையில் திரை போட்டதை தவறு என்று சொன்னது எல்லாம் நபி வழியை சுட்டிக்காட்ட அல்ல என்பது இப்போது நிரூபணமாகிவிட்டது. ஒரே உளுவில் நாற்பது ஆண்டுகள் தொழுத பெரியார், தனது திக்ரின் மூலம் விமானத்தை நடு வானில் நிறுத்திய பெரியார் என்றொல்லாம் உள்ள தப்லீக் தஃலீம் தொகுப்பை தூக்கி பிடிக்கும் ஹைதர் அலியை நீங்கள் ஆதரித்து அலைவது யாருக்கும் தெரியாது போலும். தப்லீக் ஜமாஅத்தினாரை சவூதி சலஃபிகள் சவூதிக்குள் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது இல்லை. நீங்கள் தப்லீக் கொள்கை உடைவரை சத்திய பிரச்சாரகர் என்கிறீர்கள். இப்போது புரிகிறாதா? சவூதி சலஃபிகளுக்கு உங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று? நபி வழி தான் உங்களின் கொள்கை என்றால், கூட்டு துஆ ஓதும் ஹைதர் அலிலை ஆதரிப்பீர்களா? தஸ்பிஹ் தொழுகை என்ற பித்அத்தை சொய்யும் ஹைதர் அலியை ஆதரிப்பீர்களா? ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லாமல் அத்தஹியாத்தில் நடுவில் விரலை உயர்த்தி, அதை அத்தஹியாத்து முடியம் வரை நீட்டி வைக்கும், வைக்க சொல்லும் ஹைதர் அலியை ஆதரிப்பீர்களா? இப்போது புரிகிறாதா? ஹைதர் அலியின் கொள்கை சலபி வேஷம் போட்டு இருக்கும் உங்களின் கொள்கையும் ஒன்று தான் என்று.

திடலில் தொழுகையில் திரை போட்டதை தவறு என்று சொன்னது எல்லாம் நபி வழியை சுட்டிக்காட்ட அல்ல என்பது இப்போது நிரூபணமாகிவிட்டது. ஒரே உளுவில் நாற்பது ஆண்டுகள் தொழுத பெரியார், தனது திக்ரின் மூலம் விமானத்தை நடு வானில் நிறுத்திய பெரியார் என்றொல்லாம் உள்ள தப்லீக் தஃலீம் தொகுப்பை தூக்கி பிடிக்கும் ஹைதர் அலியை நீங்கள் ஆதரித்து அலைவது யாருக்கும் தெரியாது போலும். தப்லீக் ஜமாஅத்தினாரை சவூதி சலஃபிகள் சவூதிக்குள் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது இல்லை. நீங்கள் தப்லீக் கொள்கையை பிரச்சாரம் செய்யக்கூடியவரை சத்திய பிரச்சாரகர் என்கிறீர்கள். இப்போது புரிகிறாதா? சவூதி சலஃபிகளுக்கு உங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று? நபி வழி தான் உங்களின் கொள்கை என்றால், கூட்டு துஆ ஓதும் ஹைதர் அலிலை ஆதரிப்பீர்களா? தஸ்பிஹ் தொழுகை என்ற பித்அத்தை சொய்யும் ஹைதர் அலியை ஆதரிப்பீர்களா? ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லாமல் அத்தஹியாத்தில் நடுவில் விரலை உயர்த்தி, அதை அத்தஹியாத்து முடியம் வரை நீட்டி வைக்கும், வைக்க சொல்லும் ஹைதர் அலியை ஆதரிப்பீர்களா? இப்போது புரிகிறாதா? ஹைதர் அலியின் கொள்கையும் சலபி வேஷம் போட்டு இருக்கும் உங்களின் கொள்கையும் ஒன்று தான் என்று.

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

//கடைசி வரியை மட்டும் படித்தால், தலைப்பிற்கு சம்பந்தம் இல்லாததாக தான் தெரியும். ஃபிர்தௌஸ் என்பவர் பிஜேவை காஃபிர் என்கிறார். அது இங்கு நிரூபணமும் செய்யப்பட்டுள்ளது. எனவே, காஃபிரின் திருக்குர்ஆன் தமிழாக்கத்தையும் புத்தகத்தையும் உங்களின் ஸலஃபி நாட்டில் வெளியிடுகிறார்களே, இவ்வாறு செய்யும் சவூதி நாட்டவர்களும் காஃபிர்களா என்று கேட்க தான் அந்த விஷயம் எழுதப்பட்டது.//

சகோதரர் ஃபிர்தவ்ஸ் அவர்கள், அன்னன் பீஜே அவர்களை காஃபிர் என்று எங்கு சொன்னார் அதை இங்கு சுட்டிகாட்டிங்கள்.

நீங்கள் தான் அன்னன் பீஜே அவர்களையிம் அவரை பின்பற்றும் மக்களையீம் காஃபிர் என்று சொல்கிரீர்கள்...
ஒரு சகோதரர் எனக்கு மெயில் அனுப்பிகிரார்.

"யூசுப் அவர்களின் விட்டிலேயே பிஜேவை பின்பற்றும் காஃபிர்கள் இருக்கிறார்கள் பாவம்....".என்று எனது தந்தை மற்றும் சகோதரரை காஃபிர் என்று சொல்லும் அதிகாரம் அவருக்கு யார் கொடுத்தது.

//நீங்கள் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை கூட படிக்காமல் கருத்து எழுதும் வழக்கம் உள்ளவர்கள் என்பதால், ஒரு விஷயத்தை இங்கே சுட்டிக்காட்டுகிறோம். இந்த ஆக்கத்தில் 'முகத்தை மறைப்பதில் தவறில்லை' என்ற தலைப்பில் பிஜே அவர்கள் 'பெண்கள் முகத்தை மறைத்தால் தவறில்லை' என்று தெளிவாக எழுதியுள்ளார். இதை கூட நீங்கள் படிக்காமல் முரண் முரண் என்று குதிக்கிறீர்கள்//

அப்படியென்றால் பேச்சிலும், எழுத்துலும் அன்னன் அவர்கள் மாறுப்பட்டுதான் இருப்பாரா?

பீஜே அவர் வீடியோ லின்க்கை பார்த்துதான் நீ இவ்வாறு சொல்கிர்ரிகலா என்பது எனக்கு தெரியவில்லை...

தொடர்ச்சி..........

அன்னன் பீஜே அவர்களும், பிர்தவ்ஸி அவர்களும் ஒரே கொள்கைதான் என்றாலும்..

சில காரங்கள் சொல்லி அல்லாஹ்வும் ரஸூலும் அனுமதிததை வெறுக்கதக்க செய்ல் என்று சொல்வதர்க்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதைதான் ஃபிர்தவ்ஸ் அவர்கள் கேட்கிரார்கள்.

//பிஜே எதை சொன்னாலும் அதை எதிர்க்க வேண்டும், மற்றவர்கள் மார்க்கத்திற்கு முரணானாக எதை சொன்னாலும் அது எங்களுக்கு மார்க்கம் தான் என்று இருக்கும் உங்களின் உண்மை முகத்தையும் அடையாளம் காட்ட வேண்டும். அதனால் தான், உங்களின் சில சொத்தை கேள்விகளை நாங்கள் கண்டுகொள்ளவில்லை.//
இதே வாதத்தை நானும் உங்களுக்கு சொல்கிரேன், ஏன் பீஜே வைமட்டும் சரிகாண்கிரீர்கள். அவர் எதை சொல்கிராரோ அதையே உங்கள் கொள்கையாக ஏற்றுக்கொள்கிரீர்கள்.

உலகத்தில் (பிஜே) அல்லாத வேறு யாரும் குர் ஆன் சுன்னாவை வழிமுறையாக கொன்ட இமாம்ங்களின் வழிமுறையில் ஏன் செல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்கின்றீகள்.

//இந்த கேள்விக்கு நீங்கள் முதலில் பதில் தாருங்கள். நபி (ஸல்) அவர்கள் பெண்கள் முகத்தை மறைக்க சொல்லி எந்த கட்டளையும் போடவில்லை எனும்போது, பெண்கள் முகத்தை கண்டிப்பாக மறைக்க வேண்டும் என்று ஃபத்வா கொடுத்த உத்மைமீன் மற்றும் அந்த கருத்தை சொன்ன அதிரை ஹைதர் அலியை நீங்கள் ஆதரிப்பது எப்படி சரி?//

1400 வருடங்களாக இருக்கும் ஒரு கருத்தை மாற்றம் செய்யிம் அன்னன் பிஜேவின் கருத்தை ஆதரிக்கும் நீங்கள்.

1400 வருங்களாக இரண்டு கருத்துக்கள் உள்ள விசியத்தை இப்னு உத்மைமீன் போன்ற அறிஞ்ர்களின் கருத்தை தவறு என்று கூருவது மடமையே.

சகோதரர் யூசுஃப் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

//சகோதரர் ஃபிர்தவ்ஸ் அவர்கள், அன்னன் பீஜே அவர்களை காஃபிர் என்று எங்கு சொன்னார் அதை இங்கு சுட்டிகாட்டிங்கள்.//

இந்த கேள்வியை கேட்க உங்களை விட ஃபிர்தவ்ஸ் அவர்கள் தான் அதிகம் தகுதிபடைத்தவர். அவரே, மவுனமாக இருக்கிறார். மவுனம் சமமதம் தானே? உங்கள் கூற்றில் நீங்கள் உண்மையாளாராக இருந்தால், ஃபிர்தவ்ஸ் அவர்களிடம் கேட்ட கேள்விக்கு அவர் பதில் சொல்லி இருக்க வேண்டும்.

நாம் ஃபிர்தவ்ஸிடம் கேள்வி இதே: பிஜே அவரின் ஆய்வை சரிகாணுபவர்களும் உங்களை பார்வையில் முஸ்லிமா? காஃபிரா? முஸ்லிம் தான் என்றால் ஏன் நீங்கள் இதுவரை ஸலாம் சொல்லி துவங்கவில்லை? எங்களின் ஸலாத்திற்கு ஏன் நாங்கள் கேள்வி கேட்கும் வரை பதில் சொல்லவில்லை?

இந்த கேள்விக்கு உங்களின் பதில் என்ன? பதில் சொல்ல முடியாமல் அவர் ஒடினால் நீங்கள் வருகிறீர்கள். நீங்கள் ஒடினால் அவர் வருகிறார். ஏன் ஸலாத்திற்கு பதில் மறுக்கிறீர்கள் என்றும், ஏன் ஒரு முஸ்லிமிடம் பேசும் போது ஸலாம் சொல்லி ஆரம்பிக்கவில்லை என்ற கேள்வியை பலமுறை ஃபிர்தவ்ஸ் அவர்களிடம் கேட்டுள்ளோம். எல்லாவற்றையும் தெரிந்து கொண்டே, எதுவே தெரியாததது போல நாடகம் ஆடுகிறீர்கள்.

இப்போது சொல்லுங்கள், நீங்களும் உங்களின் சகாக்களும் எங்குமே பிஜே குஃப்ருக்கு (இறை மறுப்பிற்கு) அழைக்கிறார் என்று பிரச்சாரம் செய்யவில்லையா? இல்லையென்றால், அல்லாஹ்வின் மீது சத்தியம் இட்டு சொல்ல தயாரா?

//"யூசுப் அவர்களின் விட்டிலேயே பிஜேவை பின்பற்றும் காஃபிர்கள் இருக்கிறார்கள் பாவம்....".என்று எனது தந்தை மற்றும் சகோதரரை காஃபிர் என்று சொல்லும் அதிகாரம் அவருக்கு யார் கொடுத்தது.//

ஒருவர் தெளிவாக இறை மறுப்பை தனது வாயால் மொழியாதவரை அவரை காஃபிர் என்று சொல்லும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என்பது எங்களின் கொள்கை. நீங்கள் எங்களை காஃபிர் என்று சொல்லுவதால், நாங்கள் காஃபிர்களாக ஆகிவிடப் போவதில்லை. அசத்தியத்தில் இருப்பவர்களை விட சத்தியத்தில் இருப்பவர்களுக்கு தான் அதிகமாக காஃபிர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது என்பதற்கு இப்னு தைமிய்யா அவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு.

எதனால் அவர் உங்களுக்கு மெயில் அனுப்பினார் என்பது எங்களுக்கு தெரியாமல் இல்லை. பிஜேவை நீங்கள் காஃபிர்கள் என்று சொல்லும் போது, பிஜேவின் கொள்கையை சரிகாணும் உங்கள் விட்டில் இருப்பவர்களும் காஃபிர் தானே என்று கேட்டு எழுதியிருக்கிறார். உங்களின் உறவினர்களை காஃபிர் என்று சொல்லும் போது வரும் கோபம், பிஜேவோடு நொருங்கி பழகாமல், அவரை காஃபிராக்கும் சண்டாளர்களை காணும் போது உங்களுக்கு கோபம் வருவதில்லை. நீங்கள் பல குர்ஆன் வசனங்களை மறுக்கும் போது கூட, நாங்கள் உங்களை காஃபிர்கள் என்று கூறுவதில்லை. காரணம், நீங்கள் முஸ்லிமா காஃபிரா என்பதை தீர்மானிக்க அல்லாஹ் எங்களை படைக்கவில்லை. காஃபிர் பட்டம் கொடுத்து படம் காட்டுவது அரபுநாட்டு எலும்பு துண்டிற்காக மார்க்கம் பேசும் போலிகளின் வழிமுறை.

எனவே, அந்த சகோதரர் உங்களை நோக்கி எழுப்பி கேள்வி எதிர்கேள்வி தான். பிஜேவை காஃபிர் என்று சொல்லுகிறீர்கள், அப்படியானால், உங்கள் உறவினர்களும் அப்படி தானே என்பது தான் அவரின் கேள்வி. இந்த கேள்வி உங்களுக்கு புரியாமல் இருக்காது. பொய் சொல்லி பழக்கப்பட்டுவிட்டீர்கள்.

குர்ஆன் ஹதீசை விட முன்னோர்களின் சொல்லலே மார்க்கம் என்று சொல்லும் உங்களை கூட காஃபிர்கள் பட்டியலில் நாம் சேர்ப்பது இல்லை. அது எங்களுக்கு தேவையுமில்லை. காஃபிர்களாக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. அதில் முடிவு செய்பவன் அல்லாஹ்வே. உங்களையே, காஃபிர்கள் என்று சொல்லாத போது, தவ்ஹீத் ஜமாஅத்தின் சத்திய கொள்கையை ஏற்றுயிருக்கும் உங்களின் உறவினர்களை நாங்கள் எவ்வாறு காஃபிர்கள் என்போம்? எனவே, அது எதிர் கேள்வி தான் என்பது உங்களுக்கே தெரியும்.

தொடரும்.....

தொடர்ச்சி.....


//அப்படியென்றால் பேச்சிலும், எழுத்துலும் அன்னன் அவர்கள் மாறுப்பட்டுதான் இருப்பாரா? பீஜே அவர் வீடியோ லின்க்கை பார்த்துதான் நீ இவ்வாறு சொல்கிர்ரிகலா என்பது எனக்கு தெரியவில்லை...

அண்ணண் எங்களை பொருத்தவரை அவர் மனிதர். தவறுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. அவர் தவறு செய்தால், சுட்டிக்காட்டுவோம். அவ்வாறு சுட்டிக்காட்டு போது அவர் செய்வது தவறாக இருந்தால் அதை திருத்திக்கொண்டுள்ளார். அவர் எங்களுக்கு நபியும் அல்ல. உங்களுக்கு தான் அறிஞர்கள் நபியும் மலக்குகளும் ஆவார்கள்.

உதாரணத்திற்கு, எங்கள் அண்ணண் உங்கள் அண்ணண் சொல்லுவதை போல் சுயஇன்பம் ஹலால் என்று சொல்லியிருந்தால், அவரின் சட்டையை பிடித்து, இந்த குர்ஆன் வசனத்திற்கு உங்களின் கருத்து எதிராக இருக்கிறது சொல்லுவோம். உங்கள் அண்ணண் குர்ஆன் வசனத்திற்கு எதிராக சுயஇன்பத்தை ஹலாலாக்கிய போது, நீங்கள் காத்த அமைதியை போல் நாங்கள் இருக்க மாட்டேம்.

நீங்கள் குறிப்பிடும் விஷயத்தில் அண்ணண் (வஞ்சக புகழ்ச்சி அணி) அவர்கள் முரண்பட்டு பேசவில்லை என்பது எங்களின் வாதம். அண்ணண் அவர்கள் முரண்பட்டு தான் பேசுவரா? என்ற உங்களின் கேள்விக்கு பொதுமக்கள் முடிவு செய்து கொள்ளட்டும். யார் முரணாக பேசுகிறார்கள் என்று.

உங்களின் கொள்கையும் ஹைதர் அலியின் பெரியார்கள் கொள்கையும் ஒன்று தான் என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி (அதை பற்றி வாய் திறக்காமல்).

நீங்கள் எங்களின் இந்த கேள்விகளுக்கு பதில் சொன்ன பின்னர், உங்களின் மற்ற கேள்விகளுக்கு பதில் வரும்.


வஸ்ஸலாம்.

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி என்ற அதிரை ஸலஃபி பிஜேவை காஃபிராக அவர்கள் எண்ணுவதையும் அதை பல இடங்களில் வெளிப்படையாக அறிவிப்பதையும் ஒத்துக்கொண்டுவிட்டார் (அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு மறுக்க தயாரா என்று கேட்டவுடன்). இவர்கள் பொய் சத்தியமும் செய்யக்கூடியவர்கள் தான். இவர்கள் சத்தியம் போட்டு மறுத்தால், இவர்களின் முகத்திரை இன்னும் கிழியும். தேவைப்படும் போது இந்த அதிரை ஸலஃபிகள் என்ற அறைவேட்காடு கும்பலின் உண்மை முகம் காட்டப்படும். இன்ஷா அல்லாஹ்.

வஸ்ஸலாம்.


இவர்களின் வழிகேடுகளை அறிய: இங்கே சொடுக்கவும்

யஹ்யா சில்மியின் கும்பலான அதிரை ஸலஃபிகளின் உண்மை கொள்கைகள் என்ன?

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.