Saturday, July 19, 2014

தவ்ஹீத் ஜமாஅத்தின் சூனிய சவாலும் - பொருக்கி முஜாஹித்தின் சூனிய மாணவர் முர்ஷித் அப்பாஸியின் பொய்களும், ஜால்ராக்களும்!

தவ்ஹீத் ஜமாஅத்தின் சூனிய சவாலும் - பொருக்கி முஜாஹித்தின் சூனிய மாணவர்  முர்ஷித் அப்பாஸியின் பொய்களும், ஜால்ராக்களும்

சூனியம் குறித்து மக்கள் மத்தியில் உள்ள பயத்தையும், மூடநம்பிக்கையையும் போக்கும் விதமாக சகோதரர் பிஜே அவர்களின் சவாலை முன்வைத்து, பிஜே அவர்களுக்கு சூனியம் செய்து 50 லட்சம் ரூபாய் பரிசை தட்டிச்செல்லுங்கள் என்று அதிரை நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இதை நமது தளத்தில் செய்தியாகவும் வெளியிட்டு இருந்தோம். அதில் மூன்று செய்திகளை முன்வைத்து இருந்தோம்:

ஒன்று - கொள்கையில்லாதவர்களால் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முர்ஷித் அப்பாஸி என்பவர் சம்பந்தப்பட்டது. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிரையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது, இலங்கையை சார்ந்த முஜாஹித் என்பவருக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் சூனியம் சம்பந்தமாக விவாத ஒப்பந்த சம்பந்தமாக பேசப்பட்டதை எடுத்துக்காட்டி சில செய்திகளை முன்வைத்து இருந்தார் (அந்த விவாத ஒப்பந்தத்தில் முர்ஷித் அப்பாஸி அவர்களும் கலந்து கொண்டார்). முஜாஹித் என்பவர் தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதம் செய்ய தயார் என்று சொல்லி வலுவாக சிக்கிக்கொண்டார். கடைசி நேரத்தில் விவாத ஒப்பந்தத்தில் வந்து நான் பிஜேவுடன் தான் விவாதம் செய்வேன், இல்லாவிட்டால் எஸ்எல்டீஜேவுடன் தனியாக விவாதிப்பேன் என்று அந்தர் பெல்டி அடித்தார். இது பற்றி அதிரையில் முர்ஷித் அவர்கள் சூனியம் செய்ய ஒன்று பீஜே வர வேண்டும் அல்லது எஸ்எல்டீஜே வர வேண்டும் என்று கர்ஜித்து சென்றார். இப்படி கர்ஜனை செய்தவருக்கு 50 லட்சம் பெற அதிக தகுதியுள்ளது என்ற அடிப்படையில் இவரையும் நாம் அந்த ஆக்கத்தில் குறிப்பிட்டு இருந்தோம் (இவர் தற்போது அதிரையில் தான் உள்ளார்). 

இரண்டாவதாக, முர்ஷித் என்பவரை அதிரையில் அழைத்து பயான் நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு கொள்கை கிடையாது என்றும் குறிப்பிட்டு இருந்தோம். 

முன்றாவதாக, முர்ஷித் என்பவர் கூட்டணி போட்டு வந்த முஜாஹித் என்பவர் ஒரு பொருக்கி என்று குறிப்பிட்டு இருந்தோம். 

இந்த மூன்று விஷயங்களை பற்றியும் சம்பந்தப்பட்ட அமைப்பினரும் மற்றும் முர்ஷித் அவர்களும் பதில் தந்துள்ளார்கள். இவர்கள் தங்களின் பதிலை ஏனோ பகிரங்கமாக வெளியிடவில்லை. நமக்கு அவர்களின் பதில் எதர்ச்சையாக அந்த பதில் கிடைத்தது. நாம் வைத்த குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டியது நமது பொருப்பு என்ற அடிப்படையில், அவர்கள் நம்மிடம் எழுப்பியுள்ள அத்தனை கேள்விகளுக்கும் வாதங்களுக்கும் நாம் பதில் தர உள்ளோம், இன்ஷா அல்லாஹ். 

இவர்களின் பதில் நமக்கு இவர்கள் வெளியிட்ட மறுநாள் காலையே கிடைத்து விட்டது, உடனே இவர்களுக்கு நாம் பதில் எழுத ஆரம்பித்துவிட்டோம். பல விஷயங்களை எடுத்து காட்ட வேண்டி இருந்ததால் பதிலை வெளியிடுவதற்கு கால தாமதமாகிவிட்டது.

இவர்கள் மீது நாம் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை, அனைத்திற்கும் நம்மிடம் ஆதாரமும் உண்டு. இவர்கள் மீது ஏதோ குரோதம் கொண்டு நாம் இவற்றை முன்வைக்கவில்லை. இவர்களிடம் உள்ள தவறுகளை எடுத்துச்சொல்லி அவர்களை சரியான பாதைக்கு அழைத்து வர வேண்டும் என்பது தான் எமது ஆவல். 

இவர்கள் தந்துள்ள பதிலை மூன்றாக பிரிக்கலாம்:

1. சம்பந்தப்பட்ட அமைப்பை சார்ந்த பொறுப்பாளர் ஒருவர் நாம் சூனியம் சம்பந்தப்பட்ட ஆக்கத்தில் முன்வைத்த கொள்கையற்றவர்கள் என்ற வாதத்தை கண்டு, சற்று வருத்துடன் இவ்வளவு பணிகள் செய்கிறோம், எங்களை ஏன் இப்படி சொல்லுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். நாம் வைத்த வாதத்திற்கு ஆதாரங்களை முன்வைத்து எங்களை உண்மையாளர்கள் என்று நிரூபிக்க வேண்டும். அந்த அடிப்படையில் நாம் இவர்களுக்கு கொள்கை கிடையாது என்பதை ஆதாரத்துடன் இன்ஷா அல்லாஹ் ஐந்து நாட்களில் தனி ஆக்கமாக வெளியிடுவோம். 

2. அடுத்து, முஜாஹித் குறித்தும், சூனியம் குறித்தும், சூனிய சவால் குறித்தும் நாம் முன்வைத்த விஷயங்களுக்கும் பதில் தருகிறேன் என்ற பெயரில் முர்ஷித் அப்பாஸி பல பொய்யான செய்திகளையும், அவதூறுகளையும், பித்தலாட்டங்களையும் முன்வைத்துள்ளார். அவர் பேசியதை வெளியிட்டு, அதில் அவர் வைத்துள்ள அனைத்து வாதங்களுக்கும் இந்த ஆக்கத்தில் பதில் தர உள்ளோம். 

3. முர்ஷித் அவர்கள் நாம் முன்வைத்த வாதங்களுக்கு பதில் தரும் போது அதிரையை சார்ந்த மீடியா மேஜிக்கர் ஒருவர் அதிரை தவ்ஹீத் ஜமாஅத்தை பல முறை விவாதத்திற்கு அழைத்தும் தவ்ஹீத் ஜமாஅத் வரவில்லை என்ற தகவலையும் முர்ஷித் அப்பாஸி முன்வைத்தார். இது குறித்து தெளிவான ஒரு பதிலடியையும் ஒரிரு நாட்களில் வெளியிடுவோம். மீடியா மேஜிக்கர் இப்படி சொல்ல காரணம் என்ன? அவர் உண்மையில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு சவால் விட்டரா? அல்லது தனியாக புலம்பி கொண்டு இருந்தாரா? என்பதை எல்லாம் விளக்கி பதிலடியை தருவோம், இன்ஷா அல்லாஹ். இவர் இப்படி தனியாக புலம்புகிறார் என்ற தகவல் சில மாதங்களுக்கு முன்னர் நமக்கு கிடைத்தது, இவருடன் பேசிக்கொண்டு இருந்தவரிடம் நமது இணைய தள இமெயிலுக்கு இவர் நேரடியாக சவாலை அனுப்ப சொல்லுங்கள் என்றோம், அன்றோடு மேஜிக்கர் ஓடிவிட்டார். இவரை எப்படி விவாதத்திற்கு அழைப்பது என்று காத்து இருந்தோம், முர்ஷித் ஒரு அருமையான வாய்ப்பை ஏற்படுத்தி தந்துவிட்டார். நிஜாம் அவர்களின் விவாத சவாலை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். முழு விபரம் இங்கே வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆக்கத்தில் முர்ஷித் அவர்களுக்கு பதில் தருகிறோம். நமது பதிலை படிப்பதற்கு முன் முர்ஷித் பதிலின் வீடியோவை பாருங்கள்....


இந்த பதிலை அறைகூவல் என்று தலைப்பிட்டு பாக்கர் ரசிகர்கள் பரப்புகிறார்களே, ஒரு வேளை சூனியம் செய்து 50 லட்சத்தை பெற முர்ஷித் அப்பாஸி ரெடி ஆகிவிட்டாரா? அல்லது சூனியம் சம்பந்தமாக விவாதம் செய்ய தயாராகி விட்டாரா? என்பதை அறிய இவரின் பதிலை பார்த்த நாம், இதில் இரண்டையும் இவர் செய்ய முன்வரவில்லை என்பதை அறிந்து கொண்டோம். 'அறைகூவல்' என்ற வார்த்தை, சவால் விடுவதற்கும் அல்லது சவாலை எதிர் கொள்ள தான் பயன்படுத்தப்படும். ஒட்டம்மெடுப்பதற்கு முர்ஷித் அப்பாஸி கொடுத்த தலைப்பு 'அதிரை டீ என் டீ ஜே வுக்கு ஒரு அறைகூவல்'. 

ஆரம்பாக, கண்ணூறு பற்றி யாரோ ஒருவர் கேள்வி கேட்டதாகவும்,  அதற்கு முர்ஷித் அப்பாஸி கண்ணூறை மறுப்பவர்கள் வழிகேடர்கள் என்றும், காஃபிர்கள் என்றும் சொன்னதாகவும் ஆரம்ப செய்கிறார். கண்ணூறு சம்பந்தமான ஹதீஸ்களை மறுப்பவர்கள் வழிகேடர்கள், காஃபிர்கள் என்றால், தாருத் தவ்ஹீத் அமைப்பின் சில முக்கிய பொருப்பாளர்கள், கண்ணூறு ஹதீஸ்களை ஏற்காத தவ்ஹீத் ஜமாஅத் அதிரை பள்ளியில் தொழுகிறார்கள், எனவே, சம்பந்தப்பட்ட தாருத் தவ்ஹீத் அமைப்பினர் காஃபிர்களா? அவர்களின் தொழுகை ஏற்கப்படுமா? என்பதை முர்ஷித் அப்பாஸி தெளிவுப்படுத்த வேண்டும். குர்ஆனுக்கு முரண்படும் ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்)  ஹதீஸ்களை மறுத்த முன் சென்ற அறிஞர்களை இவ்வாறு சொல்லும் தைரியம் உண்டா? முஸ்லீம் கிரந்தத்தில் இடம்பெறும் கீழ்காணும் ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்)  ஹதீசை இப்னு தைமிய்யா அவர்கள் குர்ஆனுடன் முரண்படுகிறது என்று சொல்லி, இந்த ஹதீசை ஏற்ககூடாது என்கிறார். இந்த அடிப்படையில் இப்னு தைமிய்யா அவர்களை காஃபிர் என்றும், வழிகேடர் என்றும் சொல்லும் தைரியம் முர்ஷிதுக்கு உண்டா? 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து கூறினார்கள்:

கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமை பூமியைப் படைத்தான். பூமியிலே ஞாயிற்றுக்கிழமை மலையைப் படைத்தான். திங்கட்கிழமை மரங்களைப் படைத்தான். செவ்வாய்க்கிழமை உலோகங்களைப் படைத்தான். புதன்கிழமை ஒளியைப் படைத்தான். வியாழக்கிழமை பூமியிலே உயிரினங்களை பரவச் செய்தான். வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் வெள்ளிக்கிழமையின் கடைசி நேரமான அஸர் மற்றும் இரவுக்கு மத்தியில் கடைசி படைப்பாக ஆதமைப் படைத்தான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (4997)

இதற்கு பதில் தருவாரா? பதில் தந்தால் இன்னும் இது போன்ற பல ஆதாரங்களை அடுக்குவோம், இன்ஷா அல்லாஹ்.

அடுத்து, நாம் இவர்களை கொள்கையில்லதவர்கள் என்று சொல்லியதை சொல்லி, நாம் கொள்கையில்லாதவர்கள் என்றால் இலங்கையில் தப்லீக் ஜமாஅத்தோடு ஒரு நிகழ்ச்சி பண்ணுவோமா? ஜமாஅத்தே இஸ்லாமியோடு சேர்ந்து நிகழ்ச்சி பண்ணுவோமா? என்று கேட்டு செய்ய மாட்டோம் என்கிறார் முர்ஷித் அப்பாஸி. இங்கு ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்தியாக வேண்டும். தாருத் தவ்ஹீத் அமைப்பின் அமீர் எந்த இயக்கத்தின் கொள்கையை ஆதரிக்கிறார், எந்த இயக்கத்தின் பதிப்பகத்தில் தனது நூலை வெளியிடுகிறார் என்ற ரகசியம் முர்ஷித் அப்பாஸி அவர்களுக்கு சூனியமாக உள்ளது. ஜமாஅத்தே இஸ்லாமியின் தமிழக பிரிவாக இருக்கும் ஐஎஃப்டி (IFT - Islamic Foundation Trust) என்ற அமைப்பின் பதிப்பகத்தில் தான் தனது புத்தகங்களை வெளியிடுகிறார். ஜமாஅத்தே இஸ்லாமியின் கொள்கையை தான், அவர் ஆதரிக்கிறார் என்பது ஊரில் உள்ளவர்களுக்கு தெரிந்த உண்மை. இதை தெரிந்தே மறைத்து ஜமாஅத்தே இஸ்லாமியியோடு சேர்ந்து பேசுவோமா? என்கிறார். மேலும், அதே அமீர் போலி சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை பின்பற்றும் ஒரு சங்கத்தில் பொருளாளராக உள்ளார். இந்த சங்கத்தில் தான் வரதட்சணை திருமணங்களுக்கு பட்டு கம்பளம் விரித்து, அள்ளி குத்து பைனகுமா போன்ற அனைத்து பித்அத்துகளையும் அரங்கேற்றி திருமண சான்றிதழ் தரப்படும். இப்படி இருக்க எப்படி நா கூசாமல் புளுகுகிறார் முர்ஷித் அப்பாஸி.

இன்னும் சொல்லப்போனால், தாருத் தவ்ஹீத் நடத்தும் கேபிள் டிவி நிகழ்ச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமியினரின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. (பிஜேவின் உரைகளும் ஒளிபரப்பு செய்யப்பட்டது). தாருத் தவ்ஹீத் நடத்தும் நூலகத்தில் ஜமாஅத்தே இஸ்லாமியின் நூல்களும், தர்ஜுமாக்களும் நிறைந்து இருக்கிறது. இவற்றை எல்லாம் மறைத்து நான் ஜமாஅத்தே இஸ்லாமியோடு சேர்ந்து பேசுவேனா என்கிறார் முட்டாள் அப்பாஸி. 

குர்ஆனுடன் முரண்படும் ஹதீஸ்களை ஏற்க மாட்டோம் என்று சொன்னவரை மேடை ஏற்றியும், மழை தொழுகை நடத்தியும் அழகு பார்த்த தாருத் தவ்ஹீத்:

தாருத் தவ்ஹீத் கொள்கை பிடிப்பு மிக்க அமைப்பு என்று நாம் சொன்னால் எவன் கேள்வி கேட்க போறான், விட்டு அடித்தோமா, கள்ளா கட்டினோமா, ஊருக்கு போனாமா என்ற தந்திரத்தில் அப்பாஸி தாருத் தவ்ஹீத்தை கொள்கை பிடிப்பு உள்ள அமைப்பு என்று ஜால்ரா தட்டியுள்ளார். முர்ஷித் அப்பாஸி எந்த காரணத்திற்காக தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பதாக சொல்லுகிறாரோ அதே கொள்கையை உடைய ஒருவரை பல முறை தாருத் தவ்ஹீத் ஜூம்ஆ மேடைகளிலும், மழை தொழுகை நடத்தவும், தெருமுனை பிரச்சாரம் நடத்தவும், திருமண உரை நிகழ்த்தவும் பயன்படுத்தியுள்ளார்கள். அவர் யார் என்ற கேள்வி கண்டிப்பாக வரும், அவர் பெயர் அப்துல் ஹமீது, இவர் பாக்கரின் கொள்கை பிடிப்பு மிக்க இயக்கத்தில் அங்கம் வகித்தவர், பின்னர், வேறு ஒரு இயக்கம் கண்டவர். இவர்கள் பாக்கர் கூட்டணியில் இருக்கும் போது (தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து பாக்கர் மற்றும் அவரின் கூட்டாளிகள் தூக்கி விசப்பட்ட பிறகு) அஹ்லே குர்ஆன் அமைப்புடன் ஒரு விவாதம் செய்தார்கள். அந்த விவாதத்தில் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்ககூடாது என்று அப்துல் ஹமீது என்பவர் தெளிவாக எடுத்துரைத்தார். அதற்க்கான ஆதாரத்தை இங்கே காணவும். தவ்ஹீத் ஜமாஅத்தை அப்பாஸி என்பவர் என்ன காரணத்திற்காக எதிர்க்கிறாரோ அதே கொள்கையை உடையவரை மேடை ஏற்றிய தாருத் தவ்ஹீதை கொள்கை உள்ள அமைப்பு என்று சொல்லிய முர்ஷித் அப்பாஸியை நடுத்தெருவில் நிறுத்தி, எதால் அடிப்பது என்று பொது மக்கள் முடிவு செய்யட்டும்.
குர்ஆனுடன் முரண்படும் ஹதீஸ்களை ஏற்க மாட்டோம் என்ற அப்துல் ஹமீது என்பவரை தாருத் தவ்ஹீத் நடத்திய மழை தொழுகையில், தொழகை நடத்தி, பயான் செய்ய வைத்த அற்புத காட்சி. முர்ஷித் அப்பாஸியை எதுவால் அடிப்பது?
அடுத்து வழிகெட்டவர்களுடன் சேர மாட்டோம், வழிகேடு வழிகேடு தான் என்கிறார், இதை சொல்லி முடித்து மறுநிமிடமே குர்ஆன் ஹதீசை பேச எங்கு அழைத்தாலும் செல்லுவேன் என்று முரண்படுகிறார். அறியாமையில் இருக்கும் தப்லீக் ஜமாஅத்தினரை விட, தவ்ஹீத் வேடத்தில் இருக்கும் இவர்கள் வழிகெட்டவர்கள்.

இந்த அமைப்பு எப்படிப்பட்டது தெரியுமா? அடுத்த வருடத்திற்கு இப்பவே போடும் திட்டம்:

சுன்னத் வல் ஜமாஅத்தினர் மீலாது விழா நடத்தும் போது காசு கொடுத்து வெளியூர்களில் இருந்து மவ்லவிகளை அழைத்து பேசவைப்பார்கள். அந்த மவ்லவிகள் நபி (ஸல்) அவர்களை புகழ்ந்து பேசுகிறார்களோ இல்லையோ, நிகழ்ச்சி நடத்துபவர்களை புகழ்ந்து தள்ளிச் செல்வார்கள், காரணம், அப்போது தான் அடுத்த வருடம் நம்மை மீலாது விழா நிகழ்ச்சியில் பேச அழைப்பார்கள், கள்ளா கட்டலாம் என்று. அதே பாணியை முர்ஷித் அப்பாஸியும் கையாண்டுள்ளார், தாருத் தவ்ஹீத் என்ற அமைப்பை பற்றி ஊரில் யாருக்குமே தெரியாது என்று எண்ணி, தாருத் தவ்ஹீத் எப்படிப்பட்ட கொள்கை பிடிப்பு உள்ள அமைப்பு தெரியுமா? அவர்கள் செய்த சாதனைகள் தெரியுமா? என்று பல பிட்டுகளை போட்டுள்ளார். முர்ஷித் அப்பாஸி நின்று பேசும் இடத்தில் மேடை ஏறாதவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் மட்டும் தான் என்று அடித்துச் சொல்லாம். ஊர் பிறையை சரி காணுபவர்கள், சவூதி பிறையை சரி காணுபவர்கள், பிறையை கணித்து தான் நோன்பு மற்றும் பெருநாள்களை ஆரம்பிக்க வேண்டும் என்பவர்கள், ஷியாக் கொள்கையை ஆதரிப்பவர்கள், பொம்பளை பொருக்கிகள், குர்ஆன் முரண்படும் ஸஹீஹான ஹதீஸ்களை ஏற்ககூடாது என்று சொல்லுபவர்கள் (தவ்ஹீத் ஜமாஅத்தின் அதே கொள்கையை) என அனைத்து கொள்கையுடையவர்களையும் மேடை ஏற்றி சாதனை படைத்த அமைப்பு தான் தாருத் தவ்ஹீத். மேலும், முர்ஷித் அப்பாஸி நின்று பயான் செய்யும் சிஎம்பி லேன் (CMP Lane) ALM பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சியில் சினிமா பாடல்களுடன் இசை கச்சேரிகளும் நடத்தப்பட்டது.


கூட்டம் நடத்து கூட்டம் நடத்து, தர்பியா நடத்து தர்பியா நடத்து... 
பொம்பளை பொருக்கிகளை வைத்து தர்பியா நடத்து.. கொள்கை இருக்கும் கொள்கை இருக்கு.... 
எங்களுக்கும் கொள்கை இருக்கு....... பொருக்கிகளை வைத்து தர்பியா நடத்தும் கொள்கை எங்களுக்கு இருக்கு.....
ஒயமாட்டோம் ஓயமாட்டோம் தர்பியா நடத்தும் வரை ஒயமாட்டோம்.....
(சிலரின் மைண்டு வாய்ஸ்)...

பெண் பொருக்கித்தனம் செய்தற்க்காக ஒரு அமைப்பின் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிடும் அளவுக்கு போன மறுடை புகழ் போச்சார் கோவை அய்யுவை வைத்து தர்பியா நடத்துவதும், பொதுக்கூட்டம்  அதிரையில் நடத்தும் அமைப்பு எது என்பதை ரகசியமாக கேளுங்கள் முர்ஷித் அவர்களே. பதில் உடனே வேண்டும் என்றால், இந்த புகைப்படத்தில் காணப்படும் மறுமை புகழ் பேச்சாளர் பின்னால் வழைத்து எழுதப்பட்டு இருக்கும், அமைப்பின் பெயரை படித்து பாருங்கள்...
அடுத்து, அமைப்பு சாராமல் குர்ஆன் ஹதீஸ் பேசுங்கள் என்றார்களாம், இவர் இலங்கையில் இருந்து வந்தாராம். சரி, இது உண்மையானால், ஒரு நாள் வரதட்சணை திருமணத்தில் கலந்து கொள்ளுபவர்கள், அதில் போடப்படும் பிரியாணி பிரித்து மேய்பவர்களை கண்டித்து ஒரு பயான் போடுங்களேன் (இது கூடாது என்ற நிலைப்பாட்டில் முர்ஷித் அப்பாஸி உள்ளார், கூடும் என்ற நிலையில் உள்ளார்கள் தாருத் தவ்ஹீத் அமைப்பினர் மற்றும் அதன் ஆதரவாளர்கள்). அடுத்த, நாள் எத்தனை பேரு பயானுக்கு வராங்கனு பாருங்க, உங்களையும் இலங்கைக்கு அனுப்பிடுவாங்க. நீங்கள் நேர்மையானவராகவும் சத்தியத்தை தயங்காமல் எடுத்து சொல்லக்கூடியவர்களாக இருந்தால், இதை செய்து காட்டுங்கள். 

ஜமாஅத்தே இஸ்லாமியின் ஸ்தாபகர் மவ்தூதி தஜ்ஜாலின் வருகை குறித்து வரும் ஸஹீஹான ஹதீசை மறுத்து, இந்த விஷயத்தில் நபி (ஸல்) பொய் சொல்லியுள்ளார்கள் என்றும் கூறியுள்ளார். அதிரையில் தான் பயான் செய்யும் அமைப்பின் அமீர் ஜமாஅத்தே இஸ்லாமியை சார்ந்தவர் என்ற செய்தி இப்போது முர்ஷித் அப்பாஸிக்கு கிடைத்துவிட்டது, நான்  ஜமாஅத்தே இஸ்லாமி மேடையில் பேசுவோனா? என்றவர், தாருத் தவ்ஹீத்துக்கு டாட்டா சொல்லி, முர்ஷித் தான் சொன்னதை உண்மை என்று நிரூபித்து தாருத் தவ்ஹீத் அழைப்பை புறக்கணித்து இலங்கை சென்று விடுவார் யாரும் எதிர்பார்த்துவிடாதீர்கள். (தனி நபர்களை சாட வேண்டாம் என்ற அடிப்படையில் இது குறித்த ஆதாரங்கள் வெளியிடப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மறுத்தால் ஆதாரம் வெளியிடப்படும்).  

கேடுகெட்டவர்களுடன் சேரமாட்டோம் என்று வீராப்பு பேசும் இந்த முர்ஷித் அப்பாஸி, சூனியம் சம்பந்தமான விவாத ஒப்பந்தத்தில் சீத்தீக் மற்றும் முஜாஹித் என்பவருடன் சேர்ந்து தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாத ஒப்பந்தம் செய்ய வந்தார். இதில் முஜாஹித் என்பவர் ஒரு பொருக்கி (இது பற்றி விரிவாக கீழே விளக்கப்பட்டுள்ளது). சித்தீக் என்பவர் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திடம் முஜாஹித் செய்த பொருக்கித்தனங்கள் குறித்து, நீங்கள் வைத்த ஆதாரங்கள் தாருங்கள், அவனை நான் மக்கள் மத்தியில் அடையாளம் காட்ட வேண்டும் என்று கெஞ்சியவர் (இது குறித்து சூனிய சம்பந்தமான விவாத ஒப்பந்தத்தில் எஸ்எல்டீஜேவிடம் சீடி கேட்ட ரகசியத்தை ஆரம்பமாக எடுத்துக்காட்டப்பட்டது, முர்ஷித் அப்பாஸி, சித்தீக் மற்றும் முஜாஹித் இதற்கு சிரிப்பை பதிலாக தந்து எங்களுக்கு மானம் இல்லை என்றார்கள். இது குறித்து இந்த வீடியோவை பார்வையிடவும், முதல் ஐந்து நிமிடத்தில் இந்த சம்பவம் உள்ளது). இப்படி கேடுகெட்டவர்களுடன் கூட்டணி வைப்பதில் வல்லவரான முர்ஷித் அப்பாஸி, நல்ல கூட்டணியில் தான் இருப்பேன் என்று சாதிக்கிறார்.

தெரியாமல் தான் கேட்கிறோம், நீங்கள் இலங்கையை சார்ந்தவர், வேறு ஒரு நாட்டில் எங்கேயோ இருக்கும் ஒரு சிறிய ஊரில் உள்ள ஒரு அமைப்பு சரியானது என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்? பொய் சொல்லுவதற்கு ஒரு எல்லை வேண்டாமா?  இது தான் வாங்கிய பணத்துக்கு அதிகமாக கூவுவதா? 

அடுத்து, தாருத் தவ்ஹீத் என்ற அமைப்பிற்கு வேண்டுமானால் பிஜேவை பற்றிய எல்லா ரகசியங்களும் தெரிந்து இருக்கலாம் என்றும், டீஎன்டீஜே போட்ட எல்லா கூத்துகளுக்கும் தெரிந்து இருக்கலாம், எனக்கு அதுவெல்லாம் தெரியாது என்கிறார் அப்பாசி. பீஜேவை பற்றிய என்ன ரகசியம் இந்த தாருத் தவ்ஹீத்திற்கு தெரியும்? முர்ஷித் அப்பாஸியின் சூனிய கூட்டணியின் தலைவன் முஜாஹித்தை போன்று காம வெறி ரகசியம் எதுவும் உண்டா? முஜாஹித்துக்கு காம வெறி ஏறினால், அவனின் தாய் தங்கை கூட விதி விளக்கு இல்லை என்றானே, அவனை போய் அறிஞன் என்கிறீரே முட்டாள் அப்பாஸி. உனக்கு மானம் எதாவது உண்டா? முஜாஹித் ஓரின சேர்க்கையில் போட்ட ஆட்டம் உனக்கு தெரியாதா? முஜாஹித் காம வெறியை இந்த முர்ஷித்துடன் அதிரை பொதுக்கூட்டத்தில் பேசிய சித்தீக் என்பவர் அம்பலப்படுத்த துடித்தாரே, இதை சூனிய விவாத ஒப்பந்தத்தில் ஆரம்பித்தில் சூட்டிக்காட்டப்பட்டு கேவலப்பட்டது மறந்துவிட்டதா?  

அடுத்தாக, ஒரு காலத்தில் பீஜே என்னை தக்லீத் செய்யாதீர்கள் என்றாராம். இப்போது பீஜேவுக்கு எதிராக பேசினால் தூக்கி விசுகிறார்களாம். அட பொய் மவ்லவியே, பிஜேவிற்கு எதிராக பேசியதற்க்காக தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பட்டியலை உன்னால் தர முடீயுமா முர்ஷித் அப்பாஸியே? இன்று பிஜே என்னை தக்லீத் செய்யுங்கள் என்று சொல்லுகிறாரா? இவ்வாறு சொன்னதை போல பிதற்றுகிறார் இந்த சூனிய மவ்லவி. 

தொடர்ந்து, இவர் தவ்ஹீத் ஜமாஅத்தை தூக்கி எறிய காரணம், தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையாம். இவருக்கு கொள்கையும் கிடையாது ஒரு மண்ணங்கட்டியும் கிடையாது. தவ்ஹீத் ஜமாஅத்தில் தாயீயாக இருந்தால், இவர் இப்போது அதிரையில் வந்து இருப்பது போல், குடும்பத்துடன் செகுசு பயணம் செய்ய முடியாது, வெள்ளையும் செல்லையுமாக வளம் வர முடியாது. மார்க்க பிரச்சாரம் செய்ய வெளிநாடுகளுக்கு சென்றால் கூட, குடும்பத்துடன் செல்ல முடியாது, தனியாக தான் செல்ல முடியும், வெளிநாட்டில் பிரச்சாரம் செய்ய சென்றால் அதற்கு கூலியும் வழங்கப்படாது தவ்ஹீத் ஜமாஅத்தில். இந்த சொகுசு எல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்தால், நமது அப்பாஸி அண்ணண் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து இருப்பார். அப்பாஸி அவர்கள் கொள்கை குன்று என்று தன்னை பிரகடனம் செய்துள்ளார், இவர் இதில் பொய்யர் என்பதற்கு இன்னும் ஒரு பயங்கர விஷயமும் உண்டு. அந்த விஷயத்தை சொல்லுவதற்கு முன், கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருட வருடம் ஜக்காத் கொடுக்க வேண்டுமா? கூடாதா? என்பதை அப்பாஸி தெளிவுபடுத்த வேண்டும், அதன் பின்னர், தாருத் தவ்ஹீத்தில் இவர் பயான் செய்த இறுதி நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி தான் என்பதை செய்து காட்டும் ஒரு ரகசியம் வெளியே வரும்.

முஜாஹித் என்பவர் பொருக்கியே, ஒத்துக்கொண்ட முர்ஷித் அப்பாஸி:

அடுத்து, நாம் முஜாஹித் என்ற பொருக்கியுடன் சேர்ந்து கொண்டு சூனியம் விவாதம் செய்ய முர்ஷித் அப்பாஸி வந்தார், பின்னர் ஓட்டம் எடுத்தார் என்று சூனிய போஸ்டர் குறித்த ஆக்கத்தில் நாம் சொல்லி இருந்தோம். இந்த விஷயத்தை முர்ஷித் அப்பாஸி சொல்லும் போது, நாம் முர்ஷித் அப்பாஸியை முஜாஹித்தின் கைக்கூலி என்றும், முஜாஹித் தான் முர்ஷித் அப்பாஸிக்கு சம்பளம் கொடுப்பதாக நாம் குறிப்பிட்டதாக புழுகிறார், நாம் அவ்வாறு குறிப்பிடவில்லை. முஜாஹித்தை நாம் பொருக்கி என்று சொன்னதற்கு இவர் எந்த பதிலும் சொல்லாமல், முஜாஹித் ஒரு பொருக்கி தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார் முர்ஷித் அப்பாஸி.

பொருக்கி அறிஞராம், சொல்லுகிறார் முர்ஷித் அப்பாஸி:

அடுத்து, முஜாஹித்தினுடைய கொள்கையால் (?) கவரப்பட்ட முர்ஷித், முஜாஹித் எஸ்எல்டீஜேவில் மிகப்பெரிய தாயியாக இருந்தார் என்றும், அவர் பெரிய அறிஞர் என்றும் புழுகுகிறார். இந்த முஜாஹித் என்பவர் எஸ்எல்டீஜேவில் தாயியாக இருந்தது உண்மை. முர்ஷித் அப்பாஸி சொல்லுவதை போல் முஜாஹித் எஸ்எல்டீஜேவில் இருக்கும் போது எஸ்எல்டீஜே ஒரு வலுவான அமைப்பாக கூட இலங்கையில் இருக்கவில்லை. எந்தவித செயல்பாடும் இல்லாமல் முடங்கி இருந்தது (இன்று இலங்கையில் வலுவான முஸ்லிம் அமைப்பாக அது உள்ளது). இப்படி இருக்கையில் ஆளே இல்லாத கடையில் டீ ஆத்தியதை போல, பெரிய தேசிய தாயியாக முஜாஹித் இருந்ததை போல பிம்பம் ஏற்படுத்த முயல்கிறார். முஜாஹித் என்ற ஒருவர் தமிழ் மக்களுக்கு தெரிந்து இருக்கிறார் என்றால், அதற்கு இரண்டு காரணங்களால் தான். ஒன்று, இந்த முஜாஹித் பிஜே அவர்களை சென்னையில் வந்து பல கேள்விகளை முன்வைத்து, பேட்டி கண்டார். இது வீடியோ பதிவாக எல்லா மக்களுக்கும் சென்றடைந்தது. மற்றென்டு, இந்த முஜாஹித்துக்கு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகத்தில் ஜூம்ஆ உரை நிகழ்த்த வாய்ப்பு தரப்பட்டது (இது நடக்கும் போது முஜாஹித் கேடி என்பது தெரியாது). இதையெல்லாம் மறைத்து முஜாஹித் உலக மகா அறிஞர் போல புகழ்கிறார் ஜால்ரா புகழ் முர்ஷித் அப்பாஸி. மேலும், முஜாஹித் ஒரு மிகப்பெரிய அறிஞர் என்கிறார் முரிஷித். பொருக்கி எப்படி அறிஞனாக இருக்க முடியும்? உதாரணத்திற்கு, ஒரு பெரிய அறிஞர் உள்ளார், அவர் ஒரு பெண்ணை கை பிடித்து இழுத்து விடுகிறார், இவரை அறிஞர் என்போமா? இல்லை பொருக்கி என்று சொல்லுவோமா? 

முஹாஜித் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக கருத்துச் சொன்னதால் தான் எஸ்எல்டீஜேவில் இருந்து நீக்கப்பட்டதாக புளுகுகிறார். இதை இவர் நிருபிக்க வேண்டும். 

அடுத்து, இந்த கூலிப்படை முர்ஷித், எஸ்எல்டீஜேவை தூக்கி எறிந்தராம், இவருக்கும் எஸ்எல்டீஜேவுக்கும் எந்த காலத்திலும் சம்பந்தம் இருந்தது இல்லை. பச்சை பொய் சொல்லுகிறார். 


பெண்களுக்கு பெண்கள் இமாமத் செய்யலாம் என்று பிஜே மார்க்க ஆதாரம் காட்டி சொன்னால் அது தவறு, முர்ஷித் அப்பாஸியின் மனைவி பெண்களுக்கு இமாமத் செய்தால் அது சரி:

பெண்களுக்கு பெண்கள் இமாமத் செய்யக்கூடாது என்று முர்ஷித் பேசிய சில நாட்களுக்கு முன், இவரின் மனைவி அதிரையில் தாருத் தவ்ஹீத் என்ற அமைப்பை சார்ந்த ஒருவரின் வீட்டில் இமாமத் செய்துள்ளார், எல்லாம் நாடகம் தான்.

அடுத்து, பிஜே சென்ற வருடம் ஒரு கருத்தை சொன்னாராம், இந்த வருடம் வேறு கருத்தை சொல்லுகிறாராம். நமது கருத்து தவறு என்று தெரிந்தால், அதை மாற்றிக்கொள்ளுவது தானே ஒரு முஃமின் தன்மை. இவரால், இவரது பதிலில் புகழப்படும் ஷஃபி இமாம் அவர்கள் மார்க்க கருத்துக்களை இந்த வருடம் ஒன்றை சொல்லி, அடுத்த வருடம் எனது பழைய நிலைப்பாடு தவறு என்று சொல்லவில்லையா? ஷஃபி இமாம் செய்தால் அது சரி, பிஜே செய்தால் அது தவறா? 

அடுத்து, மீண்டும் இவர்களின் கொள்கை பிடிப்பு பற்றி பேசுகிறார் அப்பாஸி. கவிஞருக்கு இறையருள் என்ற கருத்தில் கட்டுரை போட்டு புகழ் தோடும் புது மவ்லூது ஓதிகள், இந்த அப்பாஸியை இறக்குமதி செய்த அமைப்பின் முக்கிய பொருப்பில் இருக்கிறார்கள். வரதட்சணை கூடாது என்று பேசிக்கொண்டே, வரதட்சணை திருமணத்திற்கு சான்றிதழ் தருபவர்களும், வரதட்சணை பிரியாணியை வெலுத்து வாங்கும் கொள்கை குன்றுகளும் அப்பாஸிக்கு எலும்பு துண்டு போட்டு இறக்குமதி செய்த இயக்கத்தின் முக்கிய பொருப்பில் உள்ளார்கள். காலை முதல் மாலை வரை தவ்ஹீத் பேசிவிட்டு, 6 மணிக்கு திரைப்படத்திற்கு படை எடுப்பவர்களும் இந்த இறக்குமதி அமைப்பில் உள்ளார்கள். பிஜேவின் ஜக்காத் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டவர்களும், முர்ஷித் அப்பாஸின் அதிரை கொள்கை குன்று அமைப்பில் உள்ளார்கள். இணைவைப்பு கூடாது என்று கூறிக்கொண்டு, இணைவைக்கும் இமாமை பின்பற்றி தொழக்கூடியவர்கள் இந்த அமைப்பின் பொருப்பில் உள்ளார்கள் என்பதை தெரிந்ததே தெரியாமலே பொய்களை அதிரையில் அள்ளிவிடும், அயல் தேசத்துக்காரர் புரிந்து கொள்ளட்டும். 

சூனிய விவாதத்தில் அந்த பெல்டி - நான் விவாதம் எல்லாம் செய்ய மாட்டேன் - தொடை நடுங்கும் அப்பாஸி:

சூனியம் சம்பந்தமாக விவாதத்தில் தவ்ஹீத் ஜமாஅத் பின்வாங்கி விட்டதாக படம் காட்டி, பிஜேவுடன் தான் நாங்கள் விவாதம் செய்வோம், இல்லையென்றால் எஸ்எல்டீஜேவுடன் விவாதம் செய்வோம் என்று அதிரையில் பேசிய அதே முர்ஷித் அப்பாஸின் நாக்கு இன்று  பிரண்டு பேசுகிறது (முர்ஷித் அதிரையில் தவ்ஹீத் ஜமாஅத் சூனிய விவாதத்தில் இருந்து பின்வாங்கிவிட்டதாக பேசிய வீடியோ கீழே). இவ்வாறு பேசிய முர்ஷித் அப்பாஸி, நமது சூனிய சவால் குறித்த விஷயத்திற்கு இப்போது பதில் தரும் போது: ''நாங்கள் யாரோடும் விவாதம் செய்ய தயாராக இருந்தாலும் விவாதத்திற்கு போக மாட்டோம்'' (இவர் தற்போது தந்த பதில் இந்த ஆக்கத்தில் ஆரம்பத்தில் உள்ளது) என்று பேசுகிறார். அட அயோக்கியாரே, யாரோடும் விவாதம் செய்ய மாட்டோம் என்றால், கேடி முஜாஹித்தோடு என்ன காரணத்திற்காக தவ்ஹீத் ஜமாஅத்தோடு விவாத ஒப்பந்தம் செய்ய வந்தீர்? விவாதமே செய்ய விருப்பம் இல்லாதவர், எதற்க்காக விவாத ஒப்பந்தத்திற்கு இலங்கையில் இருந்து சென்னைக்கு வர வேண்டும்? விபச்சாரம் செய்ய மாட்டேன், ஆனால், விபச்சாரம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்தம் போட்டு தருவேன் என்பது போல் இல்லையா? உங்களின் பிதற்றல். விவாதத்தில் எந்த பயானும் இல்லையென்றால், தவ்ஹீத் ஜமாஅத்தையும், எஸ்எல்டீஜேவையும் நீங்கள் விவாதத்திற்கு அழைத்தீர்கள். 

அடுத்து, சூனியம் குறித்து இலங்கை உலமாக்கள் நல்ல பதில் தருகிறார்களாம், இலங்கை உலமாக்கள் கொள்கை இல்லாமல் நாரி போனவர்கள் இல்லையாம். உண்மையில், சொல்லப்போனால், சூனியத்திற்கு பதில் தருவதாக சொல்லும் இலங்கை மவ்லவிமார்களான முர்ஷித் அப்பாஸி, இஸ்லாயில் ஸலஃபி, முபாரக் மதனி போன்றவர்கள், மகா கேடுகெட்டவர்கள். குறிப்பாக, இஸ்மாயில் ஸலஃபி என்பவர், அன்று பிஜேவின் திருக்குர்ஆன் தமிழாக்கத்திற்கு தனது பத்திரிக்கையில் விளம்பரம் தந்தவர். இசை, இணைவைப்பு என்று பெரும் பாவத்தில் முழ்கி கிடக்கும் தமுமுகவில் வந்து பயான் செய்பவர். தாருத் தவ்ஹீத் என்ன கொள்கையில் உள்ளது என்று தெரியாமலே வந்து பயான் செய்பவர் முர்ஷித் அப்பாஸி. அரபு நாட்டில் அரபிகளை ஏமாற்றி, தஃவா செய்கிறோம், பள்ளி கட்டி தருகிறோம் என்று கள்ளா கட்டுபவர்கள் தான் இலங்கை மவ்வலிகள். பல இலங்கை மவ்வலிகள் பணம் பார்ப்பதை தான் கொள்கையாக கொண்டுள்ளார்கள் (பலர் இதற்கு விதிவிளக்கவும் உள்ளார்கள், அவர்களுக்கு இந்த விமர்சனம் பொருந்தாது).

அடுத்து, முர்ஷித் அப்பாஸிக்காக சூனிய போஸ்டர் ஒட்டப்பட்டதாக சொல்லிக்கொள்கிறார். அந்த போஸ்டர் இவருக்காக ஒட்டப்படவில்லை, தமிழகம் முழுவதும் அந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

யார் போக்கிரி?

அடுத்து, தவ்ஹீத் ஜமாஅத்தினரை போக்கிரி என்கிறார் முர்ஷித் அப்பாஸி. தவ்ஹீத் ஜமாஅத்தினர் போக்கிரிய இல்லையா என்பதற்கு அதன் எதிரிகளே தவ்ஹீத் ஜமாஅத்தினர் நேர்மையானவர் என்று சான்றிதழ் தருவார்கள். காமம் தலைக்கு ஏறினால், தாய் சகோதரி என்று கூட பார்க்க மாட்டேன் என்று சொன்ன முஜாஹித்தை அறிஞர் என்று சொல்லும் முர்ஷித் அப்பாஸி போக்கிரியா? அல்லது ஈனப்பிறவியா? மானம் கெட்டவனே, யாராட போக்கிரி, காசுக்காக நாடு விட்டு நாடு வந்து என்ன கொள்கை என்றே தெரியாத ஒரு அமைப்பை ஆஹோ ஓஹோ என்று புகழ்க்கிறாய். 

தனது சவாலை தானே மறுக்கும் முட்டாள் அப்பாஸி:

27.12.2013 அன்று அதிரை தக்வா பள்ளி அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நாங்கள் பீஜேவை விவாதத்திற்கு அழைத்தோம், எஸ்எல்டீஜேவை அழைத்தோம், வரவில்லை என்றார் முர்ஷித் (அதற்காக வீடியோ ஆதாரம் இங்கே, முழு விபரத்திற்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.)



16.07.2014 அன்று தரப்பட்ட விளக்க உரையில் நடுவில் (5 வது நிமிடம் 16 நொடியில் இருந்து 5வது நிமிடம் 45 நொடி வரை) நாங்கள் யாரோடும் விவாதம் செய்ய மாட்டோம் என்கிறார் (அந்த வீடியோவை இங்கே பார்வையிடவும்).

விவாதம் எல்லாம் எனக்கு வராது என்னை பிஜேவிடம் கூட்டிக்கொண்டு போங்க, நான் கேள்வி கேட்கணும் (இன்னும் பிரபலம் அடையனும், அப்பறம் கள்ளா கட்டணும்) - http://www.tubechop.com/watch/3352233



ஒரே ஊரில் சில மாத இடைவெளியில் இவ்வாறு மாற்றி பேசும் இவருக்கு மார்க்கம் பேசும் தகுதியுண்டா? ஆறு மாதங்களுக்கு முன் விவாதம் செய்வதில் தெரிந்த பலன் இப்போது ஏன் மறைகிறது? எந்த வஹி இதை மாற்றியது? இவருக்கு கூலி கொடுத்து இறக்குமதி செய்தவர்கள், இவரின் சட்டையை பிடித்து, அன்று விவாதம் செய்ய தயார், பீஜே வர வேண்டும் என்றீர், இன்று அவர்கள் விவாதம் செய்ய தயார் என்றாலும், நாங்கள் விவாத்திற்கு எல்லாம் போக மாட்டோம் என்று பேசுகிறீர், ஏன் இப்படி மாற்றி பேச வேண்டும் என்று கேட்டுயிருக்க வேண்டும். மொத்ததில் சூனியம் சம்பந்தமான போஸ்டர், முர்ஷித் அப்பாஸீக்கு சூனியம் பிடிக்க வைத்துள்ளது. தான் முன்வைத்த வீராப்பு வசனத்திற்கு தானே முரண்பட்டுள்ளார். இவர் இவ்வாறு முரண்பட்டு பேசிய இரண்டு பேச்சுக்களையும் பாக்கரின் மன்மத கொள்கையால் கவரப்பட்டவர் நடத்தும் இணையதளத்தில் போட்டுள்ளார்கள். 

பிஜே விவாதத்திற்கு தயார் என்றவுடன் அலறும் அப்பாஸி:

இங்கு ஒரு விஷயம் தெளிவாக புலப்படுகிறது. முஜாஹித் மற்றும் முர்ஷித் கம்பெனியினர் தவ்ஹீத் ஜமாஅத்துடன் சூனியம் சம்பந்தமாக ஒப்பந்தம் செய்ய வரும் வரை, பிஜேவுடன் தான் விவாதம் செய்வோம் என்று ஒரு நிபந்தனை வைக்கவில்லை. விவாத ஒப்பந்தத்தில் இந்த புதிய கோரிக்கையை முன்வைத்தார்கள். இவர்களின் நோக்கம் விவாதத்தில் இருந்து தப்பிக்க வேண்டும், ஓடி விட்டார்கள் என்று வந்துவிடாக்கூடாது. இதற்க்காக தான் இவர்கள் இந்த கோரிக்கை வைக்கிறார்கள் என்று அன்றே சொல்லப்பட்டது. மேலும், இவர்கள் ஒட வில்லை, தவ்ஹீத் ஜமாஅத் தான் ஓடுகிறது என்று காட்ட, பிஜே வராவிட்டால் எஸ்எல்டீஜேவுடன் தனியாக விவாதிப்போம் என்று ஒரு கோரிக்கையை முன்வைத்தார்கள். எஸ்எல்டீஜேவினர் தனியாக விவாதம் செய்ய வரமாட்டார்கள் என்று இவர்கள் தப்புக்கணக்கு போட்டார்கள். இவர்கள் இங்கு படம் காட்டிவிட்டு இலங்கை சென்றவுடன் எஸ்எல்டீஜே இவர்களுடன் தனியாக விவாதம் செய்ய தயார் என்று அறிவித்தது, இதை இவர்கள் கண்டு அலறிப்போனர்கள், எஸ்எல்டீஜேயின் சவாலை இவர்கள் ஏற்கவில்லை, ஓடிவிட்டார்கள். இந்த சம்பவம் நடந்த பிறகு, விவாத செய்ய வரவே மாட்டேன் என்று தவ்ஹீத் ஜமாஅத்தின் சில கொள்கைகளை விமர்சனம் செய்து வரும் அன்சர் தப்லீக்கி என்பவர், விவாதத்திற்கு தயார் என்று அறிவித்தார். ஆனால், பிஜேவுடன் தான் விவாதம் செய்வேன் என்றார். விவாததிற்கு தயார் ஆனால் பிஜேவுடன் தான் விவாதம் செய்வேன் என்பதை சிலர் விளம்பரம் தேடுவதற்கும், தப்பிப்பதற்கும் காரணமாக பயன்படுத்துகிறார்கள் என்று அறிந்து, பிஜே அன்சார் தப்லீக்கியுடன் விவாதம் செய்ய தயார் என்று அறிவித்தார். இதை கேட்டவுடன் அன்சார் தப்லீக்கி வேறு வழியில்லாமல் விவாதம் செய்ய சிக்கியுள்ளார், ஆனால் மார்ச் மாதம் வருகிறோன், ஏப்ரல் மாதம் வருகிறோன், நவம்பர் மாதம் வருகிறோன் என்று தப்பிக்க வழி தேடிக்கொண்டுள்ளார். இப்போது முஜாஹித்தின் காம கூட்டணியில் உள்ளவர்களுக்கு பயம் வர ஆரம்பித்து விட்டது. பிஜே வரமாட்டார் என்பதால் தானே, நாம் அந்த காரணத்தை சொன்னோம், இப்போது அவர் அன்சார் தப்லீக்கியுடன் தயார் என்று சொல்லியிட்டாரே, நம்முடன் விவாதிக்க தயார் என்று அறிவித்தால் நமது நாடகம் நடுத்தெருவுக்கு வந்துவிடுமே என்று அஞ்சி, விவாதத்தினால் எந்த பலனும் இல்லை என்றும், நீ அப்படிக்கா பேசு, நான் இப்படிக்கா பேசுறோன் என்று அந்தர் பெல்டி அடித்துள்ளார் பொருக்கி முஜாஹிதின் மாணவர் முர்ஷித் அப்பாஸி. இவர்கள் எப்படிப்பட்ட அயோக்கியர்கள் என்பதற்கு இந்த நாடகம் சாட்சி. இது போன்ற நாடகம் ஆடித்திரிந்த பலர் இன்று அடையாளம் தெரியாமல் போய்விட்டார்கள். அந்த லிஸ்டில் முஜாஹித் ஏற்கனவே சேர்ந்துவிட்டார், கூலிக்கு மாராடிக்கும் அப்பாஸிக்கும் அந்த நிலையை ஏற்படும், இன்ஷா அல்லாஹ்.

சினிமா கொட்டகை மீடியா மொஜிக்கர்:

அடுத்து, மீடியா மெஜிக்கர் நிஜாமுதீன் என்பவர் அதிரை ததஜவை பல முறை விவாதத்திற்கு அழைத்தாகவும், அவரின் விவாத சவாலை தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரை கிளை ஏற்கவில்லை என்று முர்ஷித் அப்பாஸி குற்றம்சாட்டுகிறார். ஒரு விஷயத்தை மக்கள் மத்தியில் சொல்லும் போது, அது உண்மையா பொய்யா என்பதை ஆராய்ந்து பதில் தர வேண்டிய இவர், பச்சை பொய்யான ஒரு விஷயத்தை அல்லாஹ்வின் அச்சம் இல்லாமல் சொல்லுகிறார். உண்மையில் இந்த நிஜாமுதீன் அதிரை தவ்ஹீத் ஜமாஅத்தை விவாதத்திற்கு அழைத்து இருந்தால், அதற்க்கான ஆதாரத்தை அவர் முர்ஷித் அப்பாஸி முன்வைக்க வேண்டும். தவ்ஹீத் ஜமாஅத் விவாதத்திற்கு அஞ்சுகிறது என்றால் எவனாவது ஏற்பானா? நிஜாமுதீன் என்பவரின் விவாத சவாலை தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை ஏற்கிறது (இது பற்றி முழு விபரம் நாளை வெளியாகும், இன்ஷா அல்லாஹ்). நிஜாமுதீன் என்பவர் முன்வைக்கும் தலைப்புகளோடு, தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சில தலைப்புகளை முன்வைத்து அது பற்றியும் விவாதம் செய்ய தயார். தவ்ஹீத்வாதி என்று சொல்லிக்கொண்டு, கீளின் சேவ் அடிக்கலாமா? தவ்ஹீத்வாதி என்று சொல்லிக்கொண்டு புது சினிமா ரீஸீஸ் ஆனாவுடன் அதை சினிமா தியாட்டருக்கு சென்று பார்க்கலாமா? தவ்ஹீத்வாதி என்று சொல்லிக்கொண்டு வரதட்சனை திருமணத்தில் பிரியாணியை வெளுத்து வாங்கலாமா? போன்ற தலைப்புகளையும் விவாதிக்க தவ்ஹீத் ஜமாஅத் தயார். முர்ஷித் அப்பாஸி அவர்கள் நிஜாமுதீன் அவர்களிடம் இருந்து தாருத் தவ்ஹீத் என்ற அமைப்பின் லட்டர் பேடில் அவரின் விவாத அழைப்பை எழுதி, அதை தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளைக்கு பதிவு தபாலில் அனுப்ப செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். தாருத் தவ்ஹீத்தோடு விவாதம் செய்யுங்கள் என்கிறார் முர்ஷித் அப்பாஸி, இப்படி எல்லாம் சொல்லி அவங்க வயிற்றில் அடிக்காதீங்க. அவர்களின் கொள்கை என்ன என்று விவாதம் செய்தாலே, அவர் காணாமல் போய் விடுவார்கள். தாருத் தவ்ஹீத் என்ற கொள்கையற்ற அமைப்புடனும் நாம் விவாதம் செய்ய தயார். நிஜாம் அவர்களின் விவாத சவாலை நாம் ஏற்றுக்கொண்ட விபரம் இங்கே வெளியிடப்பட்டுள்ளது.(தாருத் தவ்ஹீத் என்ற அமைப்பமை சார்ந்த ஒரு சகோதரர் விடுத்த அறைகூவல் குறித்து தனியாக ஆக்கம் ஒன்று வெளியிடப்படும், அதில் அவரின் சவால் குறித்து பதில் தரப்படும்). 

தவ்ஹீத் ஜமாஅத்துடனும் எஸ்எல்டீஜேவுடனும் விவாதத்தில் பின்வாங்கிய பொருக்கி முஜாஹித் கூட்டணி:

அடுத்து, இலங்கையில் எஸ்எல்டீஜேவோடு விவாதிப்போம் என்பதை நாம் சுட்டிக்காட்டியதை மறுக்கிறார். இலங்கை முஜாஹித் கும்பலை எஸ்எல்டீஜே விவாத்திற்கு அழைத்தது, அதற்கு முஜாஹித் முர்ஷித் அப்பாஸி கூட்டணி வரவில்லை. இது பற்றிய முழு விபரம் இங்கு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், முர்ஷித் அப்பாஸின் சூனிய ஆசான் முஜாஹித் தவ்ஹீத் ஜமாத்துடன் நடைபெற இருந்த விவாத்த்தில் பின்வாங்கியதை அவரே ஒப்புக்கொண்டும் உள்ளார். இது பற்றி விபரம் இங்கே உள்ளது

பிஜேவின் கருத்திற்கு மாற்றமாக கருத்துச்சொன்னால் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்க முடியதா?

அடுத்து, அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்களே, எம்.ஐ. சுலைமான் அவர்களே, அப்பாஸ் அலி அவர்களே, சுயமாக ஒரு ஆய்வு செய்து, தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைக்கு எதிராக ஒரு ஆய்வை முன்வைத்தால், அவர்களை தவ்ஹீத் ஜமாஅத் தூக்கி விசிவிடுவார்கள் என்கிறார். இதற்கு ஆதாரமாக பொருக்கி முஜாஹித்தை காட்டுகிறார். முஜாஹித் என்பவர் எஸ்எல்டீஜேவில் இருக்கும் போது சூனியம் சம்பந்தமாக தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான கருத்தை பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். இந்த நேரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதாவது, தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து கொண்டு, நமது கொள்கைக்கு மாற்றமான கருத்தை மக்களிடம் முன்வைக்கும் முன், அந்த ஆய்வை தவ்ஹீத் ஜமாஅத்திடம் கலந்துரையாடி ஒரு தீர்வை கண்டு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதை முஜாஹித் சரியாக ஏற்கவில்லை. இந்த நேரத்தில் இலங்கையில் எஸ்எல்டீஜே அமைப்பு சரியான எந்த செயல்பாடும் இல்லாமல், இருந்தது. இந்த நேரத்தில் முஜாஹித் காம சொட்டைகள் செய்து சிக்கி கொண்டார், அதை அவரே ஒப்பும் கொண்டார். இனிமேல், நீங்கள் அழைப்பணி செய்ய அருகதையற்றவர் என்று சொல்லப்பட்டு, அவர் நீக்கப்பட்டார். இதை முடிச்சு போட்டு, பிஜேவிற்கு எதிராக கருத்துச் சொன்னதால் தான் நீக்கப்பட்டார் என்று கதையளக்கிறார் பொருக்கி முஜாஹித்தின் மாணவர் முர்ஷித் அப்பாஸி. பிஜேவிற்கு எதிராக கருத்துச் சொன்னால் தான், முஜாஹித் நீக்கப்பட்டார் என்பதை தவ்ஹீத் ஜமாஅத்திடம் நேரடியாக நிரூபிக்க முர்ஷித் அப்பாஸிக்கு திராணி உண்டா? பிஜேவிற்கு எதிராக பல நேரங்களில் பல தவ்ஹீத் ஜமாஅத் தாயிக்கள் பல ஆய்வுகளை முன்வைத்து, பிஜே ஆய்வு தவறு என்று நிலைநாட்டியுள்ளார்கள். இதற்கு, உதாரணமாக, கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜக்காத் கொடுக்க தேவையில்லை என்ற கருத்தில் வரும் அனைத்து ஹதீஸ்களும் பலகீனமாக உள்ளது என்று எம்.ஐ சுலைமான் தான் பிஜே அவர்களிடம் முன்வைத்தார். அப்போது, பிஜேவும் வருட வருடம் கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் தான் இருந்தார், இதை எம்.ஐ சுலைமான் பகிரங்கமாக மக்கள் மத்தியில் அறிவித்துள்ளார். முர்ஷித் அப்பாஸி சொல்லுவதை போல இருந்தால், பிஜேவின் நிலைபாட்டிற்கு எதிராக இப்படி ஒரு கருத்தை சொன்ன எம்.ஐ சுலைமான் அவர்களை நீக்கி இருக்க வேண்டும். ஏன் அவ்வாறு நடக்கவில்லை? இது போன்று ஆயிரம் உதாரணங்களை காட்ட முடியும். 

எதிரிகளிள் சூட்டிக்காட்டும் சரியான தவறுகளை கூட ஏற்றுக்கொள்ளும் பிஜே!

பிஜே அவர்கள் விவாதம் மற்றும் வாதப்பிரதிவாதங்களில் எதிரிகள் எடுத்து வைக்கும் சரியான தவறுகளை ஏற்றுக்கொண்டுள்ளார். உதாரணத்திற்கு, முஜிபுர் ரஹ்மான் உமரி, இஸ்மாயில் ஸலஃபி, ஜமாலி போன்றவர்கள் முன்வைத்த வாதங்களில் சரி என்று வரக்கூடிவைகளை கேவலமாக கருதாமல் மாற்றியுள்ளார். எதிரிகளின் வாதங்களில் சரி என்று வருவதையே மாற்றும் பிஜே, தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து ஆயிரம் ஆயிரம் தியாகங்களை செய்யும் தாயிக்களின் கருத்துக்களில் நியாயம் இருந்தால், அவற்றை அலட்சியப்படுத்துவாரா? அப்படி சூனியத்தை பிஜே மறுத்தால் (உங்களின் விளக்கப்படி உள்ளதை), அதனால் பிஜேவிற்கு என்ன பலன் இந்த உலகில் கிடைக்கப்போகிறது. இது பற்றி மறுமையில் நீங்கள் கண்டிப்பாக பதில் சொல்லியாக வேண்டும். 

மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம் அப்பாஸி:

அடுத்து, விவாதம் செய்வது பலனில்லை என்று அந்தர் பெல்டி அடித்த கூலித்தொழிலாளி முர்ஷித் அப்பாஸி, மீண்டும் பிஜே ஏன் எங்களுடன் விவாதிக்க மறுக்க வேண்டும் என்று புலம்புகிறார், அத்தோடு ஒரு மிகப்பெரிய அபாண்டத்தை பிஜே மீது சுமத்துகிறார். பிஜே இவர்களுடன் விவாதிக்கதற்கு காரணம், பிஜே இது போன்ற முன்றாம் தர மக்களுடன் விவாதிக்க மாட்டேன் என்று சொன்னாராம். இப்படி ஒரு உலகமாக பொய்யை எந்த வித ஆதாரமுமின்றி சொல்லுகிறார். இதற்கு அப்பாஸி ஆதாரம் தர வேண்டும். இவ்வாறு பிஜே எந்த இடத்திலும் சொல்லவில்லை. பிஜே சொன்ன காரணம், எனக்கு உடல் நிலை சரியில்லை. ஒரு விவாத்தில் யாரை எங்கள் சார்பாக விவாதிக்க வைக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்வோம், நீங்கள் முடிவு செய்ய முடியாது. ஊரில் உள்ள அனைவரும் பிஜேவுடன் தான் விவாதிப்பேன் என்று கிளம்பினால், நான் வருடம் முழுவதும் விவாதம் செய்து கொண்டு தான் இருக்க வேண்டும் என்றார். மேலும், முஜாஹித் சம்பந்தமாக சில செய்திகளை முன்வைத்தார். அதாவது, பிஜேவை ஒரு முறை சில கேள்விகளுடன் பேட்டி கண்ட முஜாஹித், இலங்கை சென்று அங்கு பிஜே 25 வருடத்தில் அடைந்த பிரபலத்தை நான் பேட்டி கண்ட இரண்டே மணி நேரத்தில் அடைந்து விட்டேன் என்று பெருமையாக சொல்லி செய்தியும் பிஜே அவர்களுக்கு கிடைத்தது. எனவே, இவன் பிஜேவுடன் செய்ய நினைப்பது பிரபலம் அடைந்து, தனது காம குற்றச்சாட்டை போக்க தான் என்று தவ்ஹீத் ஜமாஅத் சரியாக இனம் கண்டது. மேலும், முஜாஹித் தான் பிஜேவுடன் மட்டும் தான் விவாதம் செய்ய தகுதி படைத்தவர்கள் என்றும், மற்ற தாயிக்கள் தங்களுக்கு நிகர்யில்லை என்று கருதி அகம்பாவத்தை உடைக்க வேண்டியும் தவ்ஹீத் ஜமாஅத் அப்படி ஒரு முடிவை எடுத்தது. 

அடுத்து, இலங்கையில் எஸ்எல்டீஜே, முஜாஹித் கம்பேனியை விவாத்திற்கு அழைக்கவேயில்லை, முஜாஹித் தரப்பு எஸ்எல்டீஜே தக்லீத் செய்கிறது அதை உடைத்து காட்டுவோம் என்று விட்ட சவாலை எஸ்எல்டீஜே ஏற்றது, ஆனால், முஜாஹித் தரப்பு வரவில்லை ஓட்டம் எடுத்தது. அது பற்றி இங்கே ஆதாரத்துடன் காட்டப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் வளர்ந்த இந்த கால கட்டத்தில், ஆதாரங்கள் இலகுவாக பாதுகாக்கப்படும் இந்த காலத்தில், இப்படி எஸ்எல்டீஜே வரவில்லை என்று பகிரங்கமாக நோன்பு நேரத்தில் புழுகுகிறார். இதை முஜாஹித் கூட மறுக்கவில்லை. தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதத்தில் நான் பின்வாங்கி விட்டேன் என்று முஜாஹித் பகிரங்கமாக அறிவித்துள்ளார், அதை காண் இங்கே செல்லவும். (அந்த வீடியோ பாக்கர் ஆதரவாளர்கள் தளத்திலும் உள்ளது).

இறுதியாக, சூனியம் சம்பந்தமாக விளக்கம் தரப்போகிறோன், அதில் நாகரிகமாக வந்து கேள்வி கேளுங்கள் என்று முடித்தார். நாகரிகமாக என்றால் அவருக்கு எந்த கேள்விக்கு பதில் தெரியுமே அதை மட்டும் கேளுங்கள் என்று பொருள், அது அல்லாத வேறு கேள்வி கேட்டால், அது அநாகரிகம். அந்த கேள்வி பதில் நிகழ்ச்சி நடந்ததா? அதில் எப்படி சிக்கினார் என்பதை தனியாக விளக்குவோம், இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு:

இந்த ஆக்கத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து கேள்விகளும் முர்ஷித் அப்பாஸியை நோக்கி கேட்கப்படும் கேள்விகள். இதற்கு அவர் அதிரை விட்டுச் சொன்றாலும், பதில் சொல்லியாக வேண்டும். சில இடங்களில் கடினமான சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு காரணம் முர்ஷித் அப்பாஸி என்பவர், தவ்ஹீத் ஜமாஅத்தினரை போக்கிரி, பிஜேவின் ரகசியம் என்றெல்லாம் வரம்பு மீறி பேசியதால், அதற்கு தக்க முறையில் நாமும் பதிலடி தர வேண்டும் என்ற அடிப்படையில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வரம்பு மீறும் அளவுக்கு நாமும் வரம்பு மீறுவோம். 

5 கருத்துரைகள் :

சூனியம் ஒன்று உண்டு என்று நம்புவதாக இருந்தால் முர்ஷித் அப்பாஸிக்கு யாரே சூனியம் வைத்ததாக தான் என்னவேண்டும்
ஒரு நாளைக்கு விவாதத்திற்கு நான் வரமாட்டேன் என்று சொல்லுகிறார் அடுத்தநாள் விவாதத்திற்கு நான் தயார் என்று சவால் விடுவிகிறார் இவர் விவாதத்திற்கு வருவாரா மாட்டாரா? என்பதை முதலில் விளக்கவேண்டும்

தலைக்கனம் பிடித்த பெருமைக்கார அப்பாஸி

இவர் சொல்லாமல் சொல்லுகிறார் எனக்கு பி ஜே தான் சரி சமமானவர் மற்றவர்கள் எல்லாம் என்னுடன் விவாதிக்க தகுதியில்லாதவர்கள் என்று இலங்கை உலமாக்கள் சருகுகள் என்று சொல்லும் தறுதலை அப்பாஸிடம் பீ ஜே விவாதம் செய்யதால் பீ ஜே யும் இலங்கை உலமாக்களை பற்றி அவர் சொன்னதை ஒத்துக்கொள்வது போல் ஆகிவிடும் இவரை போன்ற சுய விளம்பரக்காரர்களுடன் விவாதம் செய்து பீ ஜேயின் நேரத்தை வினாக்கவேண்டாம்

இலங்கை உலமாக்கள் சருகுகள் என்று இவர் சொல்லுகிறார் அவர்கள் பயானுக்கு சென்றால் பள்ளியிலேயே படுத்துக்கொள்வார்கள் இவரை போல் குடும்பத்துடன் வந்து ஊர் சுற்றமாட்டார்கள்

தவ்ஹீத் கொள்கைக்க எதிரானவர்கள் பணக்காரர் என்பதற்கு பல்யிலிக்கமாட்டார்கள்

இன்று இவரை விவாதத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் இனைய தளத்தின் மூலம் அழைப்பு விடுத்திருந்தது அவர் உண்மையிலேயே விவாதத்திற்கு தயார் என்றதால் தவ்ஹீத் பள்ளிக்கு தான் சென்றிருக்கவேண்டும் அதை விடுத்து எங்கேயே சென்று விவாத்திற்கு தயார் என்று சொன்னதாக தகவல் உண்மையில் சத்தியத்தை தெளிவுபடுத்தவேண்டும் என்று நோக்கம் இருந்தால் யாருடன் வேண்டுமானாலும் இவர் விவாதம் செய்ய முன்வரவேண்டும்

பதவி வெறி பிடித்து அழையும் ஒரு சிலரின் பேச்சைக்கேட்டு இவர் ஆடுகிறார் யார் பதவி வெறி பிடித்தவர் என்பதை அங்கு உள்ள மக்களிடம் கேட்டு அப்பாஸ் தெரிந்துக்கொள்ளவேண்டும்

முர்ஷித் அப்பாசியை எதனால் அடிப்பது?

குர்ஆனுடன் முரண்படும் ஹதீஸ்களை ஏற்க மாட்டோம் என்று சொன்னவரை மேடை ஏற்றியும், மழை தொழுகை நடத்தியும் அழகு பார்த்த தாருத் தவ்ஹீத்!

தாருத் தவ்ஹீத் கொள்கை பிடிப்பு மிக்க அமைப்பு என்று நாம் சொன்ன எவன் கேள்வி கேட்க போறான், விட்டு அடித்தோமா, கள்ளா கட்டினோமா, ஊருக்கு போனாமா என்ற தந்திரத்தில் அப்பாஸி தாருத் தவ்ஹீத்தை கொள்கை பிடிப்பு உள்ள அமைப்பு என்று ஜால்ரா தட்டியுள்ளார்.

முர்ஷத் அப்பாஸி எந்த காரணத்திற்காக தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பதாக சொல்லுகிறாரே அதை கொள்கையை உடைய ஒருவரை பல முறை தாருத் தவ்ஹீத் ஜூம்ஆ மேடைகளிலும், மழை தொழுகை நடத்தவும், தெருமுனை பிரச்சாரம் நடத்தவும், திருமண உரை நிகழ்த்தவும் பயன்படுத்தியுள்ளார்கள்.

அவர் யார் என்ற கேள்வி கண்டிப்பாக வரும், அவர் பெயர் அப்துல் ஹமீது, இவர் பாக்கரின் கொள்கை பிடிப்பு மிக்க இயக்கத்தில் அங்கம் வகித்தவர், பின்னர், வேறு ஒரு இயக்கம் கண்டவர். இவர்கள் பாக்கர் கூட்டணியில் இருக்கும் போது (தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து பாக்கர் மற்றும் அவரின் கூட்டாளிகள் தூக்கி விசப்பட்ட பிறகு) அஹ்லே குர்ஆன் அமைப்புடன் ஒரு விவாதம் செய்தார்கள். அந்த விவாதத்தில் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்ககூடாது என்று அப்துல் ஹமீது என்பவர் தெளிவாக எடுத்துரைத்தார். அதற்க்கான ஆதாரத்தை (இங்கே காணவும் www.adiraitntj.com) தவ்ஹீத் ஜமாஅத்தை அப்பாஸி என்பவர் என்ன காரணத்திற்காக எதிர்க்கிறாரே அதே கொள்கையை உடையவரை மேடை ஏற்றிய தாருத் தவ்ஹீதை கொள்கை உள்ள அமைப்பு என்று சொல்லிய முர்ஷித் அப்பாஸியை நடுத்தெருவில் நிறுத்தி, எதால் அடிப்பது என்று பொது மக்கள் முடிவு செய்யட்டும்.

ஜமாஅத்தே இஸ்லாமியோடு சேர்ந்து நிகழ்ச்சி பண்ணுவோமா?

கூறுகெட்ட அப்பாஸி உன்னை எந்த கொள்கையற்ற அமைப்பு இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்ததோ அதே அமைப்பு சார்பாக நடத்தப்படும் மதரஸாவின் இரண்டு ஆண்டுகளுக்கு நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில் நீ யாருடன் சேர்ந்து நிகழ்ச்சி நடத்தமாட்டோம் அவர்கள் வழிகெட்டவர்கள் என்று கூச்சலிட்டியோ அதெ ஜமாஅத்தே இஸ்லாமியின் புத்தகத்தை தான் பட்டம் பெற்ற மாணவிகளுக்கு கொடுத்தார்கள் இதற்கு கொள்கையற்ற தாரூத் தவ்ஹீத் என்ன பதில் உனக்கு சொல்லபோகிறது

Murshid abbasi vivaadhaththtirku oppuk kolla vendum

கொள்கையற்று கூறுகெட்டு புத்தி கெட்டவர்களுக்கு இதுவே போதும்.

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.