மிரட்டல் விடுத்து மன்னிப்பு கேட்ட பதுங்கும் புலிகள்
பிரபாகரன் செய்த அட்டூழியங்களையும், விடுதலைப்புலிகள் செய்த அடாவடித்தனங்களையும், இனப்படுகொலைகளையும் ஆதாரப்பூர்வமாக சுட்டிக்காட்டி டிஎன்டிஜேவின் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் அல்தாஃபி அவர்கள் கரூர் குளித்தலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார். மேலும் அவர் பேசிய பொதுக்கூட்ட உரைகள் ஃபேஸ் புக்கிலும் இடம்பெற்றிருந்தது. இதற்கு வாதப்பிரதிவாதங்கள் ரீதியாக பதிலளிக்கத் திராணியில்லாத விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களான, “நாம் தமிழர்” கட்சியினர் நமது மாநில நிர்வாகிகள் எம்.ஐ.சுலைமான் மற்றும் சையது இப்ராஹீம் ஆகியோரிடத்தில் தொலைபேசியில் தொடர்பு...