Monday, June 21, 2010

குர்ஆன் வசனத்தை கிழித்த கப்ர் வணங்கிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக தர்ஹா வழிபாட்டை கண்டித்து மேலத்தெரு தர்ஹா அருகில் கீழ்காணும் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்ட டிஜிட்டல் பேணர் வைக்கப்பட்டிருந்தது. இந்த வசனத்தின் கருத்தை பொறுக்க முடியாத கப்ரு வணங்கிகள் அதை கிழித்தனர்.


மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.
திருக்குர்ஆன் 22:73

கிழிக்கப்பட்ட பேணர்


கிழிக்கப்பட்ட பேணரை அகற்றிவிட்டு, மீண்டும் அதே இடத்தில் புதிய பேணர் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

புதிதாக வைக்கப்பட்ட பேணர் கீழே,



குர்ஆன் வசனம் பொறிக்கப்பட்ட பேணரை கிழித்த அவ்லியா பக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிராம்பட்டிணம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.