Saturday, July 28, 2012

அல்லாஹ்வுடைய சட்டத்தை அழிக்க துடிக்கும் ‎இஸ்லாமிய போராளி!‎

தாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் இஸ்லாம் கூறும் ‎வழிகாட்டுதல்கள்தான் சரியான தீர்வு என்பதை உலக நாடுகளில் உள்ள ‎அனைத்து ஆட்சியாளர்களும், அனைத்து மக்களும் உணர்ந்து கொண்டு இஸ்லாம் கூறும் சட்ட திட்டங்களை தங்களது நாடுகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்க ஆரம்பித்துள்ளனர். ‎அவ்வாறு கோரிக்கை விடுப்பது மட்டுமின்றி பல நாடுகளில் இஸ்லாம் ‎கூறும் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தத் துவங்கியும் விட்டனர்.‎

இப்படி உலகமே இஸ்லாத்தை நோக்கியும், இஸ்லாம் சொல்லக்கூடிய சட்ட ‎திட்டங்களை நோக்கியும் திரும்பிப்பார்த்து அவற்றை ஏற்றுக் கொண்டு வரும் ‎இந்த சூழ்நிலையில் இஸ்லாத்தை அழிக்கத்துடிக்கும் பாசிசவாதிகள் ‎இஸ்லாம் காட்டித் தந்த சட்டதிட்டங்கள் கொடூரமானவை என்று கூறி ‎இஸ்லாம் சொல்லக்கூடிய சட்டதிட்டங்களை அப்புறப்படுத்த கங்கணம் ‎கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அவர்களது ஊது குழலாக மாறி ‎வரும் ம.ம.கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லாஹ் அந்த ‎சங்பரிவாரத்தின் கோரிக்கையை தனது கோரிக்கையாக வாந்தி எடுத்து ‎வருகின்றார்.‎

சமீபத்தில் பிஜேபி தலைவர் இல.கணேசனுடன் ஒரே மேடையில் ‎உற்சாகத்தோடு கைகோர்த்து நின்று போஸ் கொடுத்து தனது பாசிச முகத்தை ‎வெளிப்படுத்தினார்.‎

அதற்கு விளக்கம் சொல்கின்றேன் என்று அவர் விட்ட அறிக்கையைப் ‎பார்த்துவிட்டு அதன் பிறகு பல சகோதரர்கள் அவரைக் காரித்துப்பி விட்டு, ‎ம.ம.கட்சியிலிருந்து விலகி வருகின்றனர்.‎

இப்படி நிலைமை மோசமாகி சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில் மரணதண்டனையை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் ‎நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ம.ம.கட்சியின் ஜால்ரா மன்னன் கலந்து ‎கொண்டு மரண தண்டனையை ஒழிப்பதுதான் தனது தலையாய பணி என்று ‎சூளுரைத்துள்ளார்.‎

மரண தண்டனை சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை ‎வைத்து அவ்வாறு, “மரண தண்டனை சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் ‎என்பதுதான் ஒவ்வொரு தமிழனுடைய உணர்வாக இருக்க முடியும்” என்று ‎கூறி தனது மொழி வெறியை வெளிக்காட்டியுள்ளார். இஸ்லாமிய ‎சட்டதிட்டத்தைவிட தனது இனவெறிதான் முக்கியம் என்பதை தனது ‎சூளுரையின் வாயிலாக நிரூபித்துள்ளார்.‎

“மரணதண்டனை வழங்குவது என்பது மிகப்பெரும் கொடூரம்” என்று கூறி ‎திருவாய் மலர்ந்துள்ளார்.‎

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான் :‎

நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) ‎சுதந்திரமானவன், அடிமைக்காக (கொலை செய்த) அடிமை,பெண்ணுக்காக ‎‎(கொலை செய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி ‎வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு ‎‎(கொல்லப்பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ‎ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் ‎‎(இழப்பீடு) அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் ‎எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் ‎அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.‎

அறிவுடையோரே! பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு ‎உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள் அல்குர்-ஆன் 2 : 178, 179‎

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கொலைக்குப் பகரமாக கொலை என்ற ‎சட்டத்தின் மூலம் நமக்கு வாழ்வு உள்ளதாக சொல்லிக்காட்டுகின்றான்.‎

மேலும்,‎

உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு ‎காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு ‎விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது ‎அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் ‎அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள் அல்குர்-ஆன் 5 : 45‎

மேற்கண்ட வசனத்தில் உயிருக்கு உயிர் என்பதுதான் சரியானது என்று ‎அல்லாஹ் சொல்லிக்கட்டுகின்றான். இந்த நாட்டில் உள்ள உருப்படியான ‎சட்டம் ஒன்று உள்ளதென்றால் அது இந்த மரணதண்டனை வழங்கும் ‎சட்டம்தான். மற்ற குற்றவியல் சட்டங்கள் எல்லாம் பல வருடங்கள் குற்றம் ‎செய்தவனுக்கு சோறு போட்டு, அவனை படிக்க வைத்து, அவனுக்கு ‎பாதுகாப்பளித்து, மருத்துவம் பார்த்து, அவனுக்குத் தேவையான அனைத்து சுக ‎போகங்களையும் வழங்கக் கூடிய மானங்கெட்ட சட்டமாகத்தான் உள்ளன.‎

அல்லாஹ் சொல்லக்கூடிய இந்த மரணதண்டனை வழங்கும் சட்டத்தை ‎ஒரு முஸ்லிம் வரவேற்க வேண்டுமா? அல்லது அதை ஒழித்துக்கட்ட களம் ‎காண வேண்டுமா?‎

அல்லாஹ்வுடைய இந்த சட்டத்தை யார் எதிர்ப்பார்கள்? இஸ்லாத்தை ஒழித்துக்கட்டத்துடிக்கும் பாசிசவாதிகள்தான் இந்த சட்டத்தை ஒழித்துக்கட்டத் ‎துடிப்பார்கள். அந்த பாசிசவாதிகளின் ஏஜெண்டாக செயல்படும் ம.ம.கட்சியின் ‎தலைவரோ அல்லாஹ் எந்த ஒரு சட்டத்தில் வாழ்வு இருப்பதாக ‎சொல்லிக்காட்டுகின்றானோ அந்த சட்டத்தை மவுத் ஆக்கப்பார்க்கின்றார்.‎

அல்லாஹ் சொல்லிக்காட்டக்கூடிய சட்டம் கொடூரமானது என்று சொல்லி ‎சங்பரிவாரத்தின் கூற்றை, குற்றச்சாட்டை அப்படியே வாந்தி எடுத்து, தான் ‎தமிழகத்து ஏஜெண்ட்தான் என்பதை உறுதிப்படுத்துகின்றார்.‎

‎அதற்காக நடத்தப்படும் கூட்டத்தில் கலந்து கொண்டு, “நான் இஸ்லாத்தை ‎ஒழித்துக்கட்டத்துடிக்கும் இஸ்லாமிய துரோகிதான்” என்று நிரூபித்துள்ளார்.‎

ஜால்ரா மன்னனிடம் சில கேள்விகள்:‎

இந்த ஜால்ரா மன்னனிடம் நாம் சில கேள்விகளைக் கேட்க ‎விரும்புகின்றோம்.‎

மரணதண்டனையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சொல்லி பிரச்சாரம் ‎செய்கின்றாரே!‎

இவரது நெருக்கமான உறவினரையோ அல்லது குடும்பத்தாரையோ ‎யாராவது கொன்றுவிட்டால் அவனுக்கு 28 ஆண்டுகள் இவர் தனது சொந்த ‎செலவில் சோறு போட்டு, வாரம் ஒரு முறை சிக்கன் வாங்கிக் கொடுத்து ‎அழகு பார்ப்பாரா?‎

மரணதண்டனை என்பது கொடூரமான சட்டம் என்றால், கற்பழிப்பு, கொலை, போன்ற செயல்களை செய்யக்கூடியவர்களை என்ன செய்யச் சொல்லுகிறது ‎இந்த சட்டமன்ற ஜனாஸா?‎

அதுமட்டுமல்லாமல் கடந்த பெருநாள் தினத்தன்று ராஜிவ் காந்தி கொலையில் சம்பந்தப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட மூன்று ‎தமிழர்களை விடுவிக்க வேண்டும். அவர்களது மரணதண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் ஜெயலலிதா தீர்மானம் போட்டது ‎முஸ்லிம்களுக்கு பெருநாள் பரிசு என்று நாக்கூசாமல் பேட்டி கொடுத்தார்.‎

அது போல இந்தப் பெருநாள் தினத்தன்று, இந்திய அரசாங்கம், மரணதண்டனை என்ற கொடூரமான சட்டத்தை ரத்து செய்து முஸ்லிம்களுக்கு பெருநாள் பரிசளிக்க வேண்டும் என்று கோரிக்கை ‎வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.‎

இந்த ஜால்ரா மன்னன் தற்போது வசூல் மன்னனாக மாறி, சவூதி ‎அரேபியாவில் சரணாகதி அடைந்து, அங்கு சென்று வசூல் வேட்டையில் ‎ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வந்து கொண்டுள்ளன.‎

மரணதண்டனையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதை கொள்கையாகக் ‎கொண்ட இந்தக் கொள்கை குன்று(?), மரணதண்டனையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சென்னையில் கூட்டத்தில் முழங்கிய தனது ‎வீரமுழக்கத்தை சவூதி அரசாங்கத்திடம் முழங்க திராணி உண்டா? என்று ‎இந்த ஜால்ரா மன்னனுக்கு சவால் விடுகின்றோம்.‎

அப்படி சவூதியில் மரணதண்டனையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று ‎இவர் வீர முழக்கமிட்டால் இவருக்கு அங்கு “முர்தத்” என்ற பட்டம் ‎கொடுத்து மரண தண்டனை கொடுத்து விடுவார்கள் என்பது அவருக்குத் ‎தெரியாமலா இருக்கும்?‎

இந்த சட்டமன்ற ஜனாஸா இதே கோரிக்கையை வலியுறுத்தி சவூதியில் ‎ரகசியக் கூட்டம் போட்டதாகவும் கேள்வி.‎

பிஜேபியின் பிரச்சாரத்தை சவூதியிலும் சென்று செய்யும் இந்த ஜால்ரா ‎மன்னனை இஸ்லாமிய சமுதாயம்

அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.‎

நன்றி tntj.net