Tuesday, July 10, 2012

மம கட்சியின் சமுதாயத் துரோகம்!


மம கட்சியின் சமுதாயத் துரோகம்

மம கட்சியின் சமுதாய துரோகத்தை அறிய இங்கே சொடுக்கவும்.

கழக கண்மணிகளிடம் சில கேள்விகள்:

* இட ஒதுக்கீடு விஷயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி (அன்றைக்கு நல்லவர் வல்லவர் அம்புலன்ஸ் வாங்கி தந்தவர், ரோஸ்டர் முறையில் புஸ்டர் போட்டவர்) அவர்களே முறைகேடு நடந்துள்ளது என்று சொல்லியிருக்கும் போது, அரசு தரப்பில் இதை மறுத்து அறிக்கை வரவில்லையே? ஏன்?

* நாங்கள் படித்த (?) சிந்தனையாளர்கள், நாங்கள் ஆய்வு செய்து தான் எதையும் சொல்லுவோம் என்று சொல்லும் படித்த முட்டாள்கள், தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் அறிவித்தவுடன், கண்டன அறிக்கை வெளியிட்டுவிட்டு, அதை தூக்கியது ஏன்?

* அரசாங்கம் வேலை ஆள் எடுக்கிறது, அதில் முறைகேடு நடந்துள்ளாக ஆதாரத்தின் அடிப்படையில் தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்துகிறது. இதற்கு பதில் சொல்ல வேண்டியது யார்? அரசாங்கமா? அல்லது மம கட்சியா? அரசாங்கம் அமைதியாக இருக்கும் போது, மம கட்சிக்கு ஏன் இந்த வக்காலத்து வேலை?

ஒரு தனியார் தொலைகாட்சியில் மாற்று மதத்தை சார்ந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்ரே, ஏன் நீங்கள் அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்குகிறீர்கள் ஏன்று ஜால்ரா தலைவரை பார்த்து கேட்டார், கேட்டவுடன், நாம் தலைவர் திக்முக்காடிவிட்டார்.

ஞாபகம் இருக்கிறாதா?

முன்னர், கலைஞர் ஆட்சியில் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டில் குளறுபடி நடந்த போது தவ்ஹீத் ஜமாஅத் தான் முதலில் கொதித்து எழுந்தது. அப்போது இந்த படித்த (?) பேராசிரியர் இவர்களுக்கு விபரம் தெரியாது, படிக்காதவர்கள் என்றெல்லாம் வசை பாடினார். பின்னர், தவ்ஹீத் ஜமாஅத் சொல்லுவதை, கலைஞர் வழிமொழிந்து, அதிகாரிகள் துரோகம் செய்துள்ளார்கள் என்று இவர்கள் முகத்தில் சாணி அடித்தார் (அப்போது ஜெயலாலிதா மோடி சகோதரியாக இருந்தார், இன்றைக்கு பேராசிரியருக்கு நெஞ்சம் நிறைந்த சகோதரியாக மாறி விட்டார்).

படிக்காத பீஜே தான் இவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தவர் என்பதை இவர்களே ஒத்துக்கொள்வார்கள்.