Sunday, December 11, 2011

அஷ்அரி குலத்தாரின் பெருந்தன்மை

தொடர்:4
மனாஸ் இலங்கை

இந்த உலகம் எத்தனையோ குலங்களையும் கோத்திரங்களையும் சமயங்களையும் சமுதாய அமைப்புக்களையும் இது நாள் வரையும் கண்டு வந்துள்ளது. ஆனால் இஸ்லாத்தைக் கண்டும் காணாதது போன்று இந்த உலகில் வாழும் பெரும்பான்மையான இனத்தவர்களும் மதத்தவர்களும் வாழ்ந்து வருகிறன்றர். இவர்கள் எவரிடமும் காணப்படாத அளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் விட்டுக்கொடுப்பும் பெருந்தன்மையும் ஏராளமாக காணப்படுகிறது. நபிமார்கள் முதல் அவர்களுடைய தொண்டர்கள் அவர்களை இது நாள்வரையும் பின்பற்றுபவர்களிடமும் காணப்படுகிறது. பெருந்தன்மை என்றால் இஸ்லாத்தில் தான் என்பதற்கு இப்போது மேலும் ஒரு சான்றுகளை நாம் பார்ப்போம்.

இதனால்தான் திருமறைக்குர்ஆன் நபிகளாரின் அருமைத் தோழர்கள் பெருந்தன்மையை சிலாகித்துக் இவ்வாறு கூறுகிறது.

அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (உரியது). ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ளமாட்டார்கள். தமக்கு வறுமை இருந்தபோதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்தி­ருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர். அல்குர்ஆன்:59:09

இப்படியும் பெருந்தன்மையா என்று நானும் நீங்களும் இந்த உலகமும் இன்று வரை கண்டுள்ளதா? என்பதை இந்த செய்தியைப் பாருங்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அஷ்அரீ குலத்தினர் போரின் போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்துவிட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களிடம் உணவு (இருப்பு) குறைந்து போய்விட்டால் தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுக்கிடையே அதைப் பங்கிட்டுக்கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன்.
அறிவிப்பவர்: அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்கள்
ஆதாரம் புகாரி:2486

பெருந்தன்மைக்கு இஸ்லாத்தை விட எந்த ஒரு மார்க்கத்தையும் காணமுடியாது. அந்த அளவுக்கு எந்த செயலை எடுத்துக்கொண்டாலும் அதில் பெருந்தன்மைக்கு இஸ்லாம் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. அது ஒரு மனிதனுக்கு அத்தியவசியமானதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெருந்தன்மையோடு இஸ்லாம் அவர்களையும் அதில் ஒன்றினைத்து தேவையுடைவர்களுக்கு கொடுத்து அவர்களின் தேவைகளையும் நமது தேவையாக நினைத்து நடந்து கொள்ளும் படி கட்டளையிடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமாகும். இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்.

அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) அவர்கள்
ஆதாரம் புகாரி:5392

இதனால் தான் இஸ்லாம் அடுத்தவர்களின் துன்பங்களிலும் கஷ்டங்களிலும் உன்னுடைய பங்களிப்பையும் அவர்களுக்கு கொடுத்து அவர்களின் கஷ்டங்களை நீக்க பாடுபடவேண்டும் என்று நமக்கு கட்டளையிடுகிறது. அது மாத்திரமல்லாமல் இப்படி யார் இவர்களின் கஷ்டங்களையும் சிரமங்களையும் போக்குவோருக்கு பல விதமான சிறப்புக்களை திருமறைக் குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் பென் மொழிகளும் நமக்கு கட்டளையிடுகின்றன.

கடன் கொடுத்து அதனை திருப்பி தரமுடியாதவர்களிடம் அதனை அல்லாஹ்வுக்காக அவனின் திருப்பதியை நாடி அந்தக் கடனை தள்ளுபடி செய்து விடுவதும் பெருந்தன்மைதான்.

கடன் பற்றி திருமறைக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

அல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்குவோர் யார்? அதை அவருக்குப் பன் மடங்காக (இறைவன்) பெருக்குவான். அல்லாஹ் குறைவாகவும் வழங்குகிறான். தாராளமாகவும் வழங்குகிறான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். அல்குர்ஆன்: 2:245

''அல்லாஹ்வுக்கு அழகிய கடன் வழங்குதல்'' என்றால் அல்லாஹ்வுக்கு கொடுப்பது அல்ல மாற்றமாக தேவையுடைய மனிதர்களுக்கு வழங்குவதே இது குறிக்கிறது. அல்லாஹ்வுக்கு கடன் கொடுப்பது என்று கூறி அதனை ஏழை எளியோருக்கும் தேவையுடையோருக்கும் அல்லாஹ் கொடுக்கும் படி கட்டளையிடுகிறான். அழகிய கடன் கொடுத்தால் அது கூட ஒரு வகையில் பெருந்தன்மையாகும்.

இதற்கு சான்றாக நபி (ஸல்) அவர்கள் முன்னோரு காலத்து மனிதரைப் பற்றி கூறிப்பிடும் போது அவர் மனிதர்களுக்கு கடன் கொடுத்து அந்தக் கடனை அந்த மனிதரால் திருப்பிக் கொடுக்க முடியவில்லையென்றால். அவரைக் கஷ்டப்படுத்தாமல் அவருக்கு நோவினை செய்யாமல் கெட்ட வார்த்தையால் திட்டாமல் அல்லாஹ்வும் நம் விசயத்தில் பெருந்தன்மையாக நடப்பான் என்று என்று அந்தக் கடனை தள்ளுபடி செய்தார் அதனால் அல்லாஹ்வும் அவருடன் பெருந்தன்மையாக நடந்து கொண்டான். இப்படிப்பட்டவர்களாக நாமும் மாறுவதற்கு முயற்சிக்க வேண்டும். அவருடன் பெருந்தன்மையாக நடந்தார் அவருடன் அல்லாஹ்வும் பெருந்தன்மையாக நடந்து கொண்டு மக்கள் சிரமப்படும் போது (முன் காலத்தில்) ஒரு மனிதர் மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் செல்கின்ற) தனது (அலுவலரான) வாலிபரிடம், ''(வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீ சென்றால் (அவரைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து) விடு. அல்லாஹ்வும் (நம்மைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து விடக்கூடும்'' என்று சொல்லிவந்தார். அவர் (மரணமடைந்து) அல்லாஹ்வைச் சந்தித்த போது அவருடைய பிழைகளைப் பொறுத்து அவன் மன்னித்து விட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
ஆதாரம் புகாரி:3480

தொடரும்.....