Tuesday, July 20, 2010

இறைவனுக்கு உருவம் உண்டா? சென்னையில் நடந்த பரபரப்பான விவாதம்

அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை ஆனால் இருக்கிறது. நிலை தடுமாறிய கோமாலி

உண்மை வந்தது. பொய் அழிந்தது. பொய் அழியக்கூடியதாகவே உள்ளது. 

(அல்குர்ஆன் 17:81) 

17,18.07.2010 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவைக்கும் இடையில் விவாதம் ஆரம்பமாகியது.

அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை.இறைவன் உருவமற்றவன் என்ற தலைப்பில் சு.ஜமாத் தரப்பில் அப்துல்லாஹ் ஜமாலியும் குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சகோதரர் பி.ஜெ அவர்களும் கலந்து கொண்டு விவாதித்தார்கள்.

விவாதத்தின் நிபந்தனைகளில் முக்கியமானது விவாதிக்கும் இருவரும் தங்கள் கருத்தை நிரூபிப்பதற்கு ஆதாரமாக திருக்குர்ஆன் வசனங்களையும்,ஸஹீஹான ஹதீஸ்களையும் மாத்திரம் எடுத்து வைத்து விவாதிக்க வேண்டும் என்பதாகும்.

முதலில் விவாதிக்க ஆரம்பித்த பி.ஜெ அல்லாஹ் உருவம் உள்ளவன் என்பதற்கு ஆதாரமாக புகாரியின் 2440ம் ஹதீஸை ஆதாரம் காட்டி (இலக்கம் பதிப்புகள் வித்தியாசத்தினால் வித்தியாஸப்பட வாய்ப்புண்டு.ஹதீஸ் தேவையானவர்கள் நமது மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்) தனது வாதத்தை முன்வைத்தார்.


ஆனால் அடுத்ததாக வாதிக்க ஆரம்பித்த அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் தனது கருத்தை உருதிப்படுத்த எந்த ஒரு ஆதாரத்தையும் முன்வைக்காமல் வெரும் வாதத்தை மாத்திரம் எடுத்து வைக்க ஆரம்பித்தார்.

உளரிக் கொட்டிய ஜமாலி.

அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று வாதிக்க வந்த ஜமாலி தனது வாதத்திற்கு ஆதாரம் வைக்கவும் இல்லை.பி.ஜெ வைத்த வாதத்தை ஆதாரத்தின் அடிப்படையில் மறுக்கவுமில்லை.

ஆனால் தாராளமாக உளரிக் கொட்டிக் கொண்டேயிருந்தார்.அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று சொல்ல வந்த ஜமாலி அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று பி.ஜெ காட்டிய புகாரியில் இடம் பெரும் ஹதீஸிற்கு பொருள் சொன்னார்.

மீண்டும் பி.ஜெ அவர்கள் உங்கள் கருத்து அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்பது அப்படியெனில் ஏன் இந்த ஹதீஸிற்கு அல்லாஹ்வின் உருவம் என்று பொருள் சொன்னீர்கள் என கேட்டார்.

மீண்டும் உடனே அல்லாஹ்வுக்கு உருவம் இல்லையென்று தான் நான் கூறுகிறேன் என்று தனது தலைப்பிற்கு தாவினார்.

தொடர்ந்தும் இப்படியே அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை ஆனால் இருக்கிறது என்ற பாணியில் தான் ஜமாலி அல்ல தான் ஒரு கோமாலிதான் என்பதை உருதிப்படுத்திக் கொண்டேயிருந்தார்.

குர்ஆனையே மறுத்த கோமாலி.

அல்லாஹ்வுக்கு உருவம் இருப்பதாக வாதிட்ட பி.ஜெ அதற்கு ஆதாரமாக குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் பல ஆதாரங்களை அடுக்கினார்.

அல்லாஹ்வுக்கு கைகள் இருப்பதாக வரும் வசனங்கள்.

அல்லாஹ்வுக்கு கண்கள் இருப்பதாக வரும் வசனங்கள்.

அல்லாஹ்வுக்கு செவி இருப்பதாக வரும் வசனங்கள்.

அல்லாஹ்வுக்கு கால் இருப்பதாக வரும் வசனங்கள். என்று பல வசனங்களை ஆதாரம் காட்டி அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது.அதனால் தான் இறைவனுக்கு கை கால் முகம் கண் செவி போன்றவையெல்லாம் இருப்பதாக இறைவன் குறிப்பிடுகிறான் என்று தனது வாதத்தை ஊன்றி நிருத்தி விட்டார்.

அதற்கெல்லாம் பதில் சொல்கிறேன் என்ற பெயரில் அல்லாஹ்வின் திருமறையையும் நபியவர்களின் வார்த்தைகளையும் தாருமாறாக கிண்டலடிக்க ஆரம்பித்தார்.

இறைவனை இழிவாக்க முயன்ற கோமாலி.

அல்லாஹ்வுக்கு உருவம் இருப்பதாக பி.ஜெ ஆதாரத்தை வைத்துப் பேச ஆரம்பித்த மறுகணத்திலிருந்து அல்லாஹ்வையும் அவனுடைய தூதருடையவும் வார்த்தைகளை கேலி செய்ய ஆரம்பித்தார் அல்லாஹ்வின் எதிரி கோமாலி அவர்கள்.

கோமாலி அல்லாஹ்வை கிண்டலடித்துப் பேசி கேட்ட கேள்விகள்.(நவூது பில்லாஹ்)

1.அல்லாஹ்வுக்கு உருவம் இருப்தாக வைத்துக் கொண்டால் நமக்கும் உருவம் இருப்பதால் நாமும் அல்லாஹ்வும் ஒன்றாகி விடுவோம்.

2.அல்லாஹ் ஒற்றைக் கால் உடையவனா?

3.அல்லாஹ்வின் மற்ற கால் எங்கே?

4.அல்லாஹ் திறையை விளக்கி தனது காலைக் காட்டுவான் என்றால் அல்லாஹ் எந்த ஆடையை உடுத்திருந்தான்?

5.ஆடை உடுத்திருக்கவில்லை என்றால் அல்லாஹ் நிர்வாணமானவனா? 

6.அல்;லாஹ்வுக்கு இரண்டும் வலது கை என்றால் இடது கை எங்கே?

7.ஒரே பக்கத்தில் இரண்டு கைகள் அல்லாஹ்வுக்கு இருக்க முடியுமா?

8.இறைவனின் ஒரு காலைக் காட்டுவான் என்றால் மற்றக் கால் இல்லாத நொண்டியாக இறைவன் மாற மாட்டானா?

9.அல்லாஹ்வுக்கு எத்தனை விரல்கள்.

10.அல்லாஹ் விரல்களில் எப்படி உலகத்தை வைத்திருக்க முடியும்?

11.அல்லாஹ் எப்படி வானத்தை சுருட்டுவான்?

12.வானத்தை இறைவன் சுருட்டினால் தானும் சேர்ந்து சுருட்டப் படுவானே?

13.மரங்களை எப்படி ஒரு விரலில் அல்லாஹ் வைத்திருக்க முடியும்?

14.அல்லாஹ் ஒற்றைக் கண்ணனா?

15.அல்லாஹ்வுக்கு இரண்டு கண்களும் இல்லை என்றுதான் புரிய வேண்டும்.

16.அல்லாஹ்விக் கைகளில் இரத்தம் ஓடுகிறதா?

17.அல்லாஹ்வின் கைகளில் தசைகள் உண்டா?

18.இறைவனின் கைகளில் நரம்புகள் உண்டா?

19.உலகத்தை அழிக்கும் போது தன்னைத்தானே அல்லாஹ் அழித்துக் கொள்வானா?

20.உலகம் அழிக்கப் படும் என்றால் இறைவனின் கை கால்கள் அழிக்கப் படுமா?

21.அல்லாஹ் ஆதம் நபியவர்களை போட்டோ எடுத்தானா?

22.அர்சின் எடை 8 மலக்குகள் தூக்கும் அளவு தானா?

இது போன்ற இன்னோரன்ன கேள்விகளை அல்லாஹ்வின் விஷயத்தில் கேட்டு அல்லாஹ்வை கேளிப் பொருளாக மாற்றிட முயன்றார் ஜமாலி என்ற இந்த கோமாலி.

அல்லாஹ் தனது திருமறையில் இப்படிக் கூறுகிறான்.

அவர்களிடம் (இது பற்றிக்) கேட்டால் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பேசினோம் என்று கூறுவார்கள். அல்லாஹ் வையும் அவனது வசனங்களையும் அவனது தூதரையுமா கேலி செய்து கொண்டிருந்தீர்கள்? என்று கேட்பீராக!(9:65)

அல்லாஹ்வைப் பற்றி திருமறையிலும் நபிமொழிகளிலும் வருகின்ற செய்திகளை பி.ஜெ எடுத்துக் காட்டும் போதெல்லாம் அவைகளை கேலி கிண்டல் செய்த இந்த கேடு கெட்டவனுடைய மறுமை நிலையை அறிந்து கொள்ள இந்த வசனம் ஒன்றே போதுமான சான்றாகும்.

விவாதத்தின் சில முக்கிய விஷயங்கள்.

1.களியக்காவிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இந்த கோமாலியுனும் அவனுடைய கூட்டத்தினறோடும் செய்த விவாதத்தை பாத்து விட்டு தவ்ஹீத் ஜமாத் சொல்வது தான் உண்மை என்பதை அறிந்து ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஒரு சகோதரர் பி.ஜெயிடம் கேள்வி கேட்டார்.

அவர் கேள்வியைக் கேட்க்கும் போது நான் களியக்காவிலை விவாதத்தின் பின் தவ்ஹீதை ஏற்றுக் கொண்டேன்.

தற்போது உங்களிடம் விவாதம் செய்பவர் அவருடன் இருப்பவர்கள் எல்லோரும் மத்ரஸாவில் எனக்கு ஆசிரியர்களாக இருந்தவர்கள் தான்.

இங்கு விவாதத்தை பார்க்க வந்திருப்பவர்களில் பெரும்பாலான ஆலிம்கள் என்னிடம் படித்த மாணவர்கள் தான்.


நான் எப்படி களியக்காவிலை விவாதத்தின் பின்னர் தவ்ஹீதை ஏற்றுக் கொண்டு இவர்களின் மூட நம்பிக்கைக் கொள்கையை விட்டும் வெளியில் வந்தேனோ அது போல் இன்ஷா அல்லாஹ் வெகு சீக்கிரமாகவே இங்கு இருப்பவர்களில் அதிகமானவர்கள் இந்தக் கொள்கையை ஏற்று தவ்ஹீத் ஜமாத் சொல்வது தான் சரியானது என்பதைப் புரிந்து ஜமாலி போன்றவர்களின் கேடு கெட்ட கொள்கையை விட்டே வெளியில் வருவார்கள். என்ற கருத்தை ஆழமாகப் பதிவு செய்தார்.

2.அசத்தியத்திற்கு ஆதரவாக வாதிட வந்த ஜமாலி பல சந்தர்ப்பங்களில் தன்னைத் தானே கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு உளரிக் கொட்டினார்.

3.அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று சொல்ல வந்தவர் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று வரும் வசனங்களுக்கெல்லாம் அல்லாஹ்வின் பண்பு என்று விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்.

அரபியல் அல்லாஹ்வின் உருவம் என்று வரும் இடத்தில் எல்லாம் பண்பு என்று பொருள் வைத்துக் காட்டுங்கள் என்று பி.ஜெ சவால் விட்டார்.

பாவம் அத்வைதம் போட்ட பந்தியில் மந்தியாய்க் குந்தியெலுந்த கோமாலியால் கடைசி வரை அந்த ஹதீஸிற்கு பண்பு என்று பொருள் வைக்கவே முடியவில்லை.

3.விவாதத்தின் முதல் நாள் கோமாலியின் சுன்னத் ஜமாத் தரப்பால் வந்தவர்களின் பாதிப் பேரை அடுத்தனால் அதாவது ஞாயிற்றுக் கிழமை காணவேயில்லை.

மேலதிக தகவல்களுக்கு விவாதத்தின் வீடியோவைப் பார்க்கவும்.