Saturday, February 23, 2013

மாமனிதர் நபிகள் நாயகம் - சுகபோகங்களில் திளைக்கவில்லை (தொடர் 5)


இந்த ஆக்கங்கள் சகோதரர் பிஜே அவர்கள் எழுதிய 'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற நூலிலிருந்து வெளியிடப்படுகிறது.

மாமனிதர் நபிகள் நாயகம் - சுகபோகங்களில் திளைக்கவில்லை (தொடர் 5)

சுகபோகங்களில் திளைக்கவில்லை:

உணவு, உடை மட்டுமின்றி வகை வகையான வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்தினார்களா? அல்லது அலங்காரப் பொருட்களை வாங்கிக் குவித்திருந்தார்களா?


'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் தட்டில் வைத்து உணவைச் சாப்பிட்டதில்லை. ரொட்டியைத் துணி விரிப்பின் மீது வைத்துத் தான் சாப்பிடுவார்கள்'' என்று நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ் (ரலி) கூறுகிறார்.



நூல் : புகாரி 5386, 5415



கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணை தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்து கொள்ளும் தலையணையாக இருந்தது என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.



நூல் : புகாரி 6456



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள் 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம்; அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்' எனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழல் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளது' எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள்.



இதை அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்.



நூல்கள் : திர்மிதி 2299, இப்னுமாஜா 4099, அஹ்மத் 3525, 3991



அனைத்து மனிதர்களிடமும் இருக்கக் கூடிய அத்தியாவசியப் பொருட்களில் படுத்துக் கொள்ளும் பாய் முக்கியமானதாகும். பிச்சை எடுத்து உண்பவர்கள் கூட தமது குடும்பத்திற்குத் தேவையான பாய்களை வைத்திருப்பார்கள். ஆனால் மாமன்னராக இருந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் இருந்தது ஒரே ஒரு பாய் தான். அது பாயாக மட்டுமின்றி பல்வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும் நிலையில் இருந்துள்ளது.



'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பாய் இருந்தது. அதைப் பகல் விரித்துக் கொள்வார்கள். இரவில் அதைக் கதவாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்' என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.



நூல் : புகாரி 730, 5862



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாயின் மேல் எதையும் விரிக்காமல் படுத்திருந்தார்கள். இதனால் விலாப்புறத்தில் பாயின் அடையாளம் பதிந்திருந்தது. கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணையைத் தலைக்குக் கீழே வைத்திருந்தார்கள். அவர்களின் கால் மாட்டில் தோல் பதனிடப் பயன்படும் இலைகள் குவிக்கப்பட்டு இருந்தன. தலைப் பகுதியில் தண்ணீர் வைக்கும் தோல் பாத்திரம் தொங்க விடப்பட்டிருந்தது. இதைக் கண்டதும் நான் அழுதேன். 'ஏன் அழுகிறீர்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! (பாரசீக மன்னர்) கிஸ்ராவும் (இத்தாயின் மன்னர்) கைஸரும் எப்படி எப்படியோ வாழ்க்கையை அனுபவிக்கும் போது அல்லாஹ்வின் தூதராகிய நீங்கள் இப்படி இருக்கிறீர்களே?' என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இவ்வுலகம் அவர்களுக்கும், மறுமை வாழ்வு நமக்கும் கிடைப்பது உமக்குத் திருப்தியளிக்கவில்லையா?' எனக் கேட்டார்கள்.



இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் இரண்டாவது ஜனாதிபதியாகப் பதவி வகித்த உமர் பின் கத்தாப் (ரலி) அறிவிக்கிறார்.



நூல் : புகாரி 4913



இது போன்ற அற்பமான தலையணையும் கூட போதுமான அளவில் இருந்ததா என்றால் அதுவுமில்லை.



இப்னு அப்பாஸ் என்பவரின் சிறிய தாயாரை நபிகள் நாயகம் (ஸல்) மணந்திருந்தார்கள். இப்னு அப்பாஸ் சிறுவராக இருந்ததால் அடிக்கடி தனது சிறிய தாயார் வீட்டில் தங்கி விடுவார். அப்போது நடந்த நிகழ்ச்சியை அவரே கூறுகிறார்.



'நான் எனது சின்னம்மா வீட்டில் ஓர் இரவு தங்கினேன். நான் தலையணையின் அகல வாக்கிலும், நபிகள் நாயகமும், எனது சின்னம்மாவும் தலையணையின் நீள வாக்கிலும் படுத்துக் கொண்டோம்' என்று அவர் கூறுகிறார்.



நூல் : புகாரி 183, 992, 1198, 4572



கூளம் நிரப்பப்பட்ட இந்தச் சாதாரண தலையணை கூட அவர்களிடம் ஒன்றே ஒன்று தான் இருந்துள்ளது. அதனால் தான் நீளமான பகுதியில் நபிகள் நாயகமும், அவர்களின் மனைவியும் தலை வைத்துக் கொள்ள இப்னு அப்பாஸ் அகலப் பகுதியில் தலை வைத்துப்படுத்திருக்கிறார்.


அதிக மதிப்பில்லாத அற்பமான தலையணை கூட ஒன்றே ஒன்று தான் அவர்களிடம் இருந்தது என்ற இந்தச் செய்தி பதவியைப் பயன்படுத்தி எந்தச் சொகுசையும் நபிகள் நாயகம் அனுபவிக்கவில்லை என்பதைச் சந்தேகமற நிரூபிக்கிறது.


வலிமை மிக்க வல்லரசின் அதிபர் வாழ்ந்த இந்த வாழ்க்கையை மிக மிக ஏழ்மை நிலையில் இருப்பவர் கூட வாழ முடியுமா?

நபிகள் நாயகத்தின் அரண்மனை:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொந்த ஊரைத் துறந்து மதீனாவுக்கு வரும் போது எடுத்துச் செல்ல இயலாத சொத்துக்களை அங்கேயே விட்டு விட்டு எடுத்துச் செல்ல இயன்ற தங்கம், வெள்ளிக் காசுகளை எடுத்துக் கொண்டு மதீனாவுக்கு வந்தனர்.



மதீனாவுக்கு வந்தவுடன் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக ஒரு பள்ளிவாசல் தேவை என்பதால் இரண்டு இளைஞர்களுக்குச் சொந்தமான இடத்தை விலைக்குக் கேட்டார்கள். ஆனால் அவ்விருவரும் 'இலவசமாகத் தருவோம்; விலைக்கு விற்க மாட்டோம்' எனக் கூறினார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வற்புறுத்தி தமது சொந்தப் பணத்தில் அந்த இடத்தை விலைக்கு வாங்கினார்கள்.



நூல் : புகாரி 3906



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொந்தப் பணத்தில் விலை கொடுத்து வாங்கிய அந்த இடத்தில் தான் மதீனாவின் புனிதப் பள்ளிவாசல் இன்றளவும் இருக்கிறது.



தொழுகை நடத்துவதற்காக மட்டும் அந்த இடத்தை அவர்கள் வாங்கவில்லை. ஒரு அரசை நடத்துவதற்குத் தேவையான பல பணிகளைக் கருத்தில் கொண்டே அவ்விடத்தை வாங்கினார்கள்.



தொழுகைக்கான விசாலமான பள்ளிவாசல், மக்காவைத் துறந்து வந்த சுமார் எழுபது பேர் நிரந்தரமாகத் தங்கும் வகையில் வெளிப் பள்ளிவாசல், வீர விளையாட்டுகளுக்காகவும், இராணுவப் பயிற்சிக்காகவும் பள்ளிவாசலுக்கு முன் பரந்த திடல் ஆகிய அனைத்தும் அங்கே அமைக்கப்பட்டன.



பள்ளிவாசலை ஒட்டி தமக்கான வீடுகளையும் அமைத்துக் கொண்டார்கள். பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தில் தமக்காக அவர்கள் வீடு கட்டிக் கொள்ளவில்லை. மாறாக தம் சொந்தப் பணத்திருந்து வாங்கிய இடத்தில் மிகச் சிறிய அளவிலான இடத்தைத் தமக்காக ஒதுக்கிக் கொண்டார்கள்.



உலகிலேயே ஒரு மன்னர் தமது சொந்தப் பணத்தில் கட்டிய அரசாங்கத் தலைமையகம் இது ஒன்றாகத் தான் இருக்க முடியும்.



தமது சொந்தப் பணத்தில் வாங்கப்பட்ட நிலத்தில் தமக்காக அவர்கள் எவ்வளவு பெரிய இடத்தை ஒதுக்கியிருப்பார்கள்? இடங்களுக்கு பெரிய மதிப்பு இல்லாத அன்றைய காலத்தில் எவ்வளவு பெரிய இடத்தைத் தமக்காக வைத்திருந்தாலும் அது ஒரு பெரிய சொத்தாகக் கருதப்பட மாட்டாது. அத்தகைய காலகட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீடு எப்படி இருந்தது என்பதைப் பாருங்கள்!



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நள்ளிரவில் எழுந்து அல்லாஹ்வைத் தொழும் வழக்கமுடையவர்களாக இருந்தனர். முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் போது தமது நெற்றியை நிலத்தில் வைத்து வணங்குவதை பலரும் பார்த்திருப்பீர்கள். இதை ஸஜ்தா என்று கூறுவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) தமது வீட்டில் ஸஜ்தா செய்வதற்குக் கூட அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டுள்ளார்கள் என்பதை அறியும் போது அவர்களின் வீடு எவ்வளவு பரப்பளவு கொண்டதாக இருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.



'நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன். எனது இரு கால்களையும் அவர்கள் ஸஜ்தாச் செய்யும் இடத்தில் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது விரலால் எனது காலில் குத்துவார்கள். உடனே நான் எனது காலை மடக்கிக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாச் செய்து விட்டு எழுந்து நின்று வணங்கும் போது மீண்டும் காலை நீட்டிக் கொள்வேன். இவ்வாறு நடந்ததற்குக் காரணம் அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்.



நூல் : புகாரி 382, 513, 1209



ஒருவர் படுத்துறங்கும் போது அவருக்கு இடைஞ்சல் இல்லாமல் இன்னொருவர் தொழுவது என்றால் 5 x 5 இடம் போதுமானதாகும். ஆனால், இந்த மாமனிதரின் வீடு அதை விடவும் சிறியதாக இருந்துள்ளது. மனைவி படுத்திருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தொழுவதற்கு இடம் போதவில்லை. மனைவி கால்களை மடக்கிக் கொண்ட பிறகே அவர்களால் தொழ முடிந்துள்ளது என்றால் என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை என்று பாருங்கள்!



பேரீச்சை மர ஓலையால் வேயப்பட்டதாகத் தான் அந்த அறை கூட அமைந்திருந்தது. அந்த வீட்டுக்குக் கதவுகளோ, ஜன்னல்களோ கிடையாது; திறந்த வாசல் தான். இரவில் பாயையே வாசல் கதவாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதை முன்னரே பார்த்தோம்.



மாமன்னரை விட்டு விடுங்கள்! இதை வாசிக்கின்றவர்களில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள ஒருவராவது இத்தகைய ஒரு வீட்டில் வசிக்க ஒப்புவாரா? தனது வீட்டை விட ஆயிரம் மடங்கு பெரிய இடத்தைச் சமுதாயத்துக்கு வழங்கிய ஒருவர் இப்படி வசிக்க விரும்புவாரா?



இந்த வரலாற்று நிகழ்ச்சி நபிகள் நாயகத்தின் வீட்டின் பரப்பளவை மட்டும் கூறவில்லை. 
அத்துடன் மற்றொரு செய்தியையும் சேர்த்துக் கூறுகிறது.



'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரம் பணியும் போது நீங்களே கால்களை மடக்கிக் கொள்ளலாமே? விரலால் குத்தும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்?' என்ற சந்தேகத்தை நீக்குவதற்காக 'அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது' என்று ஆயிஷா (ரலி) விளக்கம் தருகிறார்.



வீட்டில் விளக்கு இல்லாமல் இருளாக இருப்பதால் தான் விரலால் குத்துவதை வைத்து ஸஜ்தா செய்யப் போகிறார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது.



உலக மகா வல்லரசின் அதிபதியாகத் திகழ்ந்த நபிகள் நாயகத்தின் வீட்டில் விளக்கு என்பதே இருந்ததில்லை என்றால் இதற்கும் கீழே ஒரு எளிமை இருக்க முடியுமா?



பாரசீக ரோமாபுரி மன்னர்களின் அரண்மனைகளில் தொங்கிய சரவிளக்குகள் பற்றி இங்கே
கூறப்படவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள உதவும் மண்சிட்டிகளில் ஆவ் எண்ணெய் ஊற்றி எரிக்கப்படும் திரி விளக்கைத் தான் இங்கே குறிப்பிடுகிறார்கள். இந்த விளக்குகளுக்கு ஊற்றும் எண்ணெய் இருந்தால் காய்ந்த ரொட்டியைத் தொட்டுக் கொள்வதற்குப் பயன்படுத்தியிருப்பார்களே?



ஏதோ ஒரு நாள் இரண்டு நாள் மட்டும் தான் விளக்கு இல்லாமல் இருந்ததா என்றால் அதுவுமில்லை. 'அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது' என்ற ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்று அவர்கள் வீட்டில் என்றுமே விளக்கு இருந்ததில்லை என்பதைக் கூறுகிறது.



நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டுச் சுவர் கூட போதுமான உயரம் கொண்டதாக இருக்கவில்லை.



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தமது வீட்டில் தொழுவார்கள். வீட்டின் சுவர் குறைந்த உயரம் கொண்டதாக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) தொழுவதை நபித்தோழர்கள் காண்பார்கள்.



நூல் : புகாரி 729



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசித்த வீட்டின் நிலை இது தான்.



செல்வச் செழிப்பில் புரண்டு, எல்லா விதமான சுகங்களையும் அனுபவித்துப் பழகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்ட கொள்கைக்காக அனைத்தையும் இழக்கிறார்கள்.



நாட்டை விட்டு விரட்டப்பட்ட பின் அவர்களின் காலடியில் அரபுப் பிரதேசமே மண்டியிடுகிறது. இப்போது அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கை வாழாவிட்டாலும் சராசரி மனிதன் ஆசைப்படும் வாழ்க்கையையாவது வாழ்ந்திருக்கலாம்.



ஆனாலும் அரசுப் பணத்தில் எதையும் தொடுவதில்லை என்ற கொள்கையின் காரணமாக கடை நிலையில் உள்ள ஏழையின் வாழ்க்கையை விட கீழான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள்.



அரசியல் தலைமை, ஆன்மீகத் தலைமை ஆகிய இரண்டு தலைமைகள் இருந்தும் இவற்றைப் பயன்படுத்தி அவர்கள் எதையும் தமக்காகச் சேர்க்கவில்லை என்பதற்கு இவை போதுமான சான்றுகளாக உள்ளன. 

வாரிசுகளுக்கு விட்டுச் சென்றது என்ன?

எத்தனையோ பேர் உணவு, உடை, வாழ்க்கை முறை போன்றவற்றில் கஞ்சத்தனத்தைக் கடைப்பிடிப்பர். ஆனால், தங்கள் சந்ததியினரின் எதிர்காலத்திற்காகச் சேமித்து வைத்து விட்டு மரணிப்பார்கள். அவர்கள் மரணிக்கும் போது தான் அவர்களிடம் ஏராளமான செல்வங்கள் இருந்தது உலகுக்குத் தெரியவரும்.



நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இது போல் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி தமது வாரிசுகளுக்காகச் சேர்த்து வைத்திருப்பார்களோ?



இவ்வாறு யாரேனும் நினைத்தால் அது முற்றிலும் தவறாகும். ஏனெனில் அவர்கள் மரணிக்கும் போது பெரிய அளவில் எதையும் விட்டுச் செல்லவில்லை.



உலக மகா வல்லரசின் அதிபராக இருந்த நிலையில் மரணித்த அவர்கள் அற்பமான கடனைக் கூட நிறைவேற்றாத நிலையில் மரணமடைந்தார்கள்.



'முப்பது படி கோதுமைக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்திருந்தார்கள். அதை மீட்காமலேயே மரணித்தார்கள்' என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.



நூல் : புகாரி 2068, 2096, 2200, 2251, 2252, 2386, 2509, 2513, 2916, 4467



வந்தவர்களுக்கெல்லாம் அரசுக் கருவூலத்திருந்து வாரி வழங்கிய மாமன்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடனாகக் கூட அரசுக் கருவூலத்திருந்து எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. தமது நாட்டின் குடிமகன் ஒருவரிடம் (யூதரிடம்) தமது கவசத்தை அடைமானமாக வைத்து முப்பது படி கோதுமையைப் பெற்றுள்ளனர் என்பதும், அந்தக் கவச ஆடையை மீட்காமலே மரணித்து விட்டார்கள் என்பதும் உலக வரலாற்றில் எந்த மன்னரும் வாழ்ந்து காட்டாத வாழ்க்கையாகும்.



மரணிக்கும் போது அவர்கள் விட்டுச் சென்ற சொத்துக்களின் பட்டியலைப் பாருங்கள்!


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது தங்கக் காசையோ, வெள்ளிக் காசையோ, அடிமைகளையோ, வேறு எதனையுமோ விட்டுச் செல்லவில்லை. தமது வெள்ளை கோவேறுக் கழுதை, தமது ஆயுதங்கள், தர்மமாக வழங்கிச் சென்ற நிலம் ஆகியவற்றைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) விட்டுச் சென்றார்கள்.



நூல் : புகாரி 2739, 2873, 2912, 3098, 4461



நபிகள் நாயகம் (ஸல்) ஆட்சியில் நாட்டைக் காக்கும் இராணுவத்தினருக்கு எந்த ஊதியமும் அளிக்கப்படவில்லை. இறைவனின் திருப்தியை நோக்கமாகக் கொண்டே மக்கள் போர்களில் பங்கு கொள்வார்கள். போரில் வெற்றி கிட்டினால் தோற்று ஓடக் கூடியவர்கள் விட்டுச் செல்லும் உடமைகளும், கைது செய்யப்பட்டவர்களும், கைப்பற்றப்பட்ட நிலங்களும் போரில் பங்கு கொண்டவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். நபிகள் நாயகமும் இவ்வாறு போரில் பங்கு கொண்டதால் அவர்களுக்கும் இது போன்ற பங்குகள் கிடைத்தன. கைபர், பதக் ஆகிய பகுதிகளில் இவ்வாறு கிடைத்த நிலம் நபிகள் நாயகத்திடம் இருந்தது. அதுவும் அவர்கள் விட்டுச் சென்ற சொத்தாகும்.



பத்து ஆண்டுகள் மாமன்னராக ஆட்சி புரிந்த நபிகள் நாயகம் மரணிக்கும் போது விட்டுச் சென்ற சொத்துக்கள் இவை தாம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 22.02.13 (வீடியோ)


அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 22.02.13 
உரை :அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி


மக்கி மண்ணோடு மண்ணாக போனதை மீண்டும் படைக்க முடியுமா ?
சொர்க்கம் நரகம் இருப்பது உண்மையா ?
சொர்க்கம் எவ்வாறு இருக்கும் ?
சொர்க்கத்திற்கு எத்தனை  வாசல்கள் இருக்கும் ?
சொர்க்க வாசல்களின் இடைவெளி எவ்வளவு அகலம் இருக்கும் ?
சொர்க்கத்தில் ஆண்களுக்கு போல பெண்களுக்கும் நூர்ஹீன் கள் உண்டா ?

Friday, February 22, 2013

PJயும், அல்தாஃபியும் சௌதியிலா? அவதூறுக்கு அளவில்லையா? (வீடியோ)

பிஜே, அல்தாஃபி சௌதியிலா? அவதூறுக்கு அளவில்லையா?

TNTJ தலைமை அலுவலக ஜும்மா உரை 22.02.13(வீடியோ)

TNTJ தலைமை அலுவலக ஜும்மா உரை 22.02.13
உரை :பக்கீர்முகம்மது அல்தாஃபி

சகாபாக்கள் வாழ்வு தரும் படிப்பினை 





”குஜராத்தில் முஸ்லிம்கள் பயந்து வாழ்கின்றனர்..” ஜெர்மனி மக்களை போன்று முடிவு எடுத்து விடாதீர்கள்! நாட்டுமக்களுக்கு மோடியை தோலுரித்து காட்டும் கட்சு!

குஜராத்தில் முஸ்லீம்கள் பயந்து வாழ்கின்றனர் 


“அரேபியாவின் அனைத்து வாசனை திரவியங்கள்..”
என்ற தலைப்பில் ” தி ஹிந்து ” நாளிதழில் பிப்ரவரி 15 2013 ல் மார்கண்டே கச்சு அவர்களின் ஆக்கத்தை அப்படியே மொழிபெயர்த்து இங்கு தருகிறோம்:
இதில் இந்திய நாட்டுமக்களுக்கு மோடியை தோலுருத்தி காட்டியுள்ளார் முன்னால் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்சு அவர்கள்.

http://www.thehindu.com/opinion/op-ed/all-the-perfumes-of-arabia/article4415539.ece


modi4_thumb[2]




அனைத்து சமூகத்தாருக்கும் சரி சரிசமமாக உரிமை மற்றும் மதிப்பளிபதால் மட்டுமே இந்தியா வளர்ச்சி பாதையில் பயணிக்க முடியும் என்பதை நரேந்திர மோடியை ஆரவாரமாய் வரவேற்று ஆதரிக்கும் மக்கள் முதலில் உணர வேண்டும் .

அடக்குமுறைகளுக்கும் அதிகார வர்க்கத்தின் கொடுமைகளுக்கும் உள்ளாகி மிகுந்த மன நோவினைகளுக்கு உள்ளான பெருவாரியான இந்திய மக்களுக்கு விடிவெள்ளியாகவும் தற்கால மோசேயாகவும் காட்சி அளிக்கிறவர் நரேந்திர மோடி. அடுத்த பிரதமராவதற்குரிய அனைத்து தகுதிகளையும் இவர் கொண்டுள்ளார் என்பதை போன்ற ஒரு தோற்றத்தில் இன்றைக்கு மோடியை இந்திய மக்களில் ஒரு பெரும்பான்மையான கூட்டம் சித்தரிகின்றது.
இதனை ஏதோ கும்ப மேளாவின் போது வெறும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மாத்திரம் கூறவில்லை , இந்திய சமூகத்தின் ஒரு பெரும் பகுதியான “கல்வி அறிவு பெற்றவர்கள் (?)” என்ற பெயரால் அழைக்கபடுபவர்களும் , “கல்வி அறிவு (?)” உள்ள இளைஞர்களும் கூட நரேந்திர மோடி அவர்களின் பிரச்சாரத்தில் திசை திருப்ப பட்டு இவ்வாறு கூறுகின்றனர் .

ஒரு சில தினங்களுக்கு முன்பு நான் டில்லியில் இருந்து போபாளிற்கு விமானம் மூலம் பயணித்தேன் . எனக்கு அருகில் அமர்ந்திருதவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபர். நான் அவரிடத்தில் மோடி அவர்களை குறித்து கருத்து கேட்டேன் . மோடியை பற்றி புகழ்ந்து தள்ளினார். அவர் பேச்சின் இடையில் நான் குறுக்கிட்டு ,சில கேள்விகளை முன் வைத்தேன் . நான் அவரிடத்தில் 2002 குஜராத் மாநிலத்தில் 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை பற்றி கேட்டேன் .

 முஸ்லிம்கள் எப்போதும் குஜராத் மாநிலத்தில் பிரச்சனையை உருவாக்கி கொண்டே இருந்தனர் , ஆனால் 2002 ஆம் ஆண்டிற்கு பின்னர் முஸ்லிம்களை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைக்க பட்டுள்ளனர் , இதற்க்கு பின்னரே குஜராத் மாநிலத்தில் அமைதியான சூழல் குடிகொண்டது என்று பதில் அளித்தார். அது மயானத்தில் நிலவும் அமைதிக்கு ஒப்பானது. அமைதியுடன் நீதியும் ஒன்று சேராத வரை , என்றைக்கும் அமைதி மாத்திரம் தனித்து நீடித்து நிலைத்துவிட முடியாது .இதை நான் கூறிமுடித்தது தான் தாமதம் , அவர் என்னிடத்தில் கோபித்தவராக என்னிடமிருந்து விலகி சென்று மற்ற்றொரு இருக்கையில் அமர்ந்துவிட்டார் .

ஆனால் இன்றைக்கு உண்மை நிலவரம் என்னவென்றால், 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் அரங்கேறிய கொடூர சம்பவத்திற்கு எதிராக குஜராத்தில் வாழும் முஸ்லிம்கள் எதிர்த்து குரல் கொடுக்கவே அஞ்சுவதற்கு காரணம் அவர்கள் மீண்டும் பாதிப்பிற்கு உள்ளாகிவிடலாம் , தாக்கபட்டுவிடலாம், என்கின்ற அச்சத்தில் வாழ்ந்து வருவதால் தான் .
இந்தியாவில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் (200 மில்லியனுக்கும் அதிகமான சமுதாயம் ) மோடீ அவர்களை கடுமையாக எதிர்பவர்களே ( ஆனால் மிக சொற்ப அளவிற்க்கான முஸ்லிம்கள் மாத்திரம் ஏதோ காரணத்திற்க்காக இதை ஏற்பதில்லை )

சந்தேகம் கொள்ளத்தக்க ஏதேச்சையான செயல்கள் :

குஜாரத்தில் முஸ்லிம்கள் மீது நடைபெற்ற அந்த கொடூர சம்பவம் , முன்னர் கோத்ரா ரயில் சம்பவத்தில் 59 இந்துக்கள் கொள்ளபட்டதர்க்கான “ஏதேச்சையான – முன் கூட்டியே திட்டம் தீட்ட படாத ” (ப்ராதிக்ரியா ) ஒரு பதிலடியே என்று மோடியின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர் .

இதை நானாக கற்பனை செய்து கூறவில்லை :
முதலாவதாக கோத்ரா சம்பவத்தில் உண்மையில் நடைபெற்றது என்ன என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது . இரண்டாவதாக , யார் அந்த கோத்ரா சம்பவத்திற்கு காரணமோ அந்த குறிப்பிட்ட மனிதர்களை அடையாளம் கண்டு ,மிக கடுமையான முறையில் தண்டிக்க வேண்டும் , ஆனால் இதற்காக எப்படி குஜராத்தில் வாழும் முழு முஸ்லிம் சமுதாயத்தின் மீது அரங்கேறிய அந்த கொடூர தாக்குதலை நியாய படுத்தமுடியும் ? .
குஜராத் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் வெறும் 9 சதவிகிதம் தான் , மீதம் உள்ளவர்கள் அனைவரும் இந்துக்களே . 2002 ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் சாரைசாரையாக படுகொலை செய்யப்பட்டனர் , வீடுகள் எரிக்கப்பட்டன , இன்னும் பல்வேறு விதமான கொடூர சம்பவங்களுக்கும் முஸ்லிம்கள் ஆளாக்கப்பட்டனர்.

2002-ஆம் ஆண் டில் முஸ்லிம்கள் இன படுகொலையை செய்யப்பட்டதை ” ஏதேச்சையான- முன் கூட்டியே திட்டம் தீட்ட படாத (ப்ராதிக்ரியா ) ” ஒரு பதிலடியே என்று இவர்கள் கூறுவது எனக்கு ஜெர்மனி நாட்டில் நவம்பர் மாதம் 1938 ஆம் அண்டு நடந்த “கிரிஸ்டல்நாக்ட்” சம்பவத்தை நினைவூட்டுகிறது . ஜெர்மனி நாட்டு விரகர் ஒருவரை யூத இளைஞன் , நாஜிக்களால் தனது குடும்பத்தை சித்ரவதை செய்பட்ட காரனத்தால் சுட்டு கொன்றுவிடுகிறான்.இதற்காக ஜெர்மனியில் இருந்த முழு யூத சமூகத்தையும் நாஜிக்கள் தாக்கினர் , படுகொலை செய்தனர் , அவர்களின் தேவாலயங்களை எரித்தனர் , கடைகளை சூறையாடினர் . ஜேர்மானிய நாஜி அரசாங்கம் இதை குறித்து ” ஏதேச்சையான – முன் கூட்டியே திட்டம் தீட்டபடாத” சம்பவம் என்றே கூறியது , ஆனால் உண்மையில் இது முன்னரே திட்டம் தீட்டபட்டு , மூர்க்கமான ஒரு கும்பலை பயன்படுத்தி நாஜி அதிகாரிகளால் அரங்கேற்றபட்டதாகும்.

வரலாற்று சான்றுகளின் படி , இந்திய நாடு ,வெளிநாடுகளிலிருந்து குடியேறிவர்களுக்கு தஞ்சம் கொடுத்த ஒரு நாடாகும் , இதன் விளைவாக நம் நாடு பலதர பட்ட மனிதர்களையும் பெற்றது .எனவே அனைத்து வகை மனிதர்களையும் ஒன்றிணைக்கும் விதமாக மதச்சார்பின்மை கொள்கை உள்ளது – அதாவது அனைத்து சமூகங்களுக்கும் சரிசமமான உரிமையையும் , மரியாதையையும் வழங்குதல் என்ற கொள்கை.இந்த கொள்கையை கொண்டவர் தான் மன்னர் அக்பர் , இதை நம் மூதாதையர்களும் (பண்டிட் ஜவஹர்லால் நேரு மற்றும் அவரின் சகாக்கள் ) பின்பற்றி இந்த செக்யுலரிச (மதச்சார்பின்மை) கொள்கையின் அடிப்படையில் அரசியல் சாசனத்தை வகுத்து தந்தனர்.இதை நாம் பின்பற்றாத வரையில் நம் நாடு ஒரு நாள் கூட அமைதியாக இருக்க முடியாது ஏனெனில் நம் நாடு பலதரப்பட்ட மதங்கள் , ஜாதிகள், மொழிகள், இன குழுக்கள் என பல வேற்றுமைகளை கொண்டுள்ள ஒரு நாடு.

ஆகவே இந்தியா இந்துக்களுக்கு மாத்திரம் உரித்தான ஒரு நாடு இல்லை . இந்நாடு முஸ்லிம்கள் , சீக்கியர்கள் , கிறித்தவர்கள் , பார்சிகள் , ஜைனர்கள் என மற்றுமுள்ள அனைத்து மக்களுக்கும் சரிசமமான அளவில் , சொந்தமான ஒரு நாடு .இங்கு இந்துக்கள் தான் முதல் தர குடிமக்களாக வாழ முடியும் , மற்றவர்கள் அனைவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர குடிமக்களாக தான் வாழ முடியும் என இல்லை .அனைவரும் முதல் தர குடிமக்களே !.குஜராத்தில் 2002 ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட அந்த கொடூர தாக்குதல்களும் , ஆயிரதிருக்கும் மேலான முஸ்லிம்களை கொன்று குவித்ததையும் எப்போதும் மறக்கவோ , மன்னிக்கவோ முடியாது . இதில் மோடி அவர்களுக்குள்ள தொடர்பை அரேபியாவின் அனைத்து வாசனை திரவியங்களை வைத்து கழுவினாலும், கரையை கழுவவோ/நீக்கவோ முடியாது .

திரு மோடி அவர்களுக்கு முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதில் எந்த ஒரு சம்பந்தமும் இல்லையென்றும் இது வரை அவரை எந்த நீதிமன்றமும் ஒரு குற்றவாளி என அறிவித்ததில்லை எனவும் மோடியின் ஆதரவாளர்கள் கூறிவருங்கின்றனர். இங்கு நான் இந்திய நீதி துறையை பற்றி கருத்து கூறவிரும்பவில்லை. ஆனால் மோடி அவர்களுக்கு இந்த படுகொலை சம்பவங்களில் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுவதை ஏற்று கொள்ள முடியாது . குஜாரத்தில் மிக பெரிய அளவில் ,அந்த கொடூர சம்பவங்கள் நடைபெற்ற போது முதலமைச்சராக இருந்தவர் மோடி .இதில் மோடி அவரகளுக்கு எந்த பங்கும் இருக்கவில்லை என கூறுவதை யார்தான் நம்ப முடியும் ? என்னை பொறுத்த மட்டில் என்னால் நிச்சயமாக இதை நம்ப முடியாது.

இதற்க்கு ஒரு எடுத்துகாட்டை கூறுகிறேன் :
எஹ்சான் ஜாப்ரி என்பவர் அதிகம் மதிக்கப்பட கூடியவர் , ஒரு வயது முதிர்ந்த முன்னால் பாராளுமன்ற உறுப்பினர். இவர் குஜராத்தில் உள்ள அஹ்மதாபாத்தின் சமன்பூரா என்னும் இடத்தில வசித்து வந்தவர் . இவர் வீடு முஸ்லிம்கள் அதிகம் வாழ கூடிய குல்பர்கா வீடுகள் சமூகத்தில் இருந்தது . எஹ்சான் ஜாப்ரிக்கு நடந்த சம்பவத்தை நேரில் கண்ட இவரின் வயது முதிர்ந்த மனைவி சக்கியா ஜஃப்ரி தெரிவித்தவை இன்றைக்கும் பதிவில் உள்ளது .பிப்ரவரி 28,ம் தேதி 2002 ஆம் ஆண்டில் , வெறிபிடித்த ஒரு கும்பல் இவர் வீட்டின் பாதுகாப்பு வலயத்தை கேஸ் சிலிண்டிரை வைத்து தகர்த்தெறிந்தன. உள்ளே நுழைந்து , அங்கிருந்த எஹ்சான் ஜாப்ரி அவர்களை தர தரவென வீட்டின் வெளியே இழுத்து , கை ,கால்களை வாழால் வெட்டினர், அதற்க்கு பின் இவரை உயிருடன் எரித்தே விட்டனர் . இதே போல் பல முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர் ,அதிகமான முஸ்லிம்களின் வீடுகளை எரித்து நாசமாக்கினர்.இத்தனைக்கும் ,சமன்புரா என்னும் இடத்திலிரிந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு காவல் நிலையம் , 2 கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவில் அஹ்மதாபாத்தின் போலிஸ் கமிஷனர் அலுவலகம். முதலமைச்சருக்கு இங்கு என்ன நடந்து கொண்டிருந்தது என்றே தெரியவில்லை என்று கூறினால் அதை எப்படி நம்புவது ?. சம்பவம் நடைபெற்ற அன்றைய தினத்திலிருந்து சக்கியா ஜஃப்ரி தனது கணவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கு எதிராக நீதி கிடைக்க போராடி வருகிறார் . சக்கியா ஜஃப்ரி அவர்கள் பதிவு செய்த மோடிக்கு எதிரான கிரிமினல் வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ளவும் மறுத்து விட்டது மாவட்ட நீதிமன்றம் .(இதற்க்கு காரணம் உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது தான் ).

10 ஆண்டுகளுக்கும் அதிகமான இடைவெளிக்கு பிறகு இப்போது தான் இந்த வழக்கை உச்சநீதி மன்றம் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ஒதுக்கி , சக்கியா ஜஃப்ரியின் எதிர்ப்பு மனுவை விசாரணைக்கு எடுத்துகொள்ளலாம் என கூறியுள்ளது .

இவ்வழக்கு தீர்ப்பு வழங்கபடாமல் இன்னமும் நிலுவையில் உள்ளதால் ,இவ்விஷயத்தை பற்றி இதற்க்கு மேல் நான் அதிகம் கூற விரும்பவில்லை.
மோடி அவர்கள் குஜராத்தை பெரிதும் முன்னேற்றி விட்டதாக கூறிகொள்கிறார் . ஆகவே ” முன்னேற்றம் ” என்றால் என்ன என்பதை சரி பார்ப்பது அவசியம்.என்னை பொறுத்தவரை “முன்னேற்றம் ” என்பதற்கு ஒரு பொருள் தான் இருக்கமுடியும் , அது ‘ பொது மக்களின் வாழ்க்கை தரம் உயர்வது ‘ என்பது தான். பொது மக்களின் வாழ்க்கை தரம் எந்த விதத்திலும் உயர்த்த படாமலிருக்கும் நிலையில், பெரிய தொழில்துறை முதலாளிகளுக்கு சலுகைகளை வழங்கி, அவர்களுக்கு மலிவான விலையில் நிலத்தையும் மின்சாரத்தையும் வழங்குதையெல்லாம் , முன்னேற்றம் ” என்று கூற முடியாது .

கேள்விக்கிடமான முன்னேற்றம்:
இன்றைய நிலவரப்படி , குஜராத்தில் 48 சதவிகிதம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் , இந்த எண்ணிக்கை ,நம் நாட்டின் சராசரி ஊட்டச்சத்து குறைவு விழுக்காட்டை காட்டிலும் அதிக விகிதமாகும் .மேலும் குஜராத் மாநிலத்தில் மழலை இறப்பு விகிதமும் அதிகம், பிரசவ பெண்களின் இறப்பு விகிதமும் அதிகம் , பழங்குடி மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களில் ,வறுமை கோட்டில் உள்ளவர்கள் ,57 சதவிகிதம்.
திரு ராமச்சந்திரன் குஹா அவர்களின் “தி ஹிந்து ” பத்திரிக்கையில் (இந்தியாவை ஆட்சி செய்யவிருக்கும் மனிதர் , பிப்ரவரி 8 – என்ற தலைப்பில் ) வெளியிடப்பட்ட கட்டுரையில் குஜராத்தில் சுற்றுப்புற சூழல் பாதிப்பு அதிகரித்து வருகிறது , கல்வி தரம் வீழ்ந்து வருகிறது , ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விழுக்காடு மிகவும் அதிகரித்து கொண்டே உள்ளது .

குஜராத்தில் உள்ள மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமான ஆண்களின் எடை உயர விகித குறியீடு 18.5 க்கும் விட குறைவு -( நம் நாட்டின் 7 வது மிக மோசமான மாநிலம் ) என தெளிவாக கூறியுள்ளார்.
2010 ஆம் ஆண்டின் யு.என்.டீ.பீ யின் (UNDP) அறிக்கை குஜராத்தை ஒவ்வரு மாநிலத்தின் பல பரிமாண வளர்சிகளான: சுகாதாரம், கல்வி, வருமான அளவு போன்றவற்றின் பட்டியலில் 8 வது மாநிலமாக குஜராத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது.
பெரிய முதலீட்டாளர்கள் , தொழிலதிபர்கள் மோடி அவர்கள் குஜராத் மாநிலத்தில் தொழில் செய்ய ஏதுவாக அனைத்து சூழல்களையும் உருவாக்கிதருபவர் என கூறிவருகின்றனர் , ஆனால் இங்கு கேள்வி என்னவென்றால் , இந்தியாவில் தொழிலதிபர்கள் மாத்திரம் தான் மக்கள் என்பவர்களா ?

உண்மையிலேயே நாட்டு வளர்ச்சியை பற்றி கவலை கொள்பவர்களாக இருப்பின் , நான் இங்கு கூறிய அனைத்தையும் கவனத்தில் கொள்ளுமாறு இந்திய நாட்டு மக்களிடம் நான் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
அல்லது நம் நாட்டு மக்களும் ஜெர்மனி மக்கள் 1933 ஆம் ஆண்டில் இழைத்த தவறை போல தவறு செய்தவர்களாக ஆகிவிடுவர் .

நன்றி : “தி ஹிந்து” நாளிதழ்.

நன்றி : http://www.tntj.net/132923.html

அதிரை ஸலஃபிகள் என்ற காம ஃபத்வா கூட்டத்தின் உண்மையான கொள்கை என்ன? (வீடியோ)

அதிரை ஸலஃபிகள் (சுயஇன்பிகள்) என்ற மட கூட்டத்தின் உண்மையான கொள்கை என்ன? (வீடியோ)

அதிரை ஸலஃபிகளின் கொள்கைகள்:

ஆண் மற்றும் பெண்ணுக்கு சுய இன்பம் ஹலால். சுயஇன்பத்தால் நரம்பு தளர்ச்சி வராது. கண் பார்வை போகாது, கேன்சர் வராது. (முழு விபரம் அறிய இங்கே சொல்லவும்)

- ஹதீஸ்களை மறுத்து சிறுமிகளை திருமணம் செய்யலாம்

- வெள்ள நிவாரணம் ஹராம்

நோன்பு வைத்துக்கொண்டு ஆண் அல்லது பெண் சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது! (முழு விபரம் அறிய இங்கே சொல்லவும்)

நாலு மனைவி இருந்தாலும் ஏழை பெண்களை அன்பளிப்பாக பெற்று திருமணம் செய்யாமல் அனுபவிக்கலாம் (மனைவியை போல)

- மார்க்க பிரச்சாரம் செய்ய சவூதி உலமாக்களின் பரிந்துரை வேண்டும்

அதிரை காம ஸலஃபிகளின் கயமைத்தனங்கள் மற்றும் காமெடிகள்:

- பிஜே படித்த மதரஸா சரியான கொள்கையில் உள்ளது கிடையாது. எனவே, பிஜேவின் பேச்சை கேட்கக்கூடாது. பிஜே படித்த அதே மதரஸாவில் படித்த அதிரை ஹைதர் அலி ஆலிம்சா சத்தியத்தில் உள்ளவர். எப்படி என்று கேட்காதீர்கள். பின்னர், அந்த மகனே இந்த மகனே என்று திட்ட ஆரம்பித்துவிடுவார்கள் அதிரை ஸலஃபிகள் என்ற காம ஃபத்வா முல்லாக்கள்.

- விவாதம் கூடாது என்பார்கள், ஆனால் இண்டர்நெட்டில் மட்டும் விவாதம் செய்வார்கள். அதாவது புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், ஒரு பெண்ணை நேரடியாக நிர்வாணமாக பார்க்க கூடாது, ஆனால், வெப்கேமர மூலமாக பெண்ணை நிர்வாணமாக பார்த்தால் சரி. நமது இணையதளத்திலே கூட அதிரை காம ஸலஃபிகளின் அறிஞர்களான மௌலவி அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி மற்றும் மௌலவி அஹ்மத் ஃபிர்தவ்ஸ் ஸலஃபி ஆகியோர் விறுவிறுப்பான ஒரு விவாதம் செய்தார்கள்.  விவாதம் கூடாது என்று சொல்லி திரிந்த இவர்கள், தற்போது விவாதம் செய்யலாம், ஆனால் வீடியோ எடுக்கக்கூடாது (நோன்பு பிடித்து கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்று சொல்லும் இவர்கள். விவாதம் செய்யும் போது அந்த செயலில் ஈடுபடக்கூடும் என்பதால் வீடியோ வேண்டாம் என்று சொல்லாம்) என்று சொல்லுகிறார்கள். விவாதத்திற்கு வர மாட்டார்களாம். 

- பிஜேவை காஃபிர் என்பார்கள். பிஜே எங்கு கூட்டம் நடத்தினாலும், அங்கு இவர்கள் சென்று பிஜேவின் சொற்பொழிவுவை தவறாது கேட்பார்கள். 

- இளைஞருக்கு பால் ஊட்டுவது சம்பந்தமான ஹதீசை பிஜே மறுக்கிறார். எனவே, பிஜே வழிகேடர் என்பார்கள் .சரி  நீங்கள் அந்த ஹதீசை செயல்படுத்துவீர்களா? என்று கேட்டால், தருக்கு  முருக்கு என்று முழிப்பார்கள் அதிரை காம ஃபத்வா ஸலஃபிகள்.

- இவர்கள் பிஜேவை காஃபிர் என்பார்கள்! இவர்களிடம் சரி, அப்படியாயின், பிஜேவின் கொள்கைகளை சரிகாணும், உங்கள் உற்ற உறவினர்களும் கஃபிரா? என்று கேட்டால், அப்படி சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்பார்கள். அப்போ , பிஜேவை காஃபிர் என்று சொல்ல உங்களுக்கு அதிகாரம் யார் தந்தது என்று இந்த காம அதிரை ஸலஃபிகளிடம் உங்களுக்கு கேட்க வேண்டும் என்று தோணும், இந்த கேள்வியை காம ஸலஃபிகளிடம் கேட்டுவிடாதீர்கள். அவ்வளவு தான், மௌலவி அஹமத் பிர்தவ்ஸ் ஸலஃபி சுயஇன்பி உங்களை அந்த மகனே இந்த மகனே என்று திட்ட ஆரம்பித்து விடுவார்.

- அதிரை காம ஸலஃபி அறிஞரான அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி அவர்கள் ஒரு புறம் தவ்ஹீத் ஜமாஅத் குஃப்ரில் உள்ளது என்று சொல்லிக் கொண்டே, தனது திருமணத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்களை திருமணத்தை நடத்தி வைத்து, சொற்பொழிவு ஆற்ற அழைத்து கெஞ்சியது தான் காமெடியிலும் காமெடி.

- பிஜேவிற்கு அரபி தெரியாது என்கிறது இந்த காம ஸலஃபி கூட்டம். சரிங்க சுயஇன்ப பிரியர்களே, பிஜேவிற்கு அரபி தெரியாது என்றால், எத்தனையோ விவாதங்களில் தமிழில் மொழியாக்கம் செய்யபடாத எத்தனையோ  ஹதீஸ்களையும் தப்சீர்களையும் வார்த்தைக்கு வார்த்தை பிஜே மொழியாக்கம் செய்கிறாரே என்று கேட்டால், திறுதிறுணு முழிக்கிறது சுயஇன்ப அதிரை ஸலஃபி கூட்டம்.

- இதைவிட ஒரு கொடுமை என்னவென்றால், இவர்கள் பிஜேவை வழிகேடர் என்கிறார்கள். ஒருவரை வழிகேடர் என்று சொல்ல வேண்டுமானால் அவரின் நூல்கள், உரைகள், ஆய்வுகள் இவற்றை படித்து, இவர் வழிகேடர் என்பதற்கு இதுவெல்லாம் ஆதாரம் என்று  சொல்லி விளக்கம்  தருவார்கள். இது தான் உலக நடைமுறை. இது அறிவுள்ள ஒரு மனிதன் செய்யும் செயல். இவர்களுக்கு மார்க்க அறிவோ அல்லது உலக அறிவோ அறவே கிடையாது. இவர்களை மனநோயாளிகள் என்று தான் சொல்ல வேண்டும். இந்த மனநோயாளிகள் பிஜேவை வழிகேடர் என்று சொல்லுவதோடு நின்றுவிடாமல், தங்களை பைத்தியம் என்று தெளிவாக நிரூபிக்கிறார்கள்.

இந்த அதிரை காம ஸலஃபிகளின் தலைவன் பெயர் யஹ்யா சில்மி (இது நாம் சுருக்கமாக சொல்லும் பெயர். அந்த தானே தலைவனின் முழு பெயர்: அபூ அப்துர் ரஹ்மான் யஹ்யா சில்மி பின் முஹம்மது நுபார் பின் நூஹ் லெப்பை ஆல மரிக்கார் அல் யமனி அஸ்ஸைலானி அஸ்ஸலபி அல்அஸரி). இந்த மட தலைவன் தான் பிஜே வழிகேடர் என்கிறான். அத்தோடு பிஜேவின் எந்தவொரு நூல்களையோ  உரைகளையோ  நான் கேட்டதுமில்லை என்கிறான். இவன் இவ்வாறு சொன்னதற்கான ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது (இது யஹ்யா என்ற மட சாமியால் பிஜேவிற்கு எழுதப்பட்ட கடிதத்தில் மட சாமி சொன்னது). மேலும், இந்த யஹ்யா என்ற மடையனுக்கு தமிழ் படிக்கவோ அல்லது சரியாக பேசவோ தெரியாது.
கடைசி இரண்டு வரிகளில் அதிரை காம ஸலஃபிகளின் தலைவன் சொல்லுவதை கேளுங்கள்

- இதை விட காமெடி என்னவென்றால், பிஜே தனக்கு அரபி சரளமாக பேசவராது என்றார். இது பிஜேவிற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் வசிக்கும் ஆலிம்களின் பெரும்பாலோருக்கு அரபி பேச தெரியாது, காரணம் அரபு பேசப்படும் இடத்தில் இல்லாத காரணத்தினால். ஆனால், பிஜேவிற்கு அரபி மொழியை படித்து, அதை மொழியாக்கம் செய்ய தெரியும் என்பதை யாருமே மறுக்க மாட்டார்கள். இதை விமர்சனம் செய்து அதிரை காம ஸலஃபிகளின் தலைவன் யஹ்யா பிஜேவிற்கு அரபி மொழியில்  ஒரு கடிதம் எழுதினார் (அதிரை காம ஸலஃபிகள் பிஜேவிற்கு அரபி தெரியாது என்ற கருத்தை பொய்யாக்கி). அந்த கடிதத்தில் அரபி தெரிந்தவர்கள் மட்டும் தான் மார்க்கம் பேச வேண்டும் என்று எழுதியிருந்தார். அரபி மொழியில் பிஜேவிற்கு எழுதப்பட்ட அந்த கடிதத்தில் உள்ள இலக்கண பிழைகளை சுட்டிக்காட்டி, பிஜே யஹ்யா என்ற 10 அடி பெயர் கொண்ட அதிரை காம ஸலஃபிகளின் தலைவனுக்கு பதில் அனுப்பினார். பிஜேவிற்கு அரபி தெரியாது என்றும் தனக்கு அரபி தெரியும் என்றும் அதிரை காம ஸலஃபிகளின் தலைவன் எழுதிய அந்த கடிதம் நாரிப்போனது.

- இந்த அதிரை காம ஸலஃபிகள் மத்ஹபுவாதிகளுடன் ஒட்டி உறவாடுவார்கள். ஹஜ் செய்ய போன ஒரு பெண் கழுதையின் ஆணுருப்பை தனது துவரத்தில் நுழைத்தால் ஹஜ் கூடும். தொழுகையை ஸலாம் கொடுப்பதற்கு பதிலாக சிரித்தோ அல்லது காத்துவிட்டோ  தொழுகையை முறிக்கலாம், ஒருவன் தன் பின் துவாரத்தில் தனது ஆண் உறுப்பை நுழைத்தால் விந்த் வெளியாகாத  வரை குளிப்பு கடமை இல்லை, ஒருவனுக்கு மூக்கில் இரத்தம் வடிந்தால் மூத்திரத்தால் சூரத்துல் பாத்திஹாவை அவனது நெற்றியில் எழுதினால் அந்த நோய் குணமாகும் என்பது போன்ற காம சட்டங்களையும் குர்ஆனையும் ஹதீஸ்களை அவமதிக்கும் மத்ஹபுவாதிகளை இந்த காம ஸலஃபிகள் விமர்சனம் செய்ய மாட்டார்கள். மேலும், தங்களையும் மத்ஹபை சேர்ந்தவர்கள் என்றே கூறுவார்கள். இனம் இனத்தோடு சேர்வதில் தவறு ஏதும் உண்டா?

- அதிரை காம ஸலஃபிகள் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து பாலியல் குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் அடிக்கடி கூட்டு சேர்ந்து கொள்வார்கள் (ஏன் தெரியுமா? இனம் இனத்தோடு தானே சேரும்).

- இந்த காம ஸலஃபிகள் ஒன்றுமே இல்லாத விஷயத்தை கூட ஒவராக பில்டப் கொடுத்து தான் எழுதுவார்கள். ஆனால் இவர்கள் எழுதுவதை கவனியுங்கள். நாம் நேற்று ஒரு கடிதம் எழுதினால், நேற்று எழுதினோம் என்று அதன் தேதியை போடுவோம். அதிரை காம ஸலஃபிகளின் தலைவர்களில் ஒருவன் எழுதுவதை பாருங்கள்:

அபூ அப்துல்லாஹ் அஷ்ரப் பின் அப்துல் வஹ்ஹாப் பின் முஹம்மது மதார் அஸ்-ஸைலானி அஸ் ஸலபி அல் அஸரி ஆகிய நான் நபி அவர்கள் மதீனாவை நோக்கி குடிபெயர்ந்திலிருந்து ஹிஜ்ரி 1433 முஹர்ரம் மாதம் 03ம் திகதி இதை வெளியிட்டேன்.

[அபூ அப்துல்லாஹ் அஷ்ரப் பின் அப்துல் வஹ்ஹாப் பின் முஹம்மது மதார் அஸ்-ஸைலானி அஸ் ஸலபி அல் அஸரிஇது அண்ணாச்சியின் பெயர் மட்டும் தான், சரியா! முழு முகவரி என்று எண்ணிவிடாதீர்கள்].

[ஆகிய நான் நபி அவர்கள் மதீனாவை நோக்கி குடிபெயர்ந்ததிலிருந்து ஹிஜ்ரி 1433 முஹர்ரம் மாதம் 03ம் திகதி இதை வெளியிட்டேன் - இது அண்ணாச்சி தனது மட தொண்டர்களை ஏமாற்ற கொடுக்கும் பில்டப்].

குர்ஆனை மறுக்கும் அதிரை ஸலஃபிகள் என்ற காம ஸலஃபிகள்:

குர்ஆன் ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்பதில் நம்பிக்கை இல்லாத இந்த அதிரை காம ஸலஃபிகள் கூட்டம், முன்னோர்களை கண்மூடி பின்பற்ற சொல்லுவதை பாருங்கள்,

இமாம் அல் அவ்ஸாயி (இறப்பு 157ஹிஜ்ரி) முன்னோர்களின் அறிவித்தல்களை பற்றிக்கொள், மக்கள் உன்னை புறக்கனித்தாலும் சரியே!, மக்களின் அபிப்பிராயங்களில் கவனமாயிரு, அது அவர்களின் வார்த்தைகளால் எவ்வளவு அழகாக இருந்தாலும் சரியே. (கிதாபுல் ஷரியா இமாம் ஆஜூரி )

முன்னோர்களை பின்பற்ற சொல்லும் இவர்கள் எப்படி குர்ஆன் வசனத்தை மறுக்கிறார்கள் என்பதற்கு கீழ்காணும் திருக்குர்ஆன் வசனத்தை படித்து பாருங்கள்,

மேலும், "அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம் என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? 

அல்குர்ஆன் 2:170

குர்ஆனை எப்படி தெளிவாக மறுக்கிறார்கள் என்று தெரிகிறதா? இப்படி பகிரங்கமாக குர்ஆனை மறுக்கும் கும்பல் மற்றவர்களை காஃபிர் என்று கூறுவது தான் வேடிக்கை.

நாம் மேலே சொல்லியுள்ள எந்த வாதத்திற்கும் இந்த காம வெறியர்கள் இதுவரை பதில் சொல்லவில்லை.

மேலே உள்ள எமது வாதங்களை படிப்பவர்கள் இந்த அதிரை காம ஸலஃபிகள் மனநோயாளிகள் என்ற முடிவிற்கு தான் வருவார்கள்.

அதிரை காம ஸலஃபிகள் முகமுடியை கழட்டிய ஆக்கங்கள்:

ஆர்ப்பாட்டம் ஹராமா? கூறுகெட்ட ஸலஃபிகளின் குதர்க்கவாதம்

அல்லாஹ்வின் பண்புகளுக்கு விளக்கம் தரக்கூடாது, ஆனால் தரலாம் - உளறும் குழப்பி கூட்டம்

அல்லாஹ் அர்ஷில் அமர்ந்தான் என்று கூறுவது சரியா? ஸலஃபி பக்தர்களின் அறியாமை!

ஸலஃபிகளே ஸஹீஹான ஹதீசை செயல்படுத்துங்கள் (மறுக்காதீர்கள்)!

அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்குகிறான் என்பதின் பொருள் என்ன?

பிஜேவின் ஆசிரியர் யார்? ஆசிரியரை வைத்து தான் நேர்வழி தீர்மானிக்கபடுமா?

ஸலஃபி கொள்கை சரியா?

ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டுமா?

ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?

குர்ஆனுடன் முரண்படும் ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்) ஹதீஸ்களை பற்றிய அறிஞர்களின் கருத்து என்ன?

யஹ்யா சில்மியின் விமர்சனம் என்ன?

காம வெறியில் குர்ஆன் ஹதீஸை மறுக்கும் அதிரை காம ஸலஃபிகள்!

காம காதியானிகளும் அதிரை சுய இன்ப ஸலஃபிகளும்! - ஒற்றுமையும் கள்ள தொடர்பும்

Thursday, February 21, 2013

அதிரையில் ப்ரோஜெக்டோர் மூலம் ஒளிப்பரப்பு!

அதிரையில் ப்ரோஜெக்டோர் மூலம் ஒளிப்பரப்பு!



சென்னை மண்ணடியில் 17-2-13 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சகோதரர் பிஜே அவர்கள்
''அப்சல் குருவிற்கு தூக்கு சரியா? என்ற தலைப்பில் உரையாற்றிய சொற்பொழிவு தக்வா பள்ளி அருகில் 19-2-13 அன்று இஷா தொழுகைக்கு பிறகு ஒளிபரப்பு செய்யப்பட்டது இதில் திரளாக மக்கள் கலந்து கொன்டனர்!
அல்ஹம்துலில்லாஹ்









Sunday, February 17, 2013

அப்சல் குருவிற்கு தூக்கு சரியா? (வீடியோ )


அப்சல் குருவிற்கு தூக்கு சரியா? 

ஆசிட் விசப்பட்ட அபலை பெண் வினோதினி - தீர்வு என்ன (வீடியோ)

ஆசிட் விசப்பட்ட அபலை பெண் வினோதினி - தீர்வு என்ன (வீடியோ)


இஸ்லாமிய சட்டமே தீர்வு - லால்பேட்டை (வீடியோ )

இஸ்லாமிய சட்டமே தீர்வு - லால்பேட்டை

லால்பேட்டை யில் 16.02.13 அன்று சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் ஆற்றிய உரை

 

Saturday, February 16, 2013

இஸ்லாமிய சட்டமே தீர்வு (வீடியோ )

இஸ்லாமிய சட்டமே தீர்வு
உரை :சகோ கோவை ரஹ்மத்துல்லாஹ் 

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 15.02.13

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 15.02.13
உரை :யாசர் அரபாத் இம்தாதி 




Friday, February 15, 2013

அதிரையில் நடைபெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக கடந்த 15.02.2013 அன்று அதிரை தக்வா பள்ளி அருகில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மௌலவி யாசிர் இம்தாதி அவர்கள் 'இஸ்லாத்தில் இளைஞர்களின் பங்கு' என்ற தலைப்பிலும், மௌலவி ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் 'நபிவழி மறந்தோரே நரகத்தை அஞ்சிடுவீர்' என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இதில் பெரும்திரளாக பெண்களும் ஆண்களும் கலந்துகொண்டனர். இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் அதிகமாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்.

பொதுக்கூட்டம் தவ்ஹீத் ஜமாஅத் அதிரை மற்றும் முத்துப்பேட்டை கிளைகளின் இணையதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

விரிவான செய்திகள் விரைவில் இன்ஷா அல்லாஹ்.

பொதுக்கூட்ட வீடியோ விரைவில் வெளியிடப்படும்.


பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
1. இஸ்லாத்தின் மூல ஆதாரங்களான குர் ஆன் ஹதிஷை மட்டும் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

2. அதிராம்பட்டிணம் பேருந்து நிலையத்த்லிருந்து கடைத்தெரு வழியாக மகிழங்கோட்டை செல்லும் சாலையை புதிய தார்சாலையாக போர்க்கால அடிப்படையில் அமைத்து தரும்படி சம்மந்தப்பட்ட துறை மற்றும் அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்..

3. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது இஸ்லாமியர்களுக்கு இருக்கின்ற தனி இடஓதுக்கீட்டீனை உயர்த்தி தருவோம் என்று திருச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

4. முஸ்லீம்களின் கோரிக்கையை ஏற்று விஷ்வரூபம் திரைப்படத்திற்கு தடை விதித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மனஉறுதியை பாராட்டுவதோடு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

5. விஷ்வரூபம் திரைபடத்திற்கு ஆதரவாக பேசிய அதிரை சேர்மன் அஸ்லத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

6. அப்சல் குருவை தூக்கிலிட்டு நீதியை சாகடித்த மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம்

7. கடந்த சில மாதமாக அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விடுமுறை நாளாக இருந்த வெள்ளிகிழமையை ஞாயிற்று கிழமையாக நிரந்தரமாக மாற்றுவதற்கு முயற்சிக்கும் காதிர் முகைதீன் பள்ளி நிர்வாகத்தை கண்டிப்பதோடு சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரியபடுத்திக்கொள்கிறோம். இது மீண்டும் தொடர்ந்தால் அதிரையில் பொதுமக்களை திரட்டி காதிர் முகைதீன் பள்ளி முன்பு மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.

போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.




















அப்சல் குருவிற்கு விதிக்கப்பட்ட தூக்கு சரியா? (வீடியோ )

அப்சல் குருவிற்கு விதிக்கப்பட்ட தூக்கு சரியா ?
அஸ்ஸலாமு அலைக்கும் அப்சல்குரு விற்கு விதித்த தூக்கு தண்டனை சரியா ?
வரும் 17.02.13 அன்று மண்ணடியில் சகோதர் பிஜே உரை நிகழ்த்துகிறார் .www.onlinepj.com இதை மாலை 6.30 அளவில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இன்ஷாஅல்லாஹ்.

Thursday, February 14, 2013

ரஷாதியின் பொய் பித்தலாட்டங்கள் விவாதம் (வீடியோ )

ஷைஃபுதீன் ரஷாதியின் பித்தலாட்டங்கள்
கடந்த 3,4 பிப்ரவரியில் திருச்சியில் நடந்த விவாதம் 
இதில் ரஷாதியின் பித்தலாட்டங்கள் தோல் உரிக்க பட்டது அல்ஹம்துலில்லாஹ் 









Monday, February 11, 2013

பாக்கர் கும்பலின் உண்மையான கொள்கை என்ன?


பாக்கர் கும்பலின் உண்மையான கொள்கை என்ன?

பாலியல் மற்றும் பொருளாதார குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து பாக்கர் தூக்கி விசப்பட்டார். தவ்ஹீத் ஜமாஅத்தை கடுமையாக எதிர்த்து வந்தவர்கள், பாக்கரை தவ்ஹீத் ஜமாஅத் விரட்டியவுடன் பாக்கர் பின் அணிவகுத்தார்கள். 

பாக்கர் ஆரம்பித்த இயக்கத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து பாலியல் மற்றும் ஊழல் காரணமாக தூக்கி விசப்பட்டவர்களை சேர்த்து இயக்கத்தை பலப்படுத்தினார்கள். பலர் பாக்கரின் காசுக்காக அவர் பின்னால் சென்றார்கள்.

பாக்கர் என்பவர் ஒரு இயக்கத்தை வழி நடத்த தகுதியானவரா? இவர்களுக்கு விளம்பரம் கொடுப்பது சரியா? 

தடம்புரண்ட தவ்ஹீத்வாதிகள் இவரை பின்பற்றுகிறார்கள், இவரை ஆதரிக்கிறார்கள். இந்த பாக்கர் கும்பலில் உள்ளவர்களை சிலர் ஜூம்ஆ உரை கூட ஆற்ற வைக்கிறார்கள்.

பாக்கரின் உண்மையான கொள்கை என்ன? பாக்கர் இயக்கத்தில் இருப்பவர்களின் உண்மையான தவ்ஹீத் என்ன? என்பதை விரிவாக அறிய கீழ்காணும் வீடியோக்களை பாருங்கள்.



பேருந்தில் ஒரு பெண்ணுடன் சில்மிஷம் செய்து சென்றுவிட்டு, அப்படி செய்வது தவறா என்று ஹதீசை தனது கேவலமான செயலுக்கு வளைக்கும் பாக்கர்!



தொடர்ச்சியாக பாக்கர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வந்தவுடன், தவ்ஹீத் ஜமாஅத் பாக்கரை மேடையில் ஏறக்கூடாது என்று தடை போட்டது. மேலும், அவரை ஜமாஅத்தை விட்டு ஒதுங்கி கொள்ளுமாறு அறிவுரை செய்தது. பாக்கர் அதை செவிமடுக்காமல், நான் ரொம்ப நல்லவன் என்றார். தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக சதி வேளையில் இறங்க ஆரம்பித்தார்.

பாக்கர் மீது தொடர்ச்சியாக வந்த பொருளதார மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கி, மண்ணடியில் பாக்கர் தனது குற்றச்சாட்டை மக்கள் மத்தியில் விவாதிக்க தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பு விட்டது. இன்று வரை பாக்கர் அந்த சவாலை ஏற்க முன்வரவில்லை.  அந்த விபரத்தை கீழ்காணும் வீடியோவில் காணுங்கள்.



பாக்கர் நல்லவரா? என்பதை இன்று வரை பாக்கருடன் இருக்கும் சித்தீக் சொல்வதை கேளுங்கள்.


சமுதாயத்தில் இருந்து ஒதுங்கி, தனது தவறை திருத்திக்கொண்டு வாழ வேண்டிய இந்த நபர் இயக்கம் ஆரம்பித்து படம் காட்டுகிறார், பிழைப்பு நடத்துகிறார்.

இவருக்கு விளம்பரம் கொடுப்பவர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

ஒரு தனி மனிதனின் மானத்தோடு இப்படி விளையாடாலாமா? என்று சிலர் கேட்கலாம். சகோதரர் பிஜே அவர்களின் மானத்தோடு இவர்கள் வரம்பு மீறி விளையாடியிருக்கிறார்கள். தவ்ஹீத் ஜமாஅத் எங்களின் மீது அநியாயமாக பழி சுமத்துகிறது என்று பாக்கர் பொய்யை கூற ஆரம்பித்த காரணத்தினால், நாம் உண்மையை சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

TNTJ அபுதாபி மர்கஸில் அதிரை கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் 


1-2-2013 வெள்ளி அன்று மாலை 5:30 மனிக்கு T .N .T .J அபுதாபி மர்க்கசில் அதிரை கிளையின் ஒருங்கிணைப்பு  மற்றும் ஆலோசனை கூட்டம் பொறுப்பாளர்  அப்துல் கபூர் முன்னிலையில் நடைபெற்றது. அதில் பள்ளி கட்டுமானப்பணி பற்றியும்  ஊரில் நடைபெற்று கொண்டிருக்கும் பெண்கள் பயான் , தெருமுனை பிரச்சாரம்  மற்றும் ஊரில் தாவாஹ் பணி அதிகப்படுத்துவதும் மற்றும் துபை மாதசந்த வசூலை பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் !


Sunday, February 10, 2013

புதிய கப்ர் பழைய கப்ர் எல்லாத்தையும் இடிக்கலாம், வாங்க!


புதிய கப்ர் பழைய கப்ர் எல்லாத்தையும் இடிக்கலாம்,  வாங்க!

சமீபத்தில் அதிராம்பட்டிணம் கடல்கரைத் தெருவில் புதிதாக முளைத்த பெண் அவ்லியா பற்றி நாம் ஒரு ஆக்கம் வெளியிட்டு இருந்தோம். இந்த அவ்லியாவை உண்டாக்கியவர்களை  கண்டித்து அதிரை இணைய தளங்கள் பலவும் கட்டுரை வெளியிட்டு இருந்தனர். இந்த கப்ர் வணக்கத்தை தடுப்பதில் அதிரை முஸ்லிம்கள் ஒருமித்துள்ளார்கள் என்றால் அது மிகையல்ல. அல்ஹம்துலில்லாஹ்.

இணையதளங்களில் இந்த இணைவைப்பு காரியங்களை எதிர்க்கும் நாம் இதை தடுக்க என்ன முயற்சிகள் செய்தோம்? இவற்றை கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் செய்பவர்களுக்கு நாம் வழங்கிய ஒத்துழைப்பு என்ன என்பதை நாம் சற்று சிந்திக்க வேண்டும்.

ஒரு காலத்தில் கப்ர் வணக்கம் மட்டுமே இஸ்லாம் என்று இருந்தது. அது இன்று உடைக்கப்பட்டு, கப்ர் வணக்கம் என்பது நரகத்தில் நிரந்தர இடத்தை பெற்று தரும் என்பதை பெரும்பான்மையானவர்கள் உணர்ந்துள்ளார்கள். அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.

புதிதாக முளைத்த இந்த கப்ரை அகற்றுவது எப்படி என்று சில வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அல்லாஹ்விற்கு இணைவைக்கும் கொடிய பாவங்களை சமுதாயத்தில் இருந்து களை எடுக்க செய்யப்படும் வாதப்பிரதிவாதங்கள் வரவேற்கப்பட வேண்டியவை.

இந்த வாதப் பிரதிவாதங்களில் முன்வைக்கப்படும் முதன்மையான கேள்வி புதிதாக முளைத்த இந்த கப்ரை ஏன் நாம் இடிக்க கூடாது என்பதே! இந்த  கருத்து நியாயமானது தான். நாம் எந்த நேரத்திலும் உணர்வுகளுக்கு முன்னுரிமை தராமல், அறிவார்ந்த ரீதியில் செயல்பட வேண்டும்.

முதலில் புதிதாக கட்டப்பட்டுள்ள  கப்ர் தர்ஹாவிற்கு சொந்தமான இடத்தில் (மறைவான இடத்தில்) கட்டப்பட்டுள்ளது. சட்ட ரீதியாக நாம் இதை எதுவும் செய்ய முடியாது. 

நாமே இந்த கப்ரை இடிக்க முற்படுவோம் என்றால் அதில் நன்மையை விட தீமையே அதிகம். நாம் இந்த கப்ரை இடித்தால், அவர்கள் போட்டிக்காக இன்னும் பத்து கப்ரை கூட கட்டுவார்கள். அதே நேரத்தில், கப்ரை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. 

மேலதிக தகவலுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்,


அதே நேரத்தில் ஊரில் உள்ள பெரும்பான்மையினர் கப்ரை இடிக்க சம்மதம் தெரிவித்தால், அமைதியாக அகற்றிவிடலாம். உதாரணத்திற்கு, தவ்ஹீத்வாதிகள் நிறைந்துள்ள பகுதியில் இருக்கும் தக்வா பள்ளி வளாகத்திலேயே கப்ர் உள்ளது. இதை எப்படி அகற்றலாம் என்று யாரும் சிந்தித்தாக தெரியவில்லை. தக்வா பள்ளியில் உள்ள கப்ரை அகற்ற யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்பது உறுதி. தக்வா பள்ளியில் கப்ர் இருந்தால் பரவாயில்லை, தர்ஹாவில் புதிதாக கப்ர் வரக்கூடாது என்பது எந்தவிதத்தில் சரி?

நோய்க்கு நிரந்தர தீர்வு என்ன? 

ஒரு நோயை முற்றிலுமாக தடுப்பதற்கு, நோய்க்கு மருந்திடுவதோடு அந்த நோய் எவ்வாறு பரவுகிறது என்று ஆய்ந்து அறிந்து, அந்த நோய் பரவும் வழியையும் அடைக்க முயல்வோம். 

கப்ர் வணக்கத்தை ஒழிக்க இந்த வழிமுறையையே கையால வேண்டும். மார்க்கம் என்றால் என்னவென்று தெரியாமல் கப்ர் கட்டும் அப்பாவிகளை கண்டு கொந்தளிக்கும் நாம், இந்த கப்ர் வணக்கத்தை பாத்திஹா ஒதி துவக்கி வைக்கும் பாவி ஆலிம்சாக்களையும் லெப்பைகளையும் கண்டு கொந்தளிக்கவில்லை. அவர்களை பற்றி கட்டுரை எழுதவில்லை. அவர்களையும் நம்மில் பலர் ஆலிம்கள் என்றே கூறுகிறோம்.

இமாமா? அல்லது பூசாரியா?

இந்த கப்ர் வணங்கி ஆலிம்களை பள்ளியில் இமாமாக வைத்து அழகு பார்க்கிறோம், அவர்களை பின்பற்றி தொழவும் செய்கிறோம். இது சரியா? 

ஒரு குடிகாரனை இமாமாக நிறுத்தி அவர் பின்னால் நின்று தொழுவோமா? குடிப்பதை விட இணைவைப்பு மிகப்பெரிய பாவம் இல்லையா?

கப்ர் வணக்கம் மட்டும் தான் இணைவைப்பா?

கப்ர் வணக்கத்தை எதிர்க்கும் அனைவரும் மௌலூது, தாயத்து, தட்டு, தகடு போன்ற இணைவைப்பு காரியங்களை எதிர்க்கவில்லை. இதற்கு காரணம் என்னவென்று புரியவில்லை. கப்ர் வணக்கம் நரகத்திற்கு அழைத்து சொல்லும் என்பதால் தான் இவர்கள் எதிர்க்கிறார்கள் என்றால், மௌலூது, தாயத்து, தட்டு, தகடு போன்றவைகளை இவர்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும். இணைவைப்வை எதிர்க்கும் சகோதரர்கள் இவற்றை கவனிக்க வேண்டும்.

கப்ர் வணக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வழி என்ன?

 - நமது ஊரில் உள்ள பள்ளிவாசல்களில் சிலவற்றில் இமாமாக இருப்பவர்கள் கப்ர் வணக்கத்தை ஆதரிப்பவர்கள், கப்ர் வணக்க கந்தூரியை துவக்கி வைப்பவர்கள். இவர்கள் தான் அப்பாவிகளின் உள்ளத்தில் நஞ்சை விதைத்து நரகத்திற்கு ஆள்பிடிப்பவர்கள். இவர்களை பள்ளிவாசல்களை விட்டு துரத்த வேண்டும். இவர்களுக்கு எதிராக ஒரு கருத்தாக்கத்தை உருவாக்க வேண்டும்.

- நமது ஊரில் இருக்கும் இரு மதரஸாக்களும் கப்ர் வணக்கத்தை ஆதரிப்பவை. அதை வளர்ப்பவை. இவற்றிக்கு பூட்டு போட வேண்டும். கப்ர் வணக்கத்தை பாத்திஹா ஓதி துவக்கி வைக்கும் கள்ள ஆலிம்சாக்கள்  இந்த மதரஸாக்களில் ஆசிரியர்கள் அல்லது இந்த மதரஸாவின் மாணவர்கள்.

- கேரளாவின் குட்டியை கண்டு நமது கண்ணியமிக்க (?) ஆலிம்கள் அலறுகிறார்கள். அவருக்கு எதிராக வாய் திறக்கும் அளவுக்கு கண்ணியமிக்க ஆலிம்களுக்கு ஈமான் இல்லை. கேரளத்து குட்டி கப்ர் வணக்கத்தை ஆதரிப்பவர். இவருக்கு சரியான முடிவு கட்ட வேண்டும். கப்ர் வணக்கத்திற்கு எதிராக வாய் திறக்காத கண்ணியமிக்க ஆலிம்களை பற்றி நமது உள்ளத்தில் இருக்கும் மரியாதையை தூக்கி எறிய வேண்டும். 

- கப்ர் வணக்கத்தை எதிர்க்காத கூட்டமைப்புகள், சங்கங்கள், அமைப்புகள் இவற்றை புறக்கணிக்க வேண்டும்.

- இணைவைப்பு வரிகளை கொண்ட மௌலூது என்ற குப்பை பாடலை பள்ளியில் ஒதுவதை தடுக்க வேண்டும். இதை பகிரங்கமாக கண்டித்து பிரச்சாரம் செய்ய முன்வர வேண்டும்.

- கப்ர் வணக்கத்திற்கு எதிராக ஒயாமல் பிரச்சாரம் செய்ய வேண்டும். 

இதுபோன்ற வழிமுறைகளை செய்யாமல், ஏன் கப்ரை நம்மால் இடிக்க முடியவில்லை என்று எழுதுவதால் ஒன்றும் நடக்காது.

இணைவைப்பிற்கு எதிராக நாம் தொடர்ந்து பிரச்சாரத்தை முன்னெடுத்தால் , கீழ்காணும் வீடியோவில் காட்டப்படும் அனாதை தர்ஹாக்களின் பட்டியலில் நமது ஊர் இணைவைப்பு கோவில்களும் சேரும்,  தர்ஹா நிர்வாகிகளே தவ்ஹீத்வாதிகளாக மாறுவார்கள், இன்ஷா அல்லாஹ்.



மேலதிக விபரங்களுக்கு:

Saturday, February 09, 2013

கொலைக்கு 4 மாத சிறை தண்டனை சரியா ?

கொலைக்கு 4 மாத சிறை தண்டனை சரியா ?

பெற்ற மகளைக் கொன்ற தந்தை - முழு விபரம்

தனது மகளைக் கொன்ற மதகுருவுக்கு சவூதியில் நான்கு மாதம் சிறைத்தண்டனை
மகளைக் கொன்றால் தந்தைக்கு தூக்கு இல்லை என்று சவூதியில் சட்டம் உண்டா
இஸ்லாம் இப்படி கூறுகிறதா?
மதகுரு என்பதற்காக இந்தக் கொலையாளிக்கு சலுகை அளிக்கப்பட்டதா?
கொல்லப்பட்ட மகளை தந்தை பாலியல் வன்கொடுமை செய்தாரா?

தமிழக அறிவு ஜீவிகள் வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் தக்க விளக்கத்தை அறிந்து கொள்ள 

Friday, February 08, 2013

புதிய தலைமுறை அக்னி பரிட்சை நிகழ்ச்சியில் சகோ. பிஜே பேட்டி!


புதிய தலைமுறை அக்னி பரிட்சை நிகழ்ச்சியில் சகோ. பிஜே அவர்கள் கலந்து கொண்டு, கேட்டப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள்

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 08.02.13 (வீடியோ )

உரை :அப்துல் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி
தலைப்பு :சுன்னத் எது பித்அத் எது ?

மாற்று மத சகோதரர்கள் திருக்குர்ஆன் இலவசமாக பெற்றிட


மாற்று மத சகோதரர்கள் திருக்குரானை அறிந்திட தொடர்பு கொள்ளவும்





அதிரையில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்


அதிரையில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

சிறப்புரை
M.A.பக்கீர் முஹம்மது அல்தாபி
தலைப்பு :நபிவழியை மறந்தோரே நரகத்தை அஞ்சிடுவீர்
யாசர் அரஃபாத் இம்தாதி
தலைப்பு :இஸ்லாத்தில் இளைஞர்களின் பங்கு

நாள் :15.02.13






Monday, February 04, 2013

விஸ்வரூபம் அடுத்து என்ன? - விழிப்புணர்வு பிரச்சாரம்

சென்னையில் மண்ணடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சகோதரர் பிஜே அவர்கள் 'விஸ்வரூபம் அடுத்தது என்ன?' என்ற தலைப்பில் உரையாற்றிய சொற்பொழிவு, தக்வா பள்ளி அருகில் ஒளிப்பரப்பப்பட்டது.





அதிரையில் விஸ்வரூபம் திரைப்படத்தை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர்

அதிரையில் விஸ்வரூபம் திரைப்படத்தை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர்




தரகர் தெருவில் நடைபெற்ற பெண்கள் பயான்

தரகர் தெருவில் நடைபெற்ற பெண்கள் பயான்

கடந்த 26.01.2013 அன்று தரகர் தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் அன்வர் அலி அவர்கள் உரையாற்றினார்.

இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.





Saturday, February 02, 2013

இஜ்மா மார்க்கத்தின் ஆதாரம் ஆகுமா ?(வீடியோ)

இஜ்மா  மார்க்கத்தின் ஆதாரம் ஆகுமா ?
இன்று 02.02.13 திருச்சியில் பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களுக்கும் ,ஷைஃபுதீன் ரஷாதி அவர்களுக்கும் நடை பெற்ற விவாதம்


 

ஏழரை லட்சத்திற்கு மேல் உறுப்பினர்களை கொண்ட அமைப்பு தவ்ஹீத் ஜமாஅத் – தமிழக முதல்வர் பேட்டி!


தவ்ஹீத் ஜமாத் 7.5 லட்சம் உறுப்பினர்களை கொண்ட பரந்து விரிந்த அமைப்பு தமிழக முதல்வர் ஜெயலலிதா  விஸ்ரூபம் திரைபடம் சம்பந்தமான பிரச்சினை பற்றி பேட்டி அளிக்கும் போது குறிப்பிட்டார்.

அல்ஹம்துலில்லாஹ்.

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 01.02.13(வீடியோ )



அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 01.02.13
உரை :சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி
இஸ்லாம் தீவிரவாதத்தை ஏற்கிறதா ?





Friday, February 01, 2013

புதிய தலைமுறை டிவி "அக்னி பரீட்சை" நிகழ்ச்சியில் TNTJ மாநில தலைவர்


விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக பிற மதத்தவர்களாலும் சினிமா ரசிகர்களாலும் எழுப்பப்படும் பல தரப்பட்ட கேள்விகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவரின் பதில்கள்..

இன்ஷா அல்லாஹ் , நாளை(02.02.2013) இரவு இந்திய நேரம் 8 மணிக்கு புதிய தலைமுறை டிவியில், "அக்னி பரீட்சை" நிகழ்ச்சியில் TNTJ மாநில தலைவர் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு பதிலளிக்கும் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சி காணத் தவறாதீர்கள்....

இந்நிகழ்ச்சி இந்திய நேரம் இரவு 11 மணிக்கு மறுஒளிபரப்பு செய்யப்படும்.

அமீரக (UAE) நேரம் - மாலை 6.30 மணி
சவுதி நேரம் - மாலை 5.30 மணி