Wednesday, November 19, 2014

கடற்கரைத்தெருவில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

இன்று இஷா தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு பெண்கள் மார்க்கட் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கந்தூரிக்கு எதிரான தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது இதில் மாவட்ட பேச்சாளர் அன்வர் அலி இஸ்லாத்தில் இல்லாத சமாதி வழிப்பாடு என்ற தலைப்பிலும் மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அன்பான அழைப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்  இதில் பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்துக்கொண்டும் ஆண்கள் பிரச்சாரம் நடைபெறும் இடத்தில் வந்து பயானை கேட்டனர் அல்ஹம்துலில்லாஹ்










பெண்கள் பயான் நிகழ்ச்சியில் திருக்குர்ஆன் தமிழாக்கம் பரிசளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் வாரத்தோறும்  வெள்ளிக்கிழமை நடைபெறும் பெண்கள் பயான் நிகழ்ச்சியில் தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதிலளித்தவர்கள் 13 சகோதரிகளுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் கிளைசார்பாக வழங்கப்பட்டது

அதிரையில் சமாதி வழிபாட்டிற்கு எதிரான தெருமுனை பிரச்சாரம்



அதிராம்பட்டினத்தில் இன்று (19.11.2014) புதன்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு சரியாக 7.45 மணிக்கு சமாதி வழிப்பாட்டிற்கு எதிரான தெருமுனைப்பிரச்சாரம் கடற்கரைத்தெரு பெண்கள் மார்கட் அருகில் நடைபெற உள்ளது இதில் மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி மற்றும் மாவட்ட பேச்சாளர் அன்வர் அலி ஆகியோர் சிறப்பரையற்ற உள்ளனர் அனைவரும் இந்த தெருமுனைப்பிரச்சாரத்தில் கலந்துக்கொள்ளுமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக உங்களை அன்புடன் அழைக்கிறோம்

Sunday, November 16, 2014

தீவிரவாதத்திற்கு எதிராக மனித சங்கிலி அணிவகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் மாநிலம் முழுவதும் அக்டோபர்-15 முதல் நவம்பர்-15 வரை "தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரம்" நடைபெற்று வருகிறது.

இதன் கடைசிகட்ட பிரச்சாரமான தஞ்சை தெற்கு மாவட்ட சார்பாக இரண்டு இடங்களில் மனித சங்கிலி அணிவகுப்பு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது இதில் தஞ்சை மற்றும் அதை சுற்றியுள்ள கிளைகளின் சார்பாக தஞ்சையிலும் அதிரை, புதுப்பட்டிணம், மல்லிப்பட்டினம், சம்பை, முடச்சிக்காடு, பேராவூரணி ஆகிய கிளைகளின் சார்பாக பேராவூரணியில் நடத்துவது என முடிவு செய்ததன் அடிப்பிடையில் இன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட தலைவர் சம்பை சாதிக் பாஷா தலைமையில்  பேராவூரணியில் மனித சங்கிலி அணிவகுப்பு நடைபெற்றது இதில் மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி சிறப்புரை நிகழ்த்தினார்கள் இதில் அதிரை உட்பட பல பகுதிகளிலும் இருந்து பெண்கள் உட்பட பல கலந்துக்கொண்டார்கள்



அதிரையில் தீவிரவாதத்திற்கு எதிராக பிராசாரம் !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் மாநிலம் முழுவதும் அக்டோபர்-15 முதல் நவம்பர்-15 வரை "தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரம்" நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியான நேற்று (15.11.2014) சனிக்கிழமை மாலை 5.00 முதல் 7.00 வரை அதிரை பேரூந்து நிலையம் அருகில் தீவிரவாதத்திற்கு எதிராக தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது இதில் இஸ்லாமும் மனித நேயமும் என்ற தலைப்பில்  மாவட்ட பேச்சாளர் அன்வர் அலி அவர்களும் இஸ்லாம் தீவிர வாதத்தை ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்ற தலைப்பில் மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி ஆகியோர் சிறப்பரையாற்றினார்கள் 



Friday, November 14, 2014

Sunday, November 09, 2014

கொள்கையற்ற தாருத் தவ்ஹீத் அமைப்பினரை திக்குமுக்காட வைத்த விவாத வீடியோ

கொள்கையற்ற தாருத் தவ்ஹீத் அமைப்பினரை திக்குமுக்காட வைத்த விவாத வீடியோ
















கொள்கையைற்றவர்கள் யார்?

பாகம்-1

பாகம்-2

பாகம்-3

பாகம்-4

பாகம்-5

பாகம்-6

பாகம்-7

பாகம்-8

பாகம்-9

பாகம்-10

பாகம்-11

பாகம்-12

விவாதத்தின் அனைத்து பாகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

தொடர்புடைய பதிவுகள்:

Saturday, November 08, 2014

ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும், பின்பற்ற கூடாது என்று தங்களுக்குள் விவாதம் செய்து கொண்ட தாருத் தவ்ஹீத் அமைப்பினர்!

ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும், பின்பற்ற கூடாது என்று தங்களுக்குள் விவாதம் செய்து கொண்ட தாருத் தவ்ஹீத் அமைப்பினர்!




கீழே உள்ள வீடியோவை முதலில் பார்த்து விட்டு, பின்னர் வீடியோவிற்கு கீழ் உள்ள விளக்கத்தை படியுங்கள்



மேலே உள்ள வீடியோவில் லபீலில் முமினின் என்று சொல்லி ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்கிறார், ஜமீல் அவர்கள் குர்ஆன் ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம், முன்றாவதாக எதுவும் கிடையாது என்கிறார். இவர்கள் இருவரும் வேறு வேறு தரப்பில் விவாதம் செய்பவர்கள் அல்ல. தாருத் தவ்ஹீத் என்ற கொள்கையில்லாத சிகமணிகளால் தாருத் தவ்ஹீத் அமைப்பு கொள்கை இருக்கிறது என்று காட்ட தாருத் தவ்ஹீத் செயலாளர் ஜமீல் அவர்கள் இலங்கை சென்று தேடிப்பிடித்து கொண்டு வரப்பட்ட அர்ஹம் மௌலவி. 

ஒரு பக்கம் குர்ஆன் ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்று ஜமீல் சொல்ல, அர்ஹம் மௌலலி ஸஹாபாக்களை பின்பற்றதவர்கள் சொர்க்கம் சொல்ல முடியாது என்கிறார். 

இதை பார்த்து உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்வது என்பதா? அல்லது சொந்த காசில் சூனியம் வைப்பது என்பதா?


இந்த லட்சணத்தில் கொள்கை இருக்கு என்று தம்பட்டம் வேறு!

Friday, November 07, 2014

தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை கிடையாது என்பதற்கு ஆதாரம் கொண்டு வந்த கொள்கையில்லாத தாருத் தவ்ஹீத் - அதிரையில் நடைபெற்ற பரபரப்பான விவாதம்

தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை கிடையாது என்பதற்கு ஆதாரம் கொண்டு வந்த கொள்கையில்லாத தாருத் தவ்ஹீத் - அதிரையில் நடைபெற்ற பரபரப்பான விவாதம்

தாருத் தவ்ஹீத் என்ற கொள்கையற்ற) அமைப்பின் சார்பாக விவாதத்தில் கலந்து கொண்டவர்கள் (இடமிருந்து வலது, முதலாம் நபர் (தமுமுக, மனித நேய மக்கள் கட்சியின் அதிரை கிளை பொறுப்பாளர், இரண்டாம் நபர்: தாருத் தவ்ஹீத் அமைப்பின் செயலாளர் ஜமீல், முன்றாம் நபர்: அப்துல் ஹமீத் - பாக்கர் அமைப்பின் மாநில செயலாளர், நான்காம் நபர்: லாபித் - இலங்கை அன்சார் தப்புலிக்கியின் மாணவர், நான்காம் நபர்: அர்ஹம் - இலங்கைக்கார், ஜந்தாம் நபர்: ஜமாலுதீன் - தாருத் தவ்ஹீத் அமைப்பின் பொருலாளர். கடைசி நபர்: நிஜாமுதீன் - தாருத் தவ்ஹீத் அமைப்பின் பொருலாளர்).
கடந்த மாதம் 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் அதிராம்பட்டிணம் பவித்ரா திருமண மண்டபத்தில் 'கொள்கையற்றோர் யார்?' என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் தாருத் தவ்ஹீத் என்ற கொள்கையற்ற அமைப்பிற்கும் விவாதம் நடைபெற்றது. 


தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை கிடையாது என்பதற்கு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஆதாரங்களை முன்வைப்பதற்கு முன்பாகவே, தாருத் தவ்ஹீத் அமைப்பிற் கொள்கை கிடையாது என்பதற்கு தாருத் தவ்ஹீத் அமைப்பினரே பகிரங்க ஆதாரம் கொண்டு வந்து இருந்தனர். ஆம், தாருத் தவ்ஹீத் என்ற கொள்கையற்ற அமைப்பின் சார்பாக விவாதம் செய்ய அழைத்து வரபட்டவர்களே, தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை கிடையாது என்பதற்கு ஆதாரமாக இருந்தது.


தாருத் தவ்ஹீத் என்ற அமைப்பின் சார்பாக விவாதத்தில் கலந்து கொண்டவர்கள்:

1. அதிரை ஜமீல் (தாருத் தவ்ஹீத் அமைப்பின் செயலாளர்)
2. அதிரை நிஜாமுதீன் (தாருத் தவ்ஹீத் அமைப்பின் பொருலாளர்)
3. அதிரை ஜமாலுதீன் 
4. அப்துல் ஹமீத் (சென்னை)
5. இலங்கை அர்ஹம் மௌலவி - எஸ்எல்டீஜே அமைப்புடன் விவாதம் செய்ய ஒப்பந்தம் போட்டு விட்டு, விவாதம் செய்ய வராமல் ஓட்டம் எடுத்தவர்
6. இலங்கை ஸாபித் 

தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பாக விவாதம் செய்ய வந்தவர்களை பற்றி ஒரு சிறிய அறிமுகம் செய்ய வேண்டியது இங்கு அவசியம்.

அதிரை ஜமாலுதீன்:

அதிரை ஜமாலுதீன் என்பவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் துபாய் மண்டல தலைவராக இருந்தவர். பாக்கர் பெண் லீலைகள் காரணமாக தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து தூக்கி விசப்பட்டவுடன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாக்கர் கண்ட புது அமைப்பில் சேர்ந்தவர். அதிரை ஐமாலுதீன் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்த நேரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சூனியம் இல்லை என்று தான் சொன்னது, குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்க கூடாது, கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருட வருடம் ஜக்காத் கொடுக்க தேவையில்லை போன்ற விஷயங்கள் இவர் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையாக இருந்தது. தவ்ஹீத் ஜமாஅத்தில் இவர் இருக்கும் போது இவர் நடித்துக்கொண்டு இருந்துள்ளார் என்பது இப்போது தெளிவாகிறது. இவர் பாக்கர் இயக்கம் மடிந்த பின்னர் அதிரை ஆல் முஹல்லா, ஹல்வா முஹல்லா, லட்டு முஹல்லா என்று பல பல இயக்கங்கள் ஆரம்பித்து அவையும் அழிந்த பின்னர் தாருத் தவ்ஹீத் என்ற அமைப்பில் மிக சமீபத்தில் தஞ்சம் புகுந்தவர். 

அப்துல் ஹமீத் (சென்னை):

இவரும் பாக்கர் மீது தொடர் பெண் குற்றச்சாட்டுகளால் தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து தூக்கி எறிப்பட்ட போது, பாக்கர் கண்ட புரட்சி இயக்கத்தில் இருந்தவர் (இடையில் பாக்கரை விட்டும் பிரிந்து விட்டார்). இவர் தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர். இவர் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்ககூடாது என்ற கொள்கையில் உள்ளவர். இவர் குர்ஆனுடன் முரண்படும் ஹதீஸ்களை ஏற்க்கூடாது என்று பேசிய வீடியோ ஆதாரத்தை நாம் கடந்த ரமலான் மாததத்தில் நமது தளத்தில் எடுத்துகாட்டினோம். இன்று வரை பதில் இல்லை. 

இலங்கை அர்ஹம் மௌலவி:

இலங்கையை சார்ந்த அர்ஹம் மௌலவி என்பவர் இதுவரை அதிரை எட்டிகூட பார்க்காதவர். இலங்கை உள்ள எஸ்எல்டீஜே அமைப்புடன் விவாதம் செய்ய ஒப்பந்தம் செய்து விட்டு ஒட்டம் எடுத்தவர். இவரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் இலங்கைக்கு சென்று இப்படி ஒரு விவாதத்தில் நாங்கள் மாட்டிவிட்டோம் என்று கொஞ்சி அழைத்து வரப்பட்டவர். இவருக்கு தாருத் தவ்ஹீத் என்ற அமைப்பை பற்றி இதற்கு முன்னர் கேள்வி கூட பட்டு இருக்க மாட்டார். ஒருவர் என்ன கொள்கையில் உள்ளார்கள் என்றே தெரியாமல் பறந்து வந்துள்ளார் அர்ஹம் என்பவர்.  என்ன அமைப்பு என்றே தெரியாமல் அவர்களுக்கு கொள்கை உள்ளது என்று கூவா வந்துள்ளர் அர்ஹம்.

இலங்கை ஸாபித்:

இவரும் இலங்கையில் இருந்து பிடித்து வரப்பட்டவர். இவருக்கும் தாருத் தவ்ஹீத் அமைப்பு என்ன கொள்கையில் உள்ளது என்று கூட தெரியாமல் வந்தவர். 

தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை எங்கே?

ஒரு அமைப்பிற்கு கொள்கை இருக்க இல்லையா? என்பதை அந்த அமைப்பில் பொறுப்பில் உள்ளவர்கள் பேசி நிருபிக்க வேண்டும். தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை இருக்கு என்பதற்கு இலங்கையில் இருந்தும் சென்னையில் இருந்தும் பிடித்து வரப்பட்டவர்கள் பேசியதே தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை இல்லை என்பதற்கு போதுமான ஆதாரம். அவர்களுக்கு கொள்கை இல்லை என்பதற்கு அவர்களே ஆதாரம் கொண்டு வந்து, தவ்ஹீத் ஜமாஅத் கஷ்டம் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்திற்கு கொள்கை இருக்கா?

தவ்ஹீத் ஜமாஅத்திற்கு கொள்கை கிடையாது என்பதற்கு எந்த ஒரு சான்றையும் தாருத் தவ்ஹீத் தரப்பு முன்வைக்கவில்லை. தவ்ஹீத் ஜமாஅத்திற்கு கொள்கை கிடையாது என்றால் அதன் எதிரிகள் கூட சிரிப்பார்கள். தவ்ஹீத் ஜமாஅத்திற்கு நேரத்திற்கு இடத்திற்கும் தகுந்தாற்போல் நிறம் மாறும் தன்மை இருந்தால், தாருத் தவ்ஹீத் மேடையிலேயே பேசி இருக்கும். கொள்கையில் உறுதியாக இருப்பதால் தவ்ஹீத் ஜமாஅத் இந்த அளவுக்கு எதிர்க்கப்படுகிறது.

தாருத் தவ்ஹீத் அமைப்பு பெரும்பாலான விஷயங்களில் TNTJ வை ஆதரிக்கக்கூடிய அமைப்பு - தாருத் தவ்ஹீத் அமைப்பின் செயலாளர் அதிரடி:

தவ்ஹீத் ஜமாஅத் கொள்கையற்றவர்கள் என்பதற்கு எந்த ஆதாரத்தை முன்வைக்காதது மட்டுமல்லாது, தாருத் தவ்ஹீத் அமைப்பு பெரும்பாலான விஷயங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை ஆதரிக்க கூடியது என்று ஒரு குண்டை போட்டார் தாருத் தவ்ஹீத் அமைப்பின் செயலாளர் ஜமீல் அவர்கள். அதன் வீடியோவை இங்கே காணவும். இவ்வாறு சொன்னவுடன் விவாதத்தில் பத்து கேள்வி கேட்டுவிட்டோம், பத்தெம்பது கேள்வி கேட்டுவிட்டோம் என்று காமெடி பண்ணிய பாக்கரின் ஆதாரவாளர் என்ன புலம்பி இருப்பாரே! 

ஏட்டுச் சுரைக்காய் கரிக்கு உதவாது!

கொள்கையில்லாத தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பாக விவாதிக்க வந்த ஒவ்வோருவரும் மற்றவருக்கு பதிலடி கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். எங்களுக்கு கொள்கை இருக்கிறது எங்களுக்கு கொள்கை இருக்கிறது என்று அவர்கள் கூவினாலும், அது ஏட்டுக்சுரைக்காயாகவும் வீடியோ சுரைக்காயாகவும் தான் இருக்கும்.  அவர்களின் விவாதம் செய்ய வந்த ஒவ்வோருவருக்கும் ஒவ்வோரு கொள்கை என்று அவர்களுக்கோ நன்றாக தெரியும். ஒரு பத்து மார்க்க விஷயங்களை முன்வைத்து, இதற்கு தாருத் தவ்ஹீத் அமைப்பின் கொள்கை என்ன என்று விளக்கி எல்லா தாருத் தவ்ஹீத் நிர்வாகிகளும் கையெப்பம் இட்டு மக்களுக்கு விளக்குங்கள் என்று ஒரு சவாலை நாம் முன்வைத்தால், அதற்கு அவர்களால் பதில் தர முடியாது.

சூனியம் இருக்க இல்லையா? நீங்க முதலில் ஓரு முடிவுக்கு வாருங்கள்

சூனியத்திற்கு எதிராக இருப்பதாக தாருத் தவ்ஹீத் செயலாளர் சொல்லுகிறார், அவருக்கு பதிலடி தருகிறார் ஜமாலுதீன். யார் சொல்லுவதை பா நாங்க கேட்க. முதலில் உங்களுக்குள் ஒரு விவாதம் வைக்கக்கூடாதா?



குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்க வேண்டுமா? ஏற்க கூடாதா? நீங்கள் முதலில் ஒரு முடிவுக்கு வாருங்க செயலாளர் சார்!

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்க வேண்டும் என்கிறார் தாருத் தவ்ஹீத் செயலாளர் ஜமீல் அவர்கள், அவருக்கு கவுண்டர் கொடுத்து குர்ஆனோடு முரண்படும் ஹதீஸ்களை ஏற்க கூடாது என்கிறார் தாருத் தவ்ஹீத் அமைப்பால் விவாதம் செய்ய அழைத்து வரப்பட்ட அப்துல் ஹமீது. யார் சொல்லுவதை பா நாங்க கேட்க? உங்களுக்கு கொள்கை இருக்கிறது என்று எப்படி வெட்கம் இல்லாமல் உங்களால் பேச முடிகிறது?

குர்ஆனுடன் மோதும் ஹதீஸ்களை ஏற்க வேண்டும் என்று சொல்லும் தாருத் தவ்ஹீத் செயலாளர் ஜமீல் - http://www.tubechop.com/watch/3886865

குர்ஆனுடன் மோதும் ஹதீஸ்களை ஏற்ககூடாது என்று சொல்லும் தாருத் தவ்ஹீத் அமைப்பால் அழைத்து வரப்பட்ட அறிஞர் அப்துல் ஹமீது - http://www.tubechop.com/watch/3338372

கொள்கை இல்லை என்பதை ஹாஜி அமீரும் ஏற்றுக்கொண்டாரோ!

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட லாபித்  மற்றும் அர்ஹம் போன்றவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் வழிகேடர்கள் என்று ஒரு பக்கம் சொல்ல, ஜமீல் மற்றும் ஜமாலுதீன் நாங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை பெரும்பாலும் ஆதரிக்கக்கூடியவர்கள் என்று அவர்களுக்கு பதிலடி தந்தார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பதில் கூட உடன்பாடு இல்லை!

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட லாபித்  மற்றும் அர்ஹம் போன்றவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் வழிகேடர்கள் என்று ஒரு பக்கம் சொல்ல, ஜமீல் மற்றும் ஜமாலுதீன் நாங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை பெரும்பாலும் ஆதரிக்கக்கூடியவர்கள் என்று அவர்களுக்கு பதிலடி தந்தார்கள்.

ஆணவம் வேண்டாம்!

இன்றைய தவ்ஹீத் ஜமாஅத் முக்கயஸ்தர்களால் நிர்வாகிக்க்பட்ட இயக்கங்களில் ஜமீல் அவர்கள் இருந்த போது, ஜமீல் அவர்களுக்கே உரிய ஆணவ போக்கினால் அவருக்கு எந்த பொருப்பும் தரப்படவில்லை என்பதை விவாதத்தில் எடுத்துக்காட்டப்பட்டது. அதற்கு ஜமீல் அவர்கள் மௌனத்தையே பதிலாக தந்தார். தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை இல்லை ஜமீல் அவர்களுக்கே நன்றாக தெரியும். இருந்த போதிலும் நான் நடத்தும் இயக்கத்தை கொள்கையற்றவர்கள் என்று சொல்லிவிட்டார்களே, எனது இமோஜ எப்படி விட்டுத்தருவது என்று ஆணவம் தான் அவரை விவாதம் அளவுக்கு வந்து, இப்படி அசிங்கப்பட வைத்துள்ளது.

விவாதம் செய்ய வந்தது தாருத் தவ்ஹீத்தா? தமுமுகவா?

விவாதம் செய்ய வந்தது தாருத் தவ்ஹீத் அமைப்பா? அல்லது தமுமுவவா? என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு தாருத் தவ்ஹீத் தரப்பின் சார்பாக நடுவர், பார்வையாளர்களில் நான்கில் முன்று பகுதியினர், தமுமுக முன்னால் மற்றும் இன்றைய தஞ்சை மாவட்ட செயலாளர்கள், தமுமுகவின் கிளை நிர்வாகிகள், தமுமுகவின் நேரடி மற்றும் மறைமுக ஆதரவாளர்கள் என் அனைத்து தமுமுகவினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதிரை தாருத் தவ்ஹீதிற்கு கொள்கை இருக்கு என்று காட்ட உலகம் சுற்றிய வாலிபர்கள்:

தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை இருக்கு என்று காட்ட தாருத் தவ்ஹீத் அமைப்பினர் நாடு கடந்து, ஊர் ஊராக சுற்றி இறுதியாக சென்னையில் இருந்து அப்துல் ஹமீது என்பவரையும், இலங்கையிலிருந்து தாருத் தவ்ஹீத் என்றால் என்னவேன்றே தெரியாத இருவரையும் பிடித்து வந்தார்கள். பாவம் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். இல்லாத கொள்கையை எங்கே போய் தேடினாலும் கிடைக்குமா என்ன?

திருடும் நிருபர்களின் காமெடி:

பிஜே ஒரு வழிகேடர் என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு, மறுபக்கம் பிஜே கட்டுரைகளை திருடி அதை தங்களின் ஆக்கமாக காட்டி, புகழ் தேடி புகழ் போதையில் மிதக்கும் திருடும் நிருபர்கள், 'அதிரை தாருத் தவ்ஹீத் நட்சித்திரமாக மின்னியதாக காமெடி' செய்துள்ளார்கள். நான்கு நாட்கள் தாருத் தவ்ஹீத்திற்கு வக்காலத்து வாங்க அதிரைக்கு முதல் முறையாக வந்தவர்களும் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டவர்களும் விவாதத்தில் பட்ட பாடு அவர்களுக்கு தான் தெரியும். 

தவ்ஹீத் ஜமாஅத்தின் வழிகெட்ட கொள்கையில் தாருத் தவ்ஹீத் அமைப்பு:

கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருட வருடம் ஜக்காத் கொடுக்க தேவையில்லை என்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாட்டை தாருத் தவ்ஹீத் எதிர்க்கிறாதா? ஆதரிக்கறாதா? என்று கேட்டு சொல்லுங்கள். பின்னர் இது பற்றி பேசலாம். 

பேருராட்சி தலைவர் மீது அவதூறு சொல்லி கேவலப்பட்ட தாருத் தவ்ஹீத்:

அதிரை பேருராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஆதரவாக இருக்கும் காரணத்தினால், அஸ்லம் அவர்கள் எங்கே ஒரு திறப்பு விழாவில் குத்து விளக்கு ஏற்றியதாக ஒரு பொய்யான செய்தியை விவாத்தில் முன்வைத்தார்கள். தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஆதரவாளராக உள்ளவர்கள் தவறு செய்தாலும் , அதை தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பாக ஆகாது. தவ்ஹீத் ஜமாஅத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தவறு செய்தால் அதற்கு தான் தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பாகும். எனினும், அஸ்லம் பற்றி செய்தி அவதூறாகும். தாருத் தவ்ஹீத் அமைப்பு விவாதத்தில் அஸ்லம் அவர்கள் மீது குற்றம் சுமத்த இன்னுமொரு காரணமும் உண்டு. தமுமுகவினருக்கும் அஸ்லம் அவர்களுக்கும் ஆகாது, தாருத் தவ்ஹீத் கலந்து கொண்ட விவாதத்தில் பின்புலத்தில் இருந்து இயக்கியதே தமுமுக தான். அவர்களால் இந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

தாருத் தவ்ஹீத் வைத்த இந்த குற்றச்சாட்டை அறிந்த அஸ்லம் அவர்கள் விவாத மேடையிலேயே ஏறி, என் மீது நீங்கள் வைத்த குற்றச்சாட்டு பொய், அதற்கு ஆதாரம் தர வேண்டும் என்றார். அதற்கு தாருத் தவ்ஹீத் கொள்கையில்லா கூட்டத்தால் பதில் தர முடியாமல் கேவலப்பட்டு போனார்கள்.

மாற்று கொள்கை உள்ளவரை மேடை ஏற்றுவது:

தேவநாதன், டி.ரஜேந்தர் போன்றறோரை தவ்ஹீத் ஜமாஅத் மேடையில் ஏற்றியதாக தாருத் தவ்ஹீத் தரப்பு வாதம் வைத்தது. இதை செய்தது பாக்கர் தான் என்பதும், இந்த நிகழ்ச்சி நடைபெற்ற போது, தாருத் தவ்ஹீத் சார்பாக விவாதம் செய்பவர்களில் அதிரை ஜமாலுதீன் மற்றும் சென்னை அப்துல் ஹமீது ஆகியோர் தவ்ஹீத் ஜமாஅத்தில் தான் இருந்தனர். அவர்களிடம் இந்த கேள்வியை கேளுங்கள் என்று தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சொல்லப்பட்டவுடன் மவுனமே பதிலாக வந்தது. மேலும், பாக்கர் செய்த காரியத்திற்க்காக அன்றே பாக்கர் கண்டிக்கப்பட்டார் என்பதையும் தவ்ஹீத் ஜமாஅத் மேடையில் ஒரு சில தருணங்களில் (மார்க்க நிகழ்ச்சி அல்லாத) வேறு அமைப்பை சார்ந்தவர்கள் பேச அனுமதி அளிக்கப்பட்டதும், அவை இனிமேல் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதையும் விளக்கி கூறப்பட்டது.

ரதிமினாவை பற்றி வாய் திறக்காத அந்த நபர்!

ரதிமீனா பேருந்தில் ஒரு இரவு முழுவதும் ஒரு பெண்ணுடன் சல்லாபம் செய்து கொண்டு பயணித்த பாக்கர், இன்னும் பல பெண்களுடன் சல்லாப வேளைகளில் ஈடுபட்டதாக தொடர்ந்து புகார் வந்ததை தொடர்ந்து தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டு விரட்டப்பட்டார். பாக்கரின் காம சோட்டைகளை சிலர் பாக்கர் போட்ட எழும்பு துண்டிற்க்காக ஆதரித்தார்கள். அவ்வாறு ஆதரித்தவர்களில் அதிரையை சார்ந்தவர் ஒருவர் முக்கியமானவர், அவரும் தாருத் தவ்ஹீத் சார்பாக விவாதிக்க வந்து இருந்தார். பாக்கரின் கேடுகெட்ட செயல்களை பற்றி எல்லாம் கேள்வி எழுப்பப்பட்ட போது அந்த நபர் அமைதியாகவே இருந்தார்.

பாக்கர் கும்பலின் உண்மையான கொள்கை என்ன?

பாக்கரின் அதிரை பக்தர்கள் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ - புதிதாக இஸ்லாத்தை தழுவியரின் மனைவியை சூறையாடிய பாக்கர்

முழு விவாத வீடியோ விரைவில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்.

நான்கு நாட்கள் நடைபெற்ற முழு விவாத தொகுப்பை இங்கே காணலாம்.

தொடர்புடைய பதிவுகள்:

தவ்ஹீத் ஜமாஅத்தின் சூனிய சவாலும் - பொருக்கி முஜாஹித்தின் சூனிய மாணவர் முர்ஷித் அப்பாஸியின் பொய்களும், ஜால்ராக்களும்!

கொள்கையற்றவர்களால் இறக்குமதி செய்யப்பட்ட முர்ஷித் அப்பாஸிக்கு சவால் (வீடியோ)

திருகுதளம் செய்த தாருத் தவ்ஹீத் மீடியா மேஜிக்கர் நிஜாமும் - வீண் விளம்பரம் செய்யும் முர்ஷித் அப்பாஸும் அவரின் பக்தர்களும்!

பாக்கர் கும்பலின் உண்மையான கொள்கை என்ன?

பாக்கரின் அதிரை பக்தர்கள் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ - புதிதாக இஸ்லாத்தை தழுவியரின் மனைவியை சூறையாடிய பாக்கர்

அதிரையில் தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை தமிழகம் முழுவதும் தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம் தீவிரமாக நடைபெறுகிறது அதன் தொடர்ச்சியாக இன்று 6 மணிக்கு அதிரை பேரூந்து நிலையம் அருகில் அதிரை கிளைசார்பாக தீவிரவாதத்திற்கு எதிரான நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது 




Thursday, November 06, 2014

தடம் புரலாத உள்ளம் (வீடியோ)




மருத்துவ உதவி

அதிராம்பட்டினம் M S M நகரை சார்ந்த மனநல பாதிக்கப்பட்ட சிறுவனின் மருத்துவ செலவிற்காக அவரின் தாயாரிடம் அதிரை கிளைசார்பாக ரூ 6000 வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்



Wednesday, November 05, 2014

அப்பாஸ் அலி நீக்கம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் விளக்கம்

அப்பாஸ் அலி நீக்கம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் விளக்கம்

கொள்கைச் சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நம் ஜமாஅத்தில் பிரச்சாரகராக இருந்து வந்த அப்பாஸ் அலி குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் விஷயத்தில் கொள்கை முரண்பாடு கொண்டு விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

அவர் நம் ஜமாஅத்தில் இருந்து விலகியுள்ளது உண்மையாகவே வரவேற்கத்தக்கதாகத் தான் ஜமாஅத் கருதுகிறது.

அவரது செயல்பாடும் நிலைபாடும் ஜமாஅத்திற்கு உகந்ததாக இல்லை என்பதற்காக அவர் பல முறை உயர் நிலைக்குழுவில் கண்டிக்கப்பட்டுள்ளார்.

அது குறித்து சுருக்கமாக சில தகவல்களைப் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.

வெளிநாடுகளுக்கு பிரச்சாரப் பணிக்காக ஜமாஅத்தின் சார்பில் ஜமாஅத்தின் செலவில் அனுப்பப்படுவோர் எக்காரணம் கொண்டும் அங்குள்ள கிளைகளிடமோ தனி நபர்களிடமோ அன்பளிப்புகள் மற்றம் சன்மானம் பெறக் கூடாது என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. இது குறித்து 09.04.12 அன்று பகிரங்கமாகவும் ஜமாஅத் சார்பில் எல்லா மண்டலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு மண்டலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் அப்பாஸ் அலி மட்டும் இதை மீறி பெரிய அளவில் அளிக்கப்பட்ட அன்பளிப்புகளையும் பணத்தையும் பெற்று வந்தார். இது பின்னர் தெரிய வந்த போது உயர் நிலைக்குழுவிலை வைத்து கடுமையாக்க் கண்டிக்கப்பட்டு வெளிநாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தார்.

ஆன்லைன் பீஜேயில் கேள்விக்குப் பதில் அளிக்கும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக ஒரு கேள்விக்கு இவ்வளவு என்று ஊக்கத் தொகையும் அளிக்கப்பட்டது. இதில் ஏற்கனவே பதில் கொடுக்கப்பட்ட பல கேள்விகளுக்கு மீண்டும் பொய்யான கணக்குக் காட்டி பணம் பெற முயற்சிக்கும் போது அதை சைய்யத் இப்ராஹீம் சுட்டிக்காட்டியதுடன் நிர்வாகக்குழுவில் கடுமையாகக் கண்டிக்கப்பட்டார்.

இதுபோன்று நெல்லையிலிருந்து சென்னைக்கு ஜுமுஆ உரை நிகழ்த்த வந்த போது ஜுமுஆ செய்த கிளையில் போக்குவரத்துப் பணம் பெற்ற பின் மாநிலத் தலைமையில் போக்குவரத்துச் செலவு கேட்ட போது மாநிலச் செயலாளர் சாதிக் அப்பாஸ் அலியிடம் ‘ உங்களுக்கு அந்தக் கிளையிலேயே பணம் கொடுத்திருப்பார்களே எனக் கேட்ட பின் சுதாரித்து பணம் வேண்டாம் எனக் கூறினார். இதற்காகவும் நிர்வாகக்குழுவில் கண்டிக்கப்பட்டார். இதில் இருந்து அவர் பணத்துக்காக எதையும் செய்யும் தன்மையைப் புரிந்து கொள்ளலாம்

பிஜே அவர்கள் இது குறித்து அவருக்கு அறிவுரை கூறினார்.இப்படி நடந்து கொண்டதை அவரும் உணர்ந்து வருத்தம் தெரிவித்தார்,

இவரது இந்தப் பணத்தாசை இவரைக் கொள்கையை விட்டு வெளியேற்றி விடும் என்று நிர்வாக குழுவில் ஆலோசனை செய்யும் அளவுக்கு இவரது நிலை இருந்தது.

இவர் பண விஷயத்தில் சரியாக இல்லை என்பதால் வெளிநாட்டு மண்டலங்களுக்கு மீண்டும் பழைய சுற்றறிக்கை அனுப்பப்பட்டதுடன் உணர்விலும் போடப்பட்டது.

ஆனால் இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு பத்து நாட்களுக்கு முன் சவூதிக்கு பிரச்சாரம் செய்ய அனுப்பப்பட்டவர் இப்போதும் ஜமாஅத் நிலைபாட்டை மீறி அன்பளிப்புகள் பெற்று வந்துள்ளார்,

இது குறித்து ஜமாஅத் விசாரிக்கும் என்பதற்காக அவர் அவசரமாக இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என்று கருதுகிறோம்.

இதுபோன்ற காரணங்களினால் அவர் வெளியேற வேண்டியவர் தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. .

அடுத்ததாக ஜமாஅத்தின் அடிப்படைக் கொள்கைக்கு மாற்றமாக தனிப்பட்ட நபர்களிடம் இவர் பேசியுள்ளார் என்ற விபரம் தெரிய வந்து 12.11.2013 அன்று இது குறித்து பேசுவதற்காக உயர் நிலைக் குழு கூட்டப்பட்டது.

தர்கா வழிபாட்டுக்காரர்களும் மத்ஹபு வழிபாட்டுக்காரர்களும் செய்வதை நாம் விமர்சிக்கக் கூடாது. அவர்கள் கூறுவதற்கும் ஆதாரம் உண்டு எனக் கூறினார். உயர்நிலைக் குழுவில் இருந்த ஒவ்வொருவருக்கும் இது அதிர்ச்சியாக இருந்தது.

ஒரு ஹதீஸ் பற்றி பேசும் போது பீஜே அவர்களிடம் இதைப் பலவீனமாக ஆக்கிவிடுவோமா என்று அப்பாஸ் அலி கேட்டார். பலவீனமான ஹதீஸை பலவீனம் என்று சொல்வது வேறு. சரியான ஹதீஸைப் பலவீனமாக்குவோமா என்று கேட்பது வேறு என்று பீஜே அவர்கள் அதைக் கண்டித்த விபரத்தையும் சபையில் அம்பலப்படுத்தினார்.

நமக்கு பதில் சொல்ல முடியாவிட்டால் பலவீனமாக்கி விடுவோமா என்ற கேட்டவர் தற்போது இறை அச்சத்தைக் காரணம் காட்டியுள்ளார். இவர் எந்த ஆதாயத்துக்காக மாறினார் என்பதையும் யாருடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதையும் விரைவில் அறிந்து கொள்வீர்கள் இன்ஷா அல்லாஹ்.

உயர்நிலைக்குழுவில் இருந்த ஒவ்வொருவரும் இதைக் கடுமையாகக் கண்டித்தனர். ஒரு பாமரனுக்கு உள்ள கொள்கைத் தெளிவு கூட உங்களுக்கு இல்லை என்று ஆலிமல்லாத உயர் நிலைக்குழு உறுப்பினர்கள் அவரிடம் கேட்கும் அளவுக்கு எல்லா வழிகேட்டையும் நியாயப்படுத்தினார்.

எனவே நீங்கள் தெளிவு அடையும் வரை பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டார்.

மேலும் மேலாண்மைக் குழு உறுப்பினர் பொறுப்பை விட்டும் விலகுமாறு உயர் நிலைக் குழு உத்தரவிட்டு அவ்வாறு ராஜினாமா செய்தார்.

இத்தனை ஆண்டுகள் ஜமாஅத்தில் இருந்துள்ளார் என்பதால் இஸ்லாமியக் கல்லூரி ஆசிரியர் பணியிலிருந்து நீக்க வேண்டாம். வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே அகீதா அல்லாத இலக்கணம் உள்ளிட்ட பாடம் மட்டும் நடத்தட்டும் என்று மேலாண்மைக் குழுத் தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டதால் அப்போது நீக்கப்படவில்லை.

புரியாமல் இருந்து விட்டேன். எம் ஐ சுலைமான் அவர்கள் விளக்கம் சொன்ன பிறகு புரிந்து கொண்டேன். எனவே என்னைப் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துங்கள், நான் மனக்குழப்பத்தில் உண்மை அறியாமல் பேசிவிட்டேன் என்று வருத்தம் தெரிவித்தார்.பிறகு 03.03.2014 முதல் அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார்.அன்று முதல் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று சொல்லி பத்து நாட்களுக்கு முன்னர் வரை ஒரு மாதம் ரியாத் ஜித்தா தம்மாம் ஆகிய மண்டலங்களில் பிரச்சாரம் செய்த போது சூனியம் குறித்து ஜமாஅத்தின் நிலைபாட்டைப் பேசியுள்ளார்.

அதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களாக குரானுக்கு முரன்படும் செய்திகள் குறித்து ஆய்வு செய்வதாகக் கூறும் இவர் கடந்த சில மாதங்களில் குரானுக்கு முரன்படும் செய்திகள் குறித்தும் சூனியம் குறித்தும் மாவட்டங்கள் தோறும் நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சிகளில் பிரதான தலைப்பாக எடுத்து அமைப்பின் நிலைப்பாட்டையே பேசினார்.

ஆனால் தற்போது சவுதிக்குப் பயணம் செய்து வந்த பின் அமைப்பிலிருந்து விலகுவதாகவும் அமைப்பின் கொள்கை குறித்து பல மாதங்கள் ஆய்வு செய்ததாக சொல்லும் இவரது இரட்டை நிலை இவர் பணத்திற்காக எதையும் செய்வார் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

எனவே பணத்திற்காக கொள்கையை பனயம் வைக்கும் இவரது நடவடிக்கைகளும் கொள்கையிலிருந்து இவர் தடம்புரண்டதும் நிரூபனமான காரணத்தினல் அமைப்பின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார். இயக்கம் தொடர்பாக இவருடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் எனத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை அப்பாஸ் அலியின் இந்த நடவடிக்கையால் ஜமாஅத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. இவரை விட பன்மடங்கு பிரச்சாரம் செய்துவந்த ஹாமித் பக்ரி ,இணைவைப்பிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்துவிட்டு பின்னர், தான் கொண்ட கொள்கையிலிருந்து வழிகெட்டு கப்ருவணங்கியாகயாக மாறிவிட்டார். அவர் தடம்புரண்டபோது. உறுதியுள்ள கொள்கைச் சகோதரர்களிடம் இது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

அதுபோலத்தான் அப்பாஸ் அலியின் நிலையும். அப்பாஸ் அலி கொள்கை மாறிப்போனதால் அவருக்கு உலக ஆதாயம் ஏற்படலாம். ஆனால் சூனியம் குறித்தும் குர்ஆனுக்கு முரன்படும் செய்திகள் குறித்தும் மக்கள் மன்றத்தில் அவர் விளக்கமளிக்க முன்வந்தால் நமது கொள்கை சகோதரர்கள் அவருடைய கடந்த கால விளக்கங்களை வைத்தே அவரின் அசத்தியக்கொள்கையை அம்பலத்துவார்கள். இதனால் சத்தியம் மேலோங்கத்தான் செய்யும் இன்ஷாஅல்லாஹ்.

”உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே எனது உள்ளத்தை உனது மார்க்கத்தில் உறுதி ஆக்கி வைப்பாயாக்” நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனை நாமும் கேட்போமாக.

இப்படிக்கு

ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
பொதுச் செயலாளர்

யாரையும் நம்பி இந்த ஜமாத் இல்லை – அது பி.ஜெ யானாலும் சரியே!

யாரையும் நம்பி இந்த ஜமாத் இல்லை – அது பி.ஜெ யானாலும் சரியே! 

தவ்ஹீத் ஜமாத் என்ற பேரியக்கம், உலகம் முழுவதும் வியாபித்துள்ள இச்சந்தர்ப்பத்தில் சிலர் இந்த ஜமாத்தை விட்டும் வெளியேற்றப்படும் போதும், அல்லது பகட்டுக்காக விலை போனவர்கள் வெளியேறும் போதும் இந்த ஜமாத் அடியோடு அழிந்து, வீழ்ச்சி கண்டுவிடும் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் – இறைவனின் இந்த மார்க்கம் யாரையும் தங்கியில்லை, யாரையும் நம்பியும் இல்லை என்பதை இறைவன் மிகத் தெளிவாக நமக்கு பல சந்தர்பங்களில் உணர்த்தியிருக்கின்றான்.

இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் (2 : 256)

'இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளது' என்று (முஹம்மதே) கூறுவீராக! விரும்பியவர் நம்பட்டும்! விரும்பியவர் மறுக்கட்டும். அநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதி நீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம்.

அல்குர்ஆன் (18 : 29)

எவருக்கும் இந்த மார்க்கத்தில் நிர்பந்தம் கிடையாது என்பதை மேற்கண்ட வசனங்கள் உணர்த்துகின்றன.

இதே நேரத்தில் யார் இந்த மார்க்கத்தினை விட்டு வெளியேறினாலும் அதனால் இஸ்லாத்திற்கு எவ்வித நஷ்டங்களும் ஏற்படாது என்பதை கீழுள்ள இன்னும் சில வசனங்களில் இருந்தும் நாம் புரிந்து கொள்ள முடியும்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள்.

அல்குர்ஆன் (5 : 54)

அவ்வப்போது இந்த ஜமாத்தை விட்டு சிலர் நீக்கப்படுவது என்பது ஜமாத்தின் வளர்ச்சிப் பாதையில் புதிதான ஒன்றல்ல.

ஜமாத்தின் மிகப் பெரும் பேச்சாளராக இருந்த ஹாமித் பக்கி நீக்கப்பட்டார். – ஹாமித் பக்ரி அவர்கள் இக்கொள்கையை விட்டும் வெளியேறும் போது 'தவ்ஹீத் ஜமாத் வழிகேட்டில் பயனிக்கின்றது, பி.ஜெ என்ற ஒருவர் சொல்வதைக் கேட்டுத் தான் நாங்கள் இவ்வளவு நாட்களும் இங்கிருந்தோம், இப்போது நேர்வழிக்கு வந்து விட்டோம்' என்று கூறினார்.

இருக்கும் வரை இந்த ஜமாத்தில் இருப்பதும், ஏதாவது குற்றம் செய்து மாட்டிக் கொண்டவுடன், பி.ஜெ அவர்களை காரணம் சொல்வதும் அனைத்து வழிகேடர்களும் கைக் கொண்ட ஒரு நடை முறை தான்.

 பி.ஜெ கருப்பு என்றார், நாங்களும் கருப்பு என்றோம்.

 பி.ஜெ வெள்ளை என்றார், நாங்களும் வெள்ளை என்றோம்.

 பி.ஜெ இது சரி என்றார், நாங்களும் சரி என்றோம்.

 பி.ஜெ இதனை தவறு என்றார், நாங்களும் தவறு என்றோம்.


இப்படி ஜமாத்தில் இருந்து வெளியேறியவுடன் பலரும் கருத்து சொல்வது என்பது புதிய விஷயமல்ல.

பாக்கர் வெளியேற்றப்பட்டவுடனும் இதனை சொன்னார், சைபுல்லாஹ் ஹாஜா வெளியேற்றப்பட்டவுடனும் இதனை சொன்னார், இப்போது அப்பாஸ் அலியும் இதனை சொல்லியுள்ளார்.

ஆகவே வழிகேடர்கள் வழிகேட்டின் காரணமாக வெளியேற்றப்பட்டவுடன் இந்தக் கருத்தை சொல்வது என்பது புதிதல்ல என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

காய்ச்சலுக்கு பயந்து கொள்கையை விட்டவர்கள்:

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒருவர் நபியவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். நபியவர்கள் சொல்வது தான் சத்தியம் என்பதை ஒப்புக் கொண்டார். அடுத்த நாள் அவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக கொள்கையை விட்டும் வெளியேறி காபிராகிய வரலாறுகளை நாம் ஹதீஸ்களில் பார்க்கின்றோம்.

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்பதாக உறுதிமொழி கொடுத்தார். மறு நாள் முதல் அவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டார். (இஸ்லாத்தை ஏற்கும் ஒப்பந்தத்திலிருந்து) என்னை நீக்கி விடுங்கள் என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை அதை மறுத்தார்கள். மதீனா (துருவை நீக்கித் தூய்மைபடுத்தும்) உலையைப் போன்றதாகும். அது தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றிவிடும். அதிலுள்ள நல்லவர்கள் தூய்மை பெற்றுத் திகழ்வார்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) அவர்கள்
நூல் : புகாரி (1883)

காய்ச்சலுக்கு பயந்து கொள்கையை விட்டவர்கள் நபியின் காலத்திலேயே இருக்கும் அற்பத் தனத்திற்காக நமது காலத்தில் இவர்கள் கொள்கையை விட்டும் வெளியேறி வழிகேட்டில் நுழைவது என்பது பெரிய விஷயமே அல்லவே

அதே போல் நபியவர்களின் காலத்தில் இடம் பெற்ற இன்னுமொரு சம்பவத்தை பாருங்கள்.

ஒரு மனிதர் கிறிஸ்தவராக இருந்தார். பிறகு அவர் இஸ்லாத்தைத் தழுவினார். அல்பகரா மற்றும் ஆலு இம்ரான் அத்தியாயங்களை ஓதினார். அவர் நபி (ஸல்) அவர்களுக்காக (வேத வெளிப்பாட்டை) எழுதி வந்தார். அவர் (மீண்டும்) கிரிஸ்தவராகவே மாறி விட்டார். அவர் (மக்களிடம்) முஹம்மதிற்கு நான் எழுதிக் கொடுத்ததைத் தவிர வேறெதுவும் தெரியாது என்று சொல்லி வந்தார். பிறகு அல்லாஹ் அவருக் கு மரணத்தை அளித்தான். அவரை மக்கள் புதைத்து விட்டனர். ஆனால் (மறு நாள்) அவரை பூமி துப்பி விட்டது. உடனே (கிறிஸ்தவர்கள்) இது முஹம்மது மற்றும் அவருடைய தோழர்களின் வேலை. எங்கள் தோழர் அவர்களை விட்டு ஓடிவந்து விட்டதால் அவருடைய மண்ணறையைத் தோண்டி எடுத்து அவரை வெளியே போட்டு விட்டார்கள் என்று கூறினர். அவருக்காக இன்னும் ஆழமாக ஒரு குழியைத் தோண்டினர். மீண்டும் அவரைப் பூமி வெளியே துப்பி விட்டிருந்தது. அப்போதும் இது முஹம்மது மற்றும் அவருடைய தோழர்களின் வேலை. எங்கள் தோழர் அவர்களை விட்டு ஓடிவந்து விட்டதால் அவருடைய மண்ணறையைத் தோண்டி எடுத்து அவரை வெளியே போட்டு விட்டார்கள் என்று கூறினர். மீண்டும் அவர்களால் முடிந்த அளவிற்கு குழியை ஆழமாகத் தோண்டி அதில் அவரைப் புதைத்தனர். ஆனால் அவரை பூமி மீண்டும் துப்பி விட்டிருந்தது. அப்போது தான் அது மனிதர்களின் வேலையல்ல என்று புரிந்து கொண்டார்கள். அவரை அப்படியே (வெளியிலேயே) போட்டு விட்டனர்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (3617)

நபியவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, பகராவை மனனமிட்டு, ஆலு இம்ரானை மனனமிட்டு பின்னர் மீண்டும் இஸ்லாத்தை விட்டும் வெளியெறி நபியவர்களுக்கே எதிராக செயல்பட்டு பின்னர் மரணத்தின் பின்னர் கூட இறைவன் அவனை கேவலப்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.

நபியவர்கள் உயிருடன் இருக்கும் போதே இந்நிலை ஏற்பட்டும் நேர்வழியில் இருந்த நபித் தோழர்கள் இவனின் நிலையைப் பார்த்து விட்டு தாமும் அவனுடைய வழியில் செல்லவில்லை. மாறாக தெளிவான நிலைபாட்டிலேயே அவர்கள் இறுதி வரை தூய இஸ்லாத்தின் வழியில் வாழ்ந்து மரணித்தார்கள்.

தக்லீத் வாதிகளுக்கு இந்த ஜமாத்தில் இடமில்லை என்பதே வரலாறு. 



இந்த ஜமாத்தை பொருத்த வரையில் யாரெல்லாம் பி.ஜெ சொன்னால் சரி தான் என்ற நிலையில் இருந்தார்களோ அவர்களையெல்லாம் அல்லாஹ் வழிகேட்டில் நிலையாக்கி விட்டான் என்பதே ஜமாத்தின் வரலாறாக உள்ளது.

பி.ஜெ சொன்னால் சரி என்று இந்த ஜமாத்தில் யார் இருந்தாலும் அவர்களுக்கும் இதுதான் நிலை.

தற்போது ஜமாத்தை விட்டும் வெளியேற்றப்பட்டுள்ள அப்பாஸ் அலியின் பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையே அவர் இந்த ஜமாத்திற்கு தகுதியற்றவர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

இதோ அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல் பகுதியைப் பாருங்கள். தான் இது வரை எந்த நிலையில் இருந்தார் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார். 

'சில ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை குா்ஆனுக்கு முரண்படுகின்றது என்று சகோதரர் பீஜே முதலில் கூறினார். அவர் கூறியது உண்மை என உளப்பூர்வமாக நம்பி நானும் அந்த ஹதீஸ்களை மறுத்து வந்தேன். இது தொடர்பாக ஹதீஸ்கள் குா்ஆனுக்கு முரண்படுமா? என்ற நுாலையும் நான் எழுதினே். தவ்ஹீத் ஜமாத்தில் மற்றவர்களை விட இது பற்றி நான் அதிகமாக பேசியும் எழுதியும் இருக்கிறேன்.'

பி.ஜெ சொன்னதை சரியென்று நினைத்துத் தான் அப்பாஸ் அலி இவ்வளவு காலமும் பிரச்சாரம் செய்தாராம், அதே நிலையில் இருந்துதான் புத்தகமும் எழுதினாராம். இதை கேட்டால் பொது மக்கள் ஏளனமாக சிரிப்பார்கள்.

 பி.ஜெ கருப்பு என்றால், நீங்களும் கருப்பு என்பீர்கள்?

 பி.ஜெ வெள்ளை என்றால், நீங்கள் வெள்ளை என்பீர்கள்?


இதுதான் உங்கள் நிலையாக இருந்தது என்பதை தெளிவாக இப்போது அறிவித்து விட்டீர்கள். இப்படியானவர்கள் இந்த ஜமாத்திற்கு தகுதியற்றவர்கள் என்பதை அல்லாஹ் தெளிவாக உணர்த்தி விட்டான் – அல்ஹம்து லில்லாஹ்.

கீழுள்ள திருமறை வசனத்தை சற்று உன்னிப்பாக கவனியுங்கள். இந்தக் கொள்கையை விட்டும் வழிதவறிச் சென்றவர்களின் நிலையை தெளிவாக நாம் உணர முடிகின்றது.

இறை மறுப்பிற்குரிய சொல்லை அவர்கள் கூறியிருந்தும் (அவ்வாறு) கூறவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். இஸ்லாத்தை ஏற்ற பின் மறுத்தனர். அடைய முடியாத திட்டத்தையும் தீட்டினார்கள். அவர்களை அல்லாஹ்வும், தூதரும் அவனது அருள் மூலம் செல்வந்தர்களாக ஆக்கியதற்காகத் தவிர (வேறு எதற்காகவும்) அவர்கள் குறை சொல்லித் திரியவில்லை. அவர்கள் திருந்திக் கொண்டால் அது அவர்களுக்கு நன்மையாக அமையும். அவர்கள் புறக்கணித்தால் அல்லாஹ் அவர்களை இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனைக்கு உட்படுத்துவான். பூமியில் அவர்களுக்குப் பாதுகாவலனோ உதவுபவனோ இல்லை.

அல்குர்ஆன் (9 : 74)

எங்கள் இறைவா எங்களை மரணிக்கும் வரை நேர்வழியிலேயே வைப்பாயாக!

எங்கள் இறைவா! எங்களுக்கு நேர் வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களை தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.

(அல்குர்ஆன் 03:08) 
 
                                                                                                                                                                 நன்றி : rasminmisc