Thursday, April 16, 2015

பிலால் நகரில் நடைபெற்ற பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பில் பிலால் நகரில் மர்ஹூம் அபூபக்கர் அவர்களின் இல்லத்தில் இன்று மாலை பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பேச்சாளர் அஸ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் செயலாளர் எஸ்.பி பக்கீர் முஹம்மது, தர்ஹா வழிபாடு குறித்து இஸ்லாம் கூறும் கருத்துகளை அறிமுக உரையாக நிகழ்த்தினார். கூட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

இனி வாரந்தோறும் வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க சிறப்பு சொற்பொழிவு தொடர்ந்து நடைபெறும் என கூட்டத்தில் அறிவிப்பு செய்யப்பட்டது.



0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.