Tuesday, March 30, 2010

அதிரை TNTJ வின் மருத்துவ உதவி

அதிராம்பட்டிணத்தில் ஒரு சகோதரின் மருத்துவ தேவைக்காக ரூபாய் 1000 வழங்கப்பட்டது. இதை கிளை துணைத்தலைவர் அப்துல் ஜப்பார் அவர்கள் வழங்கினார்....

Saturday, March 27, 2010

மரைக்காயர் (அக்ஸா) பள்ளி அருகில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

மரைக்காயர் (அக்ஸா) பள்ளி மற்றும் ரஹ்மானிய மதரஸா அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக 25.03.2010 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'புகழை விரும்பாத நபி (ஸல்)' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.  தனது உரையில் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு புகழை விரும்பாதவர்களாக இருந்தார்கள் என்பதை விளக்கினார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் தனக்காக யாரும் எழுந்து நிற்க கூடாது என்று கட்டளையிட்டதை எடுத்துக் காட்டினார். இன்று மார்க்க...

Thursday, March 25, 2010

ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை)

அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் போது தன்னந்தனி மனிதர்! அவர்கள் பக்கம் யாருமே இல்லை, அல்லாஹ்வைத் தவிர!  ஆனால் இன்றோ இந்தச் சமுதாயத்திற்கே அவர்கள் இமாமாக இருக்கின்றார்கள். அவர்கள் இறந்த பிறகும் கூட அவர்களே இமாம்! ஏகத்துவத்திற்கே அவர்கள் தான் இமாம்!  ஏன்? அல்லாஹ்வே தன் திருமறையில் சொல்கின்றான். இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். “உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்” என்று அவன் கூறினான். “எனது வழித் தோன்றல்களிலும் (தலைவர்களை ஆக்குவாயாக!)” என்று அவர் கேட்டார். “என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்)...

Wednesday, March 24, 2010

நக்கீரன் அலுவலகம் முற்றுகை: தவ்ஹீத் ஜமாஅத் அதிரடி அறிவிப்பு!

நான் தான் நபிகள் நாயகம் என்ற தலைப்பிட்டு மார்ச் 23-26 நக்கீரின் இதழில் வெளியான செய்தியை கண்டித்து இன்ஷா அல்லாஹ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாளை (25-3-2010) சென்னையில் உள்ள நக்கீரன் அலுவகத்தை முற்றுகையிடும்! நாள்: 25-3-2010 நேரம்: மாலை 3.30 மணி இடம்: நக்கீரன் அலுவலகம், சென்னை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் அதிரடி ஆர்ப்பாட்டத்திற்கு அணி அணியாய் வாருங்கள்! முஸ்லிம்களை சீண்டி பார்க்கும் நக்கீரனுக்கெதிரான உங்கள் கண்டனங்களை பதிவு செய்யுங்கள...

Thursday, March 18, 2010

முஹ்யித்தீன் மவ்லித் ஒரு பார்வை

தமிழக முஸ்லிம்களில் பெரும்பாலோர் மவ்லிதுகள் எனும் பாடல்களைப் புனிதமான வணக்கமாக எண்ணி ஓதி வருகின்றனர். இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமைகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய கடமைகளை நிறை வேற்றாதவர்கள் கூட இந்த மவ்லிதுகளைப் பாடுவதை மட்டும் விடாப்பிடியாக நிறைவேற்றி வருவதிலிருந்து இதை அறியலாம். மிக முக்கியமான கடமையாகக் கருதப்படும் இந்த மவ்லிதுகள் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் புனிதமானவையா? அல்லது அனுமதிக்கப்பட்டவையா? அல்லது தடை செய்யப்பட்டவையா? இது பற்றி கண்டிப்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும் எந்த ஒரு காரியமும் ஒரு வணக்கமாகக் கருதப்பட வேண்டுமானால் – அதைச் செய்வதால் மறுமையில் ஏதேனும் நன்மை கிடைக்கும் என்று...

Tuesday, March 16, 2010

தனிப்பள்ளி கட்ட மார்க்கத்தில் ஆதாரம் உண்டா?

தனியோனைத் துதித்திட தனிப்பள்ளி அவசியமே! தமிழகத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் ஆரம்பித்த நாள் முதல் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம் ஏராளம்! தாயத்து தகடுகள், தர்ஹா வழிபாடுகள், மௌலிது குப்பைகள் போன்ற இணை கற்பிக்கும் காரியங்களை எதிர்த்ததற்காகவும் மத்ஹபுப் பிரிவினைகளைக் கண்டித்ததற்காகவும் ஏகத்துவ வாதிகள் ஊர் நீக்கம் செய்யப்பட்டனர். ஏன்? தொழுகைக்குக் கூட பள்ளி வாசல்களில் தடை செய்யப்பட்டனர். நான்கு மத்ஹபுகளுக்கு மாற்றமாக தலையில் தொப்பி போடாமல், நெஞ்சில் கைகட்டி, விரலசைத்துத் தொழுபவர்கள் இப்பள்ளியில் தொழக் கூடாது; இரண்டாவது ஜமாஅத் நடத்தக் கூடாது என்றெல்லாம் ஜமாஅத்துல் உலமாவின்...

Saturday, March 13, 2010

பெரியார் தாசன் ரியாதில் இஸ்லாத்தை ஏற்றார்: அரப் நியுஸ் பத்திரிக்கையில் செய்தி!

பிரபல பேச்சாளரும் பெரியாரியவாதியுமான பேராசிரியர் பெரியார்தாசன் நேற்று (வெள்ளிக்கிழமை) இஸ்லாமிய மார்க்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டதாகவும் அவர் தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக் கொண்டதாகவும் சவூதி அரேபியாவிலிருந்து வெளியாகும் அரப் நியூஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அரப் நியுஸ் பத்திரிக்கைச் செய்தி:http://arabnews.com/saudiarabia/article29180.ece நன்றி: ததஜ இணைய தள...

பீ.ஜே சவூதியில் நுழைய தடையா? பீ.ஜே நூல்களுக்கு தடையா?

சவூதி அரேபியாவிலும் இன்னபிற அரபு நாடுகளிலும் பீஜேயின் திருக்குர்ஆன் தமிழாக்கத்துக்கு தடை! பீ.ஜே.யின் நூல்களுக்கும் தடை! சவூதி அரேபியாவில் பீ.ஜே. நுழையத் தடை! சவூதி உலமாக்கள் விவாதத்துக்கு அழைத்த போது பீ.ஜே பின் வாங்கி விட்டார்! என்றெல்லாம் சில மதனிகளும் பணத்துக்காகவே தவ்ஹீதைச் சொல்லும் போலி உலமாக்களும் மக்கள் மத்தியில் திட்டமிட்ட ஒரு பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர். இது குறித்து பல்வேறு சகோதரர்கள் விளக்கம் கேட்கும்போது தக்க விளக்கம் அளித்து வந்த போதும் அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும்...

Thursday, March 11, 2010

அதிரை AJ பள்ளி சுவர் இடிப்பு - கொதித்து எழுந்த முஸ்லிம்கள்

அதிராம்பட்டிணம் பழஞ்செட்டி தெருவில் உள்ள AJ பள்ளியின் சுற்றுப்புற சுவரை ஒரு பாஸிஸ்ட் JCB இயந்திரத்தை வைத்து நேற்று (10.03.2010) இரவு 10 மணி அளவில் இடித்து தள்ளியுள்ளான். இதனை அறிந்த முஸ்லிம்கள் AJ  பள்ளியில் திரண்டனர். உடனே, பள்ளி சுற்றுப்புற சுவரை கட்ட ஆரம்பித்தனர்.   AJ பள்ளிக்கு பக்கத்தில் வசிக்கும் பாலு என்பவன் தான் இந்த செயலை செய்தது. காவல்துறையையும் சட்டத்தையும் மதிக்காமல் இவ்வாறு செய்த பாலு என்ற ஃபாஸிஸ்ட்டு தலைமறைவாகிவிட்டன. இதன் பின்னர், இவனின் வீட்டை காவல்துறை சோதனையிட்டது. பள்ளியின் சுற்றுப்புற சுவரை உடனே, கட்டுவதற்கு காவல்துறை அனுமதி அளித்தது. பள்ளியின் சுற்றுப்புற...

Tuesday, March 09, 2010

நெசவுத்தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அதிரையின் அனைத்து பகுதிகளிலும் தெருமுனை பிரச்சாரங்களை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த 08.03.2010 அன்று அதிராம்பட்டிணம் நெசவுத் தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'வெட்கம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில்...

Monday, March 08, 2010

ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை அமல்படுத்த கோரி சென்னையில் ஜூலை 4ல் மாபெரும் மாநாடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு கடந்த 07-03-2010 ஞாயிறு அன்று மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி தலைமையில் ஈரோடு பவானி மெயின் ரோட்டில் அமைந்துள்ள கே.கே.எஸ்.கே. மஹால் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற இது மாநில மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி துவக்க உரையுடன் காலை 10.30க்கு ஆரம்பமானது. பின்னர், பெருகிவரும் ஜமாஅத்தின் பணிகள் நிமித்தமாக கூடுதலாக ஒரு துணைத்தலைவர் பொறுப்பின் அவசியத்தை மாநிலத்தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி மாநில செயற்குழு உறுப்பினர்களுக்கு விளக்கினார். கூடுதல் துணைத்தலைவர் பொறுப்பிற்கு மாநிலச் செயளாலர் கோவை ரஹ்மத்துல்லாஹ்வை...

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்