Friday, October 29, 2010

அதிரை தவ்ஹீத் ஜமாஅத்தின் கூட்டுக் குர்பானி திட்டம்

படத்தை பெரிதாக்க படத்தின் மீது கிளிக் செய்யவும...

Thursday, October 28, 2010

இறந்தவர்களுக்காக நாம் செய்ய வேண்டியது என்ன?

பாகம்-1 பாகம்-...

Tuesday, October 26, 2010

மத்ஹபுக்கு வக்காலத்து வாங்க வந்தவர் மானத்தை இழந்தார்: சென்னை 3வது விவாதம்

சென்னையில் ஷேக் அப்துல்லாஹ் சமாளியுடன் நடைபெற்ற பரபரப்பான விவாதத்தின் நேரடி தொகுப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் சுன்னத் வல் ஜமாத் ஐக்கியப் பேரவைக்கும் இடையில் கடந்த இரண்டு (23, 24.10.2010) நாட்களாக சென்னை டி நகர் தியாகராஜர் மண்டபத்தில் வைத்து பகிரங்க விவாதம் நடந்தது. இதில் சுன்னத் ஜமாத் ஐ.பேரவை சார்பாக ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களும் கலந்து கொண்டு விவாதித்தார்கள். சுன்னத் ஜமாத் ஐ.பேரவையின் நிலைபாடு : சகோதரர் பி.ஜெயின் திருக்குர்ஆன்...

Thursday, October 21, 2010

வாய்களால் ஊதி அனைக்க முடியாத சத்தியக் கொள்கை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சக்திகளும் வரிந்து கட்டிக் களமிறங்கியுள்ளனர். இது தமிழக தவ்ஹீத் வரலாற்றில் முதல் முறை அல்ல. இதற்கு முன்னரும் இவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு களமிறங்கினார்கள். திருச்சியில் இவர்கள் அனைவரும் 1990 களில் கூடி தவ்ஹீத்வாதிகளை ஊர் நீக்கம் செய்ய வேண்டும் எனவும் தவ்ஹீத்வாதிகள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்க வேண்டுமெனவும் தீர்மானங்களை நிறைவேற்றினார்கள். தவ்ஹீத் பிரச்சாரக் கூட்டங்களில் கலவரம் ஏற்படுத்தவும் தவ்ஹீத் பிரச்சாரகர்களைத் தாக்கவும் திட்டங்களை வகுத்தனர். அதன் அடிப்படையில் அனைத்து பள்ளிவாசல்களிலும் தவ்ஹீத்வாதிகள் பள்ளிக்கு வரக்கூடாது...

Tuesday, October 12, 2010

அதிரை TNTJ வின் வாழ்வாதார உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக கடந்த 29.09.2010 அன்று கடல்கரைத்தெருவில் வசிக்கும் ஏழை பெண்ணிற்கு வாழ்வாதார உதவியாக ஒரு தையல் மெஷின் வழங்கப்பட்டது. இதை கிளை நிர்வாகிகள் வழங்கினர...

ஆண் பெண் ஹஜ் செய்முறை விளக்கம் மற்றும் ஹஜ் பற்றிய முழு விபரம் வீடியோவுடன்!

வீடியோ: ஹஜ் செய்முறை விளக்கம் வீடியோ பாகம்-1 ஹஜ் செய்முறை விளக்கம் வீடியோ பாகம்-2 கட்டுரைகள்: ஹஜ்ஜின் சிறப்புகள் நபிகள் நாயகம் செய்த ஹஜ் ஓர் நேர்முக வர்ணனை! ஆண் பெண் ஹஜ் செய்யும் முறை ஹஜ் செய்வர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்! ஹஜ் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டி ஹஜ் சட்டங்கள் ஹஜ் நிறைவேற்றுவது எப்படி? ஓர் சிறு குறிப்பேடு குர்பானியின் சட்டங்கள...

இஸ்லாமிய திருமணம் - தொடர் 2

வரதட்சணை ஓர் வன் கொடுமை: ஆண்கள் தான் பெண்களுக்கு மஹர் கொடுக்க வேண்டும்; பெண்களிடம் வரதட்சணை கேட்கக் கூடாது என்று இஸ்லாம் மார்க்கம் வழிகாட்டுகிறது. இது தான் அறிவுப்பூர்வமானதும், நேர்மையானதுமான தீர்ப்பாகும். இல்லற வாழ்வில் ஆணும், பெண்ணும் இன்பம் அனுபவிக்கிறார்கள். இருவருமே ஒருவரிடமிருந்து மற்றவர் இன்பத்தை அனுபவிப்பதால் யாரும் யாருக்கும் எதனையும் கொடுக்கத் தேவையில்லை தான். ஆனாலும் இந்த இன்பத்தை அடைவதற்காக பெண்கள் தாம் அதிகமான தியாகத்தைச் செய்கின்றனர். அதிகமான சிரமங்களையும் சுமக்கின்றனர். எனவே பெண்களுக்கு ஆண்கள் கொடுப்பது தான் நீதியாகும். # ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடந்த பின் ஆண் தனது...

Saturday, October 09, 2010

தர்ஹாவில் ஹாமீத் பக்ரி!

காயல்பட்டிணத்தில் உள்ள தர்ஹா ஒன்றில் அவ்லியாவின் கப்ரில் நின்று கூட்டாக துஆ கேட்பது யார் தெரிகின்றதா?  யார் ஒரு காலத்தில் தர்ஹாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்தாரோ அதே பக்ரி தான். எப்படி இருந்த இவர் இப்படி ஆகி விட்டாரே என்று வருத்தப்படுபவர்கள் நேர்வழி பெற இவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! நன்றி: ததஜ இணையதள...

Friday, October 01, 2010

நீதி செத்துப் போனது - பாபர் மஸ்ஜித் தீர்ப்பு தொடர்பாக TNTJ வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை!

பாபர் மசூதி தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் நீதியை சாகடித்து ஆழ குழிதோண்டி புதைத்திருக்கிறது. எந்த விதமான சட்ட விதிகளையும் பின்பற்றாமல் கட்டப்பஞ்சாயத்து பாணியில் இத்தீர்ப்பு அமைந்திருக்கிறது. ஒரு இடம் யாருக்கு உரியது என்பதை முடிவு செய்ய அந்த இடத்திற்கான ஆவணத்தையும், அனுபோகத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவிலும், உலகம் முழுவதும் உள்ள சிவில் சட்டமாகும். ஆவணத்தின்படியும், அனுபோக பாத்தியதையின் அடிப்படையில் அந்த இடம் முஸ்லிம்களுக்கு உரியது என்பது உலகம் அறிந்த உண்மை. பள்ளிவாசலில் 1949ல் சிலை வைத்ததும், 1992ல் பாபர் மசூதியை இடித்து...

அரசியல்தனமான தீர்ப்பு! - தினமணி தலையங்கம்

ஒருவரின் வம்சாவளியாக வந்த இடத்தை இன்னொருவர் ஆக்கிரமித்துக் கொள்கிறார். அதில் வேறொருவர் வாடகைக்கு இருக்கிறார். அவர்தான் வீட்டுவரி உள்பட அந்த இடத்துக்கான எல்லா பங்களிப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று பிரச்னை எழுகிறது. அந்தப் பகுதியின் முக்கியஸ்தர் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கிறது. மூன்று தரப்பினரிடமும் பட்டாவோ, பத்திரமோ இல்லாத நிலையில், அந்த இடத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்ளக் கட்டைப் பஞ்சாயத்தில் முடிவாகிறது. கட்டைப் பஞ்சாயத்துக்கு இது சரி. ஆனால், நீதிமன்றத்திலும் இப்படியெல்லாம் ஒரு தீர்ப்பு எழுதப்பட முடியுமா? முடியும் என்பதை அயோத்திப்...

இஸ்லாமிய திருமணம் - தொடர் 1

மண வாழ்வின் அவசியம்: மனித வாழ்வில் தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளில் திருமணம் முக்கியமான இடத்தை வகிக்கின்றது. திருமணத்தை மறுப்பவர்கள் மிகவும் அரிதாகவே காணப்படுவதிலிருந்து மணவாழ்க்கையின் அவசியத்தை உணரலாம். மணவாழ்வு, ஆன்மீகப் பாட்டைக்கு எதிரானது என்று சில மதங்கள் கூறுவதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, திருமணத்தை அதிகமதிகம் வலியுறுத்துகிறது. உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் துறவறம் மேற்கொள்ள அனுமதி கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கோரிக்கையை நிராகரித்து விட்டனர். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி தந்திருந்தால் நாங்கள் ஆண்மை நீக்கம் செய்திருப்போம்...

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்