Sunday, May 08, 2011

வாக்காளர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் நன்றி அறிவிப்பு

சமுதாய நலன் கருதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரித்த கூட்டணிக்கு வாக்களித்த அதிரை மக்களுக்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் நன்றி தெரிவித்த வீடியோ:


Wednesday, May 04, 2011

அதிரையில் 'இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்' நிகழ்ச்சி

06.05.2011 அன்று அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் 'இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்' எனும் முஸ்லிம்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடை பெற்றது . யின்  நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டு சகோதரர் சகோதரி  கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்


ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளம்மான்னோர் கலந்து கொண்டனர்

                       எல்லா புகழும் இறைவனுக்கே




Sunday, May 01, 2011

சுவனம் செல்ல எளிய வழிகள்

தலைப்பு:
சுவனம் செல்ல எளிய வழிகள்
உரை: M.I. சுலைமான்



Friday, April 29, 2011

அல்அமீன் பள்ளி பிரச்சினையில் ததஜ ஏமாற்றியதா? - அதிரை ததஜ செயலாளரின் பேட்டி

அல்அமீன் பள்ளிவாசல் விஷயத்தில், தேர்தலுக்காக வாக்குறுதி கொடுத்துவிட்டு, தவ்ஹீத் ஜமாஅத் அரசியல்வாதிகளை போல மக்களை ஏமாற்றியதா?

கடந்த நாடாளமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல்அமீன் பள்ளி நிர்வாகத்தை அணுகியதா?

அல்அமீன் பள்ளி நிர்வாகம், ததஜவிடம் அல்அமீன் பள்ளி பிரச்சினையை ஒப்படைக்கும் பட்சத்தில், ததஜ அந்த பிரச்சினைக்காக போராட தயாரா?

இது போன்ற கேள்விகளுக்கு விளக்கம் பெற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் செயலாளர் முஹம்மது சாலிஹ் அவர்களின் நேர்காணலை காணுங்கள்.

பாகம்-1

பாகம்-2


பாகம்-3


பாகம்-4

கோடை கால பயிற்சி முகாம்

வழக்கம் போல், மாணவ மாணவியர் தங்களின் விடுமுறைகளை நல்ல வழியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை, எதிர்வரும் மே மாதம் 15 தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடத்தி இருக்கிறது. இந்த பயிற்சி முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிரை ததஜ கேட்டுக்கொள்கிறது.

பயிற்சி நடைபெறும் இடம்:
மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளி, காலேஜ் ரோடு, அதிராம்பட்டிணம்

பயிற்சி அளிப்பவர்கள்:
மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் சகோதரர் ஷிஹாபுதீன்

நாள்:
மே 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை

நேரம்:
ஆண்கள் மற்றும் சிறுவர்கள் - காலை 10 மணி முதல் 12 மணி வரை
பெண்கள்: பகல் 2 மணி முதல் 4 மணி வரை


Wednesday, April 20, 2011

பிஜே அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கம் - தற்போது ஆங்கிலாத்தில்....

சகோதரர் பிஜே அவர்கள் மொழிபெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கம் தற்போது ஆங்கில மொழியில் தற்போது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் தெரிந்த சகோதரர்கள் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பை தமிழ் மொழிபெயர்ப்புடன் ஒப்பிட்டு பார்த்து தவறு இருப்பின், அதை ஆன்லைன் பிஜே இணையதளத்திற்கு தெரியப்படுத்தவும்.


Sunday, April 10, 2011

மற்றவர்கள் விட்டிற்கு செல்லும் போது பேண வேண்டியவைகள் - ஜூம்ஆ உரை

உரை: அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி

தலைப்பு: மற்றவர்கள் விட்டிற்கு செல்லும் போது பேண வேண்டியவைகள்


Tuesday, April 05, 2011

தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைபாடு பற்றிய கேள்விகளும் பதில்களும்

 - வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க முடிவு செய்தது ஏன்?

 - இந்த முடிவு எடுக்க தக்க காரணம் உள்ளதா?

 - விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற குற்றச் சாட்டுக்கள் ஆளும் கட்சி மீது சொல்லப்படும் நிலையில் இந்த முடிவு சரியானது தானா?

 - இலவசத் திட்டங்களால் நன்மை உண்டா?

 - அதிமுகவை ஆதரிக்கும் முஸ்லிம் இயக்கங்களின் முடிவு பொது நலம் உள்ளதா?

 - முஸ்லிம் வேட்பாளர்கள் அனைவரையும் ஆதரித்தால் என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை காண:




Sunday, April 03, 2011

TNTJ வின் தேர்தல் நிலைபாடு குறித்த கேள்விகளுக்கு பிஜேவின் அதிரடி பதில்கள்

முஸ்லிம் வேட்பாளர்களை ஆதரிக்க கூடாதா? என்று போலி ஒற்றுமை கோஷம் போட்டு, முஸ்லிம் வேட்பாளர்களை தோற்கடிக்க வேலை செய்யும் உத்தமர்களின் முகத்திரையை கிழிக்கும் நேர்காணல்.


Sunday, March 27, 2011

திமுகவை ஆதரிக்க என்ன காரணம்?

அதிமுக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவேன் என திருச்சியில் ஜெயலலிதா அவர்கள் திருச்சி மேற்கு வேட்பாளர் மரியம் பிச்சையை ஆதரித்து பிரச்சாரம் செய்த செய்தி வெளியாகியுள்ளது . ஆனால் இந்தச் செய்தி வந்த பிறகும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய பொதுக்குழுவில் திமுகவிற்கு ஆதரவு என்ற நிலையை எடுத்துள்ளது. இந்த இரண்டு விசயங்களையும் நோக்கும் பொதுமக்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படும். அதாவது ஜெயலலிதா அவர்கள் தான் இடஒதுக்கீட்டை அறிவித்து விட்டார்களே! பின்பு ஏன் இவர்கள் திமுகவை ஆதரிக்கிறார்கள் என்ற கேள்வி அனைவரது மத்தியிலுமே எழும். எழவேண்டும்.

இறைவனின் மாபெரும் கிருபை:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை எந்த வியசத்தையும் தன்னிச்சையாக எடுக்கக்கூடிய தனிநபர் முடிவுக்கு வேலையே இல்லை என்பதை அனைத்து மக்களும் நன்கறிவார்கள். எங்களுக்கு 2 சீட்டு கிடைத்தால் போதும், நாங்கள் எப்படியாவது எம்எல்ஏ அல்லது எம்பியாக ஆகிவிட மாட்டோமா? அல்லது எனக்கு ஒரு வாரிய பதவியும், அவருக்கு ஒரு காரிய பதவியும் கிடைத்தால் போதுமே! காலத்துக்கும் கொண்டை விளக்கு வைத்த வண்டியிலே ஒய்யார பவனி வரலாமே என தவமாய்த் தவமிருந்து அரசியல் கட்சித் தலைவர்களிடம் அப்பாயின்மென்ட் வாங்கி சமுதாய மக்களை அடகு வைத்து அதன் மூலம் தங்கள் சுய லாபங்களைத் தீர்த்துக் கொள்ளும் சமுதாய அமைப்புகள் உள்ளன.

இவர்களுக்கு மத்தியில், எங்கள் சமுதாயத்திற்கு மட்டும் நன்மை என்ற ரீதியில் வந்தால் மட்டும் தான் ஆதரவு, மற்றபடி தலைவர்களின் தனிப்பட்ட வேறு எந்த கோரிக்கைகளுக்குமோ அல்லது அமைப்பின் தலைவர்களை தனியாகச் சந்தித்து டேபிளுக்கு கீழே அழுத்தும் வேலைகளுக்கோ துளியளவும் இடமில்லாத காரணத்தால் தான் இறைவனின் மாபெரும் கிருபையினால் இன்றைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எல்லா தரப்பு மக்கள் மத்தியிலும் ஒரு தன்னிகரற்ற இடத்தைப்பெற்றுள்ளது என்பதை மறுக்க முடியாது.

கொள்கை ரீதியாக மடித்துக்கட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்கும் யாராக இருந்தாலும் ஏதாவது சமுதாய‌ கோரிக்கை சார்பாக தவ்ஹீத் ஜமாஅத் அழைத்தால், இவர்களை நம்பி போகலாம், இவர்கள் யாருடனும் விலை போக மாட்டார்கள் என்ற ரீதியில் தவ்ஹீத் ஜமாஅத் மீது முழு நம்பிக்கை வைத்து அலைகடலென திரண்டு வருவது என்பது ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் கிடைத்த பாக்கியம் எனலாம். சமுதாயப் பணிகளை சளைக்காமலும் சுய நலமில்லாமலும் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வரப்போகும் தேர்தலையும் சமுதாயத்தின் நன்மையை முன்வைத்து எதிர்கொள்ளத் தீர்மானித்தது.

பொதுக்குழுவும் அவசர செயற்குழுவும்:

மற்ற தேர்தல்களைப் போல அல்லாமல் இந்தத் தேர்தல் கொஞ்சம் வித்தியாசமான அவசரமான தேர்தலாக மாறிப் போனது. இந்த அவசரத்தில் எப்படியாவது துண்டு போட்டு 3 சீட்டு பிடித்து விட வேண்டும் என்ற ரீதியில் இதே சிந்தனையாக, அந்த அமைப்பு சார்ந்த எந்த மக்களின் கருத்தையும் கேட்காமல் தன்னிச்சையாக மற்ற அமைப்பினர்கள் தூது விட்டுக் காத்திருக்க, இந்த அவசரத்திலும் அசராமல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழுவைக் கூட்டி மக்கள் முடிவைக் கேட்டது.

அதாவது ஆளும் திமுக இடஒதுக்கீட்டு அதிகரிப்பை இப்போதே சட்டமாக்க வேண்டும். அப்படி சட்டமாக்கினால் திமுகவை ஆதரிப்பது என்ற ஒரே முடிவு. அவ்வாறு நடைபெறா விட்டால் அதிமுக அவர்களின் தேர்தல் அறிக்கையில் சொல்ல வேண்டும். திமுக இந்தச் சட்டத்தை நிறைவேற்றாமல் அதிமுக தேர்தல் அறிக்கையில் சொன்னால் அதிமுகவை ஆதரிப்பது என்ற செயல் திட்டத்தோடு சேலம் பொதுக்குழு நிறைவுபெற்றது.

ஆனால் ஆளும் திமுகவினர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் இடஒதுக்கீட்டை அதிகரித்து சட்டமாக்காமல் சென்றதால் பொதுக்குழு முடிவுப்படி அதிமுகவை ஆதரிக்கும் செயல்திட்டத்தோடு சென்னை திநகரில் அவசர செயற்குழு கூட்டப்பட்டது. செயற்குழு அறிவித்த அந்த நேரத்தில் அதிமுக தலைமை தவ்ஹீத் ஜமாத்தோடு இந்த இடஒதுக்கீடு விசயத்தில் நெருங்கி வந்திருந்தது.

அதாவது கட்டாயமாக தேர்தல் அறிக்கையில் வெளியிடுவோம் என்ற நிலையில் இருந்தது அதிமுக தலைமை. ஆனாலும் அரசியல்வாதிகள் எப்படி வேண்டுமானாலும் அல்வா கொடுப்பார்கள் என்ற ரீதியில் அதே நிலைபாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதாவது அதிமுக இடஒதுக்கீட்டை அறிவித்தால் அவர்களுக்கு சீரிய ஆதரவு என்றும், அறிவிக்காவிட்டால் சும்மா கடமைக்கு தார்மீக ஆதரவு என்றும் செயற்குழுவில் அறிவிக்கப்பட்டது.

அதிமுகவினர் ஏற்படுத்திய நம்பிக்கை:

செயற்குழு முடிந்தும் கூட திமுகவினர் தலைமையைத் தொடர்ந்து தொடர்புகொண்ட போதும் அவர்களை நிராகரித்து அனுப்பியது தலைமை. ஆனாலும் அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தொடர்ந்து தொடர்பிலேயே இருந்தார்கள் அதிமுகவினர். தேர்தல் அறிக்கை பற்றி அவர்களிடத்திலே தொடர்ந்து கேட்கப்பட்டது. அதெல்லாம் கவலையே படாதீர்கள். உங்கள் கோரிக்கையான சமுதாய இடஒதுக்கீடு அதிகப்படுத்தும் செய்தி ஒரு எழுத்து கூட விடுபடாமல் தேர்தல் அறிக்கையில் தயாராகி விட்டது என சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ஆனாலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தன்னுடைய செயற்குழு முடிவை மூடியே வைத்து மவுனம் காத்தது.

அதிமுகவின் துரோகமும் சமுதாயக்காவலர்களின் மௌனமும்:

இந்த நிலையில் திருச்சியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்த அதிமுக தலைவர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார். ஆனால் அதில் இஸ்லாம் அல்லது முஸ்லீம் என்ற ஒரு வார்த்தை கூட இல்லாலது கண்டு கொதிப்படைந்தது தவ்ஹீத் ஜமாஅத் தலைமை. சாதரண துரோகத்தைக் கூட மன்னித்து விடலாம். ஆனால் இது பச்சை நம்பிக்கை துரோகம் என்ற ரீதியில் மீண்டும் பொதுக்குழுவைக் கூட்டி இதை மக்கள் மன்றத்தில் வைப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால் அதிமுகவை ஆதரித்தவர்களும், அவர்களிடத்திலே சீட்டு வாங்கியவர்களும் இதைப் பற்றி ஏதாவது பேசினால் நமக்கு கிடைத்த சீட்டு பறிபோய் விடும் என்ற நிலையில் வாய்மூடி மௌனியாய் இருந்ததோடு மட்டுமல்லாமல், பார்த்தீர்களா! ஜெயலலிதா திருச்சி கூட்டத்திலே இடஒதுக்கீடு குறித்து சொல்லிவிட்டார் என்ற ரீதியில் முழக்கமிடவும் துவங்கிவிட்டார்கள்.

தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு குறித்த செய்தி இல்லையென்றதும் பதறியடித்து கூட்டணியை விட்டே வெளியே வந்திருக்க வேண்டாமா? அல்லது இடஒதுக்கீடு குறித்த உங்கள் நிலையை தெளிவுபடுத்துங்கள் என அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டாமா? எங்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு கிடைத்தால் போதும் நாங்கள் வெற்றிபெற்றால் போதும் என போகிற போக்கில் காற்றுவாக்கில் சொல்கிற கோரிக்கைகளுக்கு கொடிபிடித்து அதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் இவர்களின் செயல் வெறுப்பைத் தான் ஏற்படுத்துகிறது

மீண்டும் கூடிய அவசர பொதுக்குழு:

இந்த விசயத்தில் திருப்தியடையாத‌ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உடனடியாக‌ அவசர பொதுக்குழுவைக் கூட்டியது. செய்யவே மாட்டேன் என சொல்பவனும், வாய்ப்பிருந்தால் செய்வேன் என சொல்பவனும் சமமாக மாட்டான். அதே ரீதியில் தான் திமுகவினரின் இன்றைய நிலையும், அதிமுகவினர் இன்றைய நிலையையும் மக்கள் மன்றத்திலே வைப்பது என முடிவுசெய்யப்பட்டு இந்தப் பொதுக்குழு கூட்டப்பட்டது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கும் எல்லாவற்றையும் அப்படியே காப்பியடித்து அதை இருமடங்காக்கி வழங்குவேன் என தேர்தல் அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, இடஒதுக்கீட்டு விசயத்தை மட்டும் தூக்கி தூர எறிந்தார்.

அதைப் பற்றி பேசுவதற்கோ கேட்பதற்கோ அம்மாவின் நவீன அடிமைகள் தயங்கும் போது, அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் பணிய மாட்டோம், தேர்தல் நட்பு தேர்தல் முடியும் வரை மட்டும் தான். அடுத்த நாள் அவர்களால் ஏதாவது தீங்கு ஏற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையாக களமிறங்குவோம், நமக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை, நம் ஆதரவு தான் அவர்களுக்குத் தேவை என்ற ரீதியில் இன்று வரை இயங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரு கட்சியினர் செய்த துரோகங்களையும் மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தது.

வாக்கெடுப்பும் மக்களின் தீர்ப்பும்:

இந்த இடத்தில் சமுதாயத்திற்கு அதிமுக செய்த நம்பிக்கை துரோகத்தை விட, திமுகவின் துரோகம் கொஞ்சம் குறைவு என்ற ரீதியிலும், தவ்ஹீத் ஜமாஅத்திடம் வாக்குறுதி கொடுத்து ஒட்டுமொத்த சமுதாயத்தையே ஏமாற்ற நினைத்த ஜெயலலிதாவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்ற ரீதியிலும் இரண்டு விசயங்கள் வாக்கெடுப்புக்கு வைக்கப்பட்டன.

1) இந்த தேர்தலில் நம் சமுதாயத்திற்கு யாருமே நன்மை செய்துவிடவில்லை, இரண்டு கட்சிகளுமே துரோகம் தான் செய்தார்கள். எனவே யாருக்கும் ஆதரவு இல்லை. ஜமாஅத் பெயரையும் கொடியயும் பயன்படுத்தி ய்யாருக்கும் வேலை செய்யக் கூடாது. ஆனால் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் சிந்தித்து ஓட்டளிக்கலாம்

2) திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லி இருப்பதும் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் சொல்ல மறுத்ததும் சமமானதல்ல என்பதால் திமிகவுக்கு ஆதரவு அளிப்பது

என்ற இரண்டு விசயங்கள் மக்கள் மத்தியில் வாக்கெடுப்புக்கு வைக்கப்பட்டன. மக்களுக்கு வாய்ப்பளித்து முதல் கோரிக்கை சராசரியாக 20 % வாக்குகளைப் பெற்றது. அதே போல இரண்டாவது கோரிக்கை மக்களின் ஏகோபித்த தீர்ப்பாக ஏறத்தாழ 80% வாக்குகளைப் பெற்றது.

மக்களின் ஏகோபித்த முடிவைத்தான் தலைமையே ஏற்றுக் கொள்ளும் என்ற ரீதியில் திமுக அணியை 234 தொகுதிகளிலும் ஆதரிப்பது என்ற மக்களின் முடிவை தலைமை அறிவித்தது. இது எந்த நிலையிலும் தன்னிச்சையான முடிவு அல்ல.

ஆக சமுதாயத்தைக் காட்டி ஒன்று, இரண்டு, மூன்று அதுவும் இல்லைன்னாலும் பரவாயில்லை கிடைத்ததை வாங்கிக்கொண்டு கிடையாய்க் கிடக்கிறோம், நீங்கள் தான் சமுதாய காவலர், நாங்கள் காலங்காலமாக நீங்கள் சமுதாயத்திற்கு என்ன துரோகம் செய்தாலும் கண்டுகொள்ள மாட்டோம், எங்களுக்கு 3 தாருங்கள் நாங்கள் 300க்கு உழைப்போம் என அவர்களுக்கு கொடி தூக்குவதும், இவர்களை ஆதரிக்கும் போது அவர்களைத் திட்டுவதும், அவர்கள் பக்கம் ஓடிவிட்டால் இவர்களைத் திட்டுவதும் என மோடிமஸ்தான் வேலைகளைச் செய்து எப்படியாவது தங்களை சமுதாய காவலர்களாக காட்டிக்கொள்ள துடிக்கும் சமுதாய துரோகிகளுக்கு மத்தியில் மக்கள் முடிவே அமைப்பின் முடிவு என்ற நிலையை மட்டும் கையாளும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனித்து விளங்குகின்றது. எல்லா புகழும் இறைவனுக்கே!


Saturday, March 26, 2011

சென்னையில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழு – TNTJ வின் தேர்தல் நிலைபாடு என்ன?


வரும் சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை ( 26.03.11 ) சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் மாநில மேலாண்மைக்குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா தலைமையில் நடைபெற்றது.


முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரித்துத் தருவதாக தேர்தல் அறிக்கையில் அதிமுக வாக்களித்தால் அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என்று சேலத்தில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இதன் பின்னர் அதிமுக சார்பில் அதன் மூத்த தலைவர்கள் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், பொன்னையன், அன்வர் ராஜா, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகிய முக்கிய தலைவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமை அலுவலகத்திற்கு மூன்று தடவை நேரில் வந்து ஆதரவு கேட்டனர். தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க உறுதியளிப்போம் என்று சொன்னால் தவிர நாங்கள் ஆதரிக்க முடியாது என்று நாம் திட்டவட்டமாகச் சொன்னோம். இதன் பின்னர் பல தடவை பேச்சு வார்த்தை நடத்திய பின் தேர்தல் அறிக்கையில் சொல்வதாகவும் அதற்கான வாசகங்கள் எப்படி அமைய வேண்டும் என்று நம்மிடம் கேட்ட போது அந்த வாசகத்தை நாம் எழுதிக் கொடுத்தோம். கட்டாயம் தேர்தல் அறிக்கையில் சொல்வோம் என்று அவர்கள் உறுதி மொழி அளித்தாலும் தேர்தல் அறிக்கையைப் பார்க்காமல் நாங்கள் முடிவு சொல்ல முடியாது என்று கூறினோம்.

இதன் காரணமாகவே அதிமுக வின் தேர்தல் அறிக்கை வரும் வரை யாருக்கு ஆதரவு என்னும் முடிவை எடுக்காமல் தள்ளி வைத்தோம்.

ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவதாக ஒரு வார்த்தையும் இல்லை.

ஆனால் திமுக வின் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை அதிகரிப்பது பற்றி கூறப்பட்ட பின்பும் திமுக வின் தேர்தல் அறிக்கையை வரிக்கு வரி காப்பியடித்த ஜெயலலிதாவுக்கு முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்த பாராவை மட்டும் காப்பியடிக்கக் கூட மனமில்லை.

தேர்தல் பிரச்சாரத்தின் போது போகிற போக்கில் இது குறித்து பேசினால் அதை முஸ்லிம்கள் நம்ப மாட்டோம், மாறாக தேர்தல் அறிக்கையில் தான் கூற வேண்டும் என்று நாங்கள் கூறியதை ஒப்புக் கொண்ட அதிமுக முஸ்லிம் சமுதாயத்துக்கு மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது.

பல மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் அறிக்கையில் இதைச் சேர்ப்போம் எனக் கூறி, வாசகங்கள் எப்படி அமைய வேண்டும் என்பது உட்பட நம்மிடத்தில் எழுதி வாங்கிச் சென்று விட்டு, நம்மை நம்ப வைத்து ஏமாற்றிய அதிமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவது என்று மாநிலப் பொதுக்குழு தீர்மானிக்கின்றது.

முஸ்லிம்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று நாம் வைத்த கோரிக்கையும் அதிமுக வால் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது.

திமுக 120 இடங்களில் 4 இடங்களை முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால் 160 இடங்களில் போட்டியிடும் அதிமுக மூன்று இடங்கள் மட்டும் முஸ்லிம்களுக்கு வழங்கி மற்றொரு துரோகத்தையும் செய்துள்ளது. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வின் துரோகச் செயலுக்கு தக்க பாடம் புகட்டுவதற்காகவும் திமுக தேர்தல் அறிக்கையில் இட ஒதுக்கீடு குறித்து சொல்லி இருக்கிற காரணத்துக்காகவும் அதிமுகவுக்கு எதிராகவும் திமுகவுக்கு ஆதரவாகவும் வாக்களிப்பது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலப் பொதுக்குழு தீர்மானிக்கின்றது.

Friday, March 25, 2011

துன்பங்களுக்கு தற்கொலை தீர்வாகுமா?

தலைப்பு:
துன்பங்களுக்கு தற்கொலை தீர்வாகுமா?

உரை:
மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி


Sunday, March 20, 2011

பொன்னாடை போர்த்தும் தமிழகத்தின் முதன்மையான தவ்ஹீத் (?) அமைப்பு (சாக்)

நாகர்கோவிலில் ஜாக் அமைப்பின் ஆதரவுடன் நடக்கும் இஸ்லாமிக் சானல் என்ற கேபிள் டிவியில் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருப்பவர் ஐதுரூஸ் ஃபிர்தௌஸி.

சமீபத்தில் பெரியார் தாசன் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சி இஸ்லாமிக் சானல் சார்பாக நாகர்கோவிலில் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் இறுதியில் வாழ்த்துரை வழங்கியவர்களுக்கு பொன்னாடை(?!) போர்த்தப்பட்டது.

டிவி சானலின் உரிமையாளர் இன்னாருக்கு பொன்னாடை போர்த்துவார் என ஐதுரூஸ் ஃபிர்தௌஸி தொகுத்து வழங்க ஜாக் பேச்சாளர் எம்.சி.முஹம்மது, எஸ்.கமாலுதீன் மதனி, ஃபிர்தெஸியா கல்லூரி முதல்வர் செய்யது முஹம்மது மதனி, தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் காதர் மைதீன் என பலருக்கு அவர் பொன்னாடை போர்த்தி கைகுலுக்கினார்.

இறுதியாக வாழ்த்துரை வழங்கிய -------------- என்ற ஆலிமாவுக்கு பொன்னாடை போர்த்துவார் என ஐதுரூஸ் ஃபிர்தௌஸி அறிவிக்க டிவி உரிமையாளர் தனது கையில் ஆடையை வைத்துக் கொண்டு ஆலிமாவைத் தேட நல்ல வேளையாக அவர் உள்ளே மறைந்து கொண்டார். இல்லையெனில் பலருக்கு மத்தியில் அந்த ஆலிமாவுக்கு அவர் பொன்னாடை போர்த்தி இருப்பார். ஒரு சிறுமியிடம் அந்த ஆடை கொடுக்கப்பட்டது. 

மதீனாவில் படித்த ஜாக் அறிஞர்கள் கூட இந்த புகுழுக்கும் பொன்னாடைக்கும் அடிமையாகி விட்டனர்.

கமாலுத்தீன் மதனிக்கு பொன்னாடை போர்த்தும் கண்கொள்ளாக் காட்சி

ஸையித் முஹம்மது மதனிக்கு பொன்னாடை போர்த்தும் காட்சி

இன்னொரு ஜாக் மவலவிக்கு பொன்னாடை

ஆலிமாவுக்கு பொன்னாடை போர்த்த காத்திருக்கும் கேபிள் டிவி உரிமையாளர் 


ஜாக் தாயிகள் அனைவரும் அந்த நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டுதானிருந்தனர்.

அரசியல்வாதிகளுடன் போட்டி போட்டு புகழ் போதையில் தட்டழியும் இவர்களையும் குர்ஆன் ஹதிஸ் பேசுவோர் என்று நீனைத்து ஆதரவளிப்போர் சிந்தியுங்கள். 


நன்றி: ஆன்லைன் பிஜே

Wednesday, March 16, 2011

ஜூம்ஆ உரை - 04.02.2011 - ஆடியோ

உரை: அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி

தலைப்பு: ஜூம்ஆவின் ஒழுங்குகள்

Monday, March 14, 2011

Sunday, March 13, 2011

ஜூம்ஆ உரை - 04.02.2011 - வீடியோ

உரை: அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி

தலைப்பு: ஜூம்ஆவின் ஒழுங்குகள்


Monday, March 07, 2011

இறை இல்லமும், இஸ்லாமிய கீதமும் (வீடியோ)

உரை: மௌலவி அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி



Friday, March 04, 2011

ஏகத்துவ பிரச்சார சொற்பொழிவுகளுக்காக ஒர் புதிய இணையதளம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்க அறிஞர்கள் மௌலவி ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி,  மௌலவி ஷம்சுலுஹா ரஹ்மானி, மௌலவி M.S. சுலைமான், மௌலவி M.I. சுலைமான், மௌலவி அப்துர் நாசர், மௌலவி அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி போன்றவர்கள் உரையாற்றிய வீடியோ பதிவுகளை காண புதிய ஒர் இணையதளம் ஆரம்பமாகியுள்ளது.



Thursday, March 03, 2011

Tuesday, March 01, 2011

Monday, February 28, 2011

தவ்ஹீத் வரலாறு

Friday, February 25, 2011

மவ்லூது ஓதுவதற்கு கூட்டம் குறைந்து விட்டது!!

1980 களில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சத்தியப் பிரச்சாரம் தற்போது முழு அளவில் வீரியமடைந்து சீரும் சிறப்புமாக தமிழகத்தில் மாபெரும் எழுச்சி கண்டு வருகின்றது. தவ்ஹீத் ஜமா-அத்தின் வீரியமிக்க பிரச்சாரத்தின் மூலம் தமிழக முஸ்லிம்கள் தங்களைப் பீடித்திருந்த ஷிர்க் மற்றும் பித்அத் போன்ற கொடிய நோய்களிலிருந்து விலகி நரகப் படுகுழியிலிருந்து பாதுகாப்பு பெற்று வருகின்றனர். அல்ஹம்து லில்லாஹ்…

அதற்கு ஆதாரமாக பல பள்ளிவாசல்களைக் குறிப்பிடலாம் என்ற போதிலும் உதாரணத்திற்கு, வடசென்னை மாவட்ட கொடுங்கையூர் முத்தமிழ்நகர் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசலில் சென்ற வரம் நடந்த சம்பவத்தைக் குறிப்பிடலாம்.

வடசென்னை, கொடுங்கையூர் முத்தமிழ்நகர் அல் அமீன் பள்ளிவாசலில் கடந்த வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்குப் பிறகு அந்தப் பள்ளிவாசல் நிர்வாகம் ஒரு அறிவிப்பு செய்துள்ளது. முன்பு போல் மவ்லூது ஓதுவதற்கு ஆட்கள் வருவதில்லை.

மவ்லூது ஓதும் பள்ளிவாசல் இமாமோடு சேர்ந்து சின்னஞ்சிறிய சிறுவர்கள் மட்டும் தான் மவ்லூது ஓதி வருகின்றனர். அத்தோடு மட்டுமில்லாமல் மவ்லூது ஓதிவிட்டு தப்ரூக் – பிரசாதம் வழங்குவதற்கு முன்பு போல யாரும் பணம் வழங்குவதில்லை. இந்த தவ்ஹீத் ஜமாஅத்தினர் செய்யக் கூடிய பிரச்சாரத்தை யாரும் நம்பி விட வேண்டாம். அவர்கள் எவ்வளவு தான் பிரச்சாரம் செய்தாலும் நாங்கள் மவ்லூது ஓதுவதை நிறுத்த மாட்டோம். நீங்களும் தப்ரூக் வழங்க பணம் கொடுப்பதை நிறுத்தி விட வேண்டாம் என்று கெஞ்சாத குறையாக அறிவிப்பு செய்துள்ளனர்.

முத்தமிழ் நகர் பகுதியில் அமைந்துள்ள இந்தப் பள்ளிவாசலில் மவ்லூது பாடல்கள் எத்தகை மாபெரும் பாவம் என்பதை விளக்கி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்ட கொடுங்கையூர் கிளை சார்பாக துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதோடு, மவ்லூது ஓதுவதும் மீலாது விழா கொண்டாடுவதும் நரகத்திற்கு இழுத்துச் செல்லும் பாவங்களாகும் என்பதை விளக்கி போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன.

இதனால் ஆத்திரமடைந்த பள்ளிவாசல் நிர்வாகம் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்த தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களை இந்தத் துண்டு பிரசுரங்களை இங்கு விநியோகிக்க கூடாது என்று விரட்டியுள்ளனர். அந்த ஜமாஅத்தினரின் எதிர்ப்பையும் மீறி அந்தப்பகுதி மக்களுக்கு துண்டு பிரசுரங்களின் வாயிலாக சத்தியப் பிரச்சாரம் எத்தி வைக்கப்பட்டது.

மாபெரும் ஏகத்துவ எழுச்சி:

ஒரு கால கட்டத்தில் மவ்லூது ஓதுவதற்கும், மவ்லூது ஓதிவிட்டு வழங்கப்படும் தப்ரூக்கைப் பெறுவதற்கும் கூட்டம் அலைமோதும்.

12நாள் ஓதப்படும் மவ்லூதுக்கு தப்ரூக் வழங்க மக்கள் பணத்தைப் போட்டிபோட்டு வாரி இரைத்து பணம் செலவழித்து வந்தனர். உச்சகட்டமாக கடைசி நாள் மவ்லூது ஓதிவிட்டு ஸ்பெஷல் தப்ரூக்காக தேங்காய்ச் சோறு ஆக்கி வழங்கும் வழக்கமும் பல பகுதிகளில் இருந்து வந்த நிலை மாறி தற்போது ஒரு சீப்பு வாழைப்பழத்திற்கே பள்ளிவாசல் நிர்வாகம் அல்லோல கல்லோலப்படுகின்றது என்றால் இந்த நிலைமைக்கு எழுச்சிமிகு ஏகத்துவப் பிரச்சாரமே காரணம் என்றால் அதுமிகையல்ல.

மவ்லூது ஓதுவது மிகப் பெரிய பாவம் என்று பிரச்சாரம் செய்து அதில் மூழ்கிக் கிடந்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதும், அந்தப் பாவத்திற்கு பணம் மற்றும் தப்ரூக் வழங்கி ஒத்துழைப்பு வழங்குவதும் பாவமாகும் என்று மக்களுக்கு விளக்கியதும், அந்த தப்ரூக்கை வாங்கி உண்பது பாவம் என்று மக்களுக்குத் தெளிவுபடுத்தியதும், தவ்ஹீத் ஜமாஅத்தின் வீரியமிக்க பிரச்சாரமும் தான் இந்த மாபெரும் மாற்றத்திற்கு காரணம் என்பதை ஒவ்வொரு சுன்னத் ஜமாஅத்தினரும் உணராமலில்லை. அதிலிருந்து அவர்களும் விடுபடும் காலம் மிக தொலைவிலில்லை. இன்ஷா அல்லாஹ்…

Sunday, February 20, 2011

Thursday, February 17, 2011

மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!

தமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான மவ்லித் இஸ்லாத்திற்கு எதிரானது என்று பல ஆதாரங்களை எடுத்துக்காட்டி மக்களை சிந்திக்க வைத்துள்ளோம். மவ்லித் என்பது நபிகளார் காலத்தில் இருந்ததில்லை என்பதையும் அவை மூடநம்பிக்கையை வளர்ப்பதற்காகவும் உலக நோக்கத்திற்காகவும் தொகுப்பப்பட்டதுதான் என்பதை மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் மவ்லவி தேங்கை சர்புத்தீன் என்பவர் எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து எடுத்து எழுதியுள்ளோம் என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்க!

சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார்?

தமிழகம் எங்கும் பரவலாக பாடப்படும் சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார் என்பது தெரியாது. மகுடமாய்த் திகழும் சுப்ஹான் மவ்லிதை கல்விக்கடல் கஸ்ஸாலி இமாம் (ரஹ்) அவர்களோ, அல்இமாமுல் கத்தீப் முஹம்மதுல் மதனி (ரஹ்) அவர்களோ இயற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ‘இயற்றியவர் யார்?’ என்று திட்டவட்டமாக தெரியவில்லை. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 5)

சுப்ஹான மவ்லிதின் பெயர் காரணம்?

இந்த மவ்லித் ”ஸுப்ஹான அஸீஸில் ஃகஃப்பார் என்று தொடங்குவதால் இதன் முதல் சொல்லான ஸுப்ஹான என்பதே இந்த மவ்லிதுக்குரிய பெயராக அமைந்தது. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 5)

‘மவ்லித்’ என்பதின் பொருள்:

‘மவ்லிது’ எனும் அரபிச் சொல்லின் அகராதிப் பொருள் ‘பிறந்த நேரம்’ அல்லது ‘பிறந்த இடம்’ என்பதாகும். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித்)

மவ்லித் ஓதுதலை உருவாக்கியவர் யார்?

மவ்லிது ஓதும் அமலை அரசின் பெருவிழாக்களில் முக்கியம் வாய்ந்த ஒன்றாக முதலில் ஏற்படுத்திவர், தலைசிறந்த - வள்ளல் தன்மை மிக்க-அரசர்களில் ஒருவரான ‘அல்மலிக்குல் முழஃப்ஃபர் அபூஸயீத் கவ்கப்ரீ – பின்- ஸைனுத்தீன் அலிய்யிப்னு புக்தகீன்’ என்பவர் ஆவார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

ஆஹா மெகா ஆஃபர்:

உங்கள் நோக்கம் நிறைவேற உங்களுக்கு முழுமையான பாதுகாப்பு பெற வருடத்தில் ஒரு மாதம் மெகா ஆஃபர் நாள் வந்துள்ளது என்று மவ்லித் பிரியர்கள் அறிவித்துள்ளனர்.

மவ்லிது ஓதுவது அந்த வருடம் முழுவதும் பாதுகாப்பாகவும் நாட்டத்தையும் நோக்கத்தையும் அடையச் செய்வதின் மூலமாக உடனடியான நற்செய்தியாகவும் அமைந்திருப்பது மவ்லிதின் தனித்தன்மைகளைச் சார்ந்ததென்று அனுபவத்தின் வாயிலாக அறியப்பட்டிருக்கின்றதென இமாம் கஸ்தலானி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)

ஈமானின் வெற்றிக்கு இலகுவான வழி:

மறுமையில் வெற்றிபெற தொழுகை நோன்பு போன்ற எந்த கடமையும் செய்யாமல் இலகுவாக செல்லும் வழியை சொல்லுகிறார்கள் மவ்லித் பிரியர்கள்.

”திருநபி (ஸல்) அவர்களின் மவ்லிது சபைக்கு ஒருவர் வருகை தந்து, அவர்களின் மகத்துவத்தை ஒருவர் கண்ணியப்படுத்தினால் அவர், ஈமானின் மூலம் வெற்றி பெற்றுவிட்டார்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)

ஆனால் அல்லாஹ்வின் வெற்றிப்பெற்றவர்களை யார்? அவர்களின் நடவடிக்கைள் என்ன?  என்று அல்லாஹ் கூறுவதை பாருங்கள் 

நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர், (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகை களைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.(23 : 1-11)

செலவு செய்யும் முறை

நம்மிடம் இருக்கும் செல்வத்தை எவ்வாறு செலவு செய்வது என்பதை மவ்லிது பிரியர்கள் கூறுவதை பாருங்கள் : ”உஹது மலையளவு தங்கம் என்னிடம் இருக்குமானால் நான் அதை நாயகம் (ஸல்) அவர்கள் மீது மவ்லிது ஓதுவதற்காகச் செலவு செய்ய விரும்புவேன்” என்று ஹஜ்ரத் ஹஸன் பஸரீ அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)

ஆனால் திருக்குர்ஆனும் நபி மொழிகளும் கூறுவதை பாருங்கள்

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். “நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்” எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2 : 214)

மவ்லித் சாப்பாடு கொடுத்தால் சுவர்க்கம்?

”மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்காக ஒருவர் உணவு தயாரித்து முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டினார். அந்த மவ்லிதைக் கண்ணியப்படுத்துவதற்காக நறுமணம் பூசினார். புத்தாடை புனைந்தார். தன்னையும் சபையையும் அலங்கரித்தார். விளக்குகள் ஏற்றினாரென்றால் அத்தகையவரை மறுமை நாளில் நபிமார்கள் அடங்கிய முதல் பிரிவுடன் அல்லாஹ் எழுப்புவான். மேலும் அவர் நல்லோரின் ஆன்மா ஒதுங்கும் இல்லிய்யீன் திருத்தலத்தின் உயர்நிலையில் இருப்பார்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

அமுத சுரபி மவ்லித்:

அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாக செல்வத்தை அள்ளித்தரும் பாத்திரம் மவ்லிதாம்.

”நாயகம் (ஸல்) அவர்கள் மீது மவ்லிது நிகழ்ச்சி நடத்துவதற்காக ஒருவர் தங்கம் அல்லது வெள்ளி நாணயங்களைத் தனியாக உண்டியலில் சேமித்து மவ்லிது நிகழ்ச்சி நடத்தியபின் எஞ்சிய நாணயங்களுடன் கலந்து விட்டாரெனில் இந்த நாணயங்களின் ‘பரக்கத்’ ஏனைய நாணயங்களிலும் ஏற்பட்டு விட்டது. இந்த நாணயம் வைத்திருப்பவர் வறுமை நிலை அடையமாட்டார். மாநபி (ஸல்) மவ்லிதின் பரக்கத்தினால் இவரின் கை நாணயங்களை விட்டுக் காலியாகாது”. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

நல்லாடியர்களுடன் சுவர்க்கத்தில் இருக்க சுலபமான வழி:

எந்த சிரமமும் இல்லாமல் சுவர்க்கத்திற்கு செல்ல அழகான ஒரு வழியை காட்டுகிறது மவ்லித்.

”எந்த இடத்தில் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மவ்லிது ஓதப்படுகிறதோ அந்த இடத்தை ஒருவர் நாடினால் நிச்சயமாக அவர் சுவனப்பூங்காக்களில் இருந்தும் ஒரு பூங்காவை நாடிவிட்டார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

”நாயகம் (ஸல்) அவர்களின் மவ்லிதுக்காக ஒருவர் தனியிடத்தை ஒதுக்கி, முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டி உணவு தயாரித்து வழங்கி உபகாரம் பல செய்து மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்குக் காரணமாக இருந்தால் இத்தகையவரை மறுமைநாளில் மெய்யடியார்கள், ஷுதாக்கள் ஸலாஹீன்கள் குழுவினருடன் , அல்லாஹ் எழுப்புவான். மேலும் ‘நயீம்’ எனும் சுவனத்தில் மறுமையில் இவர் இருப்பார்” என்று எமன் நாட்டு மாமேதை இமாம் யாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

படைத்தவன் கூறும் வழிமுறையை கவனியுங்கள் : அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள். (அல்குர்ஆன் 4 : 19)

மலக்குகளின் வருகை:

”எந்தவொரு வீட்டிலோ பள்ளி வாசலிலோ மஹல்லாவிலோ மாநபி (ஸல்) மவ்லிது ஓதப்பட்டால் அவ்விடத்தைச் சார்ந்தவர்களை மலக்குகள் சூழ்ந்தே தவிர இல்லை. அவர்களைத் தன்கருணையினால் அல்லாஹ் சூழ வைத்துவிடுகிறான்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

நபி (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள் : அல்லாஹ்வின் ஏதாவது ஒரு வீட்டில் ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் வேதத்தை ஓதி அதை தங்களுக்குள் பாடம் நடத்தினால் அவர்கள் மீது அமைதி இறங்கும் அவர்களை ரஹ்மத் சூழ்ந்து கொள்ளும் மலக்குமார்கள் அவர்களை போர்த்திக் கொள்ளவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம் (4867)

மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!

மாநபி (ஸல்) மவ்லிதையொட்டி இந்த (அல்மலிக்குல் முழஃப்ஃபர் அபூஸயீது கவ்கப்ரீ பின் ஸைனுத்தீன் அலிய்யிப்னு புக்தகீன்) மன்னர் ஏற்பாடு செய்த விருந்து வைபவத்தில் ஒரு முறை பங்கேற்றவர்களில் ஒருவர் கூறுகிறார்.’ அவ்விருந்தில் சமைக்கப்பட்ட ஐயாயிரம் ஆட்டுத் தலைகள், பத்தாயிரம் கோழிகள், ஒரு இலட்சதம் வெண்ணெய்ப் பலகாரங்கள் முப்பதாயிரம் ஹல்வா தட்டைகள் இருந்தன. அந்த விருந்தில் ஞானிகள் மற்றும் சூஃபிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

அவர்களுக்கொல்லாம் மன்னர், பொன்னாடைகள் போர்த்திக் கவுரவித்தார், மேலும் அன்பளிப்புகளும் வழங்கினார். லுஹர் முதல் சுபுஹ் வரை சூஃபிகளுக்காவே மன்னர் தனியாக ஒரு இசையரங்கம் ஏற்பாடு செய்தார். அதில் பாடப்பட்ட பேரின்பப்பாடல் கேட்டு குதித்துக் களித்த சூஃபிகளுடன் சேர்ந்து மன்னரும் பக்திப் பரவசத்துடன் ஆடினார்.

ஆண்டு தோறும் மூன்று இலட்சம் ரூபாயை மன்னர் முழஃப்ஃபர் மாநபி (ஸல்) மவ்லிதுக்காவே செலவிட்டார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

- நன்றி tntj.net (http://www.tntj.net/?p=11236)

Wednesday, February 02, 2011

ஜூம்ஆ உரை - 14.01.2011

அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியில் நடைபெறும் ஜூம்ஆ உரையின் ஆடியோ இங்கு வார வாரம் வெளியிடப்படும், இன்ஷா அல்லாஹ்.

நாள்: 14.01.2011
உரை: மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி

அதிரை இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் (வீடியோ) - பாகம்-3

கடந்த 24.11.2010 அன்று அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியில் நடைபெற்ற 'இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்' நிகழ்ச்சியில் சகோதரர் பி.ஜே அவர்கள் அளித்த பதில்கள்:


பாகம்-3

அதிரை இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் (வீடியோ) - பாகம்-2

கடந்த 24.11.2010 அன்று அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியில் நடைபெற்ற 'இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்' நிகழ்ச்சியில் சகோதரர் பி.ஜே அவர்கள் அளித்த பதில்கள்:


பாகம்-2

Monday, January 31, 2011

சேலத்தில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழு! தீர்மானங்கள், புதிய நிர்வாகிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக் குழு கூட்டம் இன்று (30-1-11) காலை 10.30 மணிக்கு மேலாண்மைக்குழுத் தலைவர் சம்சுல் லுஹா அவர்கள் தலைமையில் சேலத்தில் பரபரப்புடன் துவங்கியது.


இதில் வரும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு என்ற முக்கிய அம்சங்கள் இடம் பெற்றது.

முதலாவதாக மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மத் அல்தாஃபி அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

புதிய மாநில நிர்வாகிகள்:

தலைவர்:
பி.ஜே
பொதுச் செயலாளர்: ரஹ்மதுல்லாஹ்
பொருளாளர்: அன்வர் பாஷா
து. தலைவர்: அப்துர் ரஹீம்
து. பொதுச் செயலாளர்: சைய்யத் இப்ராஹீம்

மாநிலச் செயலாளர்கள்:
அப்துல் ஹமீது
சாதிக்
அப்துல் ஜப்பார்
யூசுப் (திருவள்ளூர்)
அஷ்ரஃப்தீன் பிர்தௌசி
மாலிக் (ராம்நாடு)
சாதிக் ( கோபிசெட்டிபாளையம்)


பொதுக்குழு தீர்மானம்:

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

2011 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி சேலம் நேரு கலை அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 11 வது மாநிலப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தமிழகம்



1.முஸ்லிம்களின் கடுமையான போராட்டங்களுக்குப் பின் முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை திமுக அரசு சட்டமாக்கியது. ஆனால் இட ஒதுக்கீடு அமுலுக்கு வந்தது முதல் இன்று வரை வழங்கப்பட்ட வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டி அடிப்படையில் 3.5 கிடைக்கவே இல்லை. ஒவ்வொரு வேலைக்கும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் விளம்பரம் செய்யப்படும் போது அந்த விளம்பரத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 ஒதுக்காமல் ஒரு சதவிகிதம் அளவுக்கு ஒதுக்கி பகிரங்கமாக விளம்பரங்கள் செய்யப்பட்டன. இதைத் திரட்டி முதல்வரிடம் நாம் கொடுத்து உடனே இவற்றை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த உடன் அந்தக் குளறுபடிகளைச் சரி செய்வதாக அரசு மூலம் எழுத்து மூலமான உத்தரவாதம் தந்தனர். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின் இரண்டு தடவை துணை முதல்வரைச் சந்தித்து இக்கோரிக்கையை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.ஆனாலும் எதிர்காலத்தில் இதுபோல் நடக்காமல் இருக்க கண்காணிப்பு ஆணைத்தை நேற்று (29.01.11) அமைத்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. கண்காணிப்பு ஆணையம் எதிர்காலத்தில் செய்யப்படும் நியமனங்களை மட்டும் கண்காணிக்காமல் இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட காலம் முதல் இது வரை செய்யப்பட்டுள்ள நியமனங்களையும் ஆய்வு செய்யவேண்டும் என்று இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.

மனித நேய மக்கள் கட்சி எங்கு நின்று போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக அவர்களின் சமுதாய துரோகங்களை அடையாளம் காட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் களம் இறங்கி அவர்களை தோல்வியை தழுவச் செய்யும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

எனவே முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கினால் திமுகவிற்கு ஆதரவு அளிப்பது, திமுக முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீட்டை சட்டமாக்காமல்,  அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதியளித்தால் அவர்களை ஆதரிப்பது என்றும், தற்போது நிலைமை இன்னும் தெளிவாகாத காரணத்தால் தேர்தல் நெருக்கத்தில் இன்ஷா அல்லாஹ் மாநில செயற்குழுவைக்கூட்டி அதில் யாருக்கு ஆதரவு என்ற முடிவு எடுக்ககப்படும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

2. தமிழக அரசின் சமத்துவப் பொங்கல் தமிழக அரசு ஜனவரி 15 ஐ தமிழ் புத்தாண்டாகக் கடந்த 8.2.2008 அன்று அறிவித்து ஆணை பிறப்பித்தது. பொங்கலைக் கொண்டாடுபவர்கள் அந்நாளில் சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் வணக்க வழிபாடு செய்வர். பொங்கல் அன்று இது போன்ற வழிபாடு நடத்துவது ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களின் நடைமுறை. விருப்பம் உள்ளவர்கள் அதைச் செய்கின்றனர். ஆனால் ஜனவரி 15 ஆம் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்ததோடு நின்று விடாமல் அனைத்து சமுதாய மக்களையும் அன்றைய தினத்தில் வீடுகளில் விளக்கேற்றுமாறும் வழிபாடு நடத்துமாறும் வலியுறுத்தும் விதமாக தமிழ அரசின் அறிவிப்புகள் அமைந்துள்ளன.

அது மட்டுமில்லாமல் அரசு அலுவகங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் அனைவரும் சமத்துவப் பொங்கல் கொண்டாடுமாறு கட்டளை பிறப்பித்து முஸ்லிம்கள் மீதும் இன்னொரு மதத்தின் நம்பிக்கை தினிக்கப்பட்டுள்ளது. பொங்கலையொட்டி தமிழக அரசுபொங்கல் பரிசு என்ற பெயரில் அரிசி, வெல்லம் போன்ற பொருட்களை வழங்குகிறது. அவ்வாறு வழங்கும் பையில் சூரியனை வணங்குவது போன்ற ஒரு படத்தை இடம் பெறச் செய்துள்ளது. இது பற்றி சட்டசபையில் நேற்று அமைச்சர் வேலு கூறுகையில் இது எங்கள் சின்னம் அல்ல, பொங்கல் அன்று சூரியனை வணங்குவதை குறிக்கும் சின்னம் என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அரசே இது போன்ற செயலை செய்யுமாறு நேரடியாக வலியுறுத்துகின்றது.

அரசு அலுவலகங்களிலும் அன்றைய தினத்தில் வழிபாடு நடத்தப்படுகின்றது.

மத சார்பற்ற ஜனநாயக அரசு, இது போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது. ஏனெனில் இவ்வாறு கால்நடைகளுக்கும் சூரியனுக்கும் வணக்க வழிபாடு செய்வது முஸ்லிம்களின் அடிப்படைக் கொள்கையான படைத்த இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்பதற்கு எதிரானதாகும். முஸ்லிம்கள் இது போன்ற வழிபாடுகளில் ஈடுபட வலியுறுத்தும் தமிழக அரசின் செயல் முற்றிலும் ஜனநாயகத்திற்கும் மத சார்பற்ற தன்மைக்கும் எதிரானதாகும்.

தமிழக அரசின் ஜனநாயகத்திற்கும் மத சார்பற்ற தன்மைக்கும் எதிரான இந்த நடவடிக்கையை வண்மையாகக் கண்டிக்கின்றோம் என்பதையும், அரசு இது போன்று செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாடறிந்த மூதறிஞருக்கு முஸ்லிம்கள் சூரியனையோ கால்நடைகளையோ வழிபட மாட்டார்கள் என்ற சாதாரண உண்மை கூட எப்படி தெரியாமல் போனது. இஸ்லாம் மதத்துக்கு எதிரான செயலை முஸ்லிம்களும் செய்ய வேண்டும் என்று உத்தரவு இடுவதை சென்ற வருடமும் நாம் கண்டித்து முதல்வரின் கவனத்துக்கும் கொண்டு சென்றோம். அதன் பிறகும் முதல்வர் இவ்வாறு அறிவிப்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மீண்டும் ஒரு முறை கண்டிக்கிறது.

3. நடிகர்களுக்கு நிலம்

பாதைகளின் ஓரம் சாரத்தில், கூவத்தின் நாற்றத்தில் குடிசை கட்டிக் கொண்டு மழையிலும் வெயிலிலும் வாடுகின்ற சேரி மக்களைக் கொண்டது தான் தமிழகம். இந்தத் தமிழகத்தில் வன்முறை, ஆபாசம், விபச்சாரம், விரசம் போன்ற தீமைகளின் தொழிற்சாலைகளாகத் திகழ்கின்ற திரைப்படத் துறையினருக்கு, கூத்தாடிகளுக்கு 90 ஏக்கர் நிலத்தைத் தாரை வார்த்துக் கொடுத்து, அதில் வீடு கட்டிக் கொடுக்கும் தமிழக முதலமைச்சரை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அந்நிலத்தைத் திரும்பப் பெற்று வீடில்லாத மக்களுக்கு வழங்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

4. பாபர் பள்ளிபோன்று தொடரும் அக்கிரமம்

பள்ளிவாசல் விஷயத்தில் முஸ்லிம்களில் இரு ஜமாஅத்தார்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டவுடன் காவல்துறையும் வருவாய்த் துறையும் யோர்த்துக் கொண்டு பாபர் மஸ்ஜித்தைப் போன்று இழுத்து மூடுகின்ற அக்கிரமத்தை செய்து வருகின்றன. நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி எஸ்.பி. பட்டணம் பள்ளிவாசலில் இந்த அநியாயத்தை காவல்துறையும் வருவாய்துறையும் நடத்தியது.

இந்த அக்கிரமத்தையும் அராஜகத்தையும் தமிழ அரசு உடனே தடுத்து நிறுத்தும் படி இப்பொதுக்குழுக் கேட்டுக் கொள்கின்றது.

புதுவை அரசு

1. புதுவை மாநில அரசுக்கு கோரிக்கை

புதுவை மாநிலத்தில் அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 6.1 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதாக புதுவை சட்டமன்றத்தில் புதுவை காங்கிரஸ் அரசு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்தைச் சட்டமாக்குவோம் என்றும் ஆந்திராவைப் போன்று புதுவையில் வட்டியில்லா கடன் வழங்குவோம் என்றும் புதுவை காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது. ஆனால் 2 சதவிகித இட ஒதுக்கீடு மட்டும் அளித்து முஸ்லிம்களை ஏமாற்றியுள்ளது. அது மட்டுமின்றி ஒட்டு மொத்த புதுவை மாநிலத்தில் இட ஒதுக்கீடு அளிக்காமல் பதுவை காரைக்கால் பகுதியில் மட்டும் தான் இந்த இட ஒதுக்கீடு என்று தகவல்கள் வருகின்றன. அதன்படி பார்த்தால் புதுவை காரைக்காலில் இரண்டு சதம் என்றால் ஒட்டு மொத்த புதுவையில் ஒரு சதவிகிதம் தான் ஆகிறது. ஒரு சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி முஸ்லிம்களை வஞ்சிக்கும் காங்கிரசின் இந்த துரோகத்தை இந்த பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது

மேலும் வட்டி இல்லா கடன் வழங்குவதாக எழுத்து மூலம் அளித்த வாக்குறுதியும் நிறைவேற்றாமல் புதுவை காங்கிரஸ் அரசு ஏமாற்றி வருவதை இப்பொதுக்குழு கண்டிக்கிறது.

முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க முன்வந்துள்ளதாக மேற்குவங்க அரசு அறிவித்தது. முஸ்லிம் சமுதாயம் இதை வரவேற்று தனது நன்றிகளையும் தெரிவித்தது. ஆனால் அது அறிவிப்போடு நிற்கிறது. அதற்கான எந்த முயற்சியும் செய்வதாக தெரியவில்லை. எனவே கொடுத்த வாக்கை நிறைவேற்றுமாறும் அம்மாநிலத்தில் 25 சதவீதம் முஸ்லிம்கள் வாழ்வதைக் கருத்தில் கொண்டு அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு அளிக்குமாறு அம்மாநில அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

மத்திய அரசு, மாநில அரசு

1. சீர் கெட்டு வரும் சட்டம் ஒழுங்கு

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் கொலை கொள்ளை கற்பழிப்பு கூலிப்படை அட்டகாசம் அதிகரித்தவன்னம் உள்ளண. கடந்த மூன்றாண்டுகளில் தமிழகத்தில் குழந்தைகள், சிறுமிகள், பெண்கள் கடத்தல் அதிகரித்து வருகிறதெனவும், 2007ம் ஆண்டு 1097 பேரும், 2008ல் 1155 பேரும், கடந்த ஆண்டு 1133 பேரும் கடத்தப்பட்டுள்ளனர் என தமிழக காவல்துறையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

சட்டங்களும் தண்டனைகளும் சமூக விரோதிகளுக்கு பயத்தை ஏற்படுத்தி குற்றங்கள் செய்வதிலிருந்து விலகிப்போக வைக்க வேண்டும். ஆனால் எத்தகைய பயமுமின்றி பிஞ்சுக் குழந்தைகளைக் கொலை செய்தல், கற்பழித்தல் என சமூக விரோதிகள் தொடர்ந்து செயல்படுவது, தற்போதைய சட்டத்தின் அடிப்படையில் வழங்கும் தண்டனை கடத்தல்காரர்களுக்கு சிறிதளவு கூட பயத்தை ஏற்படுத்தவில்லை என்பதை படம் பிடித்து காட்டுகிறது. ஆகையால் இத்தகைய குற்றங்களுக்கு வழங்கும் தண்டனையை இன்னும் கடுமையாக்க வேண்டும். அரபு நாடுகளை போன்று சட்டத்தை கடுமையாக்கினால் தான் குற்றங்கள் குறைந்து பொது மக்கள் நிம்மதியாக வாழ முடியும். மக்கள் தம் குழந்தைகளை எவ்வித அச்சமுமின்றி பள்ளிக்கூடங்களுக்கும் அனுப்ப முடியும். கற்பழிப்பு, கொலை போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கினால் மட்டுமே சமூக விரோதிகளிடத்தில் பயத்தை ஏற்படுத்த முடியும். ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கற்பழிப்பிற்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று கருத்தை வெளியிட்டிருக்கிறது. எனவே சட்டத்தை இயற்ற வேண்டிய இடத்தினில் இருக்கின்ற மத்திய அரசு இந்த விசயத்தில் உடனடியாகத் தலையிட்டு இத்தகைய குற்றங்களுக்கு மரண தண்டனை என்று சட்டமியற்ற வேண்டும். பொது மக்களின் நலன் என்ற அடிப்படையில் மாநில அரசு இதை வலியுறுத்த வேண்டும்.

2. விலைவாசி உயர்வு

அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயருவதற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு அடிப்படைக் காரணமாக உள்ளது. இந்த விலை உயர்வுக்கு மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அநியாய வரிகளே காரணமாக உள்ளன. விவசாயி பாட்டாளி மற்றும் பொதுமக்களை மிகப்பெரும் அளவில் இது பாதிப்பதால் மத்திய அரசு உடனே பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப் பெறுவதுடன் பிற நாடுகளைப் போன்று நமது நாட்டிலும் பெட்ரோல் டீசலுக்கு வரி விதிப்பதைக் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

3. ஆன்லைன் வியாபாரம்

பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும் போது விலைகள் குறைவதும், உற்பத்தி குறையும் போது விலைகள் அதிகரிப்பதும் இயற்கையாக நடக்கும் நிக்ழ்வு தான். இதற்கு அரசாங்கம் பொறுப்பாகாது என்பது உண்மை என்றாலும் தற்போது விலைவாசி வின்னை முட்டும் அளவுக்கு ஏறியிருப்பதற்கும் மத்திய அரசின் கொள்கை தான் காரணமாகும்.

பொருளைப் பார்க்காமலே உலகில் எங்கோ இருந்து கொண்டு ஆன்லைன் வியாபாரம் மூலம் எல்லாப் பொருள்களையும் முடக்கி வைத்து செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனர். மத்திய அரசின் அனுமதியும் இதற்கு இருக்கிறது. ஒரு சில பணமுதலைகள் அனைத்துப் பொருள்களையும் ஆன்லைனில் பேரம் பேசி முடக்கி விட்டு தாறுமாறாக விலையை ஏற்றி விற்பனை செய்வதால் தான் தங்கம் முதல் தானியம் வரை விலைவாசி உயர்கிறது. ப.சிதம்பரமும் பிரதமர் மன்மோகன் சிங்கும் பணமுதலைகளுக்கு ஆதரவான ஆன்லைன் சூதாட்ட வணிகத்துக்கு உடந்தையாக இருப்பது தான் விலைவாசி உயர்வுக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. எந்தப் பொருளையும் ஆன்லைன் மூலம் வீற்பதும் வாங்குவதும் முற்றாக தடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. பணக்காரர்களுக்கு ஆதரவான கொள்கை காரணமாக விலைவாசி ஏறுவதற்குக் காரணமான மத்திய அரசை இப்பொதுக்குழு கண்டிக்கிறது

மேலும் பெட்ரோல் விலை ஏற்றம் என்பது இன்னும் பல பொருள்களின் விலை ஏற்றத்துக்கு வழி வகுக்கும் என்பது தெரிந்திருந்தும் மாதத்துக்கு இரண்டு தடவை பெட்ரோல் விலையை உயர்த்தும் மத்திய அரசைக் கண்டிக்கிறோம். 100 ரூபாய் பெட்ரோலுக்கு எழுபது ரூபாய் வரி போட்டு ஒரு பக்கம் மத்திய அரசு கொள்ளை அடிக்கிறது. இன்னொரு பக்கம் நட்டம் எனக் கூறி நாடகமாடி மக்களை ஏமாற்றுகிறது. எழுபது ரூபாய் வரி போடா விட்டால் பாகிஸ்தானில் கொடுப்பது போல் 25 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்க முடியும். எனவே பெட்ரோலியப் பொருள் மீது எல்லா வரிகளையும் ரத்து செய்து 25 ரூபாய்க்கு பெட்ரோல் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

மக்களை வெள்ளைக் காரனை விட அதிகம் சுரண்டி பெட்ரோல் விலை உயர்வு மூலம் அனைத்து பொருள்கள் விலையும் ஏறுவதற்குக் காரணமான மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழக அரசின் அனைத்து இலவசத் திட்டங்களிலும் முஸ்லிம்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகின்றனர். இலவச இரண்டு ஏக்கர், இலவச வீடுகள், சமத்துவபுரம் வீடுகள், இலவச வீட்டு மனப்பட்டாக்கள், வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ஒதுக்கப்படும் வீடுகள், இலவச எரிவாயு இணைப்பு உள்ளிட்ட அனைத்திலும் கந்துடைப்புக்காக ஓரிரு முஸ்லிம்களின் புகைப்படம் வெளியிடப்படுகிறது. முஸ்லிம்களின் சதவிகிதத்துக்கும் அவர்களது வறுமை நிலைக்கும் ஏற்ப இவை வழங்கப்படவில்லை என்று இந்தப் பொதுக்குழு குற்றம் சாட்டுகிறது.

அனைத்து நலத்திட்டங்களிலும் முஸ்லிம்களுக்குக் கிடைத்தது எவ்வளவு என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

மத்திய அரசு

1- பாபர் மஸ்ஜித்

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியன்று அலகாபாத் நீதிமன்றம் 60 ஆண்டுகாலமாக நிலுவையில் இருந்த பாபர் மஸ்ஜித் தொடர்பான தனது தீர்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்பு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தை மீள முடியாத அதிர்ச்சியிலும், ஆத்திரத்திலும் ஆழ்த்தியிருக்கின்றது. அது இந்திய நாட்டின் அரசியல் சட்ட வரம்புகளைத் தாண்டி, இந்தியாவின் மதச்சார்பின்மைக் கொள்கைக்கு முரணாக அளிக்கப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களின் வாழ்வுரிமையான வழிபாட்டு உரிமையைப் பறித்துள்ளது. இந்தத் தீர்ப்பு சட்டத்திற்குப் புறம்பானது.

பாபர் மசூதி இருந்த இந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். இப்படி முடிவு எடுக்க எந்தச் சட்டவிதியும் உரிமையியல் சட்டத்தில் இல்லை. அப்பட்டமாக சட்டம் மீறப்பட்டுள்ளது.

அப்படியே ஒருவர் குறிப்பிட்ட இடத்தில் பிறந்திருந்தால் அதற்காக அவர் அந்த இடத்தின் உரிமையாளராவார் என்று இந்தியாவிலும் உலகில் எந்த ஒரு நாட்டிலும் சட்டம் இல்லை. எனவே இவர்களின் தீர்ப்பு சட்ட விரோதமானது.

குறிப்பிட்ட இடம் யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்க அந்த இடத்தில் இதற்கு முன் என்ன இருந்தது என்று தோண்டிப் பார்க்க வேண்டும் என்று இந்தியாவிலோ வேறு எந்த நாட்டிலோ சட்டம் இல்லை. இதையும் அந்த நீதிபதிகள் மீறியுள்ளனர்.

தோண்டப்பட்ட இடத்தில் கிடக்கும் பொருளைக் கொண்டு இன்னார் இந்த மாதிரியான கட்டடத்தை இடித்தார் என்று கண்டு பிடிக்கலாம் என்று இந்திய உரிமையியல் சட்டத்தில் சட்ட விதி ஏதும் இல்லை. இதையும் நீதிபதிகள் மீறியுள்ளனர்.

குறிப்பிட்ட இடத்தில் ராமருக்குக் கோவில் இருந்தது என்று கூறுவது நீதிமன்றத்தின் வேலையல்ல. அந்த வேலையை நீதிபதிகள் செய்துள்ளனர்.
அந்த இடத்தில் இருந்த ராமர் கோவிலை பாபர் இடித்தார் என்று கற்பணையாக முடிவு செய்யும் அதிகாரம் நீதிபதிகளுக்கு இல்லை

ஆவணம் யார் பெயரில் இருந்தது என்பதைப் பார்ப்பது தான் நீதிமன்றத்தின் வேலை. ஆனால் எடுத்துக் காட்டப்பட்ட ஆதாரங்களை அவர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

யாருடைய அனுபவத்தில் இருந்து வருகிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. 1528 முதல் 450 வருடம் முஸ்லிம்களின் அனுபவத்தில் தான் பாபர் மஸ்ஜித் இருந்து வந்தது என்பது உலகம் அறிந்த உண்மை. ஆனால் இந்த உண்மையையும் நீதிபதிகள் கண்டு கொள்ளவில்லை.

ஒரு இடம் குறித்து தீர்ப்பு அளிப்பதற்கு ஸ்டேட்டஸ் கோ – அதாவது இப்போது எப்படி இருக்கிறதோ அப்படி நீடிப்பது – என்ற நிலை வழக்குத் தொடுத்த நேரத்தில் உள்ள நிலையைத் தான் குறிக்கும். வழக்குத் தொடுத்த 1949 ல் அது முஸ்லிம்களிடம் தான் இருந்தது. அதை அலட்சியம் செய்து விட்டு இப்போது அது பள்ளிவாசலாக இல்லை என்று கூறியிருப்பது அப்பட்டமான மோசடியாகும்.

1992 வரை அது பள்ளிவாசலாக இருந்தது என்பதும் அது திட்டமிட்டு இடிக்கப்பட்டது என்பதும் உலகறிய நடந்ததாகும். ஆனால் இப்போது பள்ளிவாசல் அங்கே இல்லை என்பதால் அது இந்துக்களுக்குச் சொந்தம் எனக் கூறியிருப்பது அப்பட்டமான சட்ட மீறலாகும். பள்ளிவாசல் இடிக்கப்படாமல் இருந்தால் இவர்கள் என்ன தீர்ப்பு சொல்வார்கள்? இடிக்கச் சொல்லி உத்தரவு போடுவார்களா?

இப்படி அடுக்கடுக்கான சட்ட மீறல் செய்து சிறுபாண்மை மக்களுக்கு வரலாற்றில் இது வரை நடந்திராத மாபெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

எனவே சட்ட விரோதமான இத்தீர்ப்பை வழங்கிய மூன்று நீதிபதிகளையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த வழக்கை நாட்டின் உயர் அதிகாரம் படைத்த உச்ச நீதிமன்றம் மறுவிசாரணைக்கு உட்படுத்தி சட்டப்படி தீர்ப்பு அளிக்க ஆவண செய்யுமாறு இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

பாபரி மஸ்ஜித் தீர்ப்பு குறித்து யாருக்கும் அஞ்சாமல் நியாயமான கருத்து தெரிவித்த முலாயம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ் ஆகியோரையும் இந்த அநீதியைக் கண்டித்து குரல் எழுப்பிய நியாயவான்கள், சட்ட வல்லுனர்கள், ஊடகத்துறையினர் உள்ளிட்ட அனைவரையும் இந்தப் பொதுக்குழு வெகுவாகப் பாராட்டுகின்றது.

அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியான மாத்திரத்தில் இதை வரவேற்ற திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், மற்றும் போலி சமுதாய இயக்கங்களை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்ற அத்வானி போன்றோர் மீது நடவடிக்கை எடுப்பதில் மென்மையான அணுகுமுறையைக் கையாண்டு வரும் மத்திய காங்கிரஸ் அரசை இப்பொதுக்குழு கண்டிக்கிறது. நீதிமன்றங்களின் மீது இருந்த நம்பிக்கையை இந்தத் தீர்ப்புக்குப் பின் முஸ்லிம்கள் இழந்து விட்டனர். எனவே பாபர் மஸ்ஜிதைப் பூட்டியதற்கும் அதை வழிபாட்டுக்கு திறந்து விட்டதற்கும் பள்ளிவாசல் இடிக்கப்படும் போது தடுக்கத் தவறியதற்கும் பொறுப்பான காங்கிரஸ் கட்சி தனது துரோகச் செயலுக்கு பரிகாரம் தேடும் வகையில் நாடு சுதந்திரம் அடையும் போது யாரிடம் எந்த வழிபாட்டுத்தலம் இருந்ததோ அது அவர்களுக்கே சொந்தம் என்ற சட்ட வரம்புக்குள் பாபர் மஸ்ஜிதையும் கொண்டு வர வேண்டும். அதன் மூலம் எல்லா வழக்குகளையும் செயலிழக்கச் செய்து பள்ளிவாசல் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய காங்கிரஸ் அரசை இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

பாபரி மஸ்ஜித் பாணியில் இனி வேறொரு மஸ்ஜிதில் கை வைப்பதற்கு யார் முயற்சி செய்தாலும் அதே பாணியில் முஸ்லிம்கள் தங்கள் உயிரையும் அர்ப்பணித்து பள்ளிவாசலைக் காக்க வேண்டும் என்று முஸ்லிம் சமுதாயத்தை இந்தப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

2. நாடு முழுவதும் தனி இட ஒதுக்கீடு

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் கமிஷன் முஸ்லிம்களுக்கு மத்திய அரசுப் பணிகளிலும் அனைத்து மாநிலங்களிலும் பத்து சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தருவோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்களித்து முஸ்லிம்களின் ஓட்டுக்களை அறுவடை செய்த காங்கிரஸ் நீதிபதி மிஸ்ரா அவர்களின் பரிந்துரை அளிக்கப்பட்ட பின்பும் ஆழ்ந்த உறக்கத்தில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் உறக்கத்தைக் கலைப்பதற்காக 2010 ஜூலை 4 அன்று பதினைந்து லட்சம் முஸ்லிம்கள் திரண்டு நீதிபதி மிஸ்ரா அவர்களின் பரிந்துரயை செயல்படுத்துமாறு கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து பிரதமரையும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அவர்களையும் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் நேரில் சந்தித்து இக்கொரிக்கையை வலியுறுத்தி விளக்கிக் கூறி மனுவாகவும் அளித்தனர். இட ஒதுக்கீடு தருவோம் என்று சொன்ன அவர்கள் இதற்காக ஒரு துரும்பையும் எடுத்துப் போட்டதாகத் தெரியவில்லை. மத்திய அரசின் இந்த அலட்சியப் போக்கை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் உடனே முஸ்லிம்களுக்கு பத்து சதவிகித இட ஒதுக்கீட்டை இந்தியா முழுவதும் சட்டமாக்க இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகின்றது.

3. கல்வி உதவித் தொகை

சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவி, கல்விக் கடன் ஆகியவை சென்ற ஆண்டு அதிகாரிகளின் ஆணவப் போக்காலும் கல்வி நிலையங்களின் அலட்சியப் போக்காலும் பெரும்பாலான முஸ்லிம்களுக்குக் கிடைக்கவில்லை. அது போல் நடக்காமல் இருக்க தெளிவான வழிகாட்டுதலை வழங்கி அலைக்கழிக்காமல் முஸ்லிம் சமுதாயம் பயன் பெற தெளிவான வழிகாட்டுதலை அறிவிக்குமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

4. பயங்கரவாதத்தை பாரபட்சமின்றி தடை செய்க

இந்திய நாட்டின் அமைதிக்கும், இந்திய அரசியல் சட்டத்திற்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக தொடர்ந்து இருந்து வருகின்ற இயக்கங்களின் பட்டியலில் முதலிடம் பெறுபவை ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள் உள்ளிட்ட சங்பரிவார் இயக்கங்கள் தான். மாவோயிஸ்ட்டுகளின் தீவிரவாதத்திற்கு சற்றும் குறையாத இத்தகைய இந்துத்துவா தீவிரவாத இயக்கங்கள் தான் நம் நாட்டில் நிகழ்ந்த பல குண்டுவெடிப்புகளுக்கு மூளையாகச் செயல்பட்டவை என்பதை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முழுநேர ஊழியராக பணியாற்றும் சுவாமி அசீமானந்தா நீதிபதியிடம் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் தெளிவுபடுத்துகிறது. ஆனால் பயங்கரவாதச் செயல்களில் துளியும் சம்பந்தப்படாத அப்பாவி முஸ்லிம்களைக் குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டனர் என்று காவி மயமாகிப் போய்விட்ட காவல்துறையும் புலனாய்வு துறையும் கைகோர்த்துக் கொண்டு அவர்களைக் கைது செய்து அப்பாவிகளின் வாழ்க்கையை சிதைத்து விட்டனர். எனவே அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்ட ஈட்டை அளித்து, அவர்கள் குற்றமற்றவர்கள் என்று ஊடகங்களின் வழியாக பகிரங்கமாக அறிவித்து அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட மாநில அரசுகளயும் மத்திய அரசையும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது

இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் ஹனீப் என்பவர் ஆஸ்திரேலிய அரசால் தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். பின்னர் அவர் அப்பாவி என்பதை அறிந்து கொண்ட ஆஸ்திரேலிய அரசு அவரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டதுடன. பால கோடி ரூபாய் நட்ட ஈட்டையும் வழங்கியுள்ளது. அந்நிய நாட்டுக்காரருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக ஆஸ்திரேலிய நாடு நீதி வழங்கும் போது சொந்த நாட்டு மக்களை பொய் வழக்கில் கைது செய்த மத்திய மாநில அரசுகள் அதற்கு மன்னிப்பு கேட்காததுடன் நட்ட ஈடும் வழங்காமல் இருப்பது நாட்டுக்கு அவமானம் என்று இப்பொதுக் குழு சுட்டி காட்டுகிறது. நாட்டில் நிகழ்ந்த அனைத்து குண்டுவெடிப்புகளையும் முழுமையாக திறந்த மனதுடன் விசாரிக்கும் வண்ணம் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை மத்திய அரசு உடனே ஏற்படுத்த வேண்டும். அந்த குழுவில் காவி சிந்தனையுடைய அதிகாரிகள் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மத்திய அரசின் கடமை. மகாராஸ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கார்கரே படுகொலையையும் இந்துத்துவாவினர் தான் செய்திருப்பார்கள் என்பதை திக் விஜய் சிங் வெளியிட்ட தொலைபேசி உரையாடல் நிரூபிக்கிறது. ஆகவே இந்தப் படுகொலையையும் மீண்டும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். உண்மைக் குற்றவாளிகளைக் கண்டு பிடித்து தண்டிக்க வேண்டும். உண்மையை வெளிக்கொணர வேண்டுமென்ற உன்னத நோக்கத்துடன் இந்த விசாரணையை மத்திய அரசு அமைத்துக் கொள்ள வேண்டுமென்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.

5. பள்ளிவாசலை இடித்த காங்கிரஸ்

தில்லியில் ஹஸ்ரத் நிஜாமுதீன் இரயில் நிலையம் அருகிலுள்ள ஜானக்புரி பி பிளாக்கில் உள்ள நூர் மஸ்ஜித் என்ற முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலம் ஒன்றை அரசு நிலத்தில் இருப்பதாகப் பொய்யான காரணமொன்றைக் கூறி கடந்த 12 ஆம் தேதி தில்லி மாநில காங்கிரஸ் அரசு இடித்து தரை மட்டமாக்கி இருக்கிறது. இந்தப் பள்ளிவாசல் புறம்போக்கு நிலத்திலில்லை. மாறாக வக்ப் வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் தான் இருக்கிறது என்பதற்கான ஆவணங்களை வக்ப் வாரியம் சமர்ப்பித்த பிறகும் கூட தில்லி மாநில காங்கிரஸ் அரசு மத துவேசத்துடன் நூர் பள்ளிவாசலை இடித்திருக்கிறது. முஸ்லிம்களின் பரவலான எதிர்ப்பால் கலவரமடைந்த தில்லி மாநில முதல்வர் ஷீலா தீட்சித் மீண்டும் பள்ளிவாசல் கட்டித்தரப்படும் என்று அறிவித்திருக்கிறார். இதே போன்றதொரு அறிவிப்பைத் தான் பாபர் மஸ்ஜித் இடித்த சமயத்தில் அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்ம ராவ் பாராளுமன்றத்தில் அறிவித்தார். ஆனால் இன்று வரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலங்களான பள்ளிவாசல்களை இடிப்பதில் காங்கிரஸ்காரர்களும் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை இந்தப் பள்ளிவாசல் இடிப்பு உறுதிப்படுத்துகிறது. ஏற்கெனவே 2009 ஆம் ஆண்டு திபியாவாலி என்று அழைக்கப்படும் புராதனச் சின்னமாகத் திகழ்ந்த பள்ளிவாசல் ஒன்றை இடித்தது. இப்போது மறுபடியும் இன்னொரு பள்ளிவாசலை இடித்து பாஜகவுக்கு சமமாக காங்கிரசிலும் காவிச் சிந்தனை பரவியிருக்கிறதென்பதை நிரூபித்திருக்கிறார்கள். ஏற்கெனவே பாபர் மஸ்ஜித் இடிப்பினாலும், அதன் பின்னர் வெளியான பாபர் மஸ்ஜித் தொடர்பான அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பினாலும் காங்கிரசின் மேல் கடுமையான அதிருப்தியில் இருக்கின்ற இந்திய முஸ்லிம்களை இந்த பள்ளிவாசல் இடிப்பு இன்னும் அக்கட்சியின் மேலுள்ள வெறுப்பை அதிகமாக்கியிருக்கிறது. இந்த வெறுப்பு வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் உட்பட பல மாநிலத் தேர்தல்களில் எதிரொலித்து காங்கிரசின் ஆட்சிக்கட்டில் கனவை நிராசையாக்கி விடுவதற்கான வாய்ப்புகளை அதிகமாக்கியிருக்கின்றன. இதற்குப் பிறகும் காங்கிரஸ் தொடர்ந்து முஸ்லிம்களைச் சீண்டிக் கொண்டிருந்தால் அக்கட்சியை மழையில் கரையும் மணல் கோட்டையைப் போன்று கரைத்து, மத்திய ஆட்சிக் கட்டிலிலிருந்தும் காங்கிரசை அகற்றி விடுவார்களென்பதை காங்கிரஸ் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். அரசு நிலத்தில், நடைபாதையில் இருக்கிற வழிப்பாட்டுதலங்களை அகற்ற முடியாத காங்கிரஸ் அரசு காவி உணர்வுடன் முஸ்லிம்களின் சொந்த நிலத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல்களைக் குறிவைத்து இடித்ததை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது.

6. சிறுபான்மையினர் மேம்பாட்டுக்காக மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி ஆதாரம் உரியோருக்கு வழங்கப்படாமல் அப்படியே திரும்ப அனுப்பப்படுகின்றது. முஸ்லிம்கள் இந்த நிதி கோரி விண்ணப்பிக்கும் போது அந்த நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றே சம்பந்தப்பட்டத் துறையினர் பதிலளிக்கின்றனர். இந்த அநீதியை உடனே தடுத்து நிறுத்தி உரியவருக்கு நிதி கிடைக்க ஆவண செய்யுமாறு மத்திய அரசை இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

7. வக்ஃபு சொத்துகள்

முஸ்லிம் சமுதாயத்தின் தனவந்தர்கள் அறப்பணிகளுக்காக அர்ப்பணித்துச் சென்ற சொத்துக்கள் வக்பு வாரியத்தின் துணையுடன் தான் சுருட்டப்பட்டுள்ளன. எனவே கிறித்தவ சமுதாயம் எப்படி தனது அறப்பணிகளுக்கான சொத்துக்களை அரசின் தலையீடு இல்லாமல் தானே நிர்வகித்துக் கொள்கிறதோ அது போல் முஸ்லிம்களின் வக்பு சொத்தை அந்தந்த பகுதி முஸ்லிம்களே நிர்வாகம் செய்யும் வகையில் வக்பு போர்டை முற்றாகக் கலைத்து விட வேண்டும். சில தனியார்கள் வர்த்தக நோக்கத்தில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு உதவும் வகையில் வக்பு வாரிய லட்டர் பேடில் வாரியத் தலைவர் நிதி உதவி கேட்டு செல்வந்தர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். வக்பு வாரியத்தின் சார்பில் இக்கல்லூரி நடத்தப்படுகிறது என்று பொய்யான தகவலை அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார். வக்பு வாரியத்தின் பெயரை தனி நபர்கள் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தும் வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரஹ்மான் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

இராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் எதிரிகளாக அறியப்படும் தமுமுகவினர் நடத்திய போராட்டத்தில் பேருந்துகள் சேதமாக்கப்பட்டதற்கு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மீது வழக்குப் போட்டு கைது செய்ய முயற்சிக்கும் தமிழக அரசின் பழிவாங்கும் போக்கை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

மத்திய அரசு

8. தொல்லியல் ஆய்வு கழகம்

1948ல் டெக்கானில் தவ்லதாபாத் கோட்டையிலுள்ள ஜும்ஆ மஸ்ஜிதை தொல் பொருள் ஆய்வுக் கழகம் கோயிலாக மாற்றியது. 2003ல் மத்திய பிரதேசம் தார் என்ற ஊரில் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கமால் மவ்லா பள்ளிவாசலை இந்துக்கள் வணங்கும் கோயிலாக மாற்றியது.

16ஆம் நூற்றாண்டில் ஷேர்ஷா ஆட்சியில் சூரியில் கட்டப்பட்ட புராண கிலாவுக்குக் கீழ் இந்துக்களின் இந்திர பிராஸா நகரம் இருப்பதாக தொல்பொருள் ஆய்வுக் கழகம் கதை கட்டியது.

இப்படி முஸ்லிம்களின் கோட்டை, கொத்தளங்கள், பள்ளிவாசல்கள், நினைவுச் சின்னங்களுக்கு உள்ளே கோயில் இருப்பதகாகக் கதை கட்டுவதை மட்டுமே தொழிலாகக் கொண்டு தொல்பொருள் ஆய்வுக் கழகம் செயல்பட்டு வருகின்றது. பாபரி மஸ்ஜித் பள்ளி விஷயத்தில் அதைக் கோயிலாக மாற்றுவதற்கு இந்தக் கழகம் தான் முழு வேலையையும் செய்து வருகின்றது.

இப்படி மத துவேஷத்தைத் தூண்டி, வகுப்புக் கலவரத்திற்கு வித்திடுகின்ற இந்தத் தொல் பொருள் ஆய்வுக் கழகத்தை மத்திய அரசு உடனே கலைக்கவேண்டும்; அதன் கைவசம் உள்ள 118 பள்ளிவாசல்களை உடனே முஸ்லிம்களிடம் மீட்டித் தர வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

உலகம்

1. துனிஷியா,எகிப்து புரட்சி

துனிஷியாவிலும் எகிப்திலும் ஆட்சியாளர்களுக்கு எதிரான புரட்சி வெடித்திருக்கின்றது. இதுவரை இஸ்லாமிய நாடுகளில் இல்லாத தற்கொலை முயற்சிகள் அண்மையில் துனிஷியாவில் தொடங்கி தற்போது அவை எகிப்து, அல்ஜீரியா நாடுகளிலும் பரவிக் கொண்டிருக்கின்றது.

இஸ்லாமிய நாடான எகிப்தின் ஆட்சி ஃபிர்அவ்னிடமிருந்து மீட்கப்பட்டு மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்நிய சக்திகளிடமிருந்து மீட்கப்பட்டு முஹம்மது (ஸல்) அவர்களின் சமுதாயத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சமுதாயங்களிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது அடிப்டைக் காரணம் அவர்களிடமிருந்த ஏகத்துவக் கொள்கை தான்.

இந்த ஏகத்துவத்தை மறந்ததால் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள துனிஷியாவில் இதுவரை 23 ஆண்டுகள் ஆட்சி செலுத்திய ஜைனுல் ஆபிதீன் என்பவர் நாட்டை விட்டுத் துரத்தி அடிக்கப்பட்டு விட்டார்.

அதுபோல் ஏகத்துவக் கொள்கைக்குப் பரிசாக வழங்கப்பட்ட எகிப்தையும் ஃபிர்அவ்னை விடக் கேடாக ஆட்சி செய்கின்ற அதிபர் ஹோஸ்னி முபாரக், கலவரத்தை அடக்குவதற்காக முஸ்லிம்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றும், கைது செய்து சிறையிலடைத்தும் கொண்டிருக்கின்றார். இந்தக் கொடுமைகளை நிறுத்தி உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று ஹோஸ்னி முபாரக்கைக் கேட்டுக் கொள்வதுடன் இந்தப் புரட்சி தங்கள் நாடுகளிலும் தொற்றிக் கொண்டு விடுமோ என்று பயப்படுகின்ற இஸ்லாமிய நாடுகள், இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, தாங்கள் நாடுகளில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான ஆட்சியை அமைத்துக் கொள்ளும்படி இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது. 

2. பலஸ்தீன ஆக்கரமிப்பு

பலஸ்தீன ஆக்கிரமித்து அந்நாட்டின் மக்களை அகதிகளாக்கி அவர்களையும் அன்றாடம் அழித்து தனது ஆக்கிரப்பை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேலை வன்மையாக கண்டிப்பத்துடன் அந்நாட்டுடன் தனது உறவை இந்தியா உடனே துண்டித்துக்க வேண்டும் என்று மத்திய அரசை இப்பொழுக் குழு கேட்டுக் கொள்கின்றது.

இட ஒதுக்கிட்டை 5 சதவீதமாக உயர்த்தும் கட்சிகே ஆதரவு: தவ்ஹீத் ஜமாஅத் அதிரடி

தினமலர்:

கோரிக்கை ஏற்காவிட்டால் தி.மு.க.,வுக்கு ஆதரவு இல்லை

சேலம்: “தமிழகத்தில், 5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கும் கோரிக்கையை தி.மு.க. ஏற்காவிட்டால், வரும் சட்டசபை தேர்தலில் ஆதரவு கிடையாது’ என, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின், 11வது மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது. பொதுக்குழுவில், அமைப்பின் மாநில தலைவராக ஜெயிலூல்ஆபிதீன், பொது செயலாளர் ரகமத்துல்லா, பொருளாளராக அன்வர்பாய், துணைத் தலைவராக அப்துல் ரகீம், துணை பொதுச் செயலாளராக சையத் இப்ராஹீம் மற்றும் 7 செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.பொதுக்குழு முடிந்தவுடன், தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில தலைவர் ஜெயிலூல் ஆபிதின் கூறியதாவது:தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள, 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல் உள்ளது.

இந்த பிரச்னைகளை களைய கண்காணிப்பு குழுஅமைப்பதாக, அரசு தரப்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும். அதோடு, இட ஒதுக்கீட்டை 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தி, தனி ஒதுக்கீடாக வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக, வாக்குறுதி கொடுக்கும் கட்சிக்கு வரும் சட்டசபை தேர்தலில் ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளோம்.கடந்த எம்.பி. தேர்தலில், தி.மு.க.,வின் வெற்றிக்கு நாங்களும் காரணம். அதனால், வரும் தேர்தலில் எங்கள் கோரிக்கையை ஏற்கும் கட்சிக்குத்தான் ஆதரவு தெரிவிப்போம். கோரிக்கையை ஏற்காவிட்டால், தி.மு.க.,வுக்கு கண்டிப்பாக ஆதரவு அளிக்க மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.

தினதந்தி:





















தினகரன்:

















காலைக்கதிர்:










வீடியோ: