Friday, March 05, 2010

அவிஸோ (AWISO) அறக்கட்டளையின் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் சிறப்புப் பள்ளி மூடப்பட்டது - மௌலானா ஷேக் அப்துல்லாஹ் தப்பி ஓட்டம்

அதிராம்பட்டிணம் MSM நகர் ஆதம் லைனில் அரசின் அனுமதியின்றியும், பள்ளி நடத்தப்பட்ட வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றியும் நடத்தப்பட்டு வந்த "மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் சிறப்புப் பள்ளி" குன்றியவர்களுக்கான பயிற்சி பள்ளி அரசு அதிகாரிகளால் இன்று மூடப்பட்டது. அவிஸோ (AWISO) என்ற அறக்கட்டளை சார்பில் இந்த பள்ளி கடந்த நான்கு மாதமாக நடத்தப்பட்டு வந்தது.

இவர்கள் நடத்தும் இந்த பள்ளியை அரசின் அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் சோதனை செய்தனர். இன்று RDO உள்பட அரசின் முக்கிய நிர்வாகிகள் நேரில் வந்து இந்த பள்ளியை மூடினர். 

அவிஸோ அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகளான மௌலானா ஷேக் அப்துல்லாஹ் மற்றும் ஷேகு அப்துல்லாஹ் ஆகியோர் தப்பி ஒடிவிட்டனர்.

அரசின் அனுமதியில்லாமல் நடத்தப்பட்ட இந்த பள்ளியை மூடிய அதிகாரிகள், இந்த பள்ளியை நடத்தியவர்களை கைது செய்யாமல் போனது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது.

அவிஸோ அறக்கட்டளை நடத்திய பள்ளியை அரசு அதிகாரிகள் மூடியபோது எடுத்த படங்கள்:




சமுதாய மக்களுக்கு ஒர் வேண்டுகோள்:

நாங்கள் சமுதாய சேவை செய்கிறோம் என்று கிளம்பும் முகவரி இல்லாத பேர்வழிகளுக்கு உதவும் முன் அவர்களை பற்றி நன்றாக விசாரித்துவிட்டு அவர்களுக்கு உதவுங்கள். இந்த அறக்கட்டளை வசூல் செய்த பணத்தை என்ன செய்ய போகிறார்கள் என்பது தெரியவில்லை.

இது போன்ற முகவரி இல்லாத பேர்வழிகள் கிளம்பும் போது அவர்களை பற்றி விபரம் அறிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையையே அல்லது மாவட்ட கிளை நிர்வாகிகளையே தொடர்பு கொள்ளவும்.

தகவல்: அதிரை Y. அன்வர் அலி

No comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.